Thursday, March 27, 2025

ROBBER (2025) -( ராபர் - தமிழ் ) - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் த்ரில்லர் )

 

அஜித் குமார் நடித்த விவேகம் படத்தின் ஒரிஜினல் வெர்சன் ஆன  மெட்ரோ  படத்தின்  திரைக்கதை ஆசிரியர் + மெட்ரோ  நாயகன்  காம்ப்போ  வில் வந்திருக்கும்  படம் என்பதாலோ  என்னவோ  மெட்ரோ  படத்தின் தாக்கம்  பல இடங்களில் தெரிந்தாலும் இது ஒரு கவனிக்க வைக்கும் படமே . 14/3/2025  அன்று   திரை அரங்குகளில்  ரிலீஸ்  ஆன இந்தப்படம்   இன்னமும்  ஓ டி டி  யில் வரவில்லை .  அறிமுக  இயக்குனர் எஸ் எம்   பாண்டி  இயக்கத்தில்   உருவான இந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதைப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லன்  ஒரு ஐ டி கம்ப்பெனி யில்  வேலை பார்ப்பவன் .ஒரு கேர்ள் பிரண்ட்  உண்டு , ஆனால் காதலி அல்ல .கேர்ள்  பிரண்டுக்கு   ஏராளமாக  செலவு செய்ய வேண்டி இருப்பதால்  செயின்  பறிப்புத்தொழிலை சைடு பிஸ்னஸ் ஆக வைத்துக்கொள்கிறான் .கொள்ளை  அடித்த  செயினை  விற்க  ஒரு பார்ட்டி  உண்டு . அவனிடம் வில்லனுக்கு ஒரு சமயம் மோதல் ஏற்படுகிறது 


செயின்  பறிப்பு  சம்பவத்தில்  ஒரு முறை  எதிர்பாராதவிதமாக  ஒரு பெண் இறக்கிறாள் . அந்தப்பெண்ணின் மரணத்துக்கு  வில்லன் தான் காரணம் . ஆனால்  வில்லனுக்கு  அது பற்றிய  குற்ற  உணர்ச்சி  எதுவும்  இல்லை . உயிர் இழந்த பெண்ணின் அப்பா   வில்லனைக்கண்டுபிடித்து பழி வாங்கத்துடிக்கிறார் .


 வில்லனுக்கு  ஆல்ரெடி  ஒரு துரோகி  இருந்தான் அல்லவா ? அவன்  வில்லனை மாட்ட  வைக்க ஸ்கெட்ச்  போடுகிறான் . வில்லன் மாட்டினானா?  தப்பினா? என்பது மீதி திரைக்கதை 



வில்லன்   ஆக மெட்ரொ  படத்தின்    நாயகன் சத்யா  நடித்துள்ளார் . அப்பாவி ஐ டி  ஊழியர் , கொடூரமான செயின்  பறிப்புத்திருடர்  என்று  மாறுபட் ட  இரு முகங்களை   அருமையாகக்காட்டுகிறார் .ஆக்சன்  ஸீக்வன்சில்  , தப்பி ஓடும் சீன்களில் , க்ளைமாக்சில்  இவரது நடிப்பு அருமை 


வில்லனின்  அம்மாவாக  தீபா சங்கர்  நடித்துள்ளார் . , இவர் ஆக்சுவலாக ஓவர் ஆக்டிங்க்  ஓமனா  ஜோதிகாவுக்கே  பெரியம்மா முறை .ஆனால்  இந்தப்படத்தில்  அந்த தர்மசங்கடம் இல்லை .


வில்லனுக்கே  வில்லன் ஆக  டேனியல் ஆன்னி போப்  நடித்திருக்கிறார் .வழக்கமாக காமெடியனாக வரும் இவர் இதில் கொடூரமான வில்லனாக வருகிறார் .நல்ல  நடிப்பு 


உயிர்  இழந்த  பெண்ணின் அப்பாவாக  ஜெயப்பிரகாஷ்  அனுபவம் மிக்க நடிப்பு .  வில்லனைப்பழி வாங்க இவருக்கு உதவியாக வரும் போலீசாக  ராஜா ராணி  புகழ் பாண்டியன்  கச்சிதமாக  நடித்துள்ளார் .ஜெயில் கைதியாக சென்றாயன்  அளவான   நடிப்பு 


மெட்ரொ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்  உடன் இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார் அறிமுக  இயக்குனர் எஸ் எம்   பாண்டி  


மெட்ரொ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்  உடன் இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார் ஜோகன்  சிவநேசன் இசையில்  பாடல்கள்  ஓகே  ரகம், பின்னணி  இசை கலக்கல்   ரகம் . ஸ்ரீ காலத்தின் எடிட்டிங்கில்  படம் 2 மணி நேரம் ஓடுகிறது .விறுவிறுப்பு ,பரபரப்புக்குப்பஞ்சம் இல்லை . உதய குமாரின் ஒளிப்பதிவு குட்

சபாஷ்  டைரக்டர்


1  செயின் பறிப்பு  சம்பவங்கள்  , மக்களிடம்  இருந்து  வில்லன் தப்பி ஓடும் காட் சிகள்  அனைத்தும் அபாரம் 


2   ஜெயில் கைதி ஆனா சென்றாயன்  கதை சொல்வதும்  க்ளைமாக்சில்  அவரை வைத்து ஒரு டிவிஸ்ட்டும்  அருமை 


3  வில்லனுக்கே  வில்லன் ஆகும்  ஒரு சம்பவம் . அவன் போடும் ஸ்கெட்ச் , 1000 பவுன்  தங்கம்  மேட்டர்  எல்லாம் பிரமிக்க வைப்பவை 


4  வில்லன்  வரும் இடங்களில்  வரும் பிஜிஎம்  பட் டாசு 


  ரசித்த  வசனங்கள் 

1   தப்பைத்தப்பு  என்று  தெரிந்து  செய்பவன்  யாருக்கும் பயப்பட மாட் டான் 


2  இந்த  உலகத்தில் நல்லவன்  , கெட் டவன்   என்   யாரும்  இல்லை , மாட்டிக்கிட் டவன் , மாட் டிக்காதவன்  ரெண்டே  வகை தான் 


3 சிட்டில  டெய்லி 50 பவுன் நகை  காணாம   போகுது , ஆனா கேஸ்  பதிவு ஆவது 5 பவுன் தான் 


4   ஒரு  பொண்ணோட  பார்வை  பட் டா  போதும் , எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவான் 


5 லவ் பண்றவனும்  ,கொள்ளை  அடிக்கிறவனும் மனசுக்குள்  எதையும்  வெச்சுக்கக்கூடாது , ஸ்ட்ரெஸ்  அதிகம் ஆகிடும் 

6  நீ  என் மேல்  கை  வைப்பதை விட  என் பொருள் மேல்  கை  வைப்பது  எனக்கு அதிக கோபம் வர வைக்கும் 


7  முக்கால்வாசி திருட்டுப்பசங்க  நம்மை சுத்திதான் இருப்பாங்க 


8   இங்கே  ரெண்டு  பிரச்சனை  1 எதுவும் இல்லை  2 இருந்தாலும் ஒழுங்கா இல்லை 


9   சிட்டில  70% சிசிடிவி  தான் ஒழுங்கா ஒர்க் ஆகுது 


10 நான் திருடன் இல்லை , பிஸ்னஸ் மே ன் 


ரெண்டும் ஒண்ணுதான் 



11 இந்த உலகத்துல  உன் அம்மாவைத்தவிர வேற யாரும் உன்னை மதிக்கலை 


12 ஒரு அம்மாவுக்கு தன மகன் எவ்ளோ சம்பாதிக்கிறான் என்பது முக்கியம் இல்லை ,எவ்ளோ ஒழுக்கமா இருக்கான் என்பதுதான் முக்கியம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வில்லன்  அந்தப்பெண்ணின்  உயிர் போகக்காரணமாக அமைவது  தவிர்த்திருக்கலாம் .அந்த அளவும் கொடூரமாக நடக்க வேண்டிய தேவை என்ன? 


