Saturday, August 16, 2025

SEA OF LOVE (2025)-KADALOLAM SNEHAM-மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )

                         



ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  சிங்கப்பூரில் பணி  புரிபவன் . அவனது அம்மா கிராமத்தில் இருக்கிறார் . நாயகனுக்கு சொந்த ஊரில் வந்து  செட்டில் ஆக வேண்டும் என்ற கனவு உண்டு . நாயகன் வீட்டுக்கு எதிர் வீட்டில் நாயகி குடி இருக்கிறாள் . அவளிடம் தன விருப்பத்தை  சொன்னபோது அவள் அதை ஏற்கவில்லை .


நாயகி நாயகனின் அம்மாவுடன்  பிரியம் வைத்திருக்கிறாள் . இவர்கள் இருவரின்  காதல் பற்றி  நாயகனுக்குத்தெரிய வருகிறது . இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக ஜிப்னு  சாக்கோ ஜோசப்   நடித்திருக்கிறார் . இவருக்கு அதிக வாய்ப்பில்லை . வந்தவரை ஓகே .நாயகி ஆக ஓ  சிண்ட்ரெல்லா (2023) அமிகோ (2024) படங்களின் நாயகி தில்ஷா  பிரசன்னன்  நடித்திருக்கிறார் . அழகான முகம், அமைதியான நடிப்பு . கண்ணியமான ஆடை வடிவமைப்பு . நாயகனின்  அம்மாவாக ஜீனத்  நடித்திருக்கிறார் , மங்களகரமான முகம் . கச்சிதமான  நடிப்பு 


கோட் டயம்  ரமேஷ்  முக்கியமான  ரோலில்  வருகிறார் .


தேவகிருஷ்ணன் , சாய் கிருஷ்ணா   ஆகிய இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி  இருக்கிறார்கள் ,தேவகிருஷ்ணன் , ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கிறார் .சாய் கிருஷ்ணா  இயக்கி இருக்கிறார் 



சபாஷ்  டைரக்டர்


1 பிரமாதமான  ஒளிப்பதிவு . ஆர்ட் பிலிம்க்கே  உரித்தான  மெதுவான திரைக்கதை 


2  மீராநாயரின்  பயர் படம் போல் இல்லாமல்  கலைநேர்த்தியான கண்ணியமான காட் சி அமைப்புகள் 


3   76 நிமிடங்களில்  ஷார் ப் ஆக ட்ரிம் செய்யப்பட் ட எடிட்டிங்க் 


  ரசித்த  வசனங்கள் 

1   யாருக்காகவும் உன் விருப்பத்தை நிறைவேற் றாம இருந்துடாத 


2  பொண்ணுக்கு  குறிப்பிட்ட வயசு  வந்ததும் திருமணம் பண்ணி வைத்து விட வேண்டும் 


3 நம்ம உடம்பில் இருக்கும் அக்கினியை காலாகாலத்தில் அணைக்கணும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகனின்  அம்மாவின் கேரக்ட்டர்  டிசைனில் குழப்பம் . நாயகியைத்தன் மகள் போல என ஒரு சீனில் சொல்கிறார் , இன்னொரு சீனில்  அவளைப்பிரிந்து இருக்க முடியாது என்கிறார் 


2 நாயகியின்  கேரக்ட்டர்  பேசிக்கலாவே  அவர் லெஸ்பியன் தான்  என்பதை க்ளியர்   கட்  ஆக சொன்ன மாதிரி  நாயகனின் அம்மா  நீண்ட கால தனிமை காரணமாகவா ? வேறு  என்ன காரணத்தால்      அப்படி  ஆனார்   என்பதில் தெளிவு  இல்லை 


3  நாயகன்  தன அம்மாவிட ம்  நீங்க  பை  செக்ஸுவலா?  என போல்டாக கேட்பது உறுத்துகிறது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களுக்குப்பிடிக்கும், பெண்களைப்போல பொறுமைசாலிகளுக்குப்பிடிக்கும் . ரேட்டிங்க்  2.25 / 5 

Friday, August 15, 2025

கூலி (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவெஞ்ச் ஆக்சன் மசாலா )

                          




ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  விசாகபபட்டினத்தில்  ஒரு துறைமுகத்தை  தனது  கட்டுப்பாட்டில்  வைத்துக்கொண்டு சட்டத்துக்குப்புறம்பான வேலைகளை செய்கிறான் . அவனுக்குக்கீழே  மேனேஜர் ஆக  இருக்கும் சைடு வில்லன்  எல்லா  வேலைகளையும் பார்த்துக்கொள்கிறான்.அங்கே  தொழிலாளர்களோடு  சில  போலீஸ்  உளவாளிகளை  கலந்து இருக்கிறார்கள் . சைடு  வில்லன் ஒரு போலிசைக்கண்டு பிடித்துக்கொலை செய்கிறான் 


 நாயகன்  சென்னையில் ஒரு மேன்ஷன் நடத்தி வருகிறான் . அவனது  நண்பனை  விசாகப்பட்டினத்தில்  யாரோ கொலை செய்து விட் டார்கள் என்பதைக்கண்டு பிடிக்கிறான் . பிணங்களை  டிஸ்போஸ்  செய்யும்  எலக்ட்ரிக் சேரை  உருவாக்கி  வில்லனுக்காக வேலை பார்த்தவன் தான் நாயகனின் நண்பன் . எதனால் கொலை செய்யப்பட் டான் . யார் அவனைக்கொன்றது  என்பதைக்கண்டு பிடித்துப்பழி வாங்க  நாயகன்  முயற்சிக்கிறான் . இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக்கதை 



 வில்லன் ஆக  நாகார்ஜுன்  இளமை மாறாத  பொலிவுடன் இருக்கிறார் . இவருக்கு அதிக வாய்ப்பில்லை .

 சைடு வில்லன் ஆக சவுபின்  சாஹிர்  பிரமாதப்படுத்தி இருக்கிறார் . மோனிகா  பாடலில் செம டான்ஸ்  வேற .


நாயகன் ஆக  ஒன்  அண்ட் ஒன்லி  சூப்பர் ஸ் டார் ரஜினி .வழக்கமாக அவர் செய்யும் காமெடி , ரொமான்ஸ் , கலா ட்டாக்கள் எதுவும் இல்லை  . ஆக்சன் , சோகம்      மட்டும் தான் . ஆனாலும் பிளாஸ்பேக்கில் இளமை ரஜினியாக கலக்கி விட் டார்  


நாயகனின்   நண்பன் ஆக  சத்யராஜ் . மேடைகளில்  ரஜினியை எதிரியாக விமர்சித்தவருக்கு நண்பன் ரோல் .பாவம்  அவர் நிலைமை .அவரது மகளாக சுருதி கமல் . ஒரே சோகம் 


உபேந்திரா , அமீர்கான்  இருவரும் தேவை இல்லாத ஆணிகள் ரச்சிதாராம்  கலக்கலான நடிப்பு  .சார்லி  வேஸ்ட் பீஸ் , காளி  வெங்கட்  கெஸ்ட் ரோல் 


 இசை அனிரூத் . பிஜிஎம்மில்  கலக்கி விட் டார் . மோனிகா பாட்டு செம ஹிட்டு .. கிரிஷ் கங்காதர்   ஒளிப்பதிவு அருமை . பிலோமின் ராஜ்   எடிட்டிங்கில்  படம் 170 நிமிடங்கள் ஓடுகிறது . திரை க்கதை , இயக்கம்  லோகேஷ் கனகராஜ் 


 




சபாஷ்  டைரக்டர்

1   படம் போட் ட  16 வது நிமிடத்தில் ஹீரோ  இன்ட் ரோ , 44 வது நிமிடத்தில்   லேடிஸ்  ஹாஸ்ட்டலில்  நடக்கும் அரங்கம் அதிர  விசிலு பறக்க   நடக்கும் ஆக்சன்சீக்வன்ஸ்  அதகளம் 


2  ஆந்திராவில்  தனக்கு யாரை எல்லாம்  தெரியும்   என்பதை ரஜினி சொல்லும் சீனில் தியேட்டரில் கரகோஷம் 


3  மோனிகா  பாட்டில்  கொரியோ கிராப் , காஸ்ட்யூம்  டிசைன்   கலக்கல் ரகம் , செம ஹிட்டு மெட்டு 

4  வா வா  பக்கம் வா  பாட்டு  சீனை  ப்ளேஸ்   செய்த  விதம்  செம + இன் ட்டர் வெல் பிளாக்  சீன் 

6   லைலா   காலேஜ்  லைலா பாட்டு  சீனை    மேன்ஷன்  பைட் சீனுக்கு மேட் ச்  செய்த  விதம்  செம

7  சைடு வில்லனின்  மனைவி  செய்யும் வில்லித்தனம் , அதில் வரும் ஒரு டிவிஸ்ட் 


8  நாயகனின்  பிளாஷ்பேக்  சீனை  க்ளைமாக்சில்  ஓப்பன் செய்த விதம் , அந்த ஐடியா 


  ரசித்த  வசனங்கள் 

1  தெய்வம் நின்னு கொல்லு ம், மது தினம் தினம் கொல்லும்


2  அது   என்ன டெய்லு ? 


