தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு
விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம் என காந்திய
மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: " மோடி ஆதரவலையும்,
காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் தனிப்பெரும்பான்மையுடன்
பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
மதச்சார்பின்மையும் சாதிய அழிவுச்சக்திகளும் இத்தேர்தலில் பரிதாபகரமான
முடிவைச் சந்தித்துள்ளன. மாயாவதி, முலாயம்சிங், லாலு பிரசாத் போன்றோரின்
வீழ்ச்சியும், காங்கிரஸின் வரலாறு காணாத தோல்வியும் சாதி மதங்களைப்
பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் இழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் முதல் முயற்சியாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக தேசிய ஜனநாயக் கூட்டணி
அமைக்கப்பட்டது. காங்கிரசை வீழ்த்தவும், திராவிடக் கட்சிகளின்
பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கவும் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின்
நோக்கங்கள் ஓரளவு நிறைவேறியுள்ளன.
காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவி மீண்டும் எழ
முடியாமல் விழுந்து விட்டது. தி. மு. க. ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பெற
முடியாமல் மக்களவைப் பிரதிநிதித்துவத்தை முற்றாக இழந்துவிட்டது.
இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, சட்ட மன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பதில் ஈடுபட வேண்டும்.
தமிழகத்தில் 75 லட்சம் வாக்காளர்கள் இக்கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம்
மாற்று அரசியல் மலர தங்கள் ஆதரவைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
விஜயகாந்தின் ஆரம்பகால அரசியல் ஊசலாட்டங்களும், மருத்துவர் ராமதாசின்
பிடிவாதமான புறக்கணிப்பும், மாதக்கணக்கில் தொகுதி உடன்பாடு காண்பதில்
கடைப்பிடித்த கேலிக்கூத்துகளும், கூட்டணித் தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒரு
மேடையில் கூட வாக்காளர்களைச் சந்திக்காமல் தவிர்த்ததும் மோடியை மையமாகக்
கொண்டு மக்களிடம் மலர்ந்த எதிர்பார்ப்பை முறியடித்துவிட்டன.
இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம்.
இதில் வாக்காளர்களைக் குறைசொல்வதற்கு ஒன்றுமில்லை. தவறுகளிலிருந்து பாடம்
பெறுவதுதான்அரசியல் பண்புடைமை. ஆனால், ராமதாசும் விஜயகாந்தும் சட்டமன்றத்
தேர்தலை நோக்கி சேர்ந்து களத்தில் நிற்பார்கள் என்பது சந்தேகத்திற்குரியது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த இருவர் மூலம் வலுப்பெறுவதற்கு வாய்ப்பில்லை.
மாற்று அரசியல் மலர்வதற்குத் தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட வைகோவின்
தோல்வியை தமிழினத்தின் ஒட்டு மொத்தத் தோல்வியாக காந்திய மக்கள் கட்சி
(கா.ம.க.) கருதுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்குள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர்
ஜெயலலிதாவிற்கு இன்றுள்ள சாதகமான சூழல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. மாற்று
அரசியல் வளர்த்தெடுக்கப்படுவதற்கு ஏற்ற வியூகத்தை இனி காலம் தான் நமக்கு
காட்ட வேண்டும்". இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
- gnanavel.s Shanmugam at Govt. of Puducherryஒரு இலக்கியவாதியாகப் பார்த்த உங்களை நாங்கள் ,இத்தகு அரசியல் பேசுவதால் அரசியல்வாதியாகப் பார்க்க நினைக்கிறோம் ! வாருங்கள் அரசியலுக்கு!!about 7 hours ago · (0) · (0) · reply (0)