2   ஆயிரம்  பவுன்  நகை  சேமித்து  வைத்திருக்கும்  வில்லன்  வெரைட்டியாக  பல பெண்களிடம் போகாமல்  ஒரே ஒரு ஆசை நாயகியை மட்டுமே வைத்திருப்பது எதனால் ? 


3  வில்லனும்  , வில்லனுக்கே  வில்லனும்  மோதும்  சீன்  நம்பகத்தன்மை இல்லை . கடோத்கஜன்  மாதிரி  இருப்பவனை  வில்லன் அசால்ட் ஆக டீல்  செய்வது எப்படி ? 



4  பூமிக்கு அடியில்  புதைத்து  வைப்பது ரொம்ப ரிஸ்க் .பேங்க் லாக்கரில்  வைக்கலாம் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  விறுவிறுப்பாக செல்லும் நல்ல க்ரைம் த்ரில்லர் தான் .மெட்ரோ   பார்க்காதவர்கள்  இதைப்பார்க்கலாம் . ரேட்டிங்  2.75 / 5  . விகடன் மார்க் 42 



Robber
Theatrical release poster
Directed bySM Pandi
Written by
Story byAnanda Krishnan
Produced by
  • Kavitha S
  • Ananda Krishnan
Starring
CinematographyN. S. Uthayakumar
Edited byN. B. Srikanth
Music byJohan Shevanesh
Production
companies
  • Impress Films
  • Metro Productions
Distributed bySakthi Film Factory
Release date
  • 14 March 2025
CountryIndia
LanguageTamil

Wednesday, March 26, 2025

அஸ்திரம் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் )

             


         21/3/2025  அன்று    திரை அரங்குகளில்  வெளியாகி இருக்கும் இந்தப்படம் அறிமுக இயக்குனர் அர்விந்த் ராஜகோபால் + ஷாம் காம்போ வில் உருவான படம் பெரிய அளவில் விளம்பரம்  இல்லாமல் வந்திருக்கும் நல்ல படம் இது . தியேட்டரில் மிஸ் செய்தவர்கள் ஓ  டி டி யில் ரிலீஸ் ஆகும்போது மிஸ் செய்யாமல் பார்க்கலாம்   


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 -  பல  ஆண்டுகளுக்கு  முன் ஜப்பானிய மன்னர் சதுரங்க  விளையாட்டில்  தன்னை  வெற்றி பெற்ற  சிப்பாயை  வாள்  மூலம் தன வயிற்றைக்கிழித்துத்தற்கொலை செய்ய வைக்கிறார்  அரசாங்க துரோகிகளுக்குத்தான் அது போன்ற தண்டனை வழங்கப்படும் என்பதால் அந்த சிப்பாயை துரோகி என மக்கள் நினைக்கிறார்கள் 

சம்பவம் 2 - வில்லன்  சிறு வயதில் இருந்தே செஸ்  பிளேயர் . அவனுக்கு ஒரு தம்பி உண்டு .. ஒரு நாள் வில்லனின் தம்பி வில்லனை செஸ்   விளையாட்டில் தோற்கடிக்க  வில்லன்  சம்பவம் 1ல் வந்த ஜப்பானிய மன்னர்  கதையைப்படித்தவன் என்பதால் அதே   பாணியில்  தன்  தம்பியைக்கொலை செய்கிறான் 

சம்பவம்  3  -  நாயகன்  ஒரு போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் . அவர்  ஏரியாவில்  பப்ளிக் பார்க்கில்  ஒரு ஆள் தன் வயிற்றைக்கத்தியால் கிழித்துத்தற்கொலை செய்து கொள்கிறார் . அது தற்கொலை தான் என்பதற்குப்பல சாட் சிகள் இருக்கின்றன . ஆனால்  அதே  பேட்டர்னில்  மேலும் 2   தற்கொலைகள்  வெவ்வேறு   ஊ ரில்  நடக்க   நாயகன்  உஷார்  ஆகிறான் ..அனைத்தும்  திட் டமிட் ட  கொலைகள்   என்பதை நாயகன் உணர்கிறான் 

அதை நிரூபிக்க  நாயகன் என்ன என்ன செய்தான் ? என்பது   மீதி   திரைக்கதை 

நாயகன்  ஆக ஷாம் நடித்திருக்கிறார் .கம்பீரமான நடிப்பு . ஓவர் பில்டப் எல்லாம் இல்லாமல் யதார்த்தமான   நடிப்பு . நாயகி ஆக  நிரஞ்சனி நடித்திருக்கிறார் , இவருக்கு    அதிக வாய்ப்பில்லை .வந்தவரை   பரவாயில்லை 

மனவியல் மருத்தவர் ஆக  நிழல்கள் ரவி  நல்ல நடிப்பு . வில்லனின்   சிறுவயது  கேரக்டர்  ஆக  மாஸ் டர் விதேஷ்  ஆனந்த்  நல்ல நடிப்பு .இவரது கேரக்டரை  இன்னமும் டெவலப்   செய்து   இருக்கலாம் . ஆனால்   வில்லன் வளர்ந்து   பெரிய ஆள் ஆன பின்  கேரக்டரை டம்மி   பண்ணி விட் டார்கள் .வில்லனாக நடித்தவரும் சரி இல்லை 

படம்  முழுக்க   நாயகன் உடன் வரும் கான்ஸடபிள்  கேரக்டரில்   சுமந்த்   சுமாரான நடிப்பு தான் 

கே  எஸ்   சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான் . பின்னணி  இசை  அருமை .

கல்யாண்   வெ ங்கட் ராமனின்  ஒளிப்பதிவு  குட் . வில்லனின் சின்ன வயது  பையனுக்கு லைட்டிங்க் அருமை 

பூபதி  வேதகிரியின்  எடிட்டிங்கில்  படம் 2 மணி  நேரம் ஓடுகிறது .நல்ல விறு விறுப்பு 

எம் எஸ்   ஜகன்  திரைக்கதை   எழுத   இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் அர்விந்த் ராஜகோபால்


சபாஷ்  டைரக்டர்


1  பிளாக்  அண்ட்   ஒயிட்   கலருக்கும் , கொலைகளுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி நாயகன் துப்பு துலக்கும் காட் சிகள் அருமை 

2  கிறிஸ்துவர்   போல   கிராஸ்   செய்யும்   முறையால்  முதலில்   குழப்பம் ஆகி  அதை  செஸ்  ராஜாவுக்கான சிம்பல் என்பதை நாயகன் கண்டு பிடிக்கும் சீன்  செம 

3  வில்லன்   சின்னப்பையனாக  இருக்கும்போது   சைக்கோவாக  நடப்பது   திகில் 

4  என்னதான் நடக்கிறது   என்பதே   புரியாமல் முதல் பாதி வரை சஸ்பென்ஸ் ஆகக்கொண்டு சென்று பின் பாதியில்  ஒவ்வோன்றாக ஓப்பன் செய்யும் விதம் 



ரசித்த  வசனங்கள் 

1    நம்ம வீட்டில் இருப்பவர்களை விட நம்மை  அதிகம் கவனிப்பவர்கள் நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் 

2  கறிக்கடைக்கு வரும் கூட்டத்தை விட குழந்தைக்கருத்தரிப்பு மையத்துக்கு வரும் கூட் டம் தான் அதிகம் 

3  மதத்தையும், கடவுளையும் பிரச்சாரம் பண்ணி  வளர்க்க   வேண்டிய அவசியம் மனிதனுக்கு இல்லை 

4 மதம் மாறினாதான் ரட்சிப்பார்னா அவர் கடவுள் இல்லை , கட் சித்தலைவர் 

5 மனிதர்கள்  சில விபரீத   முடிவுகள் எடுக்க கால அவகாசம் ஒரு வினாடி போதும் 

6  தோல்வி  ஒரு மனிதனை   எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் கொண்டு போகும் 

7  அரசியல்வாதிகளும், சாமியார்களும் தான்   மீண்டும் மீண்டும்   நமக்கு  அவங்க தேவையை  உணர்த்துகிறார்கள் , நம்மை  பயன்படுத்திக்கொள்கிறார்கள் 

8    மெஸ் மரிசம் என்பது  ஒரு சூடோ சயின்ஸ் 

9   வெற்றி மீது   அதீத நம்பிக்கை வைப்பது , தோல்வியை  ஏத்துக்க முடியாத நிலை   இரண்டுமே தப்பு தான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன் - நாயகிக்குக்   குழந்தை  இல்லை என்பது , பிறந்த குழந்தை இறந்து விட்டது  என்பது  மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதது .பெண்களின் கவனத்தைக்கவர வலியத்திணிக்கப்பட் ட  காட்சி 

2   நாயகன்   தனது  கொலீக்கின்  வீட்டு சீமந்த  நிகழ்ச்சிக்கு செல்வது  அங்கே ஒரு பாட்டு என்பது ஸ்பீடு பிரேக்கர் . டி வி சீரியலா  ஓடுது ?இது ஒரு க்ரைம் த்ரில்லர் மூவி .எதுக்கு சென்ட்டிமென்ட் சீன்  ? 

3  படம் முழுக்க   நாயகனுடன்  உலா வரும்  அந்த கான்ஸ்டபிள்   கேரக்ட்டர்  செய்தவர்  ஈரோடு மகேஷ் சாயலில் இருந்தாலும்  நடிப்பு சுத்தமாக வரவில்லை 

4  ஒரு கேசில்  நாயகனுக்கு  கையில் அடிபடுவது  முதல் பாதி முழுக்க  அவர் கையில் கட்டுடன் வருவது  தேவை இல்லாத காட் சிகள் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட் ட  கதை அம்சம் கொண்ட  நல்ல படம் , நடிகர்கள்  தேர்வு , திரைக் கதையில்   கவனம் கொண்டிருந்தா இன்னமும் நல்ல வெற்றி கிடைத்திருக்கும் . விகடன்  மார்க் 41 , ரேட்டிங்  2.75 / 5 


Asthram
Theatrical release poster
Directed byAravind Rajagopal
Written by
  • Jegan M. S
Produced byDSM Dhana Shanmugamani
Starring
CinematographyKalyan Venkatraman
Edited byBhoopathy Vedhagiri
Music byK.S. Sundaramurthy
Production
company
Best Movies
Distributed byFive Star Company
Release date
  • 21 March 2025
CountryIndia
LanguageTamil

Tuesday, March 25, 2025

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )


கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம்  ( ரொமாண்டிக் டிராமா  )


இயக்குனர்  கே  ரங்கராஜ்  நெஞ்சமெல்லாம் நீயே (1983) , பொண்ணு  பிடிச்சிருக்கு (1984) , நிலவு சுடுவதில்லை ( (1984) ஆகிய  சுமார்  ரகப்  படங்களாக தொடக்கத்தில் தந்தாலும்  உன்னை நான்  சந்தித்தேன் ( (1984), உதயகீதம் ( (1985 ) ,நினைவே  ஒரு சங்கீதம் ( (1987) ஆகிய   வெள்ளி விழாப் படங்களைத்தந்தவர் .இவரது  17 வது படமாக எல்லைச்சாமி (1992) அமைந்தது . நீண்ட  இடைவெளிக்குப்பின் 33  வருடங்களுக்குப்பின்  ஒரு படம் தந்திருக்கிறார் . ஆனால்   இவர் இன்னும் அப்டேட்  ஆகவில்லை .1980களில்  வந்த   கதை அம்சம்  கொண்ட காட்சி களுடன் தான்  திரைக்கதை  அமைத்திருக்கிறார் . மோசம்  என சொல்லி விட முடியாது .பிரமாதம் என கொண்டாடிடவும் முடியாது


இரண்டு  மோசடிப்பேர்வழிகளின்  காதல்  கதை என்பதால் இதற்கு  2 -420 'S-143   என   டைட்டில்  வைத்திருக்கலாம் .14/3/25   அன்று   திரை  அரங்குகளில் வெளியான  இந்தப்படம்  இன்னும் ஓ டி டி யில் வர வில்லை . 20 நாட்கள் ஆகும் 

  ஸ்பாய்லர்  அலெர்ட்

ஒரு  பெரிய கோடீஸ்வரரின் கம்பெணி யில் நாயகன் மேனேஜர் ஆகப்பணி புரிகிறான் . குதிரை  ஏற்றம் , குதிரை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவன் .. ஓனர்  வெளியூர் சென்று இருப்பதால்  ஆல்  இன்  ஆல்  நாயகனே  பார்த்துக்கொண்டிருப்பதால்  பார்ப்பவர்கள் அவன் தான்  ஓனரோ என குழப்பம் அடைய வாய்ப்பு உண்டு .


ஒரு பெரிய பணக்காரர்  வீட்டில்  வயதான  அம்மாவைப்பராமரிக்கும் நர்ஸ்  கம் பணிப்பெண் ஆக நாயகி பணி புரிகிறார் . பங்களாவில்  இருக்கிறார் . மார்க்கெட்  போக வர காரில் போகிறார் .  பார்ப்பவர்கள்  இவர்  ஒரு செல்வச் சீமாட்டி  என நினைக்க வாய்ப்பு உண்டு 


நாயகன்  , நாயகி இருவரும் பரஸ்பரம்  ஒருவரை  ஒருவர்  பெரிய  பணக்காரர் என தவறாக நினைக்கிறார்கள் . இருவருமே  ஒரு பந்தாவுக்காக அதை மெயிணட்டெயின் செய்கிறார்கள் .இவரைக்கல்யாணம் பண்ணிக்கொண்டால்  லைபில் செட்டில் ஆகி விடலாம் என இருவருமே தவறாகக்கணக்கு போடுகிறார்கள் . இவர்களது  சந்திப்பு , காதல் , பெண்பார்க்கும் படலம்  என முதல் பாதி கலகலப்பாகச்செல்கிறது .


 ஒரு கட்டத்தில்  இருவரது  சுயரூபமும்  இருவருக்கும் தெரிய வர பிரேக்கப் செய்கிறார்கள்


 தனது சொந்தக்கம்ப்பெனி யில் சினிமாவில்  ஹீரோவாக நடிக்க  ஒரு கோடீஸ்வரி  . ஆள்  தேடுகிறாள் . நாயகன் விண்ணப்பிக்கிறான் .அந்தக் கோடீஸ்வரிக்கு  நாயகனைப்பிடித்து விடுகிறது .நீ  என் வாழ்க்கையிலேயே ஹீரோவாக இரு என்கிறாள் 


ஒரு கோடீஸ்வரன் கம்ப்பெனியில்  நாயகிக்கு  வேலை கிடைக்கிறது .அவனுக்கும் நாயகியைப்பிடித்து விட  திருமணம் செய்ய ஆசைப்படுகிறான் . நாயகி  சம்மதம் சொல் கிறாள் 


 நாயகன் , நாயகி   இருவருக்கும் அவரவர் ஆசைப்படி  கோடீஸ்வர   வரன் அமைந்ததா?  அல்லது  காதல் தான் பெரிது என  எண்ணி  அவர்கள்   இருவரும்   திருமணம்  செய்து  கொள்கிறார்களா?என்பது க்ளைமாக்ஸ் 

நாயகன் ஆக ஸ்ரீகாந்த் அழகாக வந்து போகிறார் . ஏப்ரல் மாதத்தில் , ரோஜாக்கூட்டம்  கால கட்டத்தில் எப்படி இருந்தாரோ அதே அளவு இளமையடன் இருக்கிறார்  ரொமான்ஸ்  கை கொடுத்த  அளவு   காமெடி  இவருக்குக் கை கொடுக்கவில்லை .


 நாயகி ஆக பூஜிதா பன்னாட நடித்திருக்கிறார் .நாயகன் அளவுக்கு  அழகிலும் பர்சனாலிட்டியிலும் இவர்  இல்லை என்றாலும்  பரவாயில்லை ரகம்  


கே ஆர்   விஜயா  , டெல்லி கணே ஷ்   இருவரும்  கெஸ்ட்    ரோலில்  வந்தாலும் நடிப்பு இதம் . இயக்குனர் கம் காமெடியன்  சிங்கம்புலி  அவ்வப்போது  சிரிப்பூட்டுகிறார் 


கோடீஸ்வரன்  , கோடீஸ்வரி ஆக  வரும் பரதன் ,நிமி இமானுவேல்  இருவருமே  பரிதாபமாக  இருக்கிறார்கள் . ஒரு பணக்கார கெத்து இல்லை 



ஆர்  கே   சுந்தர்   இசையில் பாடல்கள்  சுமார் ரகம் , பின்னணி இசை   தேவலாம் ரகம் .கே கே   வின் எடிட்டிங்கில்  படம்  2 மணி நேரம் ஓடுகிறது .ஒளிப்பதிவு  தாமோதரன் . நாயகனை மட்டும் அழாகாகக்கா ட்டி  இருக்கிறார் 


திரைக்கதை   எழுதி   இயக்கி இருக்கிறார்  கே  ரங்கராஜ் 


சபாஷ்  டைரக்டர்

1  முதல் பாதி  திரைக்கதை   ஒகே ரகம் .ஸ்ரீகாந்த்தின்  நடிப்பு குட் , சிங்கம்புலியின் காமெடி  டிராக் பரவாயில்லை ரகம் 



2  கோடீஸ்வரன்  , கோடீஸ்வரி  பற்றிய   க்ளைமாக்ஸ்   டிவிஸ்ட்  பி  சுமார் ரகம் 



  ரசித்த  வசனங்கள் 

1   நீங்க  இந்து இல்லை ?


இந்துவும்  இல்லை   தந்தியும்  இல்லை, வைஷாலி 



2  ஒரு குதிரை மேல  யானை  சவாரி போகுது 


3    ஏங்க , உங்களுக்கு    மூளை  இருக்கா? 


 இருந்தா  உன்னை ஏன்  மேரேஜ்   பண்ணிக்கப்போறேன் ? 


4  வேலை என் அப்பா   உடம்புக்கு செட் ஆகலை , படிப்பு எனக்கு செட் ஆகலை 


5  நீங்க  எதனால அவரை சார்னு கூப்பிடறீங்கன்னு யோசிக்கிறார் 


 டக்னு கேட் டா  எப்படி ? யோசிக்கநும் ,  ஐ மீன்   யோசிச்சு  பதில் சொல்லனும் 


6    அவரு  கேனத்தனமாப் பேசுவதைப்பார்த்தா அவரும் என்னை லவ் பண்றார்னு தோணுது 


7  எனக்கு வெட்கமா   இருக்கு 


 அதெல்லாம் கூட இருக்கா ? 


8    நுங்கை  நோண்டித்தின்னவன் நீ , நொந்து  நூடுல்ஸ் ஆனவன் நான் 


9  வாடா மல்லி க்கலர் இருக்கா ? 


 வாடுன மல்லிக்கலர்   ஒக்கே வா? 


10    ஏன்   இப்படிப்பதர்றீங்க ? 


 சரி வேற   மாதிரி  பதர்றேன் 


 11  ஒரு ஐடியா  , நாம எல்லோரும் ட்வின்ஸ்  என  சொல்லிடலாமா? 


12   யாரோ   கதவைத்தட்ட்றாங்க 


கதவு தானாகவா  தட்டிக்கும் ?  யாராவதுதான் தட்டுவாங்க 


13   இந்த   நேரத்துல    எங்கே  போனீங்க ?


 வந்த நேரத்துல பாத்ரூம் போனேன் 


14   பனாமா   போகணும் 


 பிணமா  போகணும் னு நினைச்சுட் டேன் 


15   போனைப்போட  சொல்லு 



 கீழேயா போடணும் ? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1   எ ம் ஜி ஆர் , சிவாஜி காலத்தில் செல்போன்   கிடையாது .அதனால் அந்தக்காலபபடங்களில் ஏர்போர்ட்டில் ஒருவரை வரவேற்க  அல்லது ரிஸீவ் செய்ய  கையில் அவர்கள்  பெயர் எழுதிய போர்டைபிடித்து  நிற்பார்கள் . இந்தக்காலத்தில்  வாட்ஸாப்பில்    போட்டொ  அனுப்பினாப்போதுமே? 


2  ஆள் மாறாடடம்  அந்தக்காலத்த்தில்   நடந்தது ஓகே  , ஆனா  இப்போ ஐடி கார்டு  கேட்கலாமே? 


3  கோடீஸ்வரனிடம்  பிஸ்னஸ்  டீல்  செய்த பெண்மணி   அவரை போட்டோ வில் கூடப்பார்த்திருக்க மாடடாரா? 


4  ஒரு கோடீஸ்வர  தொழில்   அதிபரின்  போட்டோ மீடியாக்களில் வந்திருக்காதா? 


5  ஹீரோ  ,  ஹீரோயின்   கெமிஸ்ட்ரியே  ஒர்க் அவுட் ஆகவில்லை . அவங்க சேர்ந்தா  என்ன ? சேராட்டி என்ன? என்ற எண்ணம் தான் ஆடியன்ஸுக்கு வருது 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சுமாரான  காதல் கதை , போர் அடிக்காமல் போகுது . டி வி ல போட் டாப்பார்க்கலாம் . விகடன் மார்க் மே பி 40 . ரேட்டிங்க்  2.25 / 5 


Konjam Kadhal Konjam Modhal
Theatrical release poster
Directed byK. Rangaraj
Written byK. Rangaraj
Produced byMy India Manickam
Starring
CinematographyDhamodharan
Edited byKay Kay
Music byR. K. Sundar
Production
company
Sri Ganapathi Films
Release date
  • 14 March 2025
CountryIndia
LanguageTamil

Monday, March 24, 2025

பொன் MAN - PON MAN (2025) -( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( டார்க் காமெடி த்ரில்லர் ) @ ஜியோ ஹாட் ஸ்டார்


30/1/2025   அன்று  திரை அரங்குகளில்  வெளியான  இப்படம்  இப்போது 14/3/2025 முதல்  ஜியோ  ஹாட் ஸ்டார்  ஓடிடி  யில் காணக்கிடைக்கிறது . வெறும்  3 கோடி    ரூபாய  பட்ஜெட்டில்  உருவான  இப்படம் 18 கோடி ரூபாய்   வசூல்     செய்து  அசத்தி இருக்கிறது  பத்திரிக்கைகளின்  பாராட்டு மழையில்  நனைந்த  இந்தப்படம்  எல்லாத்தரப்பினருக்கும் பிடித்த படமாக இருக்காது .


கும்பாலங்கி நைட்ஸ் , ஆன்ட் ராயிடு குஞ்சப்பன்  வெர்சன் 5.25, நான்  தான் கேஸ் கொடு  ஆகிய வெற்றிப்படங்களில்  தயாரிப்பு வடிவமைப்பாளராகப்பணி ஆற்றிய  ஜோதிஷ் சங்கர்  இயக்கம்.,  இயக்குனர் ஆக அவரது  முதல் படம் இது. 


கொல்லம்  மாவடடத்தில் குறிப்பாக மூணாந்துருத்தி என்ற இடத்தில்  . பெரும்பான்மையான படப்பிடிப்பு நட ந்தது , ..ஜி ஆர் இந்து கோபன்  எழுதிய  நாலஞ்சு   செருப்புக்கார்  என்ற   நாவலின் திரை  வடிவம் இது ..பஸீல்  ஜோசப்  + லிஜோமோல்  ஜோஸ்   காம்போவில்  உருவான  படம்  செம  ஹிட் ஆகி இருப்பதால் இதே  ஜோடி ராசியான ஜோடியாக வலம் வரும் என இண்டஸ்ட்ரி டாக் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகிக்கு  திருமணம்  நிச்சயம் ஆகி விட்ட்து .விரைவில்  திருமணம்  சீராக 25 பவுன் நகை போடவேண்டும் , ஆனால் கையில் காசில்லை . நாயகியின் அண்ணன்  ஒரு வெட்டித்தண்டம் . கட் சி , சரக்கு , குடி  என  இருப்பவன் .அம்மா மட்டும்  தான் அப்பா இல்லை .சொந்தக்காரர்கள்  அதிகம் பேர்  திருமணத்துக்கு வருவார்கள்  நல்ல மொய் கலெக்சன் கிடைக்கும்  என்ற  நம்பிக்கையில்  கடனுக்கு   நகை வாங்க முடிவு செய்கிறார்கள் 



நாயகன்  ஒரு நகைக்கடையில்  ஏஜென்ட் ஆக  இருக்கிறான் . இது மாதிரி  விசேஷ  காலத்தில்  கடனாக நகையைத்தந்து  மொய்ப்பணம்   வசூல் ஆனதும்  பணத்தை  வசூலிக்கும் வேலை . மொய்ப்பணம்  வரவில்லை எனில்  கொடுத்த   நகையை  திருப்பி  வாங்கி  ஜுவல்லரி ஷாப்பில் ஒப்படைக்க வேண்டும் . 50%  பணம்  வசூல் ஆனால்  மீதி  50% க்கு அதற்கான நகையை  ரிட்டர்ன்  எடுக்க   வேண்டும் . இதுதான் நாயகனின் பணி 


நாயகிக்குத்திருமணம்  நடக்கிறது . நாயகன்  25 பவுன் நகை  தந்து விடுகிறான் . நாயகியின் கணவன் தான் வில்லன் .இவன் ஒரு முரடன் . குடிகாரன் .மீன்  பண்ணையில்  வேலை செய்பவன் . இவனுக்கு திருமணம் ஆன ஒரு தங்கையு ம் , திருணம் ஆகாத இன்னொரு தங்கையும் உண்டு . திருமணம்  ஆன   தங்கைக்கு பெண்டிங்க்  நகை போட வேண்டி இருக்கு. திருணம் ஆகாத இன்னொரு தங்கைக்கு  சீராக   நகை போட வேண்டி இருக்கு .இரண்டுமே  வில்லனுக்கு சீராக  நாயகி கொண்டு வந்த  25 பவுன்   நகையை   வைத்துத்தான்  மேக்கப் செய்யவேண்டும் 


 எதிர்பார்த்தபடி  மொய்  வசூல் ஆகவில்லை . 13 லட்ஷ  ரூபாய்  தர வேண்டும் . 6 லட்சம்  தான் வசூல் ஆகி இருக்கு .மீதி 7 லட்ஷம்  பாக்கி   தர வேண்டும் . இந்த   பாக்கியை நாயகன்  வசூல் செய்தானா?   இல்லையா?   என்பது  மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக பஸீல் ஜோசப்  அருமையாக நடித்திருக்கிறார் . ஆனால்  அவரது கேரக்ட்டர்  டிசைனில்   சில குழ ப்பங்கள் . நாயகி ஆக முதல் பாதியில்  அடக்கமான பெண்ணாகவும் , பின் பாதியில்  தைர்ய லட் சுமியாகவும்  , மாறுபட் ட  நடிப்பை   வழங்கி  இருக்கிறார் லிஜோமோல்  ஜோஸ்  


வில்லனாக சஜின் கோபு  அசல் முரடனாகவே வாழ்ந்திருக்கிறார் . ஆஜானுபாவகமான தோற்றம் , நாயகியின் அண்ணனாக  ஆனந்த  மன்மதன்  அசத்தி இருக்கிறார் 


ஜெஸ்ட்டின்  வர்கீசின்   இசையில்  பாடல்கள்   பரவாயில்லை ரகம் . பின்னணி இசை சிறப்பு நிதின் ராஜ் அருளின் எடிட்டிங்கில் படம்  127 நிமிடங்கள்   ஓடுகிறது .மெதுவாக திரைக்கதை நகர்கிறது . சானு ஜான்   வர்கீசின் ஒளிப்பதிவு பிரமாதம் . கொல்லத்தின் அழகைக்கண் முன் நிறுத்துகிறது 


 நாவல்  ஆசிரியர்  இந்துகோபன் , ஜெஸ்ட்டின் மேத்யூவு இருவரும் இணைந்து திரைக்கதை   எழுதி இருக்கிறார்கள் .நிஜமாக நிகழ்ந்த  சம்பவத்தை நேரில் பார்ப்பது போல உயிரோட் ட,மான  காட் சிகள்  [படத்தின்ப பலம் 

சபாஷ்  டைரக்டர்


 1   இந்த   நகைக்கடை ஏஜென்ட்  கடனுக்கு நகை தரும் கான்செப்ட்டே  புதுசு . கவரிங்க்   நகை தான் நாம் கேள்விப்பட்டது . தங்க நகையே   கடனாகத்தருவார்கள்  என்பது புதுசு .அந்தக்கதைக்களத்தில் களமாடியது அருமை 


2   படத்தில் அனைத்து முக்கியக்கேரக்டர் களும்  சித்தரிக்கப்படட விதம் அருமை  அவரவர்க்கு அவரவர் நியாயங்கள் 



3  அடுத்து   என்ன நடக்குமோ   என்ற   டென்சன் பில்டப் ஆகும் விதம் சிறப்பு 



4  நாயகன், நாயகி , வில்லன்   , நாயகியின் அண்ணன்  என  நான்கு கேரக்டர்களின்  நடிப்பும் அருமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  அலை பாயம்  கடலோரம்  அசையாது நடை போடு 


2  மணவாட்டியே மணவாட்டியே  மணவாளன் கை கோர்க்கும் 


  ரசித்த  வசனங்கள் 

1   வாழ்க்கைல பொறுமை ரொம்ப முக்கியம், எதுக்கெடுத்தாலும் முறைச்சுக்கிட்டு இருந்தா   முன்னேற  முடியாது 


2 நம்ம ஸ்டேட்டசைத்தீர்மானிப்பதே பணம் தான் 


3  வாழ்க்கைல த்ரில் இல்லைன்னா அந்த வாழ்க்கை வீண் 


4   வெத்தலை பாக்கு வாங்கவே வக்கில்லையாம், பீடிக்கு உலக்கை வேணுமாம் 


5  மடியில்   ஜுவல்லரி , நடமாடும்   ஜுவல்லரி  , இப்போ   தூங்கும்    ஜுவல்லரி   ஆக ஆகிட் டான் 


6   என் தங்கை இப்படி சொல்வா என   எதிர்பார்க்கலை .தோளில் அவளை சுமந்து பீச் எல்லாம் சுத்தி இருக்கேன் 


 உலகில் யாருமே   செய்யாத   காரியத்தை இவரு  செய்த   மாதிரி  பேசறாரு 


7  கிடைக்கற நேரத்துல சந்தோஷமா இருக்கணும் , கிடைக்காத   நேரத்தில் போராடனும் 


8   அலெக்ஸ்சாண்டர்  மாதிரி   போராடி ஜெயிப்பேன் 


9  இங்கே   பொண்ணுங்களுக்குப்பஞ்சம் இல்லை, நகைக்குத்தான் பஞ்சம் 


10  பாவிகளோட   பாரத்தை மட்டும்  நீ   சுமந்துக்கோ , என் பாரத்தை நான் சுமக்கிறேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன், , வில்லன்   , நாயகியின் அண்ணன்  என  பல  கேரக்டர்கள் , அவர்களது  நண்பர்கள் அனைவரும் குடிகாரர்கள் .காட்சிக்கு காட்சி  சரக்கு அடிக்கறாங்க . டி டோட்டலரக்ள் , பெண்கள்   முகம் சுளிக்கும்படி  தண்ணி  அடிக்கும்  சீன்கள் அதிகம் 


2  உன் கிட் டே  எப்படி  நகையை     வசூல் செய்யணும்னு எனக்குத்தெரியும் என்ற  டயலாக்கை நாயகன் வில்லனிடம் 6 தடவை சொல்றார் . ஆனா  கடைசி வரை  நீட்  விலக்கு ரகசியம்  மாதிரி   அவர் எதுவுமே செய்யலை 


3   நாயகன் கை வசம் 6 லட்சம்  பணம்   இருக்கு .அதை பேங்க்கில்  கட் டனும் , அல்லது  நகைக்கடையிடம்  ஒப்படைக்கணும், இரண்டும் செய்யாமல்  தண்ணி போட்டுட்டு மப்பில் பீச்சில்  விழுந்து கிட க்கார் 


4   வில்லனுக்கு  வீட்டில்  நகை வைத்திருப்பது ஆபத்து  என்பது   தெரிந்து  விட்டது ,ஒண்ணா   நகையை   தங்கை வீட்டில் வைக்கணும் , அல்லது  பேங்க்   லாக்கரில் வைக்கணும் , அதை செய்யாமல்  இடுப்பில்  வேட்டியில்  13 பவுன் நகையை   பொட்டலம்   கட்டிக்கொண்டு   அலைவது எனோ ? 


5  வில்லன்   நாயகனைக்கத்தியால் வயிற்றில்  குத்தியதும்   நாயகன்  அலறணும் , அலல்து  ஹாஸ்பிடல் போகணும் .எதுவும்   செய்யாமல்  வில்லனைப்பார்த்து   சவால் விட்டுட்டு இருக்கார் 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கேரளாவில்  சூப்பர்  ஹிட்   என்பதால் பார்த்தேன் . ஆனால்  எனக்குப்படம்  பெரிய அளவில் பிடிக்கவில்லை .நம்ப முடியாத காட் சிகள்   அதிகம் . மாறுபட் ட  கதைக்களம், நடிப்பு   மட்டுமே  பிளஸ் . ரேட்டிங்க்  3 / 5 



Ponman
Theatrical release poster
Directed byJothish Shankar
Written byG. R. Indugopan
Justin Mathew
Based onNalanchu cheruppakkar
by G. R. Indugopan
Produced byVinayaka Ajith
Starring
CinematographySanu John Varghese
Edited byNidhin Raj Arol
Music byJustin Varghese
Production
company
Ajith Vinayaka Films
Distributed byAjith Vinayaka Release
Release date
  • 30 January 2025
Running time
127 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget3 crore[2]
Box office18.30 crore[2]

Tuesday, March 18, 2025

பெருசு (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( அடல்ட் காமெடி டிராமா ) 18 +

                         


2023ம்  ஆண்டு வெளியான டெண்ட்டிகோ  என்ற  சிங்களப்படத்தின்  தமிழ்  ரீமேக்  தான் இது . அதே  இயக்குனர் தான் இதையும்  இயக்கி  இருக்கிறார் . ஒரிஜினல்  வெர்சன்  செம  காமெடி  என  சிலர்  சொன்னார்கள் , நான் இன்னும்  அதைப்பார்க்கவில்லை 



ஸ்பாய்லர்  அலெர்ட்

  நாயகன்  60 +வயசு ஆன  பெருசு . ஊர் மக்கள் அனைவரும் அவரை பெருசு என்றே  அழைக்கிறார்கள் . அவருக்கு  சட்டப்படி ஒரு சம்சாரம், செட்டப் படி இன்னொரு சமாச்சாரம் . அவர்  தன் முதல் மனைவி , 2 மகன்கள் , 2 மருமகள்கள்  ஆகியோருடன் கூட்டுக்குடித்தனமாக வாழ்ந்து வருகிறார் . இப்படி இருக்கும்போது  ஒரு நாள்  வீட்டில் டி வி பார்த்துக்கொண்டிருக்கும்போது திடீர் என மாரடைப்பால் நாயகன் இறந்து விடுகிறார் .


அப்பா  இறந்தது ஒரு புறம் துக்கம்  என்றாலும்  அவர் எந்த நிலையில் பிணமாக கிடக்கிறார் என்பதில் இரு மகன்களுக்கும் ஒரு தர்மசங்கடம் . . அந்த  விஷயத்தை  ஊராருக்குத்தெரியாமல் மறைக்க வேண்டும் . அதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் தான் மொத்தத்திரைக்கதையும் 


  நாயகனின் முதல் மகனாக சுனில்   காமெடி  கலந்த   நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் . நுணுக்கமான சில முக உணர்வுகளை கச்சிதமாக  காட்டுகிறார் . அப்பாவிடம் கடைசி காலத்தில் சரியாகப்பேசவில்லை என்ற குற்ற உணர்வைக்காட்டுவதும்  அருமை 


 நாயகனின் இரண்டாவது  மகனாக, குடிகாரனாக வைபவ்   முதல்  பாதியில் சுமார்  ரக நடிப்பையும், இரண்டாம்  பாதியில்  கச்சிதமான நடிப்பையும் வழங்கி உள்ளார் 

  நாயகனின் முதல்   மருமகளாக   சாந்தினி   கச்சிதம் ,   நாயகனின்  இரண்டாவது மருமகளாக நிஹாரிகா  அனாயசமாக  நடித்துள்ளார் . 

  நாயகனின் முதல்   மனைவியாக   தனலட்சுமி  அற்புதமாக நடித்துள்ளார் .  , அதுவும்  க்ளைமாக்ஸ்  காட்சியில்  சக்களத்தி  வந்தவுடன்  அவர் காட்டும்  ஆவேசம்  ஆசம் 


 பால  சரவணன் , முனீஷ் காந்த் , ரெடின்  கிங்க்ஸ்லீ   ஆகிய  மூவரும் தங்களால் முடிந்தவரை  படத்தை தூக்கி  நிறுத்த  உதவி   இருக்கிறார்கள் . சக்களத்தி ஆக வரும் சுபத்ரா  ஆஹா  நடிப்பு . பக்கத்து  வீட்டு  ஆண்ட்டியாக   உளவு  பார்க்கும் ரமாவின்  நடிப்பு  அருமை 


 இவர்கள்  போக வி டி வி கணேஷ் . லொள்ளு  சபா  சுவாமி நாதன்  ஆகியோர் பங்களிப்பும்  ஓக்கே  ரகம் 


ஒளிப்பதிவு  சத்ய திலகம் ஓக்கே  ரகம் . இசை  அருள்  ராஜ் . பாடல்கள்   சுமார்  ரகம் ., பின்னணி  இசை   சராசரி   தரம் எடிட்டிங்க்  சூர்ய  குமர குரு . 135  நிமிடங்கள்  டைம்  டியூரேஷன் . முதல்  பாதியில்  காமெடியாகப்போனாலும் பின் பாதியில்   திரைக்கதை  போதாமையால் தடுமாறுகிறது . பாலாஜி ஜெயராமனின்  வசனங்கள்  வார்த்தை  விளையாட்டு   ஜாலங்கள் 


 திரைக்கதை  அமைத்து  இயக்கி இருப்பவர்  இளங்கோ  ராம் 


சபாஷ்  டைரக்டர்


1  ஒரு   அடல்ட்  காமெடி   டிராமா   கதையில்  முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ ,  நெளிய வைக்கும் வசனங்களோ  இல்லாமல்  முடிந்தவரை  நாகரீகமா திரைக்கதை ,   காட்சிகளை  வடிவமைத்த  விதம் 


2  கிரேசி  மோகன்  டைப்  வார்த்தை  ஜாலங்கள் . வார்த்தை  விளையாட்டுக்காமெடிகள்  ஒர்க் அவுட் ஆன விதம் 


3   நடித்தவர்கள்  அனைவருமே  முடிந்தவரை  காமெடியை புல் ஆஃப் பண்ணிக்கொண்டு போன விதம் 


4   நாயகனின்  முதல்  மகன்  நடிப்பு    அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1   செவிட்டு  மிஷின் எங்கே? 


 வீட்டுலயே வெச்சுட்டு வந்துட்டேன்


 காதையும்  வீட்டுலயே வெச்சுட்டு வந்து இருக்கலாமில்ல ? 


2   என் புருசன்  செத்துட்டாரு  நீ  என்னடான்னா? வெட்டிக்கவா? கட்டிக்கவா? என பெசிட்டு இருக்கே ?


3   ஊர்ல தலை நிமிர்ந்து   வாழ்ந்த  மனுசன் அவரு \\\


 தலை மட்டும் நிமிர்ந்து இருந்தா பிரச்சனை இல்லை 


4    செத்தா   உன்  அப்பான் மாதிரி  சாகனும் . மாஸ்  சாவு 


5   சித்தி  , அப்பா இறந்ததும்  அம்மாவுக்கு  வர வேண்டிய கவலை எல்லாம் உனக்கு ஏன் வருது ?  


 அது  வந்து.. நானும்  அம்மா மாதிரி  முறை  தானே? அதான் 


6  ஸ்கூலில் எட்டாவது  படிக்கும்போது சயின்ஸ்  டீச்சருக்கே லவ்  லெட்டர்  கொடுத்தவன் இப்போ ஸ்கூல் ஹெச்  எம் , இது எவ்ளோ பெரிய கேவலம் ? 


7    MALE ( மேல் ) டாக்டர்  யாரும் இல்லையா? 


 இவருக்கும்  மேலயா? 


8   டாக்டர் .. மேலே  போய்ட்டார்


 நான்  தான்  கீழே இருக்கேனே? 


9   அது  வந்து   டாக்டர், அப்பாவோட பாயிண்ட்.. 


 உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட்டே  கொடுத்திருக்கக்கூடாது 


10  இழவு  வீட்டில் கூட வலது காலை எடுத்து வெச்சு உள்ளே வா  என  சொல்லும்  உன்  மனசு இருக்கே? 


11    மை  கிரஷ்... 


 கிரேஷ்? 


12   நீ தான்  குடிக்கவே  இல்லையே? எதனால உளறிட்டு இருக்கே? 


 இப்போ குடிக்கறேன் . அதுக்கு அட்வான்சா உளறுனேன் . ஓக்கே வா? 


13   உன்  அப்பாவை  அவ  ஏன் டார்லிங்க்னு கூப்பிடறா? 


  அப்போ அவளை  நான் ஆண்ட்டினு  கூப்பிட  முடியாதா? 


14   ஓ! வனிதாமணி ?


 எஸ்  நான் வனிதாமணி  தான் , ஆனா  என் இனிஷியல்  ஓ இல்லை 


15    படிச்சாதான்  டாக்டர்  ஆக முடியுமா? எம் ஜி ஆர் எல்லாம்  வாத்தியார்  ஆகலையா? 


16   இவ  என்  பால்ய  காதலி \\

 ஓ பாலியல்  காதலியா? 


17    அப்பா  ,  மேலே  போய்ட்டாரு\


எதுக்கு  போனாரு ? நான் இங்கே  கீழே தானே  இருக்கேன் 


18  அப்பா  ,  மேல  போய்ட்டாரு\


 ஏப்ரல்க்கு  அப்புறம்  வருமே  அந்த மே ல யா? 




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனுக்குப்   என்ன  ஆனது ?  என்பதை  ஒருவரிடம் ஒருவர் விஅக்கும்போது  அவர் காட்டும் ரீ ஆக்சன் நல்ல காமெடி   ஆனால்  அதுவே  தொடர்ந்து   7  வெவ்வேறு  கேரக்டர்கள்  கேட்பது  , அதே  ரீ ஆக்சன்  போர் 


2   பிணத்தை  வைத்து  தடுமாறும்  முதல்  பாதி  திரைக்கதை  காமெடி  ஓக்கே  , ஆனால்  பின் பாதியில்  கதையை  நகர்த்த  தடுமாறி  இருக்கிறார்கள் 


3  இந்தக்கதை  ஒரு 45  நிமிடங்களில்  ஷார்ப்பாக  முடிக்க  வேண்டிய  கதைதான்  . ஆனால்    இரண்டு  மணி  நேரத்துக்கு  மேல் இழுக்கும் அளவுக்கு  சரக்கு இல்லை 


4  காமேடிக்காக  நாயகனுக்கு நிகழ்ந்த  சம்பவம் சொல்லப்பட்டாலும்  அறிவியல் ரீதியாக் அப்படி நடக்க வாய்ப்பில்லை 


5     நாயகனுக்கு  ஒரு  சின்ன  வீடு இருந்தது  , ரெகுலராக  விசிட்   அடிப்பது  ஒரு  கிராமத்தில்  யாருக்கும்  தெரியாமல்  நடப்பது  சாத்தியமா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+   கிளாமர்  காட்சிகள்  இல்லை ,  விரசமான  வசனங்கள் இல்லை , ஆனால்  கதைக்கருவுக்காக  ஏ  சர்ட்டிஃபிகெட் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - -   அனைவரும்  ரசிக்கும்  வகையில்  முதல்  பாதி  அடல்ட்  காமெடி ,  சுமாரான  பின்  பாதி .  விகடன்  மார்க் 41  . ரேட்டிங்  2.5 / 5 

Sunday, March 16, 2025

COURT STATE VS A NOBODY (2025) - தெலுங்கு- சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா) @நெட்பிளிக்ஸ்



                        COURT  STATE VS A NOBODY (2025) - தெலுங்கு- சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா) @நெட்பிளிக்ஸ்


14/3/2025 அன்று திரை அரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன இந்தப்படம் விரைவில் நெட்பிளிக்சில் வர இருக்கிறது.விதி,.நேர்கொண்ட பார்வை டைப் படம் இது.போக்சோ சட்டத்தைத்தவறாக எப்படிப்பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கதைக்கரு.முதல் பாதி ஜனரஞ்சகமான  காதல் கதையாகவும் ,பின் பாதி லீகல் டிராமாவாகவும் எடுக்கப்பட்ட இப்படம் நல்ல திரைக்கதையால் கவனம் பெறுகிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி 17 வயது ஆன மைனர் பெண்.வசதியான வீட்டுப்பெண்.நாயகன் 19 வயதான பையன்.சலவைத்தொழிலாளியின் மகன்.இருவரும் காதலிக்கிறார்கள்.நாயகியின் அப்பா தான் வில்லன்.தன் மகளை கடத்தி மிரட்டியதாக போக்சோ சட்டத்தில் புகார் பதிவு செய்கிறார்.ஒரு கட்டத்தில் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய்ப்புகார் தருகிறார்.


கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது.வில்லன். நாயகன். தரப்பு வக்கீலை விலைக்கு வாங்கி விடுகிறான்.இதனால். நாயகன் பக்கம் கேஸ் நிற்கவில்லை.இன்னும் 3 நாட்களில். தீர்ப்பு என ஜட்ஜ் சொல்லி விடுகிறார்.இந்தக்கேசை. ஒரு புது வக்கீல் தன் முதல் கேசாக எடுத்து வாதாடுகிறான்.வில்லன் உருவாக்கி வைத்த பொய் சாட்சிகளை அந்த வக்கீல் எப்படி முறியடித்து நாயகனுக்கு நீதி வாங்கிக்கொடுத்தான் என்பது மீதி திரைக்கதை


வக்கீல் ஆக பிரியதர்சினி புலிகொண்டா பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஜூனியர் வக்கீல் ஆகவே எத்தனை நாட்கள் இருப்பது என்ற அவரின் ஏக்கமும்,முதல் கேசில் வாதிடும் லாவகமும் செம.


நாயகன் ஆக அப்பாவி முகத்துடன். ஹர்ஸ் ரோசன் வருகிறார்.நாயகி ஆக ஸ்ரீ தேவி குடும்பப்பாங்காந  முகத்துடன் கண்ணிய உடைகளுடன் வருகிறார்.


இப்போது வரும் நாயகிகளை அரை குறை உடையுடன் பார்த்துப்பார்த்து கண்ணியமான தோற்றத்தில் நாயகியைப்பார்க்கவே ஆறுதலாக இருக்கிறது.


வில்லனாக சிவாஜி என்ற தெலுங்கு நடிகர் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.வில்லநின்  மனைவி ஆக ரோகினி ரகுவரன் பாந்தமான நடிப்பு.


இவர்கள். போக சாய் குமார், ஹர்சவர்தன்,சுபலேகா சுதாகர் ஆகியோர் கச்சிதமாக நடித்துள்ளனர்


விஜய் புல்கனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.பின்னணி இசை ஓக்கே ரகம்.தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவு கனகச்சிதம்.கார்த்திகா சீனிவாசின் எடிட்டிங்கில் படம் 149 நிமிடங்கள் ஓடுகிறது.


முதல் பாதி கமர்சியலாகவும் ,பின் பாதி விறுவிறுப்பான கோர்ட் ரூம் டிராமாவாகவும் இருக்கிறது.


கார்த்துகேயன் சீனிவாஸ்,வம்சிதர் சிரிகிரி இருவருடன் இணைந்து திரைக்கதை  எழுதி. தனியாக படத்தை இயக்கி இருக்கிறார்  ராம் ஜெகதீசன்


சபாஷ்  டைரக்டர்


1 வில்லனின் கேரக்டர் டிசைன் ,நடிப்பு இரண்டும் கலக்கல்.வில்லனின் கேரக்டர் ஸ்கெட்ச் பலமாக அமைந்தாலே உறுதியான வெற்றி உண்டு


2. ஜூனியர் வக்கீலாக வந்து தனி கேஸ் நடத்தத்துடியாய் துடிக்கும் காட்சிகள் ஜீவன் உள்ளவை


3. பொய் சாட்சி சொன்ன 3 பேரை தனித்தனியாகக்குறுக்கு விசாரணை செய்து மடக்கும் காட்சி அபாரம்


4  நாயகியைக்கோர்ட்டுக்கே வர விடாமல். தடுக்க வில்லன் போடும் திட்டங்களை வக்கீல் முறியடுப்பது செம



  ரசித்த  வசனங்கள் 


1. கோர்ட்டுக்கு உள்ளே வரும்போது செப்பலைக்கழட்டி விட்டு வரத்தேவை இல்லை.ஆனா அன்பு ,கருணை ,பரிதாபம் இரக்கம். இவற்றை எல்லாம் விட்டுட்டு வரனும்


2. வேலைக்குப்போவது ,ஆபீசுக்குப்போவது இரண்டும் வேற வேற


3. ஹேப்பி நியூ இயர்


காலண்டர் மாறலாம்.ஆனா கேரக்டர் மாறாது


4.  ஒரு மகளை வளர்த்தி பெரியவ ஆக்குவது சாதாரண விஷயம் இல்லை


5.  சாரி


எதுக்கு?


நான் நினைச்ச அளவு நீ முட்டாள் இல்லை


6. திட்டறதுக்குத்தானே கூப்பிடுவே?


ஏன்?திட்டலைனு ஏக்கமா இருக்கா?


7

அவன் அடிக்கடி போன்ல யார் கிட்டே பேசறான்?


எனக்குத்தெரியாது


ரெண்டு பேரும் ஒரே செட்டாதானே சுத்தறீங்க?


அவன் யார் கூட பேசறான்னு அவனுக்கே தெரியாது

8. இண்ட்டலிஜெண்ட்டான. ஆட்களால் விரைவாக முடிவெடுக்க முடியாது


9 உன் கிட்டே இருந்து பதிலை எதிர்பார்க்கலை.இது எப்படி சாத்தியம்?நு கேள்வி கேட்பே என நினைத்தேன்.வக்கீல்களுக்கு. கேள்வி  ரொம்ப முக்கியம்


10. நீங்க தான் என் வெற்றிக்குக்காரணம்


யாரும் யாருக்கும் வெற்றியைத்தர முடியாது


11 போக்சோ சட்டத்தில் திருத்தம் தேவை.40 வயசு ஆள் 6 வயசு சிறுமியை ரேப் செஞ்சா போக்சோ சரி.ஆனா 17 வயசுபெண்ணை 19 வயசுப்பையன் லவ் பண்ணினா அதுக்கும் போக்சோவா?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1.நாயகன் மீது அபாண்டமாக பழி சுமத்தும்போது கோர்ட்டில் அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? ஜட்ஜும் நீ என்னபா சொல்றே? என கேட்கவே இல்லை


2. பூட்டிய அறையில் 16 நிமிடங்கள் நாயகனும் ,நாயகியும் என்ன செய்தார்கள்? என்பது முக்கிய ட்விஸ்ட்.அதை ஓப்பன் செய்த விதம் செமக்காமெடி.ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை


3. ரேப் செய்யப்பட்டதாகப்பொய்ப்புகார் வந்தால்  மெடிக்கல் செக்கப்பில் சுலபமாகக்கேசை உடைக்கலாமே?


4. வீட்டில் கணவனைக்கண்டு அஞ்சி நடுஙகும் மனைவி கோர்ட்டில். அனைவர் முன்பும் பளார் அறை தருவது சினிமாத்தனம்


5 போலீஸ் ஸ்டேசன் வாசலில் பசியுடன் ஒரு முழுநாள் பட்டினியுடன் இருக்கும் நாயகனின் அம்மாவுக்கு மாலையில் குடிக்க பழச்சாறு தராமல்  பெப்சி,கொக்கோகோலா தர்றாஙக.கஷ்டம்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பிரமாதமான திரைக்கதை ,நிறைவான நடிப்பு.அனைவரும் பார்க்கலாம்.ரேட்டிங். 3/5

Friday, March 14, 2025

எமகாதகி (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர்)


லோ பட்ஜெட்டில்  பெண்களுக்குப்பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட  தரமான  படம் இது .7/3/2025 முதல்  திரை  அரங்குகளில்   காணக்கிடைக்கிறது . ஓடி டி  யில் வர இன்னும்  20 நாட்கள்  ஆகும் . ஒரு இழவு  வீட்டில்  நடக்கும் கதை என்பதால் பெண்களாலும் , பெண்களைப்போல பொறுமைசாலிகளும் மட்டும் தான் இதை ரசிக்க முடியும்.சூப்பர்  நேச்சுரல் ஹாரர்  த்ரில்லர்  என   இயக்குனர்   அறிவித்தாலும்  இது ஒரