Tuesday, April 29, 2025

SARANGAPANI JATHAGAM-சாரங்கபாணி ஜாதகம் (2025) -( தெலுங்கு ) - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

 

25/4/2025  முதல்  திரை அரங்குகளில்  வெளியான இந்தப்படம்  கமர்ஷியலாகவும் ஹிட் அடித்துள்ளது .விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைக்குவித்து வருகிறது , கமல் நடித்த பேசும் படம் ,மைக்கேல்  மதன  காம ராஜன்  ஆகிய படங்களிலிருந்து  இன்ஸ்பையர்  ஆகி  சில காட்சிகளை  உருவாக்கி இருந்தாலும்  இதன் இயக்குனர் மைக்கேல்  மதன காமராஜன் படத்திற்கு மட்டும் டைட்டிலில் கிரெடிட் கொடுத்துள்ளார் .மெயின் கதை  புதுசு .

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லனுக்கு  ஒரு காதலி உண்டு . ஒரு கோடீஸ்வரனை மயக்கி காதல் வலையில் வீழ்த்தி  திருமணம் செய்து கொள்ள காதலியிடம் சொல்கிறான் வில்லன் .காதலியும்  அது போலவே  செய்ய  இப்போ சொத்துக்களை அடைய  அந்தக்கோடீஸ்வரனைக்கொல்ல  வேண்டும் . ஏதாவது  இளிச்சவாயன் கிடைத்தால்  அவன்  மூலம்  கொலையை செய்ய  வில்லன் திட்டம் போடுகிறான் 


நாயகன்  ஒரு ஜோசியப்பைத்தியம் .வாழ்வில்  எந்த ஒரு நிகழ்வையும் செய்யும் முன்  ஜாதகம் பார்த்து  அதன்படி தான் செய்வான் கார்  விற்கும் கம்பெனியில் சேல்ஸ்  எக்ஸ்க்யூட்டிவ் ஆக நாயகன் பணியாற்றுகிறான் .அதே கம்பெனியில் மேனேஜர் ஆக  நாயகி பணி ஆற்றுகிறார் 


நாயகனுக்கு   இரு வருடங்களாக நாயகி மீது லவ் , ஆனால்  அவளிடம் சொல்லவில்லை .தயக்கம் தான் .நாயகனின் ஜாதகப்படி    இன்று  ஒரு எதிர்பாராத  அதிர்ஷ்டம் நிகழும்  என இருக்க   நாயகன் இன்று தன்  காதலை வெளிப்படுத்தத்திட்டம் போடுகிறான் .


இப்போ  ஒரு டிவிஸ்ட் , நாயகி நாயகனிடம் தன காதலை  வெளிப்படுத்துகிறாள் .நாயகனுக்கு ஒரே கொண்டாட் டம் . நாயகன் ,நாயகி இரு  தரப்புப் பெற்றோரும்  சந்தித்துப்பேசி திருமணம்  நிச்சயம் செய்கிறார்கள் 



இப்போ ஒரு டிவிஸ்ட் . நாயகன் ஒரு பிரபல  கை  ரேகை  நிபுணரிடம்  தன்  எதிர்காலம் பற்றிக்கேட்க  அவர் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்கிறார் . நாயகன்  தன வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு கொலை செய்து  விடுவான்   என்பதே அது 


 இதைக்கேட்டு  நாயகன் அதிர்ச்சி  அடைகிறான் . திருமணம் ஆனபின்  கொலை நடந்தால்  பிரச்சனை என்பதால்   திருமணத்தைத்தள்ளிப்போடுகிறான் .நாயகிக்கு நாயகன் மீது சந்தேகம் வருகிறது 


சாகும் தருவாயில் உள்ள   சுகர் பேஷண்ட்  ஆன ஒரு பாட்டியைக்கொலை செய்ய  திட் டம் போடுகிறான் . ஆனால்  அது ஒர்க் அவுட் ஆகாமல்  அவள் தானாகவே இறந்து விடுகிறாள் .இரண்டாவது   முயற்சியாக  இன்னொரு நபரைப்போட்டுத்தள்ளப்பார்க்கிறான் .அது வும்  பெய்லியர் 


 இப்போது  நாயகன்  வில்லனிடம் வந்து ஐடியா கேட்கிறான் . வில்லன்  தான் கொல்ல  இருக்கும் கோடீஸ்வரனைக்காட்டி  இவனைக்கொன்று விடு என்கிறான் . நாயகன்  அதற்கான  முயற்சிகளில் ஈடுபடும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக பிரியதர்ஷி புலிகொண்டா  அசால்ட் ஆக நடித்து இருக்கிறார் . தமிழ் ரசிகர்களுக்குப்பிடித்துப்போகும் தமிழ்  நாட்டு முக வெட்டு இவருக்கு . காமெடி , காதல் , ஆக்சன்  எல்லாம் நன்கு வருகிறது இவருக்கு 


நாயகி ஆக ரூபா கொடுவாயூர் அழகாக  வந்து  போகிறார் .இவர் உண்மையில் ஒரு டாக்டர் . அதனால் தானோ  என்னவோ  இவருக்கு  ரொமான்ஸ் சரியாக வரவில்லை 


நாயகனின் நண்பன் ஆக வெண்ணிலா கிஷோர்   காமெடிக்காக .இப்போதெல்லாம் 90% தெலுங்குப்படங்களில் இவர் இருக்கிறார் 


படத்தில் நடித்த  மற்ற  அனைவருமே அவரவர்  பாத்திரங்களை சிறப்பாக செய்து இருக்கிறார்கள் 

விவேக் சாகரின்  இசையில்  ஒரு காமடிப் படத்துக்கு  என்ன மாதிரி  பிஜிஎம்  வேண்டுமோ அதைத்தந்திருக்கிறார் .பி ஜி விந்தா வின்  ஒளிப்பதிவு  கச்சிதம் . நாயகன் , நாயகி . காமெடியன் மூவரையும் அழகாககாட்டி இருக்கிறார் மார்த்தாண்ட கே வெங்கடேஷின்  எடிட்டிங்கில்  படம் இரண்டே கால் மணி நேரம் ஓடுகிறது . எங்கும் போர் அடிக்கவில்லை திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர் மோகன் கிருஷ்ண  இந்திராகாந்தி 

சபாஷ்  டைரக்டர்


1  கண் மூடித்தனமாக  ஜாதகத்தை  நம்ப வேண்டாம் என்ற  கதைக்கருவை எந்த அளவுக்குக்காமெடியாக சொல்ல முடியுமோ  அந்த அளவுக்கு சொல்லி இருக்கிறார்  இயக்குனர் 


2  குடும்பத்துடன் பார்க்கத்தக்க  கண்ணியமான கலாட்டாக்காமெடி காட்சிகள்  படத்திற்கு பலம் 


3 வசனகர்த்தா  கிரேசி மோகன் பாணியில்  வார்த்தை ஜாலக்காமெடியில்  விளையாடி இருக்கிறார் 


  ரசித்த  வசனங்கள் 


1  மேடம் , இந்த ட்ரஸ்ல  நீங்க ரொம்பஅழகா இருக்கீங்க 


 இரண்டு வருடங்களாக இதே டிரஸ் தான் போட்டுட்டு கம்பெனிக்கு வர்றேன் ,ஏன்னா இதுதான் கம்பெனி யூனிபார்ம் 


2  ஒரு பொண்ணுக்கு  பையனிடம் எதிர்பார்ப்பது , தேவைப்படுவது லாயல்ட்டி ,  ஹானஸ்ட்டி .,ப ர்சனாலிட்டி .இவை மூன்றும் உன் கிட் டே  இருக்கு .அது போக நீ  ஒரு ஸ்வீட் பர்சன் 


3  இந்த   உலகத்தில் எத்தனையோ கிரிமினல்ஸ் தனக்கான தண்டனையை அடையாம இருக்காங்க 


4 யாரு இவன் ? உங்க வீட்டுப்பால் காரனா? 


 யோவ் , அவரு  மாப்பிள்ளை 


5   ஹி ஈஸ் சிங்கிள்  வாண்ட்  டு  மிங்கிள் 


6  விஷ யூயூ   ஏ ஹேப்பி  புரடக்டிவ்  மர்டர் 


7  ஐ ஆம்   ஹெட்  வெயிட்டர் , ஆல் சோ   ஹெவி  வெயிட்டர் 


8 உங்க பையனுக்கு உங்க முக சாயல் இல்லை , ஆனா உங்க மனைவி முக சாயல் இருக்கு 


 ஏண்டி , நிஜமா அவன் என் பையன் தானா? 



 சுத்தம் , 30 வருடங்கள் கழித்து  என் மேல சந்தேகமா? 


9   அவரு  ஒரு ஆல்பா மேல் 


 இவை சிக்மா பீமேல் 


ஓ , காமாவா? 


 ஆமா 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ரொமாண்டிக்  சப்ஜெக்ட்டில்  நாயகன் - நாயகி கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட் ஆகவில்லை .காதல் காட்சிகள் : கம்மி 


2  இரண்டு   வருடங்களாக   நாயகனுடன் ஒரே கம்பெனியில் ஒரே  செக்சனில்  பணியாற்றும் நாயகிக்கு நாயகனின் ஜாதகப்பைத்தியம் தெரியாமல் இருப்பது எப்படி ?


3  கோடீஸ்வரர்  பார்ட்டிக்கு வரும்போது  செக்யூரிட்டி இல்லாமலா வருவார் ?