seeni.sethuraman from Chennai
தமிழகத்தில் தேசிய ஜனநாய கூட்டணியில் உள்ள பிஜேபி கட்சியை தவிர மற்ற கட்சிகளான பாட்டாளி மக்கள் , வைகோ , விஜயகாந்த் ,பாரி வேந்தர் .சண்முகம் போன்றவர்களுக்கு தங்கள் கட்சி உறுப்பினர்களை தவிர நடுநிலையாளர் ஆதரவு இல்லை என்பதை இந்த தேர்தல் மூலம் உணர்ந்து தமிழக பிஜேபி 2016 தேர்தலை தனியாக சந்திக்க வேண்டும் .about 7 hours ago · (0) · (0) · reply (0)Muthu Selva at Singapore from Singapore
வைகோ 2016 சட்டமன்ற தேர்தலில் தனியாக நின்றாலும் கூட்டனியாக நின்றாலும் அவரை வெற்றி பெற வைப்பது தமிழர்களின் கடமைabout 8 hours ago · (0) · (0) · reply (0)Kelvigal Ayiram from Wheeling
வைகோ தனியாக நிற்பதே 2016 சட்ட மன்ற தேர்தலில் வெற்றியை அடையும் வழி என தோன்றுகிறது.about 14 hours ago · (4) · (0) · reply (0)Arul George
இவரது தரகு பேச்சை நம்பி வைகோவும், விஜயகாந்தும் அழிந்து போனது தான் மிச்சம். வரும் சட்டமன்ற தேர்தலில்லாவது வைகோவும், விஜயகாந்தும் இவரது தரகு பேச்சை கேட்காமல் இருந்தால் ஒருவேளை சில சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறலாம். இவர் தரகு கூட்டணியில் சாதியவாதம் மற்றும் மதவாதம் பேசிய கட்சிகள் தான் வெற்றி பெற்றுள்ளன. இவரது பேச்சை கேட்டுதான் நரேந்திரமோடியும், பாஜகவும் இலங்கைக்கான வெளியுறவு கொள்கைகளை செயல்படுத்துவார்கள் என்றும் வாய் சவுடால் விடுவார். இவர் மாற்று அரசியல் என்று கூறுவது சாதியவாதம் மற்றும் மதவாதம் சார்ந்த கேடுகேட்ட அரசியலை தான்.about 15 hours ago · (13) · (2) · reply (1)Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited from Bangalore
அம்மாவின் சுனாமி அலைகளுக்கு முன், மோடியின் அலை தோற்றுப்போயினவோ? ஆனால் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். அம்மா மட்டும் வட இந்தியாவில் பிறந்திருந்தால், என்றோ பிரதமராகி இருப்பார்!!about 15 hours ago · (1) · (6) · reply (0)haroonbasha,tiruvannamalai
கூட்டணி அமையவேண்டும் என்று சொல்லி ம.தி.மு.க.க்கு இவ்வளவு சதம் தே.மு.தி.க.க்கு இவ்வளவு சதம் என்றெல்லாம் கணக்கு சொல்லி இவர்கள் கூட்டு சேர்ந்தால் தமிழ்நாடே நமக்கு என்றதெல்லாம் பொய்யா?about 15 hours ago · (0) · (0) · reply (0)Harikumar Harikumar
தமிழ் அருவி மணியன் ஐயா, நீங்கள் பா.ஜ. க மற்றும் ம.தி.மு. க மற்றும் இணைத்திருந்தால் போதுமானது, இல்லை தனியாக நின்றிருந்தால் பா.ஜ. க வின் தனிப்பெரும்பான்மை தெரிந்திருக்க கூடும் . மேலும் சில இடங்கள் கிடைத்திருக்க கூடும். மூப்பனார் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பம் செய்த போது செய்த அதே தவரை தமிழக பா.ஜ. கவும் செய்துவிட்டது.என்னைப்போல் பலர் போடியை விரும்பினோம், பா.ஜ.க கட்சியை நம்பினோம் . ஆனால் ஒருபோதும் குடும்ப்ப கட்சியையும் , ஜாதிய கட்சியையும் ஒருபோதும் விரும்பவில்லை அதுவே பா.ஜ. காவின் தேர்தல் களம் காட்டியுள்ளது. இதே கூட்டணி தொடர்ந்தால் ஒருபோதும் தமிழகத்தில் பா.ஜ. க பெரிய அலவிற்கு கால் ஊன்ற முடியாது. இப்பொழுது கேப்டனிடன் கேட்டிர்கள் என்றால் வாய் கூசாமல் இன்று மோடிக்கு கிடைத்த வெற்றியே என்றுடன் கூட்டணி வைத்ததால் தான் என்று கூறக்கூடும். இராமதாஸ் அவர்களுக்கு கவலை இல்லை அவருக்கு வேண்டியது கிடைத்துவிட்டது.about 15 hours ago · (4) · (1) · reply (0)gnanavel.s Shanmugam Up Votedsivashanmugam Vasu retd.,deputy secretarytogovt., at Government of Puducherry from Pondicherry
