அபூர்வம் என்றால் ரஜினி.
மயக்கத்தில் மந்திரன், இயக்கத்தில் எந்திரன், சுண்டும் ஸ்டைலில் சூப்பர்
மேன். 63 வயது அபூர்வ ராகத்தின் ஆச்சர்ய கீதங்கள் இதோ..!





































































ரஜினி சொன்ன 12 செய்திகள்!
சென்னை:
தனது பிறந்தநாளை பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடுமாறு தனது
ரசிகர்களுக்கு பிறந்தநாள் செய்தியாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக தனது பிறந்த நாளன்று தனிமையில் கழிக்கும் ரஜினிகாந்த்,இன்று தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களை சந்தித்தார்.
நிருபர்களும், டி.வி.கேமராமேன்களும் போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்னால் கூடி நின்றனர். திடீரென்று அவர்களை ரஜினி வீட்டுக்குள் அழைத்தார். அப்போது நிருபர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். பதிலுக்கு ரஜினி நன்றி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,"என் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் வாழ்த்து சொல்ல வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை சந்தித்தேன். மகிழ்ச்சியாக உள்ளது. எனது பிறந்த நாள் 12.12.2012 தேதியில் வந்து இருப்பது பெரிய விஷயம்.
‘கோச்சடையான்’ படம் இன்றைய சினிமா தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம். இப்படம் மட்டும் வெற்றிப்பெற்றால் இனி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச படங்களும் இதே தொழில்நுட்பத்தில் வெளிவந்து வெற்றி பெறும்.
நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எப்போது வருவீர்கள் என்று கேட்கிறீர்கள். அதுபற்றி எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். இப்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லை"என்றார்.
டிசம்பர் 12-12-12 அன்று ரஜினிக்கு பிறந்தநாள் தேதி, மாதம், வருஷம்
எல்லாமே 12-ஆக அமைந்தது தனிச்சிறப்பு ஆகவே ரஜினியைப்பற்றி அவரே சொன்ன
12-செய்திகள் இங்கே...
தெய்வம்...
" பெங்களூர்ல இளமையான காலத்துல ஒரு தடவை வீட்டுல இருக்குறவங்க எல்லாரும்
மோசமா திட்டுனாங்க. மனசே வெறுத்துப் போச்சு.. பேசாம தற்கொலை பண்ணிக்கிற
முடிவுக்கு வந்தேன். சாகறத்துக்கு முன்னாடி எனக்கு ரொம்ப பிடிச்ச ஃப்ரெண்ட்
ஒவியர் ரமேஷை பார்க்கனும்னு தோணுச்சு. அவரோட வீடுதேடி போனேன்.. அவர் அங்கே
இல்லை. அனுமார் மலைக்கோயிலுக்கு போனதா சொன்னாங்க. தேடிப்போனேன் மலையில்
இருக்குற பாறையில விதவிதமா ஒவியம் வரைஞ்சுகிட்டு இருந்தார். அந்த படங்கள்ல
தாடிவச்ச ஒருத்தர் என்னை வெறிச்சு பார்த்து சிரிச்சார். 'உன்னை யாருமே
புரிஞ்சுக்கலையா.. கவலையை விடு.. எல்லாத்தையும் என்கிட்டே விட்டுவிடு..
நான் பார்த்துக்கறேன்'னு பேசினார். பிரமிச்சுப் போயிட்டேன். ரமேஷிடம் 'இவர்
யாருப்பா'னு கேட்டேன் 'அடப்பாவி இதுகூடவா தெரியாது.. இவர்தான்டா
ராகவேந்திரர்'னு சொன்னார்!
பெற்றோர்...

மறுநாள் எதைக்கேட்டு அடம்பிடிச்சோம்... எதுக்காக உதை வாங்கினோம் என்பதே
மறந்து போயிடும்.
குருநாதர்....
'எம்.எஸ்.வி-யை சந்திக்கறதுக்கு முன்னாடி சோத்துக்கு வழியில்லை....