4  நாயகன்  ஒரு கர்ச்சீப்பால் முகத்தை மறைத்துக்கொண்டால்  நாயகிக்கு அவனை அடையாளம் தெரியாதா? உயரம் , உடல் மொழி   காட்டிக்கொடுக்காதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+   CLEAN U  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான  காமெடி டிராமா  பார்க்க நினைப்பவர்கள் ரசிக்கலாம் . ரேட்டிங் - 2.5 / 5 



Monday, April 28, 2025

THUDARUM -தொடரும் (2025) -( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 



25/4/2025  முதல் திரை  அரங்குகளில்  வெளியான இந்தப்படம்  வெளியான  முதல் 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் 90  கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது , விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும் ரசிகர்களின் பலத்த கரகோஷத்தேயும்  பெற்றிருக்கும்  இந்தப்படம்   மோகன் லாலுக்கு இன்னும் ஒரு த்ரிஷ்யம் என சொல்லப்படுகிறது  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  கார் டிரைவர் கம் கார் ஓனர் .ஒரு மனைவி  ஒரு டீன் ஏஜ்  மகன் , டீன் ஏஜ் மகள்  என அழகிய குடும்பம் இவருடையது .இவர் ஒரு காலத்தில்  சினிமாவில்  ஸ்டண்ட்  மாஸ்டருக்கு உதவியாளராகப்பணி புரிந்தவர் . இவரது குரு  இவருக்குப்பரிசாக ஒரு அம்பாசிடர் கார் தந்தார் ., அதைத்   தன உயிராக மதித்துப்பாதுகாத்து வருகிறார் 


 நாயகனின் மகன்  தன நண்பர்களுடன்  சேர்ந்து  நாயகனின் காரை  அவருக்குத்தெரியாமல்  எடுத்து  ஒரு சின்ன விபத்து  செய்து  காரை டேமேஜ்  ஆக்கி விடுகிறான் .இதனால் டென்சன்  ஆன நாயகன் மகனை அறைந்து   விடுகிறார் .மகன் கோபித்துக்கொண்டு வீட்டுக்கு வரவில்லை 


நாயகனின் காரில் கஞ்சா  கடத்தப்பட்டதாக ஒரு கேஸ் பைல் செய்து போலீஸ்  ஸ்டேசனில் காரை  வைத்திருக்கிறார்கள் .அந்தக்காரை மீட்க நாயகன் போலீஸ்  ஸ்டேசனுக்குப்போகிறான் .அங்கே  சப் இன்ஸ்பெக்டருடன்  மோதல் ஆகி விடுகிறது .  காரை  நாயகன்  எடுத்துச்செல்லவே கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு  அந்த  சப் இன்ஸ்பெக்ர்   செயல்படுகிறார் 


நாயகன் அதே போலீஸ்  ஸ்டேசன் இன்ஸ்பெக்டரிடம்   முறையிடுகிறான் . அவர்  காரை   ரிலீஸ்  செய்ய அனுமதி அளிக்கிறார் . ஆனால்  அந்த ஸ்டேசன்  கான்ஸடபிள்  உறவினரின் திருமணத்துக்கு  செல்ல வேண்டி இருக்கிறது . குடித்திருப்பதால் எங்களால் ட்ரைவ் செய்ய முடியாது , எனவே எங்களை கல்யாண மண்டபம் வரை டிராப் செய்ய வேண்டும் என டீல்  பேசுகிறார் . வேறு    வழி இல்லாமல் நாயகன் ஒத்துக் கொள்கிறான் 


அந்தப்பயணத்தில்  ஒரு உண்மை வெளிப்படுகிறது . நாயகனின் காரின் டிக்கியில்  ஆல்ரெடி ஒரு பிணத்தை  போலீசே வைத்திருக்கிறார்கள் .அதை  டிஸ்போஸ்  செய்யத்தான்  நாயகனின் உதவியை நாடி இருக்கிறார்கள்.


போலீஸ்   செய்த  அந்தக்கொலையை   நாயகனே  செய்ததாக கேஸ்  ஜோடிக்கப்பார்க்கிறார்கள் . நாயகன்  அதை எப்படி முறியடித்தார் என்பது மீதி திரைக்கதை  


நாயகன்   ஆக மோகன் லால்  பிரமாதமாக நடித்திருக்கிறார் .பாத்ரூமில்  அழும்  சீனில் கலங்க வைக்கிறார் .அவரது மனைவி ஆக இது நம்ம ஆளு ஷோபனா  அதிக   வாய்ப்பில்லை . வந்தவரை   ஓக்கே  . க்ளைமாக்சில்  வில்லனிடம்  அடி வாங்கும்போது ஒரு பார்வை வீசுகிறாரரே ?கிளாசிக் . 


மெயின் வில்லன் ஆக பிரகாஷ்  வர்மா   கலக்கி இருக்கிறார் .இவரது கேரக்ட்டர்  டிசைன் கமலின்  சத்யா  பட வில்லன் கிட்டியை நினைவு படுத்துகிறது , சிரித்துக்கொண்டே கழுத்தை அறுக்கும் கேரக்ட்டர்

இன்னொரு வில்லன்  ஆக பினு  பாப்பு  கச்சிதம் 


பாரதிராஜா , இளவரசு  போன்ற தமிழ்  ,முகங்களும் உண்டு . ஆனால் ஒரு சீன்  தான் 

ஷாஜி குமாரின்  ஒளிப்பதிவு   பிரமாதம் . கேரளா  இயற்கை அழகைக் கண்  முன் நிறுத்துகிறது  . ஏரியல் ஷாட்டில்   கவனம் ஈர்க்கிறது . பூகம்பம்  வரும் சீனையும்  , மழை பொழியும் தருணங்களையும் அழகியல் ரீதியாக  பதிவு  செய்த விதம் அருமை , ஜேக்ஸ்  பிஜாயின் இசை கனகச்சிதம் . த்ரில்லிங்க்கான  இடத்தில் , ஆக்சன் சீக்வன்ஸ் வரும் இடத்தில் என பல தருணங்களில்  பிஜிஎம்   செம .. நிசாத்  யூஸுப் ,  ஷபீக்  ஆகிய இருவரும்தான் எடிட்டிங்க் . கச்சிதம் . இரு ட்விஸ்ட்களை புகுத்திய இடம் அருமை .ஆனால்  படத்தின் நீளம்   அதிகம் .166 நிமிட ங்கள்


 கே ஆர்   சுனில் தான்   கதை .நிஜத்தில் நடந்த  ஒரு என்கவுண்ட் டர்   மேட்டரிலிருந்து  இன்ஸ்பையர் ஆகி  இந்தக்கதையை எழுதினாராம் . கே ஆர்   சுனில்  உடன் இணைந்து   திரைக்கதை   அமைத்து தனியாக இயக்கி இருப்பவர் தருண் மூர்த்தி 


சபாஷ்  டைரக்டர்

1   வில்லன்களுடன் நாயகன் காரில்  பயணிக்கும் அந்த  சம்பவம் செம த்ரில்லிங்க் . யூகிக்க முடியாத திருப்பமும் அருமை 


2   நான்   லீனியர்  கட்டில்  கதை   சொன்ன விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   யானைகள்   கூட் டமாக   நம் எதிரே வந்தால் ஆபத்து இல்லை .ஒற்றை யானையிடம் தான் நாம் மாட் டிக்கொள்ளக்கூடாது 


2   புலியை    நீ  நேரில்  பார்த்திருக்கிறாயா? 


 இல்லை , சபரி மலை ஐயப்பன் கூட புலி இருப்பதைக்காலண்டரில் வேணா பார்த்திருக்கிறேன் 


3  என்னங்க ?நானும்  மாஸ்டரோட  இழவுக்கு   வர்றேன் 


 வேணாம்  , அவரோட சிரித்த முகத்தை மட்டும் தான் நீ இதுவரை பார்த்திருக்கே .அப்டியே இருக்கட்டும் உன் நினைவுகள் 


4  காரில்   500   கிராம் கஞ்சா தான் கிடைச்சது .சட் டப்படி  800  கிராமுக்கு மேலே  கஞ்சா   சிக்கினாத்தான் காரை சீஸ் பண்ணலாம் 


5   தேவை   இல்லாத   காரியத்தில் தலை இட்டா தேவை   இல்லாத    தலை வலி தான் வரும் 

6     இது நான்     உருவாக்கிய  கதை , என் கதைக்கு நான் தான் ஹீரோ 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   இரண்டே  முக்கால்மணி   நேரக்கதையில் முதல் 40 நிமிடங்கள்  மெயின் கதைக்குள் செல்லவில்லை .பாத்திர அறிமுகங்கள்  இழுவை 


2   முதல்  பாதியில் இருந்த த்ரில்லிங்க்   பின் பாதியில்   இல்லை .காரணம்  முதல் பாதி க்ரைம் த்ரில்லர் . பின் பாதி ரிவெஞ்ச்   த்ரில்லர் 


3  த்ரிஷ்யம்  படத்தை நினைவு படுத்தும் போலீஸ் ஸ் டேசன்  சீன்ஸ்  , குடும்பம்  சம்பந்தப்பட் ட   சீன்கள் 


4  போலீஸ் ஸ் டேசனில்  நாயகன் தன மகனின் பைக் நிற்பதைப்பார்த்து  இது என் மகன் பைக் மாதிரி தெரியுதே என சந்தேகமாக சொல்கிறார் . நெம்பர் பிளேட்டைப்பார்க்க மாட் டாரா? 



5   சொந்த   மகனின் மணிபர்ஸை  ஒரு அப்பா  அடையாளம்  கண்டு கொள்ள  மாட் டாரா? 


6    வில்லன்கள்  இருவரும் போலீஸ் ஆபீஸர்ஸ் ... .  பிணத்தை  சாக்கு  மூட்டை யிலிருந்து   வெளியே     எடுக்காமல்   புதைப்பது  ஆபத்து   என்பதை அறிய   மாட் டார்களா?

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+   வன்முறைக்காட் சிகள் அதிகம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி க்ரைம் த்ரில்லர் . பின் பாதி ரிவெஞ்ச்   த்ரில்லர் . த்ரிஷ்யம்      லெவல்     எல்லாம்  இல்லை  ரேட்டிங்க்    3/ 5 


Thudarum
Theatrical release poster
Directed byTharun Moorthy
Screenplay by
Story byK. R. Sunil
Produced byM. Renjith
Starring
CinematographyShaji Kumar
Edited by
Music byJakes Bejoy
Production
company
Rejaputhra Visual Media
Distributed by
Release date
  • 25 April 2025[1]
Running time
166 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office70 crore[2]

Sunday, April 27, 2025

KESARI CHAPTER 2 - THE UN TOLD STORY OF JALLIANWALA BAGH(2025) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ஹிஸ்ட்டாரிக்கல் கோர்ட் ரூம் டிராமா )


  13/4/1919 -ஜாலியன்  வாலா பாக் கில்  இந்தியர்கள்30,000 பேர்  ஜெனரல்  டயரால்  சுட்டுக்கொல்லப்பட் ட சம்பவம்  அனைவருக்கும் தெரியும் .அந்த  சம்பவத்தில்  மக்களுக்குத்தெரியாத  பல விஷயங்களை இந்தப்பட,ம் பேசுகிறது .இந்தியாவின் புகழ்  பெற்ற  வக்கீல் சங்கரன் நாயர்   என்பவர் தான்  இந்த வழக்கில் ஜெனரல்  டயருக்கு எதிராக வாதாடினார் . அந்த வக்கீலின்  வாரிசுகளான புஷ்பா பலட் , ரகு பலட்  ஆகிய இருவரும் இணைந்து எழுதிய  புத்தகம் ஆன THE CASE THAT SHOOK THE EMPIRE ஐ  தழுவி  திரைக்கதை  எழுதப்பட்டது ,திரைக்கதை எழுதியவர்கள் அமிர்தபால் சிங்க்  பிந்த்ரா  மற்றும்  ட்யாகி  ஆகிய இருவரும்தான் .இயக்கி  இருப்பவர்  கரண் சிங்க் ட்யாகி 

