ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு கிராமத்தில் ஊர்த்தலைவரின் மகள் ஆக நாயகி இருக்கிறாள் . அவளுக்கு ஒரு தறுதலை அண்ணன் இருக்கிறான் கோயில் சாமியின் கிரீடத்தை திருடி விட்டு பின் மீண்டும் அதை கோயிலிலே வைக்க இருக்கிறான் . நாயகிக்கு ஒரு காதலன் உண்டு . இன்னொரு ஒரு தலை (யாக நாயகியைக்காதலிக்கும் ) தறுதலை இருக்கிறான் . நாயகியை அடிக்கடி தொந்தரவ செய்கிறான் . இப்படி இருக்கும் சூழலில் நாயகி மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்து விடுகிறாள் .
போலீசுக்கு சொன்னால் பிரச்சனை என குடும்பம் மறைத்து விடுகிறது . ஆனால் பிணத்தை எடுக்க முடியவில்லை . ஓவர் வெயிட் ஆக இருக்கிறது . நிறைவேறாத ஆசை இருந்தால் இந்த மாதிரி பிணத்தை வெளியே எடுக்க முடியாது என ஒரு நம்பிக்கை உண்டு
இதற்குப்பின் என்ன ஆனது ? நாயகியின் மரணத்துக்கு யார் காரணம் ? என்பதே மீதி திரைக்கதை
நாயகி ஆக ரூபா கொடுவையுர் பிரமாதமாக நடித்திருக்கிறார் .மகளிர் மட்டும் நாகேஷ் , மதகஜ ராஜா மனோபாலா வரிசையில் இவரும் பிணமாக நடித்து ரசிகர்களிடம் அப்ளாஷ் பெறுகிறார் . நாயகியின் அம்மா ஆக கீதா கைலாசம் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . நாயகியின் காதலன் ஆக நரேந்திர பிரசாத் நடித்திருக்கிறார். நாயகி பிரமாதமாக ஸ்கோர் செய்யும்போது இவர் கொஞ்ச்ம தடுமாறுகிறார்
சுஜித் சாரங்கின் அட் டகாசமான ஒளிப்பதிவு படத்துக்குப்பெரும் பலம் .நாயகி உயிரோடு வரும் காட் சிகள் ஒரு கலர் டோன் , பிணமாக வரும் காட் சிகள் ஒரு கலர் டோன் என பிரமாதமாகப்பிரித்து ஒர்க் செய்திருக்கிறார் , ஜீஸின் ஜார்ஜின் இசையில் ஒரு ஒப்பாரிப்பாடல் உருக்குகிறது . பின்னணி இசை இன் னமும் நன்றாக செய்திருக்கலாம் ,ஸ்ரீ ஜித் சாரங்கின் எடிட்டிங்கில் படம் 107 நிமிடங்கள் ஓடுகிறது . முதல் பாதி நல்ல வேகம் , பின் பாதி கொஞ்ச்ம ஸ்லோ . வசனம் எஸ் ராஜேந்திரன் . சென்ட்டிமென்ட் ஆக எழுதி இருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்
சபாஷ் டைரக்டர்
1 நான் லீனியர் கட்டில் நாயகியின் காதல் கதை , நாயகியின் அண்ணனின் திருட்டுக்கதை , நாயகியின் குடுமப சூழல் என குழப் பம இல்லாமல் மாறி மாரி கதை சொன்ன விதம் அருமை
2 படம் முழுக்க நாயகியின் பிண முகம் ஒரே மாதிரி வைத்திருக்கும் அசாதாரணமான நடிப்பு அருமை . நாயகி நிஜத்தில் ஒரு டாக்டராம் .யோகா , பிராணாயாமம் கற்றவராம் . அதனால் மூச்சை அடக்கி நடித்திருக்கிறார் . அவருக்கு ஒரு சபாஷ்
3 நாயகியின் பிணம் திடீர் என எழுவது , முகத்தில் மஞ்சள் கலர் லைட்டிங்க் செட் செய்து திகில் கிளப்புவது என கேமராமேனின் பணி அருமை
ரசித்த வசனங்கள்
1 மனசு பலமா இருந்தா உடம்பு எதை வேணா ஏத்துக்கும்
2 வெளில போனப்ப யார் மேலயோ இருக்கும் கோபத்தை வீட்டுக்கு வந்து வீட்ல இருக்கறவங்க கிடட காட் றதே இந்த ஆம்பளைங்களுக்கு வேலையாப்போச்சு
3 எல்லாத்துக்கும் தீர்வு சாமியார்னா இங்கே யார் முட் டாள் ?
4 மனசு தடுமாறி இருக்கும் நேரத்துல வார்த்தையால கஷ்டப்படுத்தக்கூடாது
5 வயசு ஏறுனா புத்தி மாறும்னு சொல்லுவாங்க , ஆனா உனக்கு புத்தி கெட்டுப்போய்க்கிடக்கே ?
6 எனக்கு ஏதாவது ஆனா நீ எவ்ளோ பதர்றே ? என்னை நல்லாப்பார்த்துக்கறே
7 தைரியமா இருப்பது வேற அறிவா இருப்பது வேற
8 என் அப்பா என்னைப்பேசிக்கொல்றாரு காதலன் நீ என் கிட்டப்பேசாம கொல்றே
9 வாழும் இடமும் , சேரும் இடமும் ஒண்ணா இருக்கணும் ( நம்ம ஜாதிலயே கல்யாணம் பண்ணனும் ) \
10 உ ன்னைப்பார்த்துக்கிட் ட எனக்கு உன் மனசைப்புரிஞ்சுக்க முடியாம போச்சே ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 காதல் வசனக்காட் சிகளில் நாயகியின் கண்கள் காதல் பொங்குகிறது . ஆனால் காதலன் சோத்துக்கு செத்தவன் போல இருப்பது கடுப்பு
2 நாயகியின் வீட்டில் ஒரு அறை திறக்கப்படாமல் இருப்பது , அதைத்திறந்தால் ஆபத்து என்பது மெயின் கதையுடன் ஒட்டவில்லை
3 நாயகிக்கு தெரிந்த அந்த ரகசியத்தை நாயகி தன அம்மாவிடம் எதனால் சொல்லவில்லை ? என்பதற்குப்பதில் இல்லை
4 ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை அப்போதே ஓப்பன் பண்ணாம நாயகி எதனால் காத்திருந்தார் ?
5 ஜாதிய அடக்குமுறை , குலத்தொழில் போன்ற விஷயங்களை இன்னமும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மெதுவாக நகரும் க்ரைம் டிராமா பார்த்துப்பழக்கம் உள்ளவர்கள் , பெண்கள் பார்க்கலாம் . விகடன் மார்க் 42 , ரேட்டிங்க் 2.75 / 5
Yamakaathaghi | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Peppin George Jayaseelan |
Written by | Peppin George Jayaseelan S. Rajendran (Dialogues) |
Produced by |
|
Starring |
|
Cinematography | Sujith Sarang |
Edited by | Sreejith Sarang |
Music by | Jecin George |
Production companies |
|
Release date |
|
Country | India |
Language | Tamil |