சந்திச்ச பின்னாடி சோறுதிங்க நேரமில்லை'னு எம்.எஸ்.விஸ்வநாதனை பத்தி
பேசறபோது வாலி சார் அடிக்கடி சொல்லுவார். அப்படித்தான் நானும்
கே.பி-சாரைபத்தி சொல்லுவேன். எனக்குள்ளே இருக்குற நடிகனை முதன்முதலா
கண்டிபிடிச்ச கடவுள். அப்புறம்தான் உலகத்துக்கே நான் தெரிஞ்சேன். என்னை
தெரியவச்சார்! 'காமிரா முன்னாடி நடி... பின்னாடி நடிக்காதே..'னு சொன்னதை
இன்னிக்கு வரைக்கும் கடைபிடிச்சுட்டு வர்றேன்.
கண்டக்டர்....
கர்நாடகா ட்ரான்ஸ்போர்ட்ல கண்டக்டரா வேலை பார்த்தப்போ ராஜ்பகதூர் நண்பனா
கிடைச்சான். இப்போகூட ரெஸ்ட் கிடைச்சு பெங்களூரு போனால் வீட்டுலகூட அதிகம்
இருக்க மாட்டேன். நண்பர்களோட பொழுது போக்குவேன். இப்போ பணம், பேர், புகழ்
எல்லாம் இருக்கு.. ஆனா அப்போ இருந்த சந்தோஷம், நிம்மதி இப்போ டெபனேட்டா
இல்லை.
வீடு...
ராயப்பேட்டையில விட்டல் வீட்டு மாடியில் குடியிருந்தேன். அப்பவே அந்த
ஹவுஸ்ஒனர் பாத்திமா அக்தர் நல்லா பழகுவாங்க. இப்போ நான் போயஸ் கார்டன்ல
வசிக்கிற வீடு அந்தக்காலத்துல அவங்களுக்கு சொந்தமானது. நான்தான் விலைக்கு
வாங்கினேன் இப்போ அதுக்கு பிருந்தாவன்னு பேர் வச்சிருக்கேன்.
மனைவி...
திருமணம் முடிஞ்ச பிறகுதான் 'ஏண்டா இவ்வளவு லேட்டா கல்யாணம் செய்தோம்னு
ஃபீல் செய்யுற அளவுக்கு லதா அன்பா இருந்தாங்க. என்னோட முன்கோபம், சினிமா
தொழில்ல இருக்குற ப்ராப்ளம் எல்லாத்தையும் நல்லா உணர்ந்து உறுதுணையா
இருக்குறாங்க. அம்மாவுக்கு என்னோட ஆரோக்கியம் முக்கியம்னா, லதாவுக்கு
என்னோட எதிர்காலத்து மேல் ரொம்ப ரொம்ப அக்கறை.
நட்பு...
நான் கஷ்டபட்டபோதும் சரி... இப்போ வசதியா இருக்கும் போதும் சரி என்மேல ஒரே
மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர் ஆச்சர்யமான நண்பன். அதுபோல
இன்ஸ்ட்டியூட்ல படிச்சப்போ பழகிய நண்பர்கள் எல்லாருமே எனக்கு இப்பவும் நல்ல
ப்ரெண்ட்ஸ்! சினிமாவுல, அரசியலுல எல்லாத்துலயும் நண்பர்கள் நிறையபேர்
இருக்காங்க!
வாகனம்...
நான் பெங்களூர்ல கண்டக்டரா வேலை செஞ்ச பஸ் நம்பர் 10ஏ. சென்னையில
முதன்முதலா வாங்கின ஸ்கூட்டர் டிஎன்ஆர்- 4306, அப்புறம் பியட் கார் இப்போ
இன்னோவா!
பட்டம்...

மேக்கப்....
'அபூர்வராகங்கள்' படத்துல முதன்முதலா மேக்கப் போட்ட சுந்தரமூர்த்திதான்
'குசேலன்’வரை எனக்கு மேக்கப் போட்டவர்.
நடிப்பு...
படப்பிடிப்புக்கு போகும்போது முக்கியமான காட்சிகள் இருந்தால் என்னோட
டயலாக்கை முதல்நாளே வாங்கிட்டுப் போய் வீட்டுல ரிகர்சல் செய்வேன். வசனத்தை
ஷூட்டிங் ஸ்பாட்டுல மனப்பாடம் செய்யத் தெரியாம அப்படி செய்யறது இல்லை.
மறுநாள் தேவையில்லாம நேரத்தையும், ஃபிலிமையும் வேஸ்ட் பண்ணாம நடிகனும்னு
ஒரு அக்கறை அவ்வளவுதான்!
ரசிகர்....
'அபூர்வ ராகங்கள் ' படத்தை சென்னை கிருஷ்ணவேணி தியேட்டர்ல முதன்முதலா
பார்த்தேன். நான் நடிச்ச காட்சியை திரையில பார்த்ததும் சீட்டுல உட்கார்ந்து
இருந்த ஒரு சிறுமி என்னை திரும்பி பார்த்தார். படம் முடிஞ்சி வெளியில
வரும்போது என்கிட்டே ஓடிவந்த சிறுமி சினிமா டிக்கட் பின்னாடி கையெழுத்து
கேட்டார்.. நான் போட்டேன். எனக்கு கிடைச்ச முதல் ரசிகை அந்த சிறுமிதான்.
அவர் எங்கேனு தேடிக்கிட்டே இருக்கேன். நான் போட்ட முதல் ஆட்டோகிராப் சினிமா
டிக்கட் பின்னாலதான்!
-திருவாரூர் குணா
எம்.குணா
படங்கள் : ஸ்டில்ஸ் ரவி
ரஜினி இப்போது இந்தியாவின் சூப்பர் ஸ்டார்! கோடம்பாக்க
சாதனைப் புத்தகத்திலும் 'மேனேஜ்மென்ட்’ பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்று
இருக்கும் ரஜினியின் வாழ்க்கை எப்போதுமே ஒரு 'ஓப்பன் புக்’!


















இப்படி ஒரு விழா இதுவரை தமிழகத்தில் நிகழ்ந்தது இல்லை!
அரங்கமெல்லாம் மக்கள் வெள்ளம், ஆறரை மணி நேரம், ரஜினி முதல் ரஹ்மான்
வரை, பாலசந்தர் முதல் இளையராஜா வரை, மம்மூட்டி முதல் மோகன்லால் வரை
ஒட்டுமொத்தத் தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள். கமல்ஹாசன் என்பதாலேயே
இது சாத்தியமாகி இருக்கிறது. கமல் 50 தொடரும் ஒரு சரித்திரம் என்ற கமலின்
கலையுலகப் பொன்விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விஜய்
டி.வி. நிகழ்த்திய விதம் வியப்பூட்டியது!

பாலசந்தரின் பாதம் தொட்டு ஆசி வாங்கிய கமலை, கட்டிப்
பிடித்துக்கொண்டார் ரஜினி. பதிலுக்கு கமல் ரஜினிக்கு முத்தம் கொடுக்க,
அருகில் இருந்த நடிகைகளிடம், ''உங்களுக்குக் கொடுத்த முத்தங்களைவிட இந்த
முத்தம்தான் பெஸ்ட்!'' என்று ரசித்துச் சிரித்தார்!
நெகிழ்வாய் இருந்தார் கே.பாலசந்தர் ''கமலுக்கு நான்தான் குருனு
எல்லாரும் சொல்றாங்க. ஆனா, என் இடத்தில் ஒரு குப்பனோ சுப்பனோ
இருந்திருந்தால்கூட கமல் இந்த உயரத்தைத் தொட்டிருப்பார். அவர் ஒரு யுக
புருஷன். 'தசாவதாரம்' வரை சாதித்துவிட்டார். அதையெல்லாம் மிஞ்ச அடுத்து
என்ன செய்யப்போகிறார் என்பதுதான் என் கவலை. கமல் அதையும் மிஞ்சிக்
காட்டுவார். அவர் என்றுமே 'மை டியர் ராஸ்கல்'தான்!'' என்றார்
உணர்வுபூர்வமாக.
ராதிகா பின்னிவிட்டார். ''காதல் காட்சிகளில் நடிக்கும்போது கமல்
உண்மையிலேயே காதலிக்கிற மாதிரியே இருக்கும். ஆனா, ஹீரோயின்களுக்குப் பதிலா
அங்கே ஒரு எருமை மாடு இருந்தாக்கூட அதையும் இவர் காதலோடு பார்ப்பார்னு
அப்புறம்தான் எனக்குப் புரிஞ்சது!'' என்றவர், கமலுடன் நடித்த ஹீரோயின்கள்
12 பேரை மேடையேற்றினார். அப்போது கமல்
''சினிமாவில் ஹீரோ - ஹீரோ யின் காதல் பண்றதை வெளியே இருக்கிறவங்க பொறாமையாப் பார்ப்பாங்க. ஆனா, அதுல இருக்கிற கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். பல சமயம் ஹீரோயின்களைத் தம் பிடிச்சுத் தூக்க முடியாமக் கீழே போட்டிருக்கேன்!'' என்றார். உடனே ராதிகா, ''அப்படி எத்தனை பேரைப் போட்டிருக்கீங்க?'' என்று அப்பாவியாகக் கேட்க, முதலில் அதிர்ந்து பிறகு குபீரெனச் சிரித்துவிட்டார் கமல் (மொத்த அரங்கமுமே!) ''இல்லைங்க, நான் போட்டது கொஞ்ச பேரைத் தான். தானா கீழே விழுந்தவங்கதான் நிறைய!'' என்று 'ஒரு பொருட் பன்மொழி'யாகச் சமாளித் தார் கமல்.
''சினிமாவில் ஹீரோ - ஹீரோ யின் காதல் பண்றதை வெளியே இருக்கிறவங்க பொறாமையாப் பார்ப்பாங்க. ஆனா, அதுல இருக்கிற கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். பல சமயம் ஹீரோயின்களைத் தம் பிடிச்சுத் தூக்க முடியாமக் கீழே போட்டிருக்கேன்!'' என்றார். உடனே ராதிகா, ''அப்படி எத்தனை பேரைப் போட்டிருக்கீங்க?'' என்று அப்பாவியாகக் கேட்க, முதலில் அதிர்ந்து பிறகு குபீரெனச் சிரித்துவிட்டார் கமல் (மொத்த அரங்கமுமே!) ''இல்லைங்க, நான் போட்டது கொஞ்ச பேரைத் தான். தானா கீழே விழுந்தவங்கதான் நிறைய!'' என்று 'ஒரு பொருட் பன்மொழி'யாகச் சமாளித் தார் கமல்.
ஹீரோயின்கள் சங்கமம் முடிந்தவுடன் சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்தது பிரபுதேவா.
''கமல் சாருக்காக நடக்கும் விழாவில் அப்பாவோடு சேர்ந்து ஆடணும்னு
தோணுச்சு. அப்பாகிட்ட கேட்டேன். 'எனக்கு உடம்பு சரியில்லையே டா'ன்னாரு.
'அப்பா... கமல்ப்பா'ன்னேன். உடனே 'ஓ.கே!' சொல்லிட்டாரு!'' என்றவர், தன்
அப்பா மாஸ்டர் சுந்தரத்துடன் 'காசு மேல காசு வந்து' எனத் தொடங்கி
ஏழெட்டுப் பாடல்களுக்குக் கலக்கல் காக்டெயில் நடனம் ஆடினார். பாடலுக்கு
இடையே ஒற்றை ரோஜாவை கமலிடம் பிரபுதேவா கொடுக்க, கட்டியணைத்து நெகிழ்ந்தார்
கமல்.


மைக் பிடித்தார் ரஜினி. சட்டென அரங்கில் ஓர் அமைதி. '' 'அபூர்வ
ராகங்கள்' படத்துக்குப் பிறகு மூணு படங்களில் நானும் கமலும் சேர்ந்து
நடிச்சோம். அப்பவே ஃபீல்டுல கமல் பெரிய பிஸ்தா. 'இந்தப் படத்துல ரஜினியைப்
போட வேண்டாம்'னு கமல் ஒரு வார்த்தை சொல்லி இருந்தார்னா, கண்டிப்பா எனக்கு
அந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும். ஆனா, கமல் அப்படிச் சொல்லலை.
கமல்தான் என்னோட கலையுலக அண்ணா.
நீங்களெல்லாம் கமல் படங்களைப் பார்த்து நடிக்கக் கத்துக்கிட்டேன்னு
சொன்னீங்க. நான் கமல் நடிக்கிறதையே பார்த்துப் பார்த்து நடிக்கக்
கத்துக்கிட்டவன். 'அவர்கள்' படத்தோட ஷூட்டிங் நடந்துட்டு
இருக்கும்போது எனக்கு ஷாட் இல்லைன்னா, நைஸா செட்டைவிட்டு வெளியே
கிளம்பிடுவேன். ஒருநாள் கே.பி சார், 'எங்கேடா போற... தம்மடிக்கவா?'ன்னு
கேட்டார். எதுவும் சொல்லாம நின்னேன். 'உள்ளே போடா. கமல்னு ஒருத்தன் அங்கே
நடிச்சுட்டு இருக்கான்ல. அவனைப் பாருடா. அவன் எப்படி நடிக்கிறான்னு பாரு.
கொஞ்சமாச்சும் கத்துக்கோ'ன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் கமல் நடிக்கும்போது
நான் வெளியே போனதேஇல்லை.
கமல் மட்டும் எப்படி இப்ப டின்னு நான் அடிக்கடி யோசிப்பேன். அதுக்குக்
காரணம், அவருக்கு கலைத்தாயின் அம்சம் இருக்கு. அதனால்தான் கலைத்தாயே
அவரைப் பல ரூபங்களில் ரசிக்கிறாள். இங்கே நான், மோகன்லால், மம்மூட்டி,
வெங்கடேஷ், சரத்குமார் மாதிரியானவங்களை கலைத் தாய் கையைப் பிடிச்சு
அழைச்சுட்டுப்
போறா. ஆனா, கமலை மட்டும் தோள்ல
தூக்கிவெச்சு மார்போடு அணைச்சுட்டுப் போறா. நான் கலைத் தாய்கிட்டே
கேட்டேன், 'ஏம்மா... இது உனக்கே நியாயமா? நாங்களும் உன் குழந்தைங்கதானே?
அப்புறம் ஏன் இந்தப் பாரபட்சம்?'னு. அதுக்கு கலைத் தாய், 'ரஜினி! நீ போன
ஜென்மத்துலதான் நடிகனாகணும்னு ஆசைப்பட்டே.
ஆனா, கமல் ஒரு ஜென்மத்துல டான்ஸ் மாஸ்டர், இன்னொரு ஜென்மத்துல அசிஸ்டென்ட் டைரக்டர், வேறொரு ஜென்மத்துல நடிகர், இன்னும் ஒரு ஜென்மத்துல டைரக்டர்னு கடந்த 10 ஜென்மங்களாப் போராடிட்டு இருக்கான். அதனாலதான் கமலைத் தோளில்வெச்சுக் கொண்டாடு றேன்!'ன்னு சொன்னா. கமல் வாழ்ந்த காலத்தில், கமல் நடித்த காலத்தில், நானும் வாழ்ந்தேன், நானும் நடித்தேன்கிற பெருமையே எனக்குப் போதும்!'' என்று படபடவெனப் பேசி ரஜினி அமர, அரங்கமே ஒரு கணம் ஸ்தம்பித்து, சுதாரித்து, கைத்தட்டல்களால் பிரதேசத்தையே அதிரவைத்தனர்.

ஆனா, கமல் ஒரு ஜென்மத்துல டான்ஸ் மாஸ்டர், இன்னொரு ஜென்மத்துல அசிஸ்டென்ட் டைரக்டர், வேறொரு ஜென்மத்துல நடிகர், இன்னும் ஒரு ஜென்மத்துல டைரக்டர்னு கடந்த 10 ஜென்மங்களாப் போராடிட்டு இருக்கான். அதனாலதான் கமலைத் தோளில்வெச்சுக் கொண்டாடு றேன்!'ன்னு சொன்னா. கமல் வாழ்ந்த காலத்தில், கமல் நடித்த காலத்தில், நானும் வாழ்ந்தேன், நானும் நடித்தேன்கிற பெருமையே எனக்குப் போதும்!'' என்று படபடவெனப் பேசி ரஜினி அமர, அரங்கமே ஒரு கணம் ஸ்தம்பித்து, சுதாரித்து, கைத்தட்டல்களால் பிரதேசத்தையே அதிரவைத்தனர்.
ஏற்புரைக்கு எழுந்த கமல் முகத்தில் அத்தனைக் கலவையான உணர்ச்சிகள்.
''இங்கே வர்றதுக்கு முன்னாடி ரெண்டு விஷயங்களை முக்கியமா முடிவு பண்ணிட்டு
வந்தேன். 'சுருக்கமா பேசணும்... அழாமப் பேசணும்'னு. ஆனா, அது ரெண்டுமே
சாத்தியமில்லைன்னு நினைக்கிறேன்.

நான் சினிமாவுக்குள் நுழைந்தபோது போட்டுவெச்சிருந்த லிஸ்ட்ல என்னென்ன
செஞ்சிருக்கோம்னு பார்க்கும்போது முழுசா எதுவுமே முடிக்கலைன்னு தோணுது.
பாதியைக்கூட இன்னும் செய்யலை. இது அவையடக்கம் இல்லை... உண்மை! எனக்கான
நேரம் குறைவு, செய்ய வேண்டிய வேலை அதிகம் இருப்பதை இந்த விழா
உணர்த்துகிறது.
சினிமாவில் என்னையும் ரஜினியையும் போல நண்பர்கள் யாரும் கிடையாது. ஒரு
சக நடிகனைப்பத்தி ஒரு பொது மேடையில் மனசுவிட்டு எவன் இப்படிப் பேசுவான்?
அந்த மனசு ரஜினிகிட்ட இருக்கு. தன்னைத் தாழ்த்தி என்னை
உயர்த்திப்
பேசி இருக்காரு. நான் ஒரு சவால் விடுறேன். தமிழ் சினிமாவில் ரெண்டு
ஹீரோக்கள் இருந்தாங்கடா. கமல் - ரஜினின்னு. அவங்களைப் போல நட்பு சினிமாவில்
யார்கிட்டே இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்.
நிச்சயம் அப்படி யாரும் இருக்க மாட்டாங்க. இதுக்கு முன்னாடியும் கிடையாது... இனிமேலும் அப்படி ஒரு நட்பு யார்கிட்டயும் துளிர்க்காது. அவர் தான் யார் என்பதைத் தேடி இமயமலைக்குப் போறார். நான் இங்கே அலைஞ்சுட்டு இருக்கேன்.

நிச்சயம் அப்படி யாரும் இருக்க மாட்டாங்க. இதுக்கு முன்னாடியும் கிடையாது... இனிமேலும் அப்படி ஒரு நட்பு யார்கிட்டயும் துளிர்க்காது. அவர் தான் யார் என்பதைத் தேடி இமயமலைக்குப் போறார். நான் இங்கே அலைஞ்சுட்டு இருக்கேன்.
நான் கடவுள் இல்லைன்னு சொல்லலை. இருந்தால் நல்லா இருக்குமேன்னுதான்
சொல்றேன். நான் வளர்த்தாலும் என் மகள் ஸ்ருதி ஆத்திகம் பேசுபவள்.
கோயிலுக்குச் செல்கிறாள். பொட்டு வைத்துக்கொள்கிறாள். சமயங்களில் எனக்கும்
வைத்துவிடுகிறாள்.
ஆனால், அதை நான் அழிக்க மாட்டேன். அன்பு கருதி அழிப்பதில்லை. அந்த அன்புதான் உங்களை இங்கு வரவழைத்திருக்கிறது. நான் தந்தையாக மதிக்கும் சிவாஜி, நாகேஷ் இங்கு இல்லை. அவர்களுக்கு நிகராக நீங்கள் இருக்கிறீர்கள். தயவுசெய்து மேடைக்கு வாருங்கள். குரூப் போட்டோ எடுத்துக்கொள்வோம். அதை என் வீட்டில் மாட்டிவைக்கணும்!'' என்று திரைத் துறையினரை மேடைக்கு அழைத்த கமல், ஒரு கணம் யோசித்தார். பிறகு தடாலென மேடையில் மண்டியிட்டு கூட்டத்தினை நோக்கி வணங்கினார்.
ஆனால், அதை நான் அழிக்க மாட்டேன். அன்பு கருதி அழிப்பதில்லை. அந்த அன்புதான் உங்களை இங்கு வரவழைத்திருக்கிறது. நான் தந்தையாக மதிக்கும் சிவாஜி, நாகேஷ் இங்கு இல்லை. அவர்களுக்கு நிகராக நீங்கள் இருக்கிறீர்கள். தயவுசெய்து மேடைக்கு வாருங்கள். குரூப் போட்டோ எடுத்துக்கொள்வோம். அதை என் வீட்டில் மாட்டிவைக்கணும்!'' என்று திரைத் துறையினரை மேடைக்கு அழைத்த கமல், ஒரு கணம் யோசித்தார். பிறகு தடாலென மேடையில் மண்டியிட்டு கூட்டத்தினை நோக்கி வணங்கினார்.
அந்த மகா கலைஞனுக்கு வேறு என்ன செய்து தன் நன்றியைத் தெரிவிப்பது என்று
தெரியவில்லை!
நன்றி - விகடன்
சென்னை: ரஜினி தன்
காதலச் சொல்லி திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதற்கு லதா
வெட்கப்பட்டுக் கொண்டு தனது பெற்றோரிடம் சம்மதம் கேட்டுமாறு கூறியுள்ளார்.
தில்லு முல்லு ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ரஜினிகாந்த் லதா ரங்காச்சாரியை
முதன் முதலாக சந்தித்தார். லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால்
அவர்கள் மல்லேஸ்வரம் பகுதியில் வசித்தனர். சென்னை எத்திராஜ் கல்லூரியில்
படித்த லதா கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றபோது
தான் அவரை முதன் முதலாக சந்தித்தார்.
அவரை முதல் தடவைப் பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. ஒரு சினிமா
நடிகரைச் சந்தித்தோம் என்ற மாதிரியே இல்லை. ஏதோ நீண்ட காலம் பழகியவரை
சந்தித்தது போன்று இருந்தது என்றார் லதா.
ரஜினி உதவியாளர் சத்யநாராயணா கூறுகையில்,
அந்த பேட்டியின்போதே ரஜினி லதாவிடம் தன்னை மணக்க இஷ்டமா என்று கேட்டார்.
அவர் வெட்கப்பட்டுக் கொண்டு எனது பெற்றோரிடம் கேளுங்கள் என்றார். லதா
ரஜினியை சந்தித்தபோது தான் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு தேறி
வந்தார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவர்களுக்கு இடையேயான அன்பு வளர்ந்தது
என்றார்.
ரஜினி சிறுவனாக இருந்தபோது கஷ்டப்பட்டது, குடும்பப் போராட்டம், இளம் வயதில்
தாயை இழந்தது பற்றி லதா கொஞ்சம், கொஞ்சமாக தெரிந்து கொண்டார்.
அவருக்கு தாயின் அன்பு தேவைப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன் என்றார் லதா.
பெரிய ஹீரோவாக ஆன ரஜினிக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான்
லதா வந்தார்.
லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பு நடிகர்
ஒய்.ஜி. மகேந்திரனின் தலையில் விழுந்தது. அபூர்வ ராகங்கள் படத்தில்
இருந்தே ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரனைத் தெரியும். லதாவின் சகோதரி சுதாவை
ஒய்.ஜி. மகேந்திரன் மணந்திருந்ததால் ரஜினிக்கு பெண் கேட்கும் வேலை
ஈசியாகிவிட்டது.
மேலும் சத்யநாராயணாவும் லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி
சம்மதம் வாங்கினர். இதையடுத்து ரஜினியின் நண்பர் ராஜா பாதர் போயஸ் கார்டன்
வீட்டுக்கு சென்று மணப்பெண் பற்றி கேட்டார். ரஜினி தன் காதலைப் பற்றியும்
லதாவை மணக்க விரும்புவதைப் பற்றியும் ராஜாவிடம் தெரிவி்த்தார். உடனே ரஜினி
லதாவை போன் செய்து வரவழைத்து இவர் தான் நான் மணக்க விரும்பும் பெண்
என்றார். அதன் பிறகு ராஜா பாதர் பெண் குறித்து பல கேள்விகளை கேட்டுவிட்டு
ஓ.கே. கல்யாணம் செய்துகொள் என்றார்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/rajinikanth-proposes-latha-accepts-166147.html
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/rajinikanth-proposes-latha-accepts-166147.html
சென்னை: ரஜினி தன்
காதலச் சொல்லி திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதற்கு லதா
வெட்கப்பட்டுக் கொண்டு தனது பெற்றோரிடம் சம்மதம் கேட்டுமாறு கூறியுள்ளார்.
தில்லு முல்லு ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ரஜினிகாந்த் லதா ரங்காச்சாரியை
முதன் முதலாக சந்தித்தார். லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால்
அவர்கள் மல்லேஸ்வரம் பகுதியில் வசித்தனர். சென்னை எத்திராஜ் கல்லூரியில்
படித்த லதா கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றபோது
தான் அவரை முதன் முதலாக சந்தித்தார்.
அவரை முதல் தடவைப் பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. ஒரு சினிமா
நடிகரைச் சந்தித்தோம் என்ற மாதிரியே இல்லை. ஏதோ நீண்ட காலம் பழகியவரை
சந்தித்தது போன்று இருந்தது என்றார் லதா.
ரஜினி உதவியாளர் சத்யநாராயணா கூறுகையில்,
அந்த பேட்டியின்போதே ரஜினி லதாவிடம் தன்னை மணக்க இஷ்டமா என்று கேட்டார்.
அவர் வெட்கப்பட்டுக் கொண்டு எனது பெற்றோரிடம் கேளுங்கள் என்றார். லதா
ரஜினியை சந்தித்தபோது தான் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு தேறி
வந்தார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவர்களுக்கு இடையேயான அன்பு வளர்ந்தது
என்றார்.
ரஜினி சிறுவனாக இருந்தபோது கஷ்டப்பட்டது, குடும்பப் போராட்டம், இளம் வயதில்
தாயை இழந்தது பற்றி லதா கொஞ்சம், கொஞ்சமாக தெரிந்து கொண்டார்.
அவருக்கு தாயின் அன்பு தேவைப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன் என்றார் லதா.
பெரிய ஹீரோவாக ஆன ரஜினிக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான்
லதா வந்தார்.
லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பு நடிகர்
ஒய்.ஜி. மகேந்திரனின் தலையில் விழுந்தது. அபூர்வ ராகங்கள் படத்தில்
இருந்தே ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரனைத் தெரியும். லதாவின் சகோதரி சுதாவை
ஒய்.ஜி. மகேந்திரன் மணந்திருந்ததால் ரஜினிக்கு பெண் கேட்கும் வேலை
ஈசியாகிவிட்டது.
மேலும் சத்யநாராயணாவும் லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி
சம்மதம் வாங்கினர். இதையடுத்து ரஜினியின் நண்பர் ராஜா பாதர் போயஸ் கார்டன்
வீட்டுக்கு சென்று மணப்பெண் பற்றி கேட்டார். ரஜினி தன் காதலைப் பற்றியும்
லதாவை மணக்க விரும்புவதைப் பற்றியும் ராஜாவிடம் தெரிவி்த்தார். உடனே ரஜினி
லதாவை போன் செய்து வரவழைத்து இவர் தான் நான் மணக்க விரும்பும் பெண்
என்றார். அதன் பிறகு ராஜா பாதர் பெண் குறித்து பல கேள்விகளை கேட்டுவிட்டு
ஓ.கே. கல்யாணம் செய்துகொள் என்றார்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/rajinikanth-proposes-latha-accepts-166147.html
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/rajinikanth-proposes-latha-accepts-166147.html