18/4/2025       அன்று  திரை  அரங்குகளில்   வெளியான இந்தப்படம்  கமர்ஷியலாக வசூலில்  கலக்கிக்கொண்டு இருக்கிறது ,150   கோடி ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான இந்தப்படம்  முதல்  7 நாட்களில்  90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஜெனரல்  டயர்  சிறுவனாக இருந்தபோது  படித்த பள்ளியில்  இந்திய  மாணவர்கள்  அதிகமாக  இருந்ததால்  அவன்  அவர்களால்  ராக்கிங்க்  செய்யப்பட்டான் .மனோவியல் ரீதியான  பாதிப்புக்கு உள்ளான அவன் இந்தியர்கள்  மீது  பொதுவான   வெறுப்பைக்கொண்டிருந்தான் .மிலிட்ரியில் சேரும்போது கூட   அவனுக்கு அளிக்கப்பட் ட மெடிக்கல்   சர்ட்டிபிகேட்டில் இவன் மன ரீதியாக    பாதிக்கப்பட்டவன் என்றே  குறிப்பு இருந்திருக்கிறது 



  13/4/1919 -ஜாலியன்  வாலா பாக்  படுகொலை  சம்பவம் நடப்பதற்கு 3 நாட்கள் முன்னர் ஒரு ஆங்கிலேயப்பெண்மணி  ஒரு இந்திய மாணவனால்  பாலியல் வன்கொடுமை      செய்யப்பட்டார்    என்று புகார் வருகிறது .அந்த  இந்திய மாணவன்   கைது செய்யப்படுகிறான் .அந்த   மாணவனுக்கு  ஆதரவாக  சில இந்தியர்கள் போராட் டம்       நடத்த இருக்கிறார்கள் என்ற தகவல்  மிலிட் ரி ஆபீசர் ஆன ஜெனரல்  டயர் க்கு கிடைக்கிறது .உடனே  அவன்  திட் டம்     போடுகிறான் . இந்த  ரேப் கேசில்  ஒரு டிவிஸ்ட்  இருக்கிறது . அந்த ஆங்கிலேயப்பெண்மணியும் , இந்திய மாணவனும் காதலர்கள் . இருவரும்   தனிமையில் இருந்தபோது பெண்ணின் அப்பா   பார்த்து   விடுகிறார் . அவர்  செல்வாக்கு  மிக்கவர்  என்பதால்  இந்திய மாணவனை  சிறையில் அடைத்து விட்டு தன்  மகளைப்புகார்   தரச்சொல்லி மிரட்டிப்   பணிய வைக்கிறார் 


நாயகன்  ஆங்கிலேயே    அரசாங்கத்திடம்  சம்பளம் வாங்கும் பிரபல வக்கீல் . இவர்  ஒரு முறை  வில்லன் ஆன ஜெனரல் ட யரால்  அவமதிக்கப்படுகிறார் . ஓர் பார்ட்டி   நடக்கிறது .அங்கே  நாயகனும், வில்லனும் கலந்து கொள்ள செல்லும்போது நாயகன் தடுத்து நிறுத்தப்படுகிறார்  . இந்தியர்களும்  , நாய்களும்  இங்கே  அனுமதிக்கப்படுவதில்லை என்று போர்டு வைத்து அவமானப்படுத்துகிறார்கள் . இதனால்   நாயகன்   வில்லனைப்பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்   

ஜாலியன்  வாலா பாக்  படுகொலை  சம்பவம்  தொடர்பாக  ஒரு அறிக்கை  சமர்ப்பிக்குமாறு  ஆங்கிலேயே அரசாங்கம்  நாயகன்  ஆனா வக்கீல்  சங்கரன்   நாயரைக்கேட்டுக்கொள்கிறது .


ஜெனரல் டயரைப்பற்றிய  விபரங்களை  சேகரிக்கிறார் . மிலிட்ரியில்   அவருக்கு எதிராக  இருக்கும் ஆட் களைக்கண்காணிக்கிறார் ., பல தகவல்களைத்திரட்டுகிறார்      ஜாலியன்  வாலாபாக்  படுகொலை  சம்பவம் நடந்த பின்பு  ஜெனரல் டயர் மீது வழக்கு தொடுக்கிறார் .அந்த வழக்கில்  நாயகன்  எப்படி வாதாடினார் ?என்பதுதான் படத்தின் மொத்த திரைக்கதையும் .      


நாயகன் ஆக, வக்கீல்  சங்கரன் நாயர் ஆக  அக்சய் குமார் பிரமாதமாக நடித்திருக்கிறார் . குறிப்பாக   அவர் அவமானப்படுத்தப்படும் காட்சியிலும் , க்ளைமாக்சில்  ஜட்ஜையே  எதிர்த்துப்பேசும் காட் சியிலும் கை  தட்டலை  அள்ளும்   நடிப்பு .


வில்லன்  ஜெனரல் டயர் ஆக   சைமன் பைஸ்லே டே கலக்கலாக நடித்திருக்கிறார் . அவர் முகத்தைப்பார்த்தாலே  வெறுப்பு வரும் அளவுக்கு  அவரது கேரக்டர்  டிசைன்   வடிவமைக்கப்பட்டிருக்கிறது 


நாயகனுக்கு  உதவி ஆக வரும்   வக்கீல் ஆக அனன்யா பாண்டே  சிறப்பாக நடித்திருக்கிறார்.அவருக்கான ஒப்பனை , ஆடை வடிவமைப்பு , உடல் மொழி அனைத்தும்  அருமை 


வில்லன்  ஜெனரல் டயர்க்கு   ஆதரவாக   வாதாடும்   வக்கீல் ஆக மாதவன்  அசால்ட்   ஆக   நடித்திருக்கிறார் .  நாயகனின்  மனைவி ஆக ,பார்வதி  நாயர்  ஆக ரெஜினா கசாண்ட் ரா   வருகிறார் . அதிக வாய்ப்பில்லை . வந்தவரை ஓகே 


முக்கியமான   பாத்திரங்களில்  வ்ரும்   மற்ற   அனைவருமே  சிறப்பான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள்  


 நிதின் பைட்டின்  எடிட்டிங்கில்  135  நிமிடங்கள்   ஓடுகிறது .ஒரு சீன்  கூட   போர்   அடிக்கவில்லை .தெபோஜித்  ரே வின் ஒளிப்பதிவு அட் டகாசம் .பிரம்மாண்டமான  படமாக்கும் . கோர்ட் ரூம்  சீன்களில்   லைட்டிங்க்  சிறப்பு . இசை   மூவர் . சஷ்வத் சச்  தேவ் , கவிதா சேத்  , கனிஷ்க் சேத்  . நாயகன்  கோர்ட்டில் ஆஜர் சீன்களில்   வரும் ட்ரம்ஸ்  பிஜிஎம் கலக்கல் ரகம் ., கூஸ்பெம்ப்ஸ் மொமெண்ட்ஸ் .இயக்கி ருப்பவர் கரண்  சிங்க்  ட்யாகி                                 


சபாஷ்  டைரக்டர்


1  படத்தின் ஓப்பனிங்க் சீனிலேயே ஜாலியன்  வாலா பாக்  படுகொலை   சம்பவம் காட்டப்படுகிறது , பிரமாதமான மேக்கிங்க் , எக்சிக்யூஸன் . ஒளிப்பதிவு  , ஆர்ட் டைரக்சன் அனைத்தும்   அருமை .பிணக்குவியல்களுக்கு அடியில் மாட்டிக்கொள்ளும் சிறுவனின்  குரல்  கிணற்றிலிருந்து   வருவது போல   தத்ரூபமான  சவுண்ட்   டிசைனிங்க் 


2   நாயகன் அக்சய் குமார்  , வில்லன்  ஜெனரல்  டயர் ,   அனன்யா  பாண்டே , மாதவன்  ஆகிய   நால்வர் நடிப்பும் அருமை 


3  நாயகன்  கோர்ட்டில்   வாதாடும்போது , கோர்ட்டில் என்ட் ரி   கொடுக்கும்போது   தரப்படும்   பிஜிஎம் செம 


4  க்ரைம்   த்ரில்லர் போலவே  சீன்கள்   சுவராஸ்யமாக சொல்லப்பட் ட விதம் 


ரசித்த  வசனங்கள் 


1    ரெஸ்ட்  எடுத்தா  வாழ்க்கைல   இலட் சியத்தை அடைய முடியாது 


2  கோர்ட்டில்  சரி எது ? தப்பு  எது? என பார்க்க மாட் டாங்க , வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள்  இப்படித்தான் இரு பிரிவுகளாகப்பார்ப்பார்கள் 


3   நீ    நல்ல   லாயர் தான் , ஆனா  ராங்க்   சைடில்  இருக்கே 


 நீங்க   நல்ல கவிஞர் தான் , ஆனா நாட்டுக்கு உங்களால ஒரு பிரயோஜனமும் இல்லை 



4   பிரிட்டிஷ்  இங்க்கால் தான்  அவங்க சரித்திரம் எழுதப்பட்டிருக்கு , அதை எப்படி மாற்றுவது என்பது தெரியவில்லை 


5  தீவிரவாதிகள்  1650 பேர்  சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்  என மிலிட்ரி  ரிப்போர்ட் சொல்லுது , ஆனா   ஹாஸ்ப்பிடல்  மெடிக்கல் ரிப்போர்ட் 10,312  பேர்  பிணமாக்கிடைத்ததா சொல்லுது 



6  உங்க   மிலிட் ரி ஆளுங்க  சுட்டதால 1650 பேர்   இறந்துட்டாங்க   என சொல்றீங்களே?  உங்க சைடு இறப்பு எவ்ளோ ?


 ஒரு ஆள்  கூட மிலிட்ரில இறக்கலை 



7   ஜாக்கிரதையா யோசிச்சு சொல்லுங்க அவங்க பாதிக்கப்பட் ட மக்களா?தீவிரவாதிகளா? 


8   உண்மை   லீவ்   எடுக்காது 


9  அமைதியா இருப்பதால் யார் பாதிப்பு அடைகிறார்கள் ? 


10 இது தான்   அவளோட  முதல் கேஸ் ,கடைசி கேஸாகவும் இதுதான் ஆகப்போகுது 


11  சம்பவம்   நடந்தப்ப சாட் சிகளாக  புகைப்படங்கள்  இல்லை , சாட்சிகள் இல்லை , கன்பெசன்ஸ்  இல்லை   எப்படி நிரூபிப்பீங்க ? 


 பெயிண்ட்டிங்க்ஸ் இருக்கே? 


12   நீ  பிரிட்டிஷ்  கவர்மெண்ட்டின்  அடிமை என்பதை மறக்காதே 


பேரரசே  பயத்தில் சுருங்கிப்போயிடுச்சு போல 


13   எதிரியை  பிரித்தாளு , வெற்றி பெறு 


14    சிகரெட்  உடல் நலனுக்குக்கெடுதல் , அதனால   நான் பைப்   தான் புகைக்கிறேன் 


15 உங்க எதிர்பார்ப்புக்கு நான் ஈடு கொடுக்க மாட் டேன் 


16    சில   மோசமான   விஷயங்களை   மறப்பது   நல்லது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நாம்  அறிந்திடாத   பல சுவராஸ்யமான  சம்பவங்கள்  விவரிக்கப்படுவதால்   அனைவரும் பார்க்க வேண்டிய தரமான படம் இது . ரேட்டிங்க்   3.75 / 5 



Thursday, April 24, 2025

JANANAM 1947 PRANAYAM THODARUNNU (2024) -( மலையாளம் ) - சினிமா விமர்சனம் (பேமிலி மெலோ டிராமா) @அமேசான் ப்ரைம்


முதல் மரியாதை(1985) க்கு நிகரான படம் என்று சொல்லி விடமுடியாது , அதே சமயம்  விடுகதை (1997) படம் போல  ஏற்றுக்கொள்ள  முடியாத  கதைக் கரு என   தள்ளவும் முடியாது .அந்த இரு  படங்களில்  வயதான நாயகன் + இளமையான  நாயகி இவர்களின் காதல் கதை , இந்தப்படத்தில் 70 வயதான  இரு நபர்களின் காதல் கதை .

ஜனரஞ்சசகமான  காட்சிகளோ , டூயட்டோ , காமெடியோ  , சண்டைக்காட்சிகளோ இல்லாத  மென்மையானபடம் .அனைவரும் ரசிக்கும்படியான  படம் அல்ல 

 ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகிக்கு 70 வயது .   முன்னாள்  டீச்சர், கணவர்  இறந்து  பல வருடங்கள் ஆகின்றன .மகனுக்குத்திருமணம் ஆகி மனைவி ,, குழந்தை என இருக்கிறான் .. மகன்  த ன்  அம்மாவை முதியோர்     இல்லத்தில்  விட்டு விட்டு  மாதம் ஒரு முறை வந்து பார்த்து விட்டு செல்கிறான் .  இது  நாயகிக்குப்பிடிக்கவில்லை . தன்னை வீட்டுக்கு  அழைத்துச் செல்லுமாறு  பலமுறை  கூறியும்  மகன் அதைக்கேட்பதில்லை .


 நாயகனுக்கும் 70 வயது .   மனைவி  இறந்து  விடடாள்  இரு  மகன்கள்  உண்டு . முதல்   மகனுக்குத்திருமணம்  ஆகவில்லை . இரண்டாவது  மகனுக்குத்திருமணம்  ஆகி    மனைவி , குழந்தை எனத்  

  தனியே  இருக்கிறான் . நாயகன்  நாயகி இருக்கும்  முதியோர்     இல்லத்தில்    உணவு  பரிமாறுவது  உட்பட   பல வேலைகள் செய்யும் பணியாள் 


உணவு  பரிமாறும்போது   ஒரு  நாள்   நாயகி இங்கே  இருக்கவே  பிடிக்கவில்லை  எனப்புலம்ப  நாயகன் விளையாட்டாக   என்னுடன்  எனது வீட்டுக்கு வந்து விடுங்கள், எனக்கு டீ  போட ஒரு ஆள்  ஆச்சு   எனக்கூறுகிறான் . அடுத்த  நாள்   நாயகி   சரி ,    வருகிறேன்  எனக்கூறி விடுகிறாள் . நாயகனுக்கு தர்மசங்கடம் . இதை எதிர்பார்க்கவில்லை . இதற்குப்பின் நாயகன் எடுத்தமுடிவு  என்ன?  இரு  வீட்டின் வாரிசுகளும் , இந்த  சமூகமும்  இதை எப்படி டீல் செய்யுது  என்பது  மீதி திரைக்கதை 


நாயகி ஆக லீலா  சாம்சன்  பிரமாதமாக நடித்திருக்கிறார் ,நமக்குத்தெரிந்த முகம் இவர் ஒருவர் தான் பத்ம ஸ்ரீ  விருது   பெற்ற  பரத  நாட்டிய நடனக்கலைஞர்  இவர் .மணிரத்னம் படங்களில்  நடித்திருக்கிறார். 



நாயகன் ஆக கோழிக்கோடு ஜெயராஜ்  நடித்திருக்கிறார்.   , நாயகன் ஆக  இவர் நடிக்கும் முதல் படம் இது .இதற்கு முன் சின்ன சின்ன  வேடங்களில்  நடித்திருக்கிறார். .இயற்கையான  நடிப்பு 


அனு  சித்தாரா முதியோர்     இல்லத்தில்  பணி  புரிபவராகக் கெஸ்ட் ரோலில் வருகிறார் . 


படத்தில் நடித்த  மற்ற    அனைவருமே   அவரவர்க்குக்கொடுத்த  பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள் 

எடிட்டிங் பக்கா.107 நிமிடங்கள் டைம் ட்யூரேசன்.ஒளிப்பதிவு ,இசை,பின்னணி இசை அனைத்தும் அருமை

 திரைக்கதை  எழுதி இயக்கி  இருப்பவர்  அபிசித்  அசோகன் . 

சபாஷ்  டைரக்டர்

1 நாளை இட்லி பரிமாறும்போது அவளுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா ஒரு இட்லி வைத்தால் அவளை நீ ஏத்துக்கறேனு அர்த்தம் என்று நாயகியின் தோழி நாயகனிடம். சொன்னதும் அடுத்த நாள் நடக்கும் நிகழ்வும்,அதற்கான மற்றவர்களின் ரெஸ்பான்சும் கவிதை


2 முதல் சீனிலிருந்து கடைசி வரை நாயகன் நாயகியை டீச்சரே என மரியாதையுடன் அழைப்பது அருமை.


3 நாயகனின் மகன் தன் காரியம் ஆகும் வரை காத்திருந்து பத்திரத்தில் நாயகன் சைன் செய்ததும் அம்போ என விட்டுப்போகும் சீன்


4. நாயகன் ,நாயகி சம்பந்தப்பட்ட அனைத்துக்காட்சிகளும் கண்ணியமான கவிதை



  ரசித்த  வசனங்கள் 



1   அம்மாவையோ , அப்பாவையோ   முதியோர்  இல்லத்தில்   விட்டவர்கள்  திருப்பி    அவங்களை  வீட்டுக்கு   அழைத்து  சென்றதாக  சரித்திரம்  இல்லை 


2    எத்தனையோ  பிள்ளைகளுக்கு  நல்ல  விஷயம்  சொல்லிக்கொடுத்த  டீச்சருக்கு  தன்   சொந்த மகன்க்கு நல்லது சொல்லிக்கொடுக்க முடியல 

3. நான் சிரிச்சதுக்குக்காரணம் அவன் என் காதலைப்புரிஞ்சுக்கனும்னு..ஆனா அவன் என்னடான்னா அப்பளம் எக்ஸ்ட்ரா வைக்கறதுக்காக சிரிக்கறதா நினைச்சு ஒரு அப்பளம் வெச்சுட்டுப்போறான்

4. இவ்ளோ வயசானபின் இப்படி ஒரு அதிர்ஷ்டம் யார்க்குக்கிடைக்கும்?5.  லிவ்விங் டுகெதர் எல்லாம் அந்தக்காலத்துல மோசம்.இப்போ அதான் பேஷன்


6 இஷ்டம் உள்ளவரோடு வாழ்வது ஒரு பாக்கியம்


7 டீச்சரோடு இருப்பதால் முதன் முதலா ஒரு ஆள் என்னை சார்னு கூப்பிட்டான்.என் வாழ்நாளில் யாரும் அப்படிக்கூப்பிட்டதில்லை


8. பீடி குடிப்பது எனக்குப்பிடிக்காது.இதை என் புருசன் கிட்டே அப்பவே சொல்லி இருந்தா அவரு இப்போ உயிரோடு இருந்திருப்பாரு


9 ஆம்பளை கள்ளுக்குடிப்பது தப்பில்லைனு எனக்குத்தோணுது.


10.நான் இறக்கும்போது யாராவது ஓன்னு அழனும்.அது போதும் எனக்கு


11. எந்த நோய் நொடியும் இல்லாம பூரண ஆரோக்கியத்தோடு வாழும் ஒருவருக்கு சின்ன அசுகம் வந்தாலும் மனதில் பயம் வரும்


12 நல்லவங்களை ஆண்டவன் சீக்கிரமாவே தன்னுடன் அழைத்துக்கொள்கிறான்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -CLEAN  U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்ற படம்.பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.ரேட்டிங் 3.5 /5

Wednesday, April 23, 2025

AM.AH (2025) -அம் .ஆ ( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( பேமிலி மெலோ டிராமா )@அமேசான் ப்ரைம்

 

24/1/2025 அன்று  திரை  அரங்குகளில்  வெளியான  இந்தப்படம்  இப்போது  அமேசான் ப்ரைம் ஓ  டி டி  யில் காணக்கிடைக்கிறது . இப்போது  தமிழ்  டப்பிங்கில்  சில  திரை  அரங்குகளில்    வெளியாகி உள்ளது . இது அனைவரும் ரசிக்கும் ஜனரஞ்சசகமான  படம் அல்ல . குழந்தை  பாக்கியம்  தாமதமாகக்கிடைக்கப்பெற்றோர் , குழந்தை  பாக்கியம்  கிடைக்காதவர் , பெண்கள்  , பெண்களைப்போல  பொறுமை  குணம் கொண்ட ஆண்கள்  ஆகியோர் மட்டுமே  ரசிக்க   முடியும் .மிஸ்ட்ரி  த்ரில்லர்   என  விளம்பரப்பப்படுத்தப்பட் டாலும்  இது பேமிலி மெலோ டிராமா தான் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - ஒரு செல்வந்தரின் மகள்  வாடகைத்தாய்  மூலம் குழந்தை  பெற்றுக்கொள்கிறாள் . ஆனால்  வாய் பேசமுடியாத  குழந்தையாகப்பிறப்பதால் அவள் அந்தக்குழந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை .குழந்தையை விட்டு விட்டு  சென்று விடுகிறாள் . அந்த  வாடகைத்தாய்  வேறு வழி இல்லாமல் அந்தக்குழந்தையை வளர்க்கிறாள் . ஆனால் அவள்  புருஷன்  சரி இல்லை .அந்தக்குழந்தையை  ரகசியமாக விற்று விட திடடம் போடுகிறான் . இதைக்கண்ட  அந்த வாடகைத்தாய்  ஒரிஜினல்  அம்மாவின் பெற்றோர்  குடி இருக்கும் வீட்டின் முன் குழந்தையை வைத்து விட்டு வந்து விடுகிறாள் 


சம்பவம்  2  - நாயகி  ஒரு டெய்லர் . ஏழை , அனாதை .  இவள்   கையில்  ஒரு குழந்தையுடன்  ஒரு ஊருக்கு  அதிக நடமாட்டம்   இல்லாத  இடத்துக்கு   வருகிறாள் . தனியாக வீடு எடுத்து தங்குகிறாள் . யாருடனும் அதிகம் பேசுவதில்லை . குழந்தையை  அங்கண்வாடி ஸ்கூலில் சேர்த்து  விட்டு வேலைக்குப்போய் விடுவாள்   மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது குழந்தையை அழைத்துக்கொள்வாள் . குழந்தை  யாருடையது எனக் கேட்டா ல்  2018 கேரளாவில்   வெள்ளம்   வந்தபோது  யாரிடம் இருந்தோ  கிடைத்த குழந்தை என்பாள் . ஆனால்  அதை யாரும் நம்பவில்லை . ஏன்  எனில்  கணக்குப்படி   குழந்தை வயசு டேலி ஆகவில்லை 


சம்பவம்  3  நாயகன்   ரோடு  காண்ட் ராக்ட்டர் .அதே   ஊருக்கு  வருகிறான் . தங்க ஒரு வீடு கிடைக்கிறது .அங்கே தங்கி ரோடு போடும்  வேலை  எதுவும் பார்க்காமல்  இந்த ஏரியாவில் யாராவது   ஒரு பெண்   கையில் குழந்தையுடன் சமீபத்தில் வந்தார்களா? என எல்லோரையும் விசாரிக்கிறான் . அவனது  நடவடிக்கைகள் மர்மமாக இருக்கின்றன 


மேலே   சொன்ன  மூன்று சம்பவங்களும்  ஒன்றுக்கொன்று  தொடர்புடையவை , அவை என்ன?  இறுதியில்  என்னநிகழ்ந்தது என்பது மீதி திரைக்கதை 


நாயகி  ஆக தேவதர்ஷினி  பிரமாதமான நடிப்பு ,உடல் நலம் குன்றி இருக்கும்போது , குழந்தைப்பாசம் கொண்டவர் ஆக  , ரிசர்வ்டு டைப்   கேரக்ட்டர்  ஆக  பல் பரிமாணங்களில்  வெளுத்த்து வாங்குகிறார் .


 நாயகன் ஆக திலிஸ்  போத்தன்  அடக்கி வாசித்திருக்கிறார் . சில சீன்களில்  இவர் வில்லனாக இருப்பாரோ  என்ற  வ்ண்ணம்  ஏற்படுவது  பிளஸ் 


மீரா  வாசுதேவ் , ஜாபர் இடுக்கி , சுருதி ஜெயன் , மாலா  பார்வதி  உட்பட  அனைவர் நடிப்பும் கனகச்சிதம் 



சிறுமியாக  வருபவரும் , கைக்குழநதை யாக   வருபவரும்  கலக்கலானநடிப்பு 

கோபி  சுந்தரின்  இசை   அருமை , முதல் பாதியில்  த்ரில்லர்   மூவி போலவும் பின் பாதியில்  பேமிலி டிராமாவாகவும் கதை நடப்பதால்  பிஜிஎம் மில்  நல்ல வெரைட்டி  காட்டி இருக்கிறார் . அனிஷ் லாலின் ஒளிப்பதிவு  அட் டகாசம் . பாரஸ்ட்  ஏரியா,அருவி  என விளையாடி இருக்கிறது கேமரா . எடிட்டிங்க்   அருமை . .கவிப்பிரசாத் கோபிநாத் என்பவர் தான் கதை ,திரைக்கதை . தாமஸ்  கே செபாஸ் டியன் தான் இயக்கம் 


சபாஷ்  டைரக்டர்


1   கைக்குழந்தையை  வீட்டு  வாசலில்  விட்டு வரும் சீன கதிகலங்கவைக்கும் லாங்க் ஷாட் . பெண்களின் மனதைக்கலங்கடிக்கும் 


2  பிள்ளைப்பேறு  இல்லாத   பெண்ணிடம்  ஒரு பெண்  இந்தக்குழந்தையைப்பார்த்துக்குங்க  ஒரு நிமிஷம் என சொல்லி தரப்போக  ஆசையாக கை  நீட்டும்போது  முன்னே  பின்னே   தெரியாத ஆளிடம் குழந்தையை கொடுக்கலாமா என  அம்மா   தடுப்பது , அந்தப்பெண் கலங்குவது   கல் நெஞ்சையும் கரைக்கும் 


3   மிஸ்ட்ரி  திரில்லர்  போல   ஆரம்பித்து   நான் லீனியர் கட்டில் கதை சொன்ன விதம் 


4   நாயகன் ,, நாயகி , சிறுமி , கைக்குழந்தை  அனைவரின் அட் டகாசமான   நடிப்பு 


 5  பெற்ற  அம்மா , வாடகைத்தாய் , வளர்ப்புத்தாய் , நிகழ்காலத்தாய்   என நான்கு  அம்மாக்களிடம்  மாறி மாறி கை  மாறி வளரும்  ஒரு குழந்தையின் கதையை சொன்ன விதம் 


6   பெற்ற  அம்மா   வைக்கடைசி   வரை போட்டோ வில் கூடக்காட் டாத சாமர்த்தியம் 

  ரசித்த  வசனங்கள் 


1  எந்த  ஊருக்குப்போனாலும் அந்தி  ஊரின் சரித்திரத்தைத்தெரிஞ்ச்சுக்கணும் 


2  யாரிடம் நான் பேசினாலும்  அவங்க சொல்லும்  முதல் கதையை  நம்ப மாட் டேன் 


3  உடல் ஊனமா  பிறக்கும் குழந்தை வேண்டாம்  என   பலர் நினைக்கறறாங்க 


4  நீ  நடந்துக்கற  விதத்தைப்பார்த்தா நீ ஒன்னு போலீசா இருக்கணும், அல்லது திருடனாயிருக்கணும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்

இந்த மாதிரி   நல்ல   படங்கள்   வருவதே அரிது .அதிலும் நொட் டை  சொன்னா  எப்படி ? 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பாலுமகேந்திரா  , மகேந்திரன் படங்களை  ரசிப்பவர்கள் பார்க்கலாம் .ஆக்சன் மசாலா  ரசிகர்கள்  தவிர்க்கவும் . ரேட்டிங்க் 3. 5 / 5 


Am Ah
Theatrical release poster
Directed byThomas K. Sebastian
Written byKaviprasad Gopinath
StarringDileesh Pothan
Devadarshini
CinematographyAnishlal RS
Edited byBijith Bala
Music byGopi Sundar
Production
company
Kaapi Productions
Release date
  • 24 January 2025 (India)
CountryIndia
LanguageMalayalam

Sunday, April 20, 2025

TEN HOURS (2025)-டென் ஹவர்ஸ் (2025) -( தமிழ் ) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )


சிபி ராஜ் க்கு ஒரு கம் பேக் படமாக அமைந்திருக்கும் இந்த  க்ரைம்   த்ரில்லர்  படத்தை இயக்கி இருப்பவர் இளையராஜா கலிய பெருமாள் . சில  லாஜிக் மிஸ்டேக்ஸ்  இருந்தாலும்  கவனிக்க வைக்கும் ஒரு நல்ல படம் இது . ஒரே  இரவில்  கதை  நடக்கும்  சம்பவம்  இப்போது  ட்ரெண்ட்  ஆகி வருகிறது , அவை வெற்றியும் பெறுகின்றன 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


 சம்பவம் 1 -  சேலம்  மாவடடம் ஆத்தூர்   தான் கதைக்களம் .அங்கே  இன்று இடைத்தேர்தல்  முடிந்து வாக்குப் பெட்டிகள்  எல்லாம் பாதுகாப்பாக  உரிய இடங்களுக்கு  அனுப்பப்படுகின்றன . அன்று  ஒரு இளம்பெண்  காணாமல் போய் விட்டதாக புகார் வருகிறது . நாயகன் ஆத்தூர்   போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்ட்டர்  அந்தக்கேஸை  விசாரிக்கிறார் .அப்போது ஒரு போன் கால்  வருகிறது . ஒரு பஸ்  நெம்பரைக்குறிப்பிட்டு அந்த ஆம்னி  பஸ்சில்  ஒரு இளம்பெண்  துன்புறுத்தப்படுவதாக தகவல் . நாயகன்  உடனே   அந்த பஸ்ஸை  ட்ரேஸ்   அவுட் செய்ய உத்தரவிடுகிறார் 


 சம்பவம் 2  . குறிப்பிட் ட   அந்த பஸ்ஸை  மடக்கி செக் செய்தால்  ஒரு  திருப்பம் . ஒரு ஆண்  கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறான் . சீட்டில்  உட்கார்ந்த வாக்கில் இருக்கிறான் .பஸ்ஸில் பயணித்த  யாரோ ஒருவர் தான் அந்தக்கொலையை செய்திருக்க வேண்டும் என்பதால் பயணிகள் அனைவரையும் போலீஸ் ஸ்டேசன் வரச்செய்து  நாயகன்  விசாரிக்கிறார் 


 சம்பவம் 3  - பஸ்ஸில்  கொலை செய்யப்பட் ட  நபரின்  பிணத்தை போஸ்ட் மார்ட் டம் செய்ய  அனுப்பி இருந்தாலும் அந்த   ரிப்போர்ட்  வந்தால் தான் கேசில் ஒரு முன்னேற்றம் வரும் என்பதால் நாயகன் ரிப்போட்டுக்கு வெயிட்டிங்க் . இப்போது   அடுத்த   திருப்பம் .அந்தப்பிணத்தைக்காணவில்லை .


காணாமல் போய் விட்டதாக புகார் செய்யப்பட் ட  பெண் , ஆம்னி  பஸ்சில்  ஒரு இளம்பெண்  துன்புறுத்தப்படுவதாக வந்த  தகவல்   பஸ்ஸில்  கொலை செய்யப்பட் ட  நபரின்  பிணம்   காணாமல் போனது  , அந்த கொலை சம்பவம்     இந்த  நான்கு சம்பவங்களையும்  ஒரு மையப்புள்ளி இணைக்கிறது என்பதை  நாயகன் உணர்கிறார் . அவர்  என்ன என்ன  உண்மைகளைக்கண்டு  பிடித்தார் என்பது மீதி திரைக்கதை 

நாயகன் ஆக   சிபிராஜ்  படம் முழுக்க   ஒரு சீன்  கூட சிரிக்காமல்  கடமை கண்ணியம் கட்டுப்பாடு  சத்யராஜ் மாதிரி ஸ்ட்ரிக்ட்  ஆபீசர் ஆக  வருகிறார் . கச்சிதமான  நடிப்பு . இவருக்கு ஜோடி இல்லை , டூயட் இல்லை   என்பது ஒரு பிளஸ் படத்தில்   நடித்த மற்ற   அனைவரது   நடிப்பும் சிறப்பு .பழைய  ஜோக்  தங்கதுரை  நான்கு மொக்கை ஜோக்ஸ்  சொல்லி சிரிக்க  வைக்க முயற்சி செய்கிறார் நாயகனுக்கு உதவி ஆக வரும் போலீஸ்   கெஜராஜின் நடிப்பு கச்சிதம் . திலீபனுக்கு இன்னமும் ஸ்க்ரீன் ஸ்பேஸ்  கொடுத்திருக்கலாம் . வந்தவரை ஓகே ரகம் 


ஒளிப்பதிவு  ஜெய்கார்த்திக் , பிரமாதமான உழைப்பு இவருடையது . சென்னை  டு  கோவை  ரூட்  லாங்க்  ஷாட்டில் இரவு நேர சீனைக்கச்சிதமாக படம் ஆக்கி இருக்கிறார் , கே எஸ்   சுந்தர மூர்த்தியின் பின்னணி இசை கச்சிதம் . ஷார்ப் ஆன   எடிட்டிங்க்  . டைம் டியூரேசன் 116 நிமிடங்கள் . விறுவிறுப்பான  இயக்கம் 



சபாஷ்  டைரக்டர்

1  ஹீரோ  இண்ட்ரா  வில்  அவரது  பழைய  கேஸ் துப்பறியும்  திறனை வெளிப்படுத்தும் குற்றவாளி யை   பிடிக்கும் ஆப்பிள்  பழக்காட்சி  கச்சிதம் 


2    மூன்று  வெவ்வேறு  சம்பவங்களை  ஒன்றிணைக்கும் ஐடியா அருமை 


3   ஒரே  இரவில்  கதை நடப்பது , வேகமான திரைக்கதை அமைப்பு  ப்ளஸ் 


4   பிரமாதமான ஒளிப்பதிவு , கச்சிதமான  பின்னணி   இசை , ஷார்ப் ஆன  , க்ரிஸ்ப்  ஆன எடிட்டிங்க்  போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பு 


5    ஹீரோவுக்கு  பஞ்ச்  டயலாக்ஸ்  , ஜோடி  இல்லாதது ஆறுதல் 



  ரசித்த  வசனங்கள் 


1   பிடிக்காத  வேலையை போராடி செய்வதை விட பிடித்த வேலையை இஷ்டப்பட்டு செய்வது சிறப்பு 


2  ஹாட்   வாட்டர்  இருக்கா? 


 ஹார்ட்  இருக்கு , ஆனா  வாட்டர்  இல்லை 


3  எறும்பு கரும்பு மேயுது , சரி , ஆனா எருமை மாடு எதுக்குக்காயுது ? 


4  நேரம்   சரி இல்லைன்னா யானை தலைல பூனை கக்கா போகுமாம் 


5  மேரேஜ்  கூட தள்ளிப்போகலாம், ஆனா நான் சொன்ன நேரத்தில்  பர்ஸ்ட்  நைட் நடந்தே தீரும் 


6  நாம   தேடிட்டு  இருக்கும்   நபர்   யார் ?  என் நமக்குத்தெரியாது , ஆனா அவன் தன்னை நமக்குக்காட்டிக்கிட் டே  இருக்கான் 


( 1, 6  இரண்டும்  ஹீரோ வுக்கு ,2,3,4,5  ஆகிய   மொக்கை ஜோக்ஸ் பழைய  ஜோக்  தங்கதுரை  க்கு )



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  இடைத்தேர்தல்  நட க்கும்   நாள்   அன்று   தேர்தல் அதிகாரிக்கும், அவரது குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க மாட்டார்களா ? 


2  டெல்லி நிர்பயா  கேஸ் நடந்ததிலிருந்து  மக்களிடம்  நல்ல விழிப்புணர்வு  உள்ளது . ஆம்னி பஸ்ஸில்  டிரைவர் , கண்டக்டர்   ,மட்டுமே  இருக்கும்போது  பெண்  நிருபருக்கு  சந்தேகம் வரவில்லையா? அவரது  காதலர் /கணவர்  கூட அதைக்கண்டுகொள்ளவே இல்லை 


3  ஒரே  ரிஜிஸ்ட்ரேஷன்    எண்  உள்ள  இரு ஆம்னி பஸ்கள்   அருகருகே இடைத்தேர்தல்  நட க்கும்   நாள்   அன்று    ஓடுமா? போலீஸ்  பார்க்கும் என்ற பயம் இருக்காதா? 


4  ஓடும் பஸ்ஸில்  26 பயணிகள் இருக்கும்போது  அவர்கள்  யாருக்குமே தெரியாமல் கொலைகாரன் கொலை செய்ய முடியுமா? அது ரிஸ்க் ஆச்சே? 


5  நெற்றியில்  திருநீறு  பட்டை  இடுவது  முகத்தில் சாந்தம் , அமைதி  தான் கொடுக்கும், போலீஸ்   கம்பீரத்தைத்தராது . போலீஸ்  ஆபீசர் திருநீறு பட்டை  இட்டிருப்பது  எடுபடவில்லை 


 6 சபரி மலை சாமி  சந்தனப்பட் டை  தான்  இடுவார்கள் .சிவ பக்தர்கள் தான் திருநீறு  பட்டை  இடுவது வழக்கம் 


7 கொலை நடந்த  நாளில்  ஆம்னி பஸ்ஸில் பயணித்த  26 பயணிகள்  செல்போன்  நெம்பரை  சைபர் க்ரைம் போலீசில் கொடுத்து ட்ரேஸ் பண்ணி இருந்தாலே  சுலபமாக  கொலைகாரனை பிடிக்கலாம் 


8 போலீஸ்  இன்ஸ்பெக்டர்  யுனிபார்மில்  சர்ட்  பட் டனைக்கழட்டி விடக்கூடாது 


9 ஆம்னி வேன்    என   சப்   டைட்டில்  சரியாக வருகிறது ,   ஆனால்  வசனமாக  சிவப்புக்கலர்  கார்   என வருகிறது 


10  வெளியூர்  பயணம்   செல்பவர்கள் பவர் பேங்க் வைத்திருக்க மாட்டார்களா ?  பேட்டரி டவுன் ஆவது எப்படி ? 


11ஒரு கைதியை   லாக்கப்பில்  அடை க்கும்போது    அவனிடம் ஆயுதம் இருக்கா?என செக் செய்ய மாட் டார்களா?  அசால்ட்   ஆக கன் எடுத்து  சுடறான் 


12   மிஸ்   ஆன பெண்ணின்   போட்டொவை  பேக்ஸ்   அனுப்புகிறார்கள் .அது ஒயிட் அண்ட்  பிளாக்கில்  ஜெராக்ஸ்  போல   வருது .அனைத்து  போலீஸ்  ஆபீசர்  செல்போனுக்கு வாட்சப்பில் படம் அனுப்பி இருக்கலாம்?  

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஒரு  சீன்  கூட போர்  அடிக்காத  விறுவிறுப்பான திரைக்கதை . லாஜிக்  எல்லாம் பார்க்க மாட்டோ ம்  என்பவர்கள் படம் பார்க்கலாம் . நல்ல டைம் பாஸ் மூவி . ஆனந்த  விகடன் மார்க்  ( யூகம் ) - 41  . ரேட்டிங்க்  2.75 / 5 

Friday, April 18, 2025

KA (2024) -(தெலுங்கு /தமிழ் ) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் ) @அமேசான் ப்ரைம்

 

31/10/2024 தீபாவளி ரிலீசாக வெளிவந்த இந்த தெலுங்குப்படம்  மெகா  ஹிட் ஆகி  54 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது . இப்போது தமிழ்  டப்பிங்கில் அமேசான் ப்ரைம்  ஓ  டி டி  தளத்தில் காணக்கிடைக்கிறது 



ஸ்பாய்லர்  அலெர்ட்

சம்பவம் 1 -  கதை  நடக்கும் கால கட்டம்  இண்ட்டர்நெட் இல்லாத 1980. சின்னவயதில் இருந்தே   நாயகனுக்கு  அடுத்தவங்களுக்கு வந்த கடிதங்களைப்படிப்பதற்கு அலாதி ஆர்வம் . நாயகன்  ஒரு அநாதை .வளர்ந்து  பெரியவன் ஆனதும்  தபால் காரன்  ஆகி விட் டால்  பல கடிதங்களை தினம்  படிக்கலாம் என நினைத்து  தற்காலிகப்பணியாளர் ஆக அந்த ஊர்  தபால் நிலையத்தில் போஸ்ட் மேன் ஆகிறான் . போஸ்ட் ஆபீசில்  இருக்கும் போஸ்ட் மாஸ்டருக்கு ஒரு மகள் . நாயகனுக்கு  மெயின்  ஜாப்  அடுத்தவங்களுக்கு வந்த லெட்டரைப்படிப்பது ,நாயகியை  லவ் பண்ணுவது .பார்ட்  டைம்  ஜாப்  ஆக   சில விஷயங்கள்  செய்கிறார் . சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் 


சம்பவம் 2  - அந்த  ஊரில்  அடிக்கடி  இளம் பெண்கள்  காணாமல் போகிறார்கள் . போலீசால்  அதைக்கண்டுபிடிக்க முடியவில்லை 


சம்பவம் 3  - அந்த  ஊரில்  ஒரு குடிகாரன் இருக்கிறான் , அவனுக்கு ஒரு தங்கை அவளை  வில்லன்  பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறான் .வில்லனைப்பழி வாங்க  அண்ணன்  திட் டம்  போட்டுக்கொலை செய்யப்போகும்போது நாயகன் வில்லனைக்காப்பாற்றி விடுகிறான் . பின்  வில்லன்  செயல் அறிந்து நாயகன் வில்லனைக்கொலை  செய்கிறான் 



சம்பவம் 4  - ஒரு கடிதம் மூலம்  சமூக விரோத கும்பல் ஒன்று  சட் ட விரோதமாக  ஒரு பணப்பரிமாற்றம் செய்ய இருப்பதை அறிந்து  நாயகன்  அந்தக்கடிதத்தை  அழித்து  விட்டு போலியாக ஒரு கடிதத்தை ரெடி பண்ணி  அந்தப்பணத்தை அபேஸ் செய்கிறான் .நாயகனின் இந்த செயலால் ஒரு அப்பாவியின் உயிர் பறி போகிறது 


சம்பவம்  5  -  மேலே  சொன்ன  4  சம்பவங்களுக்கும்  சூத்திரதாரி  ஒரு வில்லி .அவள் தான்  அந்த கிராமத்தில் இருக்கும் பெண்களை  ரகசியமாகக்கடத்தி  மும்பைக்கு அனுப்பி விற்று வருபவள் .தன்  செயலுக்குத்தடையாக இருந்த நாயகனைப்போட்டுத்தள்ளப்பிளான் போடுகிறாள் 



இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


நான்   சொன்ன கதை 25 %   தான் .சுவராஸ்யம் கருதி முக்கியமான  திருப்பங்களை சொல்லவில்லை 

நாயகன் ஆக  கிரண் அப்பாவரம்  இரு வேடங்களில்   நடித்திருக்கிறார் . பிரமாதமான நடிப்பு என சொல்ல முடியாவிடடாலும் பரவாயில்லை ரகம் என சொல்லலாம் . நாயகி ஆக நயன் சரிகா கண்ணியமான உடையில் வருகிறார் .கிராமத்துப்பெண் அழகு கண்களைக்கவர்கிறது  டீச்சர்   ஆக தன்வி ராம் நடித்திருக்கிறார் . கச்சிதம் . ரெடின் கிங்க்ஸ்லி  காமெடி பண்ணுவதாக நினைத்துக்கொண்டு கத்துகிறார் .இவரும்  , யோகிபாபுவும்  ஒரே மாதிரி . ஸ்க்ரிப்ட்டில் காமெடி இருந்தால் தான் சிரிப்பு  வரும்,ஆனால் இவர்கள் இருவரும் தா ங்கள் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரிப்பார்கள் என நினைக்கிறார்கள் , ஐயோ பாவம் . நாயகியின் அப்பாவாக அச்சியுத் குமார்  நல்ல குணச்சித்திர நடிப்பு . வில்லியாக வருபவருக்கு  நடிப்பு சுமார் தான் , ஆளும் படு சுமார் தான் 


சாம்  சி  எஸ்  இசையில்  3  பாடல்கள்  ஹிட் . பின்னணி இசை  பிரமாதம் . ஸ்ரீ  வரப்பிரசாதி எடிட்டிங்கில் படம்  விறுவிறுப்பாக நகர்கிறது .145  நிமிடங்கள்   டைம் ட்யுரேஷன் , விஷ்வாஸ் டேனியல் , சதீஷ்  ரெட்டி மாசம்  ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் .கிராமத்து அழகைக்கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள் . நாயகி ,, டீச்சர்   இருவரையும் கண்ணியமாக , அழகாகக் காட்டி இருக்கிறார்கள் . சுஜித்  &  சந்தீப்  இருவரும் இணைந்து திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்கள் .




சபாஷ்  டைரக்டர்


 1   கதை சொல்லும் உத்தி  பிரமாதம் . நாயகன்  டூயல்  ரோல்  என்ற  ட்விஸ்ட் டை  ஓப்பன் செய்த  விதம்   அருமை என்றால்  க்ளைமாக்சில்  அதை வைத்து செய்த இன்னொரு டிவிஸ்ட்டும் அபாரம் 


2  நாயகன்  நாயகி இடையில்  போஸ்ட் ஆபீசில் ரப்பர்ஸ்டாம்ப்   சீல் வைக்கும் காட் சி 


3  அருகருகே  அறைகளில்  அடைபட்டு இருக்கும்  நாயகன் , டீச்சர்   இருவரும்  யார் ? அவர்களுக்கு இடையில் என்ன  உறவு என்பதை  ஓப்பன் செய்த விதம்  


4  மலை கிராமமாக இருப்பதால் மதியம் 3 மணிக்கே கிராமம் இருளில் மூழ்கிவிடும் என்ற கான்செப்டை திரையில் கொண்டு வந்த விதம் அழகு 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1  என் கண்ணம்மாவே , என் செல்லம்மாவே 


2 நல்ல  நல்ல செடிகளை சேர்ப்போமா? 


3  ஆடு ஆடு  நிலமெல்லாம் அதிரட்டும்  ஆடு 

  ரசித்த  வசனங்கள் 

1  வாழ்க்கையில் நாம் பண்ணும் நல்லதும், கெட்டதும்   எப்பவும் நம்மைத்துரத்திட்டு தான் இருக்கும் 


2  ஓல்டு  மங்க்   ரம்   குடிச்ச மான் குட்டி  மாதிரி  எதுக்கு துள்ளிக்கிட்டு இருக்கே? 


3 இவ்ளோ  அழகை நேரில் இப்போதான் பார்க்கிறேன் 


 இதே  டயலாக்கை இன்னும் எத்தனை பேர் கிட் டே சொல்லி இருக்கே? 


4   நீ   என்ன ஜாதி ?


 நான் காதலிக்கும் பெண் எந்த ஜாதியோ அந்த ஜாதி 


5  என்னுடைய   தனிமை தான் எனக்கு பயத்தை அறிமுகப்படுத்துச்சு 


6  கிரிமினல் ஒரே இடத்தில் இருக்க மாட் டான் 


7   கெட்டவங்களுக்கு உதவி செஞ்சா அவன் என்னைக்காவது தன்  சுபாவத்தைக்காட்டுவான் 


8  கண்ணுக்குத்தெரியும்  ,மனிதனை  விட கண்ணுக்குத்தெரியாத ஜாதி தான் இந்த உலகை ஆளுது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பணத்தைக்கை மாற்று வதற்கான கோட் வோர்டு  "அம்மன் கோவில் "   வில்லனின் அடியாள்  நாயகனிடம்  எந்தக்கோயில் ? எனக்கேட்பது  மடத்தனம் . பாதி விடையை ஓப்பன் பண்ணிய மாதிரி இருக்கே? 



2   வில்லன்  ஒரு பெண்ணை   ரேப்   பண்ண  பல நல்ல நேரங்கள் , வாய்ப்புகள்  இருந்தன .பெண்ணின் அண்ணன்   காரன் குடிகாரன் .90% நேரங்களில்  அவன்  வீடு  தங்குவதில்லை .பெண்  தனியாகத்தான் இருப்பாள் .அப்போ வந்து ஈசியாக ரேப் பண்ணாமல் கிறுக்கன் மாதிரி அண்ணன்  இருக்கும்போது  அடியாட்கள் இருவருடன் வந்து  வாசலில்  அண்ணனை  கட்டி வைத்து  தங்கை யை ரேப் செய்வது ரிஸ்க் 


3   வில்லனின் உயிரை நாயகன் காப்பாற்றுகிறான் . வில்லன் பாட்டுக்கு பேசாம போக வேண்டியதுதானே?  லூஸ் மாதிரி   எதுக்கு நாயகனிடம் நான் ஒரு பெண்ணை  ரேப் செய்தேன்   என வாக்கு மூலம் தருகிறான் ? உங்களைக்கே ட்டா ங்களா? முருகேசா? 


4  நாயகன் , நாயகி இருவரும் லவ் பண்ணுவது நாயகியின் அப்பாவுக்குத்தெரியாது .  நாயகனின்   ஹையர் ஆபீசர் தான் நாயகியின் அப்பா .அப்படி இருக்கும்போது என்ன   தைரியத்தில்  நாயகன் தன் வருங்கால மாமனார் முன்னிலையில் நாயகியின் கை  பற்றி ஊர் மக்கள் முன் டான்ஸ் ஆடுகிறான் ? மாட்டுகிறான் ? 


5  வில்லன் ஒரு குடிகாரன் . ஆள் ரொம்ப வீக்கா இருக்கான் . அந்தப்பெண்   ஜைஜாண்டிக்கா  இருக்கு . சும்மா ஒரு தள்ளு  தள்ளி  விட்டாலே   வில்லன் கீழே  விழுந்து விடுவான் போல . ஒரு ஸ்ட்ராங்க்  ஆன ஆள்  வில்லனாக நடிக்க கிடைக்கலையா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வேகமாகச்செல்லும் திரைக்கதை , பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த த்ரில்லர் மூவி , பார்க்கலாம்  ரேட்டிங்க் 3 / 5 




KA
Theatrical release poster
Directed bySujith & Sandeep
Written bySujith & Sandeep
Produced byChinta Gopalakrishna Reddy
Chinta Vineesha Reddy
Chinta Rajashekar Reddy
StarringKiran Abbavaram
Nayan Sarika
Tanvi Ram
CinematographyViswas Daniel
Sateesh Reddy Masam
Edited bySree Varaprasad
Music bySam C. S.
Production
companies
Srichakraas Entertainments
KA Productions[1]
Release date
  • 31 October 2024
CountryIndia
LanguageTelugu
Box office53 crore[2]

Thursday, April 17, 2025

BAZOOKA (2025) -( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர் )




 28 கோடி ரூபாய்  பட்ஜெட்டில் உருவான இப்படம்  மோகன் லால் நடித்த டப்பாப் படமான பரோஸ்  உடன் 2023  கிறிஸ்துமஸ்  ரிலீஸ் ஆக வெளி  வரவேண்டிய பட,ம்  பின்  2024 செப்டம்பருக்கு தள்ளிப்போடப்பட்டு  சில காரணங்களால் 10/4/2025  முதல்  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆகி உள்ளது .ஒரு பெரிய பேனர் படமோ , ஒரு  பெரிய ஹீரோ படமோ  டப்பா ஆனால்  நான் மிகவும் சந்தோஷப்படுவேன் .அப்போதுதான்  திரைக்கதைக்கு ஒரு மரியாதையும் , இயக்குனருக்கு  ஒரு  மதிப்பும் கிடைக்கும் .  பெரிய  ஹீரோ படம்  ஹிட் ஆனால் அவரது  சம்பளம் மட்டும் தாம் எகிறும் . வேறு  யாருக்கும் பிரயோஜனம் இல்லை . ஒரு லோ பட்ஜெட்  படம் ஹிட் ஆனால்  ஸ்க்ரிப்ட்  ரைட்டருக்கு   டிமாண்ட்  வரும்  ஆரோக்கியமான  நல்ல படங்கள்  மேலும் மேலும்  வெளி வரும் . இந்தப்படத்துடன்   வெளியான  லோ பட்ஜெட்  படங்கள்  ஆலப்புழா  ஜிம்கானா , மரணமாஸ்  ஆகிய இரு படங்களும் ஹிட் ஆக  இது மட்டும்  எதனால்  குப்பை ஆனது என்பதைப்பார்ப்போம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு பாரன்சிக்  நிபுணர்   மேலும்  ஹேக்கர் . டியூட்டியில் இருந்தபோது  பல   கேஸ்களை  அசால்ட் ஆக டீல் செய்தவர் . ரிட்டயர்  ஆகி 19 வருடங்கள்  ஆகின்றன . இப்போது  தன்  நண்பர்  ஆன அசிஸ்ட்டண்ட்  கமிஷனர்  அழைப்பின்படி  ஒரு முக்கியமான  கேசில்  உதவி  செய்ய  கொச்சி  ( எர்ணாகுளம் ) வருகிறார் .


நகரில்  வித்தியாசமான  முறையில்  சில கொள்ளைகள் நடக்கின்றன . கோயிலில்  தங்க  சிலையை  விட்டு விட்டு  ஒரு சாதா  சிலை  திருடு போகிறது . கிரிக்கெட்  ஸ்டேடியத்தில்  வைக்கப்பட்டுள்ள  வெற்றிக்கோப்பை  திருடு போகிறது. ஒரு  கண் காட்சியில்  சில ஆயிரம்  மதிப்பே   உள்ள   நாக மாணிக்கக்கல்  திருடு போகிறது.  இதனால் அரசுக்கு  பெரிய இழப்பு எதுவும் இல்லை . ஆனால்  ஒவ்வொரு  கொள்ளை நடக்கும் முன்பே  அசிஸ்ட்டண்ட்  கமிஷனர்க்கு  கொள்ளையன்  மெயில்  , எஸ் எம் எஸ் ,  கடிதம் என   எதோ ஒரு  வழியில் தொடர் பு கொண்டு  க்ளு கொடுத்திருக்கிறான் . ஆனால்  ஆபீசரால்  அப்போது  அந்த க்ளூவை  உணர ,முடியவில்லை . கொள்ளை  நடந்த  பின் தான்    தெரிய வருகிறது 


இதனால்  மும்பையில்  இருக்கும் நாயகனை  வர வைக்கிறார் .அவர்  வந்து  நான்காவது கொள்ளை நடக்கும்போது  கொள்ளையர்களில்   ஒருவரைப்பிடிக்கிறார்கள் . ஐந்தாவதாக  ஒரு மெகா கொள்ளை நடக்க இருக்கிறது . இதுவரை நடந்தவை    சும்மா  ட்ரெய்லர் தான் என்பதை உணர்கிறார்கள் . இருவரும்  சேர்ந்து  அந்த அதாவது கொள்ளையை  நிறுத்தினார்களா?  என்பது க்ளைமாக்ஸ் . வழக்கம் போல  இதில் ஒரு ஸ்விஸ்ட்  உண்டு 


அசிஸ்ட்டண்ட்  கமிஷனர்  ஆக  கவுதம்  மேனன்  கம்பீரமாக  நடித்திருக்கிறார்  , மம்முட்டிக்கு இணையான ரோல்,. கவுதம்  மேனனி ன்  மனைவி ஆக திவ்யா பிள்ளை சில சீன்களில்  மட்டும் வருகிறார் 



 நாயகன் ஆக  மம்முட்டி  நடித்திருக்கிறார் .ஏகப்பட்ட  பில்டப் காட் சிகள்  இவருக்கு . இவர் ஸ்லோமோஷனில்  நடக்கும் சீன்களை  கட்  பண்ணினாலே   20 நிமிடங்கள்   மிச்சம் ஆகும் .வீடியோ  கேம்  பிளேயர் ஆக  வினய் போர்ட்  நடிப்பு கச்சிதம் . பெரும்பாலான  காட் சிகள்   பஸ்ஸில்  இருவரும்  பயணிப்பது போல , நாயகன்  இவரிடம் கதை சொல்வது போல வருவது  சலிப்பு 


ஐஸ்வர்யா மேனன்  வித்தியாசமான  கேரக்டரில் வருகிறார் . அசிஸ்ட்டண்ட்  கமிஷனர்   கவுதம்  மேனன் போலீஸ்  டீமில்  போலீஸ் ஆக  வரும்  ஒரு பெண் போலீசின்  நடிப்பு அருமை  ( அவர்  பெயர் தெரியவில்லை ) .க்ளைமாக்சில்  வரும்  பாபு ஆண்டனி ,கெஸ்ட்  ரோலில் வரும் சைன்  டாம் சாக்கோ  இருவருக்கும் அதிக  வேலை இல்லை 


ரூபி வர்கீஸ் ராஜ்  + நிமிஷ ரவி  இருவரும் இணைந்து ஒளிப்பதிவு  செய்திருக்கிறார்கள் . பிரம்மாண்டமான  காட் சிகள் அதிகம் சையத்  அப்பாஸின்  இசையில் ஒரே ஒரு  ஹீரோ  பில்டப் சாங்க்  உண்டு , சகிக்கவில்லை . பின்னணி இசை கச்சிதம் . நிசாத் யூஸுப் , பிரவீன்  பிரபாகர் இருவரும் இணைந்து எடிட்டிங்க் செய்திருக்கிறார்கள்.151  நிமிடங்கள்  படம் ஓடுகிறது .120  நிமிடங்களில்  முடித்திருக்கலாம் . திரைக்கதை  எழு  தி  இயக்கி இருப்பவர்  அறிமுக  இயக்குனர் டினோ  டென்னிஸ் 


சபாஷ்  டைரக்டர்

1  லண்டன்  பிரிட்ஜில்  கொள்ளையர்களை  பிடிக்க முயற்சிக்கும் சீன்   பிரம்மாண்டம் . அதற்கான க்ளுவை பர்த் டே க்ரீட்டிங்க்  கார்டு  மூலம்  கண்டுபிடிப்பது  சுவராஸ்யம் 


2   ஓப்பனிங்க்   சீனில்  வரும்  விமானத்தில்  வைரக்கடத்தல்  சீன்  செம 


  ரசித்த  வசனங்கள் 


1  க்ளுவைத்தேடி  நாம்  போறப்ப நம்மைத்தேடி க்ளூ வரும் 


2  நான்  என் தொழிலில்  வரும் சவால்களை நேசிக்கிறேன் .ஒவ்வொரு கேஸையும் வெற்றிகரமாக முடிக்கும்போது எனக்குக்கிடைக்கும் ஜாப் சேடிஸ்பேக்ஸன் அருமை 


3 இந்தக்கதைல  உங்க ரோல் என்ன?


 நான் பண்ணாத ரோல் இல்லை 


4  என்ன? கால்குலேட்டர் மாதிரி  சிரிக்கறீங்க? 


5  இவங்க  சண்டை எல்லாம்   முடிந்ததும்  தீபாவளி  முடிந்த மாதிரி  இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  ஒரு  விபத்தில்    அம்மா , மகள் (சிறுமி)  இருவரும்  அடிபடுகிறார்கள் .அம்மாவை  ஒரு ஆட்டோ வில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு   சிறுமியை அனுப்ப  வாகனம் தேடுகிறார்கள் . அந்த  ஆட்டோ வில்   இருவரையும்  அனுப்பி  இருக்கலாமே?


2   ஹை  ரிஸ்க்  ஆனால் லோ வேல்யூ திருட்டு  நடப்பதற்கு வலுவான காரணம் இல்லை .போலீசுக்கு க்ளு 

 குடுப்பது எதற்கு   என்பது தெரியவில்லை . சைக்கோ என்பதால் என சமாளிப்பு வேற 


3  ஓப்பனிங்க்  சீனில்  சின்னக்குழந்தைக்குக்கூட  அந்த  ஓவியத்தில் வைரங்கள்  இருப்பது  தெரிகிறது . யூகிக்க முடியுது , ஆனால் ஏர்போர்ட் ஆபீசர் கோடடை  விடுகிறார்கள் 


4   தமிழ் நாடு போலீஸ்  இருவர்  தவற  விட் ட  ஆளை கேரளா  போலீஸ்  சாமார்த்தியமாகப்பிடிப்பது போல ஒரு சீன தேவை இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள் 


5   விஷப்புகை  அடிக்கும்போது  வில்லன் க்ரூப் மாஸ்க்  போட்டிருக்கிறார்கள் . ஆனால் அதைக்கூட போலீசால் கெ ஸ் பண்ண முடியவில்லை . கவுதம்  விளக்கிய பின் தான் போலீசுக்குத்தெரிகிறது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மம்முட்டி  ரசிகர்களில் பொறுமைசாலிகள் மட்டும் பார்க்கலாம் .மத்தவங்க  ஓ  டி டி யில் கூடப்பார்க்க முடியாத குப்பைப்படம் . ரேட்டிங்  1.75 / 5 



Bazooka
Theatrical release poster
Directed byDeeno Dennis
Written byDeeno Dennis
Produced by
  • Dolwin Kuriakose
  • Jinu V. Abraham
  • Vikram Mehra
  • Siddharth Anand Kumar
Starring
CinematographyNimish Ravi
Roby Varghese Raj
Edited byNishadh Yusuf
Praveen Prabhakar
Music bySaeed Abbas
Production
companies
Theatre of Dreams
Yoodlee Films
Saregama
Distributed byCapital Cinema
Release date
  • 10 April 2025
Running time
151 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget28 crore[2]