 காக்டெயிலு 


 நீ டீ டோட்டலர் ? 


3   பழி  வாங்குவது முக்கியமா? வாழ்க்கை முக்கியமா?  எனப்பார்த்தா எங்களுக்கு வாழ்க்கை தான்  முக்கியம் .


4   பாப்பா  , நீயா வந்து வண்டில  ஏறிட் டா நல்லது , இல்லைன்னா நான் கண்ட இடத்துல தொடுவேன் 


 தொட் றா  பார்க்கலாம் 


5  அவன்  ஏதாவது சொன்னானா? 


 நான் சொன்னா யார் கிட் டயாவது   சொல்லிடுவியா?ன்னு கேட் டா ன் , சொல்ல  மாட் டேன்னு   சொன்னேன் . அப்புறம் எதுக்கு நான் உன் கிட்டே    சொல்லணும் கறான் ? 

6 வில்லி  - நான்  எது  சொன்னாலும் நம்பிடுவியாடா? 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   துறைமுகம்    நடத்தும்  வில்லன்  பிணங்களை  கடலுக்குள்  கல் கட்டி  தூக்கி வீசாமல்  அதை அப்புறப்படுத்த எலெக்ட்ரிக் சேரை நம்புவது எனோ ? 


2 எலெக்ட்ரிக் சேரை   டிசைன்   பண்ணிய டீம்  10 பைசா  செலவில்லாமல் டம்மியாக அதைக்காண்பித்த விதம் பரிதாபம் 


3   எலெக்ட்ரிக் சேரை  ஆப்பரேட்  செய்வது   எப்படி ? என்பதை  வில்லன்  தெரிந்து கொள்ளாமல் இருப்பது அவன் மகா தத்தி என்பதைக்காட்டுகிறது  


4  எலெக்ட்ரிக் சேர்   டெக்னிக் எல்லாம் எம் ஜி ஆர் காலத்துலயே  பாரத்தாச்சே? புதுசா   சொந்தமா யோசிக்கக்கூடாதா? 

5 தேவையே  இல்லாமல் ஓவர் வயலன்ஸ் 

6 மெயின்  வில்லனை  விட அவனிடம் வேலை பார்க்கும் சைடு வில்லனுக்கு அளிக்கப்படட அதிக முக்கியத்துவம் 

7 ரஜினிக்கு  பஞ்ச்  டயலாக்  வைக்காதது பெரிய மைனஸ் 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18 + 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் கூலி(2025)-தமிழ்- நண்பனைக்கொன்றவனைப்பழி வாங்கும் மாமூல் ஆக்சன் மசாலா தான். ரஜினி மேஜிக், அனிருத் பிஜிஎம் மட்டுமே பிளஸ். முதல் பாதி சுமார், பின் பாதி அதை விட சுமார்.விகடன் மார்க் யூகம் 41.ரேட்டிங்க் 2.5 /5

பிளாக்கில் டிக்கெட் வாங்கிப்பார்க்கும் அளவு ஒர்த் இல்லை.ரஜினி ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.ஒரு படி ஜெயிலருக்குக்கீழே,ஒரு படி அண்ணாத்த க்கு மேலே.
ஒரு படி மாஸ் டருக்குக்கீழே , ஒரு படி லியோவுக்கு மேலே

Coolie
Theatrical release poster
Directed byLokesh Kanagaraj
Screenplay byLokesh Kanagaraj
Chandhru Anbazhagan
Story byLokesh Kanagaraj
Produced byKalanithi Maran
Starring
CinematographyGirish Gangadharan
Edited byPhilomin Raj
Music byAnirudh Ravichander
Production
company
Release date
  • 14 August 2025
Running time
170 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budget350–400 crore[2]
Box office150 crore[3]

Wednesday, August 13, 2025

ட்ரெண்டிங்க் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (சைக்கலாஜிக்கல் டெக்னோ த்ரில்லர் )

   

      அறிமுக  இயக்குனர்  சிவராஜின்  இயக்கத்தில் வெளி  வந்திருக்கும்    த்ரில்லர் படமான இது  18/7/2025  முதல்  திரை  அரங்குகளில் வெளியாகி  மீடியாக்களின் வரவேற்பைப்பெற்ற படம் . இன்னமும் ஓ  டி டி  யில் வெளி வரவில்லை 


இது வித்தியாசமான  த்ரில்லர் மூவி . ஒரே  பங்களா தான் லொக்கே ஷன் .. நாயகன் , நாயகி ,, நாயகியின் அம்மா, , நாயகியின் தோழி, நாயகன் -ன் அண்ணன்  ஐவர் தான்  நடிக , நடிகையர் .லோ பட்ஜெட்டில் உருவான  மாறுபட் ட  த்ரில்லர் மூவி . இது  அனைவருக்குமான படம் அல்ல, ஏ செண்ட்டர்  ஆடியன்ஸ்க்கான  படம்                 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன் -, நாயகி  இருவரும்  பிரபலமான  யு  ட்யுபர்ஸ் . ஹிட்டுக்காக  என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் .. அதில் வந்த வருமானத்தில் பங்களா எல்லாம் கட் டி விட் டார்கள் .. ஒரு நாள்  அவர்களது சேனல்   லாக் ஆகிறது . கடன் காரர்கள் நெருக்குகிறார்கள் . பணத்தேவை  இருக்கிறது . இப்போது  ஒரு மர்ம நபர்  சில டாஸ்க்குகள் கொடுத்து வி ளையாட அழை க்கிறது . ஜெயித்தால் 2 கோடி ரூபாய் .


 தம்பதி  விளையாட சம்மதிக்கிறது . ஆனால்  இதில் பல பிரச்சனைகள்  வருகிறது . இறுதியில் என்ன ஆனது ? என்பதே  மீதி திரைக்கதை 


 நாயகன் -, நாயகி  ஆக கலையரசன் , பிரியாலயா  ஆகிய இருவரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள் . 


 சாம் சி எஸ்  இசை  சுமார் ரகம் தான் , பிரவீன்  பாலுவின் ஒளிப்பதிவு அருமை 

நாகூரான் ராமச்சந்திரன்  எடிட்டிங்கில் படம் 140 நிமிடங்கள் ஓடுகிறது 

திரைக்கதை  எழுதி   இயக்கி இருப்பவர்  என் சிவராஜ் 



சபாஷ்  டைரக்டர்

1   நாயகன் , நாயகி இருவர் நடிப்பும்   அருமை . நாயகியின்  இளமையும்  அழகும்  கூடுதல் பிளஸ் 


2  பிக் பாஸ்   பார்ப்பது  அகில இந்திய அளவில்  ட்ரெண்டிங்கில்  இருப்பதால்  எல்லோருக்கும் இக்கதை கனெக்ட் ஆகும் 


3  இந்தக்கதை மூலம் இயக்குனர் சொல்ல வந்த சோசியல் மெசேஜ் 


ரசித்த  வசனங்கள் 


1 பெரும்பாலானவர்கள் காதலில் பிரச்சனை நிகழ் காலத்தில் இல்லை அவங்க கடந்த காலத்தில் தான் இருக்கு 


2   முதல்ல காபி 

 நோ  , முதல்ல  கண்டடென்ட் 


 சரி காபி தான் நம்ம  கண்டடென்ட் 


3  இன்னைக்கு ஆன்லைன்  ல திறமையைக்காட்டிப்பெரிய ஆள் ஆனவங்களை விட கெத்து காட்டிப்பெரிய ஆள் ஆனவங்க தான் அதிகம் 


4       நாலு   வார்த்தைக்கோர்வையாகப்பேசத்தெரியாத தத்திங்களையே   ஆன் லைன் செலிபிரிட்டி (  பெரிய  ஆள் )ஆக்கறோம் , இதெல்லாம் ஒரு மேட்டரா ? 


5 இப்படி  உயிரைப்பணயம் வெச்சுதான் லைக்ஸ் வாங்கணுமா? என்ன ? 


 நாங்க ( ஆண்கள் ) எல்லாம் சட் டையைக்கழட்டினா யாரு பார்ப்பாங்க ? 


6 மாடிக்கு மாடி தாவி மங்கிஸ்கான்  வேலை செஞ்சாலும்  நாநூறு  லைக்ஸ் தாண்டலையே ? 


7   24   மணி நேரமும் கடவுளையே நினைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் முன்னாள் கடவுளே வந்தாலும் அதைக்கடவுளா  அவன் நினைக்க மாட் டான் ,  பேய்   என்று தான் நினைப்பான் 


8   தேவையான நேரத்தில் தேவையானதைக்கொடுப்பது பேயா இருக்காது , அந்த நேரத்தில் அது தான் கடவுள் 


9   கேமை ரியல் லைஃபா பார்க்காத 


ரியல் லைஃபை நீ கேமா பார்க்காத 


10  ஒருத்தர் தோற்றால்தான்  இன்னொருத்தர் ஜெயிக்க முடியும் , அதுதான் வாழ்க்கைத்தத்துவம் 


11  முகமும்  அடையாளமும் இல்லைன்னா இங்கே எல்லாருமே பர்வர்ட் தான் 


12  காதல் என்பது எது   தெரியுமா? 


 ஒருவரை  ஒருவர் புரிந்து கொள்வது 


 இல்லை , ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற் சிக் காமல் இருப்பது 


13  நம்மைப்பற்றி நமக்கு  எப்ப முழுதாகத்தெரிய வருதோ அன்னைக்கு நாம ஒன்றாக இருக்க மாட் டோ ம் 


14   பணம் இருக்கும், ஆனா நிம்மதி இருக்காது . பணத்தைத்தேடிப்போய் நாம தொலைந்து விடக்கூடாது 


15  அமுக்கி  வைக்கப்பட் ட  உணர்ச்சிகள்  சாகாது . பின்னால் அசிங்கமா வெளி வரும் 


16   நீ  அழுவது கூட டாஸ்க் மாதிரி இருக்கு 


17 ஒரு மனுஷனுக்கு மிகச்சிறந்த நண்பனும், மிக மோசமான எதிரியும் யார் தெரியுமா? அவனோட கடந்த காலம் தான் 


18 திரும்பவும் என் கடந்த காலத்துக்குப்போக நான் விரும்பலை 


19 எங்க எமோஷன்ஸை யாருக்கோ விற்கப்பார்க்கறீங்க 


20 இத்தனை நாட்களாக  நீங்க உங்க பொய்யான  உணர்ச்சி களை  உங்க சேனலுக்காக  வித்துட்டு இருந்தீங்க . இப்போதான் உங்க உண்மையான உணர்ச்சி களை  இந்த கேம்  டாஸ்க் குக்காக வித்துட்டு இருக்கீ ங்க . 


21 எங்க இருவருக்குள்ளும் இருப்பது  அன்  கண்டிஷனல் லவ் 


 இந்த உலகத்துல அன் -  கண்டிஷன் என ஒன்னு கிடையவே கிடையாது 


22  வாழ்க்கைல   நாம சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு எதோ ஒன்னு கத்துக்கொடுப்பாங்க 


23  இங்கே   வாய்ப்புக்கிடைக்கும் வரை எல்லாருமே ஜென்ட்டில் மேன் சூப்பர் மே ன் தான் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   நாயகனின் அண்ணன்  20 லட்ச ரூபாய்  மதிப்புள்ள   வைரம்    தந்து  அதை  வெளியில்  விற்றுத்தரச்சொல்கிறான் . அதை வங்கியிலோ .  நகைக்கடையிலோ  விற்க முடியாதா? 


2  தம்பதியாக இருக்கும்  இருவரும் வீடு பூரா  சி சி டிவி  கேமரா  மூலம் தாங்கள்  கண்காணிக்கப்படுவதை எப்படி  ஏற்றுக்கொள்கிறார்கள் ? பிக் பாஸ் கதை வேற , இது  பர்சனல்   லைப் ஆச்சே ? 


3  நாயகனின்   அண்ணனை  தங்கள்   குடும்ப நண்பர் என நாயகன் எதனால் மாற்றி  சொல்கிறார் ?


4 பர பரப்பாகப்போகும் திரைக்கதையில்  நாயகனின் அண்ணனின்  சோகக்கதை  படத்தின் வேகத்துக்கு வேகத்தடை 

5  டாஸ் க்குக்காக , பணத்துக்காக  தாலி கட் டிய சொந்த சம்சாரத்தை  கணவனே  இன்னொருவரிடம் நெருக்கமாக  இருப்பதாக நடிக்கச்சொல்வது நம்ப முடியவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மாறுபட் ட  த்ரில்லர்  மூவி பார்க்க விரும்புவர்கக்ள்  பார்க்கலாம் . விகடன் மார்க் யுயுகம் 41 , ரேட்டிங்க்  2.75 / 5 


டிரெண்டிங்
நாடக வெளியீட்டு சுவரொட்டி
இயக்கியவர்சிவராஜ் என்
எழுதியவர்சிவராஜ் என்
தயாரித்தவர்
  • மீனாட்சி ஆனந்த்
  • ஆனந்த் ஜி
நடிப்பு
ஒளிப்பதிவுபிரவீன் பாலு
திருத்தியவர்நாகூரான் ராமச்சந்திரன்
இசையமைத்தவர்சாம் சிஎஸ்
தயாரிப்பு
நிறுவனம்
ராம் பிலிம் ஃபேக்டரி
விநியோகித்தவர்ஐந்து நட்சத்திர கே. செந்தில்
வெளியீட்டு தேதி
  • 18 ஜூலை 2025
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Tuesday, August 12, 2025

ஹவுஸ் மேட்ஸ் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (பேண்ட் டசி காமெடி சயின்ஸ் பிக்சன் டிராமா )


                          

காளி  வெங்கட்  நடிக்கும் படங்கள் எல்லாமே  எதோ ஒரு விதத்தில் மனதைக்கவர்வதாகவே அமைந்து விடுகிறது . லோ பட்ஜெட்டில் உருவான இந்த பேண்ட் டசி காமெடி சயின்ஸ் பிக்சன் டிராமா நம்ப முடியாத கதையாக இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது . குறிப்பாக க்ளைமாக்ஸ் சீன்  பெண்களைக்கவரும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  வாடகை வீட்டில் குடி இருக்கிறான் . ஹவுஸ் ஓனர் பெண்ணையே லவ் பண்ணிக்கல்யாணம் பண்ணிக்கொள்கிறான். காதல் மனைவியுடன்  குடி இருக்க சொந்தமாக ஒரு அபார்ட்மெண்ட் வீட் டை விலைக்கு வாங்குகிறான்  . அந்த வீட்டுக்கு இருவரும் குடி போன பின்  அமானுஷ்ய விஷயங்கள்  நடக்கின்றன . முதல் 20 நிமிடங்கள்  ஹாரர்  டிராமாவாக படம் நகர்கிறது 


அதே வீட்டில்  இன்னொரு ஜோடி குடி இருப்பது தெரிய வருகிறது . 2012ல்  அந்த ஜோடி , 2022 ல் இந்த ஜோடி இது  எப்படி என்ற குழப்பத்துடன் இடைவேளை வருகிறது 


பின் பாதியில்  2012ல் குடி இருந்த அந்த ஜோடியைப்பற்றி இவர்கள் விசாரிக்க  சில உண்மைகள் தெரிய வருகின்றன . இதற்குப்பின்  நடக்கும்  சம்பவங்கள்  தான் பின் பாதி திரைக்கதை 


நாயகன்  - நாயகி ஆக தர்ஷன் - ஆர்ஷா  இருவரும் கனகச்சிதம் . குறிப்பாக  ஆர்ஷா  ஸ்லிம்  பியூட்டி ஆக நடிப்பில் ஜொலிக்கிறார் . இன்னொரு ஜோடி ஆக  காளி  வெங்கட் - வினோதினி  யின்  குணச்சித்திர நடிப்பு  அருமை . இவர்கள்  இருவரும்  2012- 2022  ஆகிய இரு கால கட்ட  கெட் டப்பில்  வருவது  செம 


படத்தில்  வில்லன் என யாரும் இல்லாதது ஆறுதல் .  பேய் வீட் டை  வாங்க வரும்  நபர் ஆக டி  எஸ் ஆர்   சீனிவாசன் கலக்கல் நடிப்பு 

ஒளிப்பதிவு  எம் எஸ் சதீஷ் . ஒரே  வீட்டை  இரு    வேறு  கால   கட்டங்களில்  வித்தியாசப்படுத்திக்காட்டி இருப்பது அருமை .  மெகா ஹிட் ஆனா பிரேமம் படத்தின் இசை அமைப்பாளர் ராஜீஷ்  முருகேசன்  இதில் ஏமாற்றி விட் டார் 

சபாஷ்  டைரக்டர்


1  நம்ப முடியாத  கதையாக இருந்தாலும் மாறுபட் ட  கற்பனை   அருமை 


2   இரு ஜோடிகளின் அருமையான நடிப்பு 


3 ஆல்ரெடி   இறந்த ஒருவரை டைம் டிராவல்  செய்து  உயிரைக்காப்பாற்றும்  இடம் அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  பேய்  நம்ம பே ரு கேட் குதே? அடுத்து ஆதார் பாண் நம்பர் கேட்குமோ ? 


2   நீ   பாட்டுக்கு ஒரு பேயை வர வெச்சுடாத . ஆல்ரெடி ஒரு பேய் கூட குடித்தனம் பண்ணிட்டு இருக்கேன் 


3  என்னது > பேய் ஸ்பெல்லிங்க் மிஸ் டே க்கோட எழுதுது ?


 போய் டியூஷன் எடு 


4  என்னது  ? ஸ்பென்சரா? 


 அது சென்சார் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   என்னதான்  இயக்குனர் சிரமப்பட்டு இரு கேரக்ட்டர்கள் மூலம் விளக்கினாலும் புரியாத குழப்பமான கதை  மைனஸ் 


2  மெயின் கதைக்கு வர 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள் 


3 தேவை இல்லாத பல காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்   - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்


 வித்தி யாசமான  கதை அம்சம்  வேண்டுபவர்கள்  பார்க்கலாம் , விகடன் மார்க் 42 . ரேட்டிங்க் 3 / 5 

Monday, August 11, 2025

சரண்டர் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர் )

     

          ஈரம் ( 2009)  என்ற பிரமாதமான க்ரைம் த்ரில்லர்  படத்தைக்கொடுத்த  இயக்குனர் அறிவழகன்  வெங்கடாச்சலம்  இடம் உதவி இயக்குனர் ஆகப்பணியாற்றிய  கவுதமன் கணபதி  அறிமுக இயக்குனர் ஆக களம் இறங்கிய படம் இது . லோ பட்ஜெட் படம் என்பதால் அதிக பிரமோஷன் இல்லை .1/8/2025  முதல் திரை  அரங்குகளில் வெளியான இந்தப்படம் அனைவரிடமும் பாசிட்டிவ் விமர்சனங்களைப்பெற்று வருகிறது           


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - மாநிலத்தில் இன்னும் 5 நாட்களில்  தேர்தல்  நடக்க இருக்கிறது . வாக்குக்குப்பணம் தர அரசியல்வாதி  ஒரு தாதாவிடம் 10 கோடி ரூபாய் பணம் கொடுத்து விட அந்தப்பண த்தை  ஒரு போலீஸ் ஆபீசர் ஆட்டையைப்போடப்பார்க்கிறார் . வில்லன் ஆன அந்த தாதா   செய்யும் சம்பவங்கள் தான்  பரபரப்பான திரைக்கதை . இது ஒரு டிராக் 



சம்பவம்  2 - சென்னை திருமழிசை போலீஸ்  ஸ் டேஷனில்  நாயகன்  ட்ரெயினிங்க் எஸ் ஐ  ஆக பணி  புரிகிறார் . அங்கே ஒரு  துப்பாக்கி  திருடு போகிறது .அதை எடுத்தது  யார்?  என்று விசாரணை நடக்கிறது இது இன்னொரு டிராக் 



சம்பவம்  3 - அந்த போலீஸ்  ஸ்டேஷனில்  பல வருடங் களாகப்பணி புரிந்த  ஏ ட்டுக்கும் , சப் இன்ஸ்பெக்ட்டர்  மேடத்துக்கும் ஈகோ கிளாஸ்   உருவாகிறது . அந்த ஏ ட்டு   வில்லனின் தம்பியை  ஒரு சூழலில் அடித்து விடுகிறார் . இதற்குப்பழி வாங்க வில்லன்  அவரை  என்ன என்ன சம்பவம் செய்தான்  அதை நாயகன் எப்படி எதிர் கொண்டான் என்பது இன்னொரு டிராக் 


 மேலே   சொன்ன 3 சம்பவங்களையும்  படிக்கும்போது மேலோட்ட்மாக  சாதாரணமான  கதை போல தோன்றினாலும் , பரபரப்பான   திரைக்கதை  மூலம்  அருமையாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் 


நாயகன் ஆக தர்ஷன்  கச்சிதம் . உடல் மொழி , ஜிம் பாடி , க்ளோஸ்  கட் ஹேர் ஸ் டைல்  எல்லாமே ஓக்கே , ஆனால் நடிப்பில் இன்னமும் கவனம் செலுத்தி இருக்கலாம் 


வில்லன் ஆக   சுஜித் சங்கர்  கலக்கி இருக்கிறார் . கணகு   என்ற  கேரக்ட்டரில்  வாழ்ந்திருக்கிறார் . மிரட்டலான நடிப்பு .இவர் வரும்போதேர்ல்லாம் ஒலிக்கும் பிஜிஎம் கலக்கல் ரகம் 


ஏ ட் டாக  லால்  அருமையான குணச்சித்திர நடிப்பு . அவமானப்படும்போதும்,  பொறுமையாக இருக்கும்போதும் கண் கலங்க வைக்கும் நடிப்பு 


 போலீஸ்  இன்ஸ்பெக்ட்டர் ஆக  வரும் டி சங்கர் ,  ஈகோ  கொண்ட  போலீஸ் ஆபீசர் ஆக வரும் ரம்யா , க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்  அவிழ்க்கும்  செம்மலர் அன்னம்  ஆகிய அனைவர் நடிப்பும் அருமை 

ஒளிப்பதிவு  மெய்யேந்திரன் . சண்டைக்காட் சிகளில் கவனிக்க வைக்கிறார் . ரேணுகோபாலின் எடிட்டிங்கில்  க்ரிஸ்ப்  ஆன கட்டிங்க் , ட்ரிம்மிங்க் . இரண்டேகால் மணி நேரம் படம் ஓடுகிறது . ஒரு சீன கூட போர் அடிக்கவில்லை 

 விகாஸ்  படிசா தான் இசை . பின்னணி இசையில் கலக்கி விட் டார் 


திரைக்கதை  , வசனம்  எழுதி  இயக்கி இருப்பவர் கவுதமன் கணபதி

சபாஷ்  டைரக்டர்


1   நாயகன்  , போலீஸ்   ஏட்டு  இருவருக்கும் இடையிலான அப்பா மகன் பாண்டிங்க் அருமை 


2  ரஸவாதி  படத்தின்   வில்லன் தான் இதில் வில்லன்  ,செம்மயான  நடிப்பு . வலிமை ஆக எழுதப்பட் ட கேரக்ட்டர் 


3   போலீஸ்   ஸ்டேஷனில்  நடக்கும்  பாலிடிக்ஸை  படம் ஆக்கிய விதம் அருமை 


4 வில்லனின்  தம்பியை நாயகன்  பிளக்கும்  சீன் அதகளம் 


5  வில்லனை  ஒரு போலீஸ் ஆபீசர்  ஏமாற்றுவதும்  அவரை   வில்லன்  டீல் செய்யும் விதமும் செம  


6   க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்  எதிர்பாராத  சென்ட்டிமென்ட்  டச் 


  ரசித்த  வசனங்கள் 


1   டேய , பொண்ணு வீட்டுல உன்னைப்பற்றிக்கேட் டாங்க 


 அம்மா, நான் கொஞ்சம்  வேலையா இருக்கே ன்னு சொல்லிடுங்க 




 அவங்க கூட வேலைல இருக்கற மாப்பிளை தான் வேணும்கறாங்க 


2   டேய் , நான் 13 வயசுல இருந்து ஓட்டு போட்டுட்டு இருக்கறவண்டா 


3   30 வருஷம் முன் எனக்கு நீ என்ன சொன்னியோ  அதை உனக்கு நான் சொல்றேன் , நம்ம மேல பயம் இருக்கும்வரை தான் நமக்கு மதிப்பு , பயம் போயிட் டா நம்மை வாழவே விட மாட் டாங்க 


4  போலிஸ்  டிபார்ட்மெண்டடைப்பொறுத்தவரை  நல்லவனா? வல்லவனா?  என பார்த்தா வல்லவன் தான் வேணும்பாங்க 


5   கேங்கே  இன்னமும் ஆரம்பிக்கலை , அதுக்குள்ளே  கேங்க்  லீடரா? 


6 அடுத்தவங்களைப்பார்த்து சிரிக்கும் ஈன புத்தி  மனுசங்களுக்கு மட்டும்   தான் இருக்கு 


7  மனசுல இருந்த  தைரியம் உடம்பில் இல்லை 


8  இங்கே  வாழணும்னா சூது தெரிஞ்சிருக்கணும் , நியாயம்  தேவை இல்லை நாணயம் தேவை இல்லை


9  அப்பா என்பது வெறும் வார்த்தை இல்லை , நம்பிக்கை 


10   எதோ  ஒரு வேலை கிடைச்சாப்போதும்னு நான் போலீஸ் வேலைக்கு வரலை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 



1  சீரியஸ்   ஆன நல்ல கதையில் முனீஸ்காந்த்தின் மொக்கைக்காமெடி எடுபடவில்லை 


2 கேட்கவே ஆள்  இல்லாதது போல வில்லன் போலீஸ்  டிபார்ட்மென்ட் ஆளுங்களை வரிசையாகப்போட்டுத்தள்ளுவது ஓவர் 


3  போலீஸ்  ஆபீசர்களை  வில்லனின் அடியாட்கள் போல சித்திகரித்த விதம் 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - நாயகி  இல்லாத குறையே  தெரியாத வண்ணம் எடுக்கப் பட் ட  நல்ல த்ரில்லர் படம் . விகடன் மார்க் யூகம் 42 . ரேட்டிங்க் 3/ 5 



Thursday, July 31, 2025

தலைவன் தலைவி (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் ( பேமிலி டிராமா )

     


   பசங்க  பட இயக்குனர்  பாண்டிராஜின்  சமீபத்திய படங்கள் கடைக்குட்டி  சிங்கம் (2018) ,  நம்ம வீட்டுப்பிள்ளை   (2019)ஆகிய  இரண்டும் வெற்றிப்படங்களாக  அமைந்தாலும்  எதற்கும் துணிந்தவன் (2022)  சுமார்  ரகப் படமே .

விஜய் சேதுபதிக்கு மகாராஜா  மெகா ஹிட்  கமர்சியல்  சக்ஸஸ்  என்றாலும்  ஏஸ்  சுமார்  ரகபபடமே . மைனஸ்  இன்ட்  மைனஸ்   = பிளஸ்     என்ற  பார்முலாப்படி இந்த  இருவரின் காம்பினேஷனில் வந்த இந்தப்படம்  ஹிட் ஆகி உள்ளது .25/7/2025   அன்று  திரை  அரங்குகளில்  வெளியான இந்தப்படம்  விரைவில்  அமேசான் பிரைம்  ஓ டி டி  யில்  வர  இருக்கிறது                 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சாலையோரக்கடை ஒன்று நடத்தி வருகிறான்  புரோட்டா  ஸ்பெஷலிஸ்ட் . விதம்  விதமாக புரோட்டா போடுவதில்  மன்னன் . இவருக்கு  வீட்டில்   பெண் பார்க்கிறார்கள் . மாப்பிள்ளை , பெண்  இருவருக்கும் பரஸ்பரம் பிடித்து விடுகிறது . நிச்சயதார்த்தம் நடக்கிறது 


 நாயகியின்  அப்பா , அண்ணன்  இருவரும்  ஒரு காலத்தில்  ரவுடியாக , தாதாவாக  வாழ்ந்தவர்கள் . நாயகன்  ஒரு அடிதடிக்கேசில்  மாட்டியவன்  என்ற  தகவல்  கிடைத்ததும்  நாயகியின் அண்ணன் திருமணத்தை நிறுத்துகிறான் .  ,நாயகனும் , நாயகியும்  ஓடிப்போய்  திருமணம்  செய்து  கொள்கிறார்கள் 



இப்போது  நாயகி தான்   நாயகனின்  கடைக்கு  கல்லாப்  பெட்டி சிங்காரி . இது  நாயகனின்  அம்மாவுக்குப்பிடிக்கவில்லை . குடும்பத்தில்  சண்டை  ஏற்பட்டு  இருவரும்   பிரிகிறார்கள். ஒரு   முறை அல்ல , இரு முறை   அல்ல , பல முறை  . இவர்கள்  மீண்டும் நிரந்தரமாக  இணைந்தார்களா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ் 

நாயகன் ஆக  விஜய் சேதுபதி  நன்றாக நடித்திருக்கிறார் .நாயகி ஆக நித்யா மேனன்  சிறப்பாக நடித்திருக்கிறார் . இருவருக்கும்  கெமிஸ்ட்ரி  பிரமாதமாக  ஒர்க் அவுட்  ஆகி இருக்கிறது  எனவும் சொல்லி விட முடியாது . ஓகே  ரகம் தான் 


திருடன் ஆக வரும்  யோகிபாபு  சில இடங்களில்  சிரிக்க வைக்கிறார் செம்பன் வினோத் ,சரவணன் , அருள் தாஸ் , காளி  வெங்கட்  நால்வரும்  குணச்சித்திர  நடிப்பை வழங்கி  இருக்கிறார்கள் 

சந்தோஷ்  நாராயணன்  இசையில்  6 பாடல்கள் . 3  நன்றாக இருக்கின்றன .  பின்னணி  இசை  ஓகே ரகம் .எம் சுகுமாரின் ஒளிப்பதிவு  குட் பிரதீப்  ராகவ்  எடிட்டிங்கில்  படம் 140 நிமிடங்கள்   ஓடுகிறது . பின் பாதி இழுவை . கதை , திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர்  இயக்குனர் பாண்டி ராஜ் 


சபாஷ்  டைரக்டர்


1  முதல்  பாதி முழுக்க   காமெடியாகக்கொண்டு போன விதம் . யோகிபாபுவின்  காமெடி டிராக் ஒர்க் அவுட் ஆனது  


2  குடும்பத்துடன்  பார்க்கத்தக்க   முதல் பாதி . பெண்களால் மட்டும் பார்க்க  முடிகிற  பின்  பாதி 


3  புருசனிடம்  கோபித்துக்கொண்டு  அம்மா வீட்டுக்கு  வரும் நாயகி  தனது  உடையுடன் ,   புருஷனுக்கும்  சேர்த்தே உடை  எடுத்து   வருவது 



  ரசித்த  வசனங்கள் 


1   சாமி , நான் அதிகம் ஆசைப்படவில்லை, ஒரு பத்துப்பவுனோ , 15 பவுனோ  அடிச்சாப்போதும்  


2  சம்சாரத்துக்குக்காலைல இருந்து தலைவலி 


 சம்சாரம் என்றாலே  தலைவலி தானே ?


3  சொந்தக்காரன்  மாதிரி  வீணாப்போனவங்க யாரும் கிடையாது 


4  சொந்தக்காரன்  நம்மை  வாழவும்  விட மாட்டான்  சாகவும் விட மாட்டான்


5  நாம  எதுலயாவது  தோற்கணும் ,சொந்தக்காரன்  நமக்கு அட்வைஸ்  பண்ணனும் . அதுதான் அவன் நோக்கம் 


6 உங்களை  எப்படிக்கூப்பிட? அத்தான் ? மாமா?  வேணாம் , ட்ரெண்டிங்கா  டேய் , வாடா , போடா  இப்டி கூப்பிடுறேன்  


7  எப்பவும்  உறவை  விட்டுத்தள்ளி தான் இருக்கணும் 


8  எந்த  வீட்டில் நல்ல காரியம் நடப்பதாக இ ருந்தாலும் அதைத்தள்ளிப்போடக்கூடாது 


9  பெரிய இளையாராஜா  பேமிலி . அவரு  யாரு ? டி  இமானா? 


10 கடைல  உட் காரச்சொன்னா  கல்லாப்பெட்டில  மட்டும் தான் உட்காரனும் 


11  அத்தையை அத்தை  என  சொல்லாம  நத்தைன்னா சொல்ல  முடியும் ?


12 பிள்ளையைப்பெத்துக்கொடுக்கச்சொன்னா  பிரியத்தைப்பெத்துக்கொடுத்திருக்கே? 


13 குடும்பம்  பிரிய பெரிய காரணம் எல்லாம் தேவை இல்லை . கன்றாவியான  காரணமே போதும் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பின் பாதி திரைக்கதையில்  அழுத்தம் இல்லை . இருவரும் பிரிவதற்கோ , மீண்டும் சேர்வதற்கோ காரணம் எதுவும் சொல்லப்படவில்லை 


2 தினசரி  ரூ  5000 - ரூ 8000  லாபம்   வரும் கடையில் பாத்திரங்களை துலக்க  300 - 500 ரூபா சம்பளத்தில் ஆள்  மாட் டார்களா? 


3  க்ளைமாக்சில்  இருவரும் இணைவார்களா?  மாட் டார்களா?  என்ற  பதட் டம்  ஆடியன்ஸுக்கு வரவில்லை , சலிப்பு தான் வருகிறது 

4  காரணமே  இல்லாமல்  கத்தி கத்திப்பேசுவது  இரிட்டேட்டிங்க் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -க்ளீன்  யு 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்தலைவன் தலைவி (2025) - காதலித்துத்திருமணம் செய்து கொண்ட தம்பதி அடிக்கடி சண்டை போட்டுப்பிரிந்து விடுகிறார்கள்.அவர்கள் சேர்ந்தார்களா?இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்.ஒரு மாமாங்கத்துக்குப்பின் யோகிபாபு காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. விஜய்சேதுபதி,நித்யாமேனன் நடிப்பு,பாண்டிராஜ் இயக்கம் ,காமெடி மூன்றும் பிளஸ்.அடிக்கடி கத்திக்கத்தி சண்டை போடுவது எரிச்சல். ஒளிப்பதிவு அருமை.டி வி சீரியல் பார்க்கும் பெண்களை மிகவும் கவரும்.விகடன் மார்க் யூகம் 41. ரேட்டிங் 2.75 /5தியேட்டரில் இதற்குக்கூட்டம் மாரீசன் க்கு வந்ததை விட அதிகம்.ஆனால் தரத்தில் அதை விட ஒரு மாற்றுக்கம்மி




Tuesday, July 29, 2025

மாரீசன் (2025)-தமிழ்- - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

                         




ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு திருடன்.ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆனதும் முதல் வேலையாக ஒரு செல் போன் திருட்டு ,பைக் திருட்டு நடத்துகிறான்.அடுத்து ஒரு வீட்டில் திருட  நுழைகிறான்.அங்கே ஒரு பெரியவர்  இருக்கிறார்.சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறார்.வீட்டில் பணம் இல்லை.பெரியவர் சொல்கிறார்.நான் ஒரு அல்சைமர் பேஷண்ட்.என் மகன் இப்படி கட்டி வைத்து விட்டுப்போய் இருக்கிறான்.வீட்டில் பணம் இல்லை.ஆனால் என் அக்கவுண்ட்டில் பணம் உண்டு.என்னை ரிலீஸ் செய்து வெளியே அழைத்துப்போனால் ஏ டி எம் மில் ரூ 25,000 எடுத்துத்தருகிறேன் என்கிறார்


நாயகனும் அவரை ரிலீஸ் செய்து அழைத்துப்போகிறான்.ஏ டி எம் மில் அவர் பணம் எடுக்கும்போது அவர் அக்கவுண்ட்டில் ரூ 25 லட்சம் இருப்பதை அறிந்து ஆனந்த அதிர்ச்சி அடைகிறான்.அதை எப்படியாவது ஆட்டையைப்போடயுவன் சங்கர் ராஜா.பி ஜி எம் அருமை.ஒளிப்பதிவு கலைச்செல்வன் சிவாஜி ,கலக்கி இருக்கிறார் .154 நிமிடஙகள் படம் ஓடுகிறது.

இயக்கம் சதீஷ சங்கர்


சபாஷ்  டைரக்டர்


1. படத்தின் மெயின் கதையை யூகிக்க முடியாமல் மடை மாற்றி விட்டது போல ட்ரெய்லர் கட் ரிலீஸ் செய்த சாமார்த்தியம்

2. முதல் பாதிக்கும் ,இரண்டாவது பாதிக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி திரைக்கதை அமைத்த விதம்

3. தியேட்டரையே அல்லோலகல்லோலப்படுத்திய  ரீ மிக்ஸ் சாங்க் ராமாராஜன் நடித்த புதுப்பாட்டு படத்தின் நேத்து ஒருத்தரை ஒருத்தரைப்பார்த்தோம் பாடல் நடனக்காட்சி நாஸ்டாலஜிக்கல் மொமெண்ட்

4 வடிவேலுக்கான காஸ்ட்யூம் டிசைன் அருமை.இந்த மாதிரி ஒரு கண்ணியமான தோற்றத்தில் நாம் அவரைப்பார்த்ததே. இல்லை

5. ஹோட்டலில் தான் செய்யும் திருட்டுத்தனத்தை வேவு பார்க்கும் சிறுவனை பகத் தன் கண்களாலேயே மிரட்டும் சீன்

6. பகத் வண்டியில் போகும்போது ஒரு. சந்தேகத்தில் வாட்சப் ஸ்டேட்டசை செக் செய்து உண்மை உணரும் தருணம் இயக்குனரின் ஸ்மார்ட் ஆன மூவ்

7. துணிக்கடை ஓனரின் போன் நம்பரை பகத் சாமார்த்தியமாக வாங்கும் சீன்

8. டிராபிக் போலீசிடம் தான் எம் எல் ஏ. டிரைவர் என பொய் சொல்லி. பகத் தப்பிக்கும் சீன்

9. போலி ஏ டி எம் கார்டுகளை பகத் ரெடி செய்யும் ஐடியா

10 பிரமாதமான ஒளிப்பதிவு ,கலக்கலான பின்னணி இசை,வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பு


  ரசித்த  வசனங்கள் 


1 வயசானாலே. எல்லா இடமும் ஜெயில் தான்.அது வீடா இருந்தா என்ன? ஆசிரமமா இருந்தா என்ன ?

2' நல்லா வேஷம் போட்டா. எல்லாரையும் ஏமாத்தலாம்?

3. கடவுள்ட்ட நாம் எதையும். கேட்கக்கூடாது.நமக்கு வேணும்கறதை நாம எடுத்துக்கணும்,கடைசில கடவுள்ட்ட மன்னிப்புக்கேட்டுட்டா மேட்டர் ஓவர்

ஒஹோ,அதனாலதான் கோயிலில் அவ்ளோ கூட்டமா?

4 நல்ல வேளை,கடவுள் மாதிரி வந்து என்னைக்காப்பாத்திட்டே

உங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொன்னீங்க?

உன் மேல மட்டும் எனக்கு நம்பிக்கை இருக்கா என்ன?

5. மத்த விஷயங்களை , மற்ற மனிதர்களை மறப்பதை விடுங்க.ஒரு மனிதன் தன்னைத்தானே மறப்பது கொடுமையான விஷயம்

6. ஞாபகங்கள் தான் வாழ்க்கை

7. எங்க ஊருக்கு வந்து எங்க கிட்டேயே ரகளையா?

ஏன்? உன் ஊரில் உன் நெஞ்சில் இந்த  கத்தியை செருகினா இறங்காதா?

8. நாம எதாவது தப்பு  செய்தாக்கூட நம்ம குடும்பம் நம்மைக்காப்பாற்றும்,கை விட்டுடாது என்ற நம்பிக்கையை நம்ம குழந்தைகளுக்கு நாம தான் கொடுக்கணும்

9. பொண்ணுங்க மாந்தோப்பில் இருக்கும் மாங்காய் ,மாம்பழம் மாதிரி ரசிச்சு ருசிப்பேன்.குறிப்பா பிஞ்சு மாங்காய்னா. எனக்கு ரொம்பப்பிடிக்கும்

10  சீரியல் கில்லர்னா ஒரு பேட்டர்ன்ல தான் கொலைகள் செய்யனும்னு அவனுக்குத்தெரியல

11 வழக்கமா பாம்புதான் எலியைத்தேடிப்போகும்.ஆனா இங்கே எலியே பாம்பைத்தேடி வந்திருக்கு

12. கடந்த காலத்திலும்.நிகழ்காலத்திலும் மாறி மாறி வாழ்றவங்க தானே நாம ?

13. காரியம் நடக்கனுமேன்னு பொறுமையாப்போய்க்கிட்டு இருக்கேன்.எப்போ மாறுவேன்னுதான் தெரியலை

14.  ஹாரன் அடிக்கலை

அதைத்தாங்க நானும் சொல்றேன்.ஹாரன் அடிக்காம வந்து மோதிட்டீங்க

யோவ்.அதான் சொன்னேனே ஹாரன் அடிக்கலை (  ஹாரன் வேலை செய்யல)

15. வண்டியை ரொம்ப விரட்டக்கூடாது

உங்களுக்காக உருட்டிட்டுக்கூடப்போறேன்

16. ஆகாயத்தில் பறக்கும் கொக்குக்கும் ,குளத்தில் இருக்கும் மீனுக்கும் எதோ ஒரு பந்தம் இருக்கற மாதிரி எனக்கும் ,இந்த வீட்டுக்கும் எதோ பந்தம் இருக்கு

17. யோவ்.மூச்சு விடக்கூடாது.நான் திருடன்.கால பாத்தியா. கத்தி

-::::::;;;

யோவ்,மூச்சை சொன்னேன்.மூச்சா விட  சொல்லலை

18 அப்போ உன் வாழ்க்கைல வேலைக்கே போனதில்லைல?

19. நான் பண்றது திருட்டு என சொல்லிட முடியாது.நான் மக்களை உஷார்ப்படுத்தறேன்.அதுக்கான  கட்டணத்தை அவங்க கிட்டே வசூல் பண்ணிக்கறேன்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 



1. படத்தில் பிளாஸ்பேக் போர்சனில் பாதிக்கப்பட்டவரின் அனுபவங்களை,அவர்கள் பட்ட கஷ்டங்களை விஷூவலாக ஆடியன்சுக்குக்காட்டினால் தான் மனதில் பதியும்.டயலாக்காக மட்டும் சொன்னால் அந்த இம்ப்பேக்ட் கிடைக்காது

2. தான் பயன்படுத்தும் போனில் சிம் கார்டைக்கழட்டி எறிந்தால் போதும்.போலீஸ் ட்ரேஸ் பண்ண முடியாதுவென   சீரியல் கில்லர் நினைக்கிறான்.போன் ஐ எம் ஈ நெம்பரை வைத்து போலீஸ் ஏன் அவனைப்பிடிக்கவில்லை?

3. நான்கு கொலைகள் நடந்தும் சி சி டி வி பற்றிப்பேச்சே வரவில்லை

4. நாயகன் ஒரு கட்டத்தில் இனி திருடுவதில்லை.திருந்தி விட்டேன் என்கிறான்.அதற்குக்காரணம் வலுவாக சொல்லவில்லை

5. நாயகனின் அம்மா வீட்டில் நடக்கும் காட்சிகள் மெயின் கதைக்கு ஸ்பீடு பிரேக்கர்

6. ராமராஜன் மாதிரி கெட்டப்பில் வரும் நபர்  ஆனந்தராஜ் மாதிரி டூயட்டில் வில்லத்தனம் காட்டும் முகபாவம் ஏனோ? சிரிப்பு அவருக்கு வராதது மைனஸ்

7.  பின் பாதியில் ஒரு ட்விஸ்ட் ஓப்பன் ஆனதும் மீதி மொத்தமும் யூகிக்கக்கூடிய  திரைக்கதையாக மாறுவது மைனஸ்
8  கோவை சரளாவிடம். போலீஸ் ஆபீசருக்கான கம்பீரம் இல்லை

9 பகத் பாசிலின் கேரக்டர் டிசைன் ஆல்ரெடி அவர் நடித்த தொண்டி முதலும் திருக்சாக்சியும் ,வேட்டைவேட்டையன். ஆகிய படங்களில் வந்தவைதான்

10.  நாயகன் ,வில்லன் இருவருக்குமான காம்போ சீன்ஸ்  முதல் பாதியில் வருபவை. ஆல்ரெடி. 2018 ல் வெளியான சும்பக் (  லாட்டரி ) மராத்திப்படத்தில் இருந்து உருவப்பட்டதே.கொஞ்சம் அன்பே சிவம் சாயலும்

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மாரீசன் (2025)-தமிழ்- முதல் பாதி அன்பே சிவம் டைப் மெலோ ட்ராமா,பின் பாதி யாரும் யூகிக்காத க்ரைம் திரில்லர்.இடைவேளை ட்விஸ்ட் அட்டகாசம்.க்ளைமாக்சிலும் ஒரு ட்விஸ்ட் உண்டு. 3வது ட்விஸ்ட் இதுல ஹீரோ பகத் பாசில் அல்ல,வடிவேலு.எதிர்பார்க்கும் விகடன் மார்க் 45 ,ரேட்டிங். 3/5 ,க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் 20 நிமிட பி ஜி எம் செம..

இது விமர்சனத்தின் ட்ரெய்லர் தான்.முழு விமர்சனம் விரைவில்
கேரளா. கோட்டயம். ஆனந்தில் படம் பார்த்தேன்.முதல் நாள் முதல் ஷோவே 47 பேர் தான்.தமிழகம் ,ஆந்திரா போல இங்கே தீவிர ரசிகர்கள் இல்லை.எல்லாரும் அவங்கவங்க பிழைப்பைப்பார்க்கறாங்க.நாமதான் படம் பார்கிறோம்

Wednesday, July 23, 2025

FLASK (2025) - பிளாஸ்க் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

                 

       மலையாள  சினிமாக்களை அனைவரும் விரும்பி ரசிக்கக்காரணம்  அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் , கதை சொல்லும் உத்தி  இரண்டுமே  மாறுபட்ட்தாக இருக்கும், உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் .18/7/2025  முதல் திரை  அரங்குகளில்  வெளியான இந்த  லோ பட்ஜெட் படம்  மீடியாக்களின்  பாசிட்டிவ் விமர்சனங்களையும் , ஆடியன்ஸின்  பாராட்டுக்களையும் பெற்று வருகிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு போலீஸ்  கான்ஸ்டபிள் .ஒரு கட் டத்தில்  அவருக்கு  ஒரு ஜட்ஜின் பி எஸ்  ஓ  (பர்சனல்  செக்யூரிட்டி ஆபீசர் )ஆகப்  பணி  கிடைக்கிறது . நாயகன்  போலீஸ் கான்ஸ்டபிள்  ஆக  இருந்தபோது  அவ்வப்போது  கச்சேரிகளில்  பாடுவார் .பாடலில்  அவருக்கு விருப்பம் உண்டு . வேறு வழி இல்லாமல்தான்  ஜட்ஜுக்கு பர்சனல்  செக்யூரிட்டி ஆபீசர் ஆகப்  பணி  புரிகிறார் . நாயகன்   ஒரு சராசரி ஆள் .ஜட்ஜ்  ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன ஆள். இவர்கள்  இருவருக்கும் இடையே  நடக்கும் சம்பவங்கள் தான் மொத்தத்திரைக்கதையுமே


முதல் பாதி   முழுக்க   நாம் இதுவரை பார்த்திராத ஒரு சூழல்   தான் .காமெடியாக   நகர்கிறது . தீவிரவாதிகள்  நாயகனையும்  , ஜட்ஜையும்  கடத்தி  பணயக்கைதிகளாகப்பிடித்து வைத்திருப்பது மட்டும்  நாம்  ஆல்ரெடி  நக்கீரன் , ஜுனியர்  விகடன் , குமுதம் ரிப்போர்ட் டர்    ஆகிய   புலனாய்வு இதழ்களில் படித்த  வீரப்பன் - ராஜ்குமார்  கடத்தல்  சம்பவம் தான் . வீரப்பன் வெப் சீரிஸ் கூட வந்து விட்ட்து . எனவே   முதல் பாதி  அருமை ,பின் பாதி சுமார் 


நாயகன்   ஆக சைஜு  க்ருப்    நன்றாக நடித்து இருக்கிறார் . ஓப்பனிங்   சீனில்;  மேடையில்  பாடும்போது , ஜட்ஜிடம்  டோஸ்   வாங்கும்போது , தீவிரவாதிகளிடம்  உரையாடுவது  என பல   இடங்களில்  ஸ்கோர் செய்கிறார் 


அவரது   மனைவியாக   அஸ்வதி  நடித்திருக்கிறார்  , அதிக   வேலை இல்லை . வந்த வரை   பரவாயில்லை 


தீவிரவாதி ஆக சித்தார்த்  பரதன் கச்சிதம் , ஜட்ஜ்  ஆக நடித்தவர்  நம்ம ஊர்   ரவிச்சந்திரன் சாயலில் இருக்கிறார் .,நல்ல நடிப்பு ,மற்ற   அனைவருமே  கொடுத்த  கேரக்ட்டருக்கு சிறப்பு  சேர்த்திருக்கிறார்கள் .


 அ ருமையான  மெலோடி  சாங்க்   ஓப்பனிங்கில்   உண்டு .இசை பின்னணி இசை   அருமை 

ஒளி ப்பதிவு   நன்றாக  இருக்கிறது 


ராகுல்  ரிஜி நாயர் தான்   திரைக்கதை , இயக்கம் , நல்ல முயற்சி 


சபாஷ்  டைரக்டர்


 1  ஒரு ஜட்ஜுக்கு   செக்யூரிட்டி  ஆபீசரின்  டியூட்டி  எப்படி இருக்கும்?என்பது நமக்கு அதிகம் அறிமுகம் ஆகாத களம் என்பதால் ரசிக்கும்படி இருக்கிறது , காட்சிகள்  புதிதாக இருக்கிறது  ( முதல் பாதி ) 


2 நாயகன் ,ஜட்ஜ்  இருவர் நடிப்பு கசசிதம் 


3   முதல் பாதியில் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது 


  ரசித்த  வசனங்கள் 

1  என்ன விஷயமா போலீஸ்  ஸ்டேசன்  வந்தீங்க ?


கொஞ்சம்  கஞ்சா   விக்கணும் ,அது விஷயமாத்தான் ....


2 கலைஞர்களுக்கு  எப்போதும்   மனதில் அதிக துக்கம் இருக்கும் 


3 தப்பை சுட்டிக்காட்டினா யாருக்கும் அது பிடிக்காது 


4 ஜட்ஜ்   வீட்டில்  லைட் எரியும் வரை  நீ  விழித்திருக்கணும் 


 அவங்க லைட் ஆப் பண்ண மறந்துட் டா? 


5 சொந்தக்காசில்   செலவு  செய்து  சரக்கு வாங்க மாட்டியா?


டைம் இல்லை 



6  அவன் என்ன   டூரா  போய் இருக்கான் ?தீவிரவாதி கடத்திட்டுப்போய் இருக்காங்க 


7  சாரி , துப்பாக்கில  சுட்டு டச் விட்டுப்போச்சு 


 இதுக்கு முன்னால துப்பாக்கில சுட்டு இருக்கியா?


 இல்லை 


 அப்புறம் என்ன டச் > 



8  உன்னைப்போலிஸ்   வேலைக்கு எடுத்தது  யாரு ?அவனை  முதலில்  சாகடிக்கணும் 


9  உங்க மேல   இருக்கும் கோபத்துல அவங்க என்னை சுட்டுட் டா என்ன பண்றது ?

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 க்ளைமாக்ஸ்  சொதப்பல் ரகம் 


2  ஜட்ஜ்  முன் பம்மும்  நாயகன்  பின் பாதியில்  ஜட்ஜிடம் எகிறுவது    செயற்கை 


3  நாயகன்  தப்பிக்க வாய்ப்பு இருந்தும்  வேண்டும்  என்றே  மாட்டிக்கொள்வது  அனுதாபம் வர வைக்க 


4 தீவிரவாதிகளை  மீட்புப்படையினர்  தாக்கும்போது  ஜட்ஜை  அம்போ என விட்டுவிடுவது  எப்படி ?அவரைப்பணயமாக வைத்துத்தான் அவர்கள் தப்பிக்க வேண்டும் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -கிளீன்  யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஓ டி டி  யில் வரும்போது  முதல்  பாதி மட்டும் ரசிக்கலாம் .ரேட்டிங்  2.25 /. 5 

Tuesday, July 22, 2025

சட்டமும் நீதியும் (2025) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா ) @ ஜீ 5

     

                   

18/7/2025 முதல் ஜீ 5 ல்  வெளியான வெப் சீரிஸ் மீடியாக்களின்  பாசிட்டிவ் விமர்சனங்களையும் , பொது மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்று வருகிறது .அறிமுக  இயக்குனர் பாலாஜி  செல்வராஜ் ஸ்டார்  வேல்யூவை நம்பாமல்  திரைக்கதையை நம்பி இயக்கி இருக்கும் வெப் சீரிஸ் இது .மிக யதார்த்தமான திரைக்கதை நம்மைக்கட்டிப்போடுகிறது . மொத்தம்  7 எபிசோடுகள்  கொண்ட  இந்த  வெப் சீரிஸ் தலா  20 நிமிடங்கள்  என்ற  டைம் ட்யுரேஷனில் 140  நிமிடங்களில்  ஒரு சினிமாப் படம்  அளவு  மட்டும்   நீளம்  கொண்டதாக இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு வக்கீல் , ஆனால்  கோர்ட்டில் அவர் இதுவரை வாதாடியதே இல்லை .கோர்ட் வாசலில்  நோட்டரி  பப்ளிக் ஆக டாகுமெண்ட் டைப் பண்ணித்தரும் ஆளாக இருக்கிறார் .இவருக்கு வீட்டிலும் பெரிய மரியாதை இல்லை, கோர்ட் வளாகத்திலும் இல்லை . டீன்  ஏஜ்  மகனும் ,மகளும் உண்டு பலரின்  கேலி,கிண்டலுக்கு ஆளான இவருக்கு  ஒரு பொது நலக்கேஸில் கோர்ட்டில் வாதிடும் வாய்ப்பு உருவாகிறது . அதில் அவர் வெற்றி அடைந்தாரா? என்பது தான் கதை 


குப்புசாமி என்ற  நபர்   தன மகளை யாரோ கடத்திக்கொண்டு போய் விட்டனர்  என போலீசில்  புகார் தருகிறார் . ஆனால்   போலீஸ்  அதைக்கண்டு கொள்ளவே இல்லை .இதனால்   மனம்   வெறுத்த அவர்  கோர்ட் வாசலில்  தீக்குளித்து  இறக்கிறார் . அவரது மரணத்துக்கு  நியாயம் கேட்டு  நாயகன் போராடுவதுதான் திரைக்கதை 



நாயகன்  ஆக  பருத்தி வீரன்  புகழ்  சித்தப்பு சரவணன்  அருமையான குணச்சித்திர  நடிப்பை வழங்கி இருக்கிறார் மகனிடம்  அவமானப்படும்போதும் , கோர்ட்டில்  வாதிடும்போதும்  ஜொலிக்கிறார் 


நாயகி ஆக  நாயகிக்கு உதவி  வக்கீல் ஆக  அவரது  மகள்  போல்  வரும்  நம்ரிதா  நடிப்பு   பிரமாதம் .குரலும் , முக வசீகரமும் செம . ஆனால் சில   இடங்களில்   மட்டும் ஜோதிகா மாதிரி   ஓவர் ஆக்டிங்க் 


குப்புசாமியாக  வரும் சண்முகம்  நடிப்பு கலங்க வைக்கிறது . உருக்கமான நடிப்பு .குப்புசாமியின்  மகள் வெண்ணிலாவாக  வரு இனியா   ராம்  சோகக்காட் சிகளில்  சுடர் விடுகிறார் 


குப்புசாமியின்  மனைவி   வள்ளி  ஆக   வரும் விஜய ஸ்ரீ பிரமாதப்படுத்தி இருக்க வேண்டிய ரோல் . அனுபவமின்மை காரணமாக சுமாராகத்தான் நடித்திருக்கிறார் பெரும்பாலும்  புதுமுகங்கள்  தான் நடித்திருக்கிறார்கள் 

அரசுத்தரப்பு  வக்கீல்  ஆக வரும் ஆரோனின் வில்லத்தனம் அருமை 


விபின்   பாஸ்கரின் பின்னணி  இசை அருமை . தீம் இசை கலக்கல் ரகம் .திரைக்கதை  சூரியப்பிரதாப் 


சபாஷ்  டைரக்டர்


1  குப்புசாமி மனநலம் பாதிக்கப்பட்டு  22 வருடங்களாக  சிகிச்சை  பெற்று வந்தவர்   என்பது  அறிந்து  இந்தக்கேஸ் கோர்ட்டில் நிற்காது என கலங்கும் இடம் அருமை 


2 குப்புசாமியின்   மகள்  காணாமல்  போனது  27 வருடங்களுக்கு முன்  என்பதும்  அவர்  காணாமல்  போய் 5 வருடங்களில்  அம்மாவிடம்  ஒப்படைக்கப்பட் டார்   என்பதும்   தெரிய   வந்ததும்  இனி எப்படிக்கேஸை  மூவ்   செய்வது என்று தடுமாறும் இடம் அருமை 


3 குப்புசாமியின்  மனைவி  இன்னொரு திருமணம்  செய்து கொள்வதும்  , மகள் வெண்ணிலாவை  அநாதை ஆசிரமத்தில்   சேர்த்து விடுவதும்  திருப்பங்கள் 


4 குப்புசாமியின்   மகள்  வெண்ணிலா வுக்கு   என்ன ஆனது   என்ற   டிவிஸ்ட்   குட் 


5  கோர்டடில்  நடக்கும் வாதங்கள்   யதார்த்தம் 


  ரசித்த  வசனங்கள் 


1  என்னை  மாதிரி  பெய்லியர்  கேஸ்க்கு  கோபமும் ஆதங்கமும் எதுக்கு ? 


2 எல்லாருக்கும்  எல்லாம் வராது , ஒருத்தருக்கு இருக்கும் திறமை இன்னொருத்தருக்கு இருக்காது  


3  மக்கள்   மனசு வைத்தால் இந்த  அரசாங்கம் மட்டும்  அல்ல , ஆண்டவனால்  கூட இந்த நிலத்தை எதுவும் செய்ய முடியாது 


   

4 எல்லா  இடங்களிலும் சண்டை  போட்டுக்கொண்டு இருந்தால்  நம் குரலுக்கு மரியாதை இருக்காது 


5  நாம்  பதட்டமா  இருந்தா   எதிரிக்கு டதைரியம்  உருவாகும் , நாம அமைதியா, பொறுமையா , நிதானமா இருந்தா எதிரிக்கு  பயம்   வரும் 


6  எமோஷன்ஸ்க்கு மதிப்பு இல்லை , எவிடென்ஸ் தான்  முக்கியம் 


7 நீங்க   வாங்கும்   லஞ்சப்பணம்  தப்பு பண்ண  மட்டும் இல்லை , மாட்டிக்காம இருக்கவும் தன 


8  சட்டம்   ஊருக்கு ஊர்   மாறும் , ஆனா நீதி எல்லா இடங்களிலும் ஒன்று தான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 குப்புசாமியின்   மகள்  வெண்ணிலாவின்  வளர்ப்புத்தந்தையை  சந்திக்கும்   நாயகன் வெண்ணிலாவின் போட்டோ  கொடுங்கள் எனக் கேட்கவே இல்லையே? கோர்ட்டில் ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டாமா? 


2 கோர்ட்   வாசலில்  போலீஸ்   யூ னிபார்முடன்  அப்படியா   பப்ளிக்காக லஞ்சம்  வாங்குவார்கள்?


3  கவுன்சிலரின்  மகன்  ஒரு வில்லனாக உருப்படியாக எதுவும் செய்யவில்லை . ஈசியாக  தப்பி இருக்கலாம் 


4 சிவப்பு விளக்குப்பகுதியில்  ஒரு விலை மாதிடம்  விசாரிக்க வரும் நாயகன்  விபரங்கள்  கிடைக்கும் முன்பே  பணத்தைத்தருவது எதனால் ? 


5   போலியாக ஒரு வெண்ணிலா வை ஆஜர்படுத்த்தும்  வில்லனின் ஐ டியா  சொதப்பல்  ரகம் . டி என் ஏ  டெஸ்ட் காட்டிக்கொடுக்கும்  என்பது தெரியாதா? ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - கிளீன்  யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இது  ஒரு நிஜ சம்பவத்தின்  உருவாக்கம் என சொல்லப்படுகிறது , நேர்த்தியான  திரைக்கதை , மேக்கிங்க்காக பார்க்கலாம் .ரேட்டிங்க்  3 / 5