தமிழன் எப்பொதும் ஒத்துமையாக .போவதில்லைabout 15 hours ago · (0) · (0) · reply (0)Pachaimuthu Dakashna from Mumbai
பேசுவதெல்லாம் நல்லதே பேசுறிங்க. ராமதாஸ் விஜயகாந்த் அணுகுமுறை சரியில்லை என்பது இப்பொழுதுதான் உங்களுக்கு தெரியுதா!!!!!!!!! மாறி மாறி அவர்களுக்கு தூது போன பொது தெரியலையா...... ஆ. தி. மு. க உடன் இருந்த கூட்டணியில் அதிக அளவில் வெற்றி பெற்றோம் என்பதை மறந்து மமதையில் இருந்த விஜயகாந்த் கட்சி உங்களுக்கு பெரிய கட்சி pola eppadi therindhadhu.about 15 hours ago · (0) · (0) · reply (0)Seetharaman from Chennai
அ.இ.அ.தி.மு.க திராவிட கட்சியாக தெரியவில்லையா?about 17 hours ago · (2) · (0) · reply (0)Mohan Ramachandran at I am doing my own business
ஒரு மாபெரும் திருப்பம் நிகழ்ந்துள்ளது .வாக்குகள் குவிந்தன ஆனால் சீட் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம் .தமிழருவி மணியன் சொல்வது சரியென்றே படுகிறது . பெருவாரியான மக்களின் நம்பிக்கை கிட்ட கூட்டணி தலைவர்களின் செயல் திருப்தி இல்லை இதுவே முதல் காரணம்about 17 hours ago · (5) · (1) · reply (0)eral mani
எது எப்படியோ வைகோ என்கின்ற ஒரு பாராளுமன்ற புயலை வாய்ப்பிருந்தும் தவறவிட்ட தொகுதி பறிதாப த்திர்க்குரியதுதான் .பொது வாழ்வில் தூய்மையானவர் .மற்ற அரசியல் வாதிகளுடன் ஒப்பிடும் போது எளிதில் உணர்ச்சி வசப்படும் . ஒரு எளிமையாக அணுகக்கூடிய மனிதன் .about 17 hours ago · (3) · (0) · reply (0)Balasubramanian Venkatasamy Up Votedvijai
இந்த தேர்தல் முறை பழமையானது பிழையானது . சில இடங்க்களில் 2 லட்சம் வாக்குகள் எடுத்தவன் மக்கள் பிரதினி . சில தொகுதில் 3 லட்சம் வாக்குகள் எடுத்தவர் மன்னைகவ்வுகின்ரா . விகிதாசார முறை என்றால் , 75 லட்சம் வாக்கு பெற்றகட்சி ஆகக்குறைந்தது 7 மக்கள் பிரநிதிகளை வென்றிருப்பார்கள் ,(10 லட்சத்திற்கு ஒருபிர்தினி )about 18 hours ago · (0) · (0) · reply (0)pugalenthi from Noida
சட்டமன்ற தேர்தலில் இவர் பேச்சை அல்லது இவரது அறிவுரையை கேட்டால் மீண்டும் அதிமுகவே ஆட்சிக்கு வரும் யாருக்கும் ஒரு சீட்டுகூட கிடைக்காது .இந்த காந்தியவாதி நீலகிரியில் அதிமுகவை ஆதரித்தார் ,அதற்க்கு இவர்சொன்ன காரணம் ராஜாவின் 2ஜீ வழக்கு .அப்படியானால் ஜெவின் சொத்துகுவிப்பு வழக்கு காந்திய தர்மத்தில் சேராதா .தயவு செய்து காந்தி பெயரை கெடுக்கவேண்டாம்.about 18 hours ago · (2) · (0) · reply (0)Govindarajan from Chennai
தமிழருவி மணியன் உண்மையை சொல்ஹிறார். அம்மையார் இந்த தேர்தல் வெற்றியில் இருமந்துவிட வேண்டாம். எதிர் கட்சிகள் நேர்மயஹா கூட்டணி அமைதுவிட்டலோ, பிஜேபி சிங்க்லிய முயற்சி செய்தலோ தமிழகத்துக்கு விடிவுகாலம் pirakkumகற்றல் gabout 18 hours ago · (0) · (0) · reply (0)Magesh Meena
ரொம்ப ரொம்ப சரியாக சொல்லப்பட்டுள்ளது. விஜயகாந்த் மற்றும் ராமதாஸ் கண்டிப்பாக திருந்துங்கள் . மாற்று அரசியலுக்கான நேரம் இது. வீனாக்காதிர்கள்.about 19 hours ago · (2) · (1) · reply (0)Raj from Mountain View
Congress and BJP both are anti Tamils, we must get rid of these evils...about 19 hours ago · (3) · (5) · reply (0)P.Padmanabhan Up VotedMohan Ramachandran Down Votedபா.நாகராஜன் from Salem
வைகோவை தவறவிட்டுவிட்டார்கள்about 19 hours ago · (6) · (3) · reply (0)raman RAMAN Down Votedgummanguthu GOPI from Abu Dhabi
தமிழக ப ஜ க விற்கு தேர்தலை சந்திக்கும் எந்த எண்ணமும் திட்டங்களும் இல்லாமல் போனதே இந்த தோல்விக்கு காரணம்about 19 hours ago · (0) · (0) · reply (0)
நன்றி - த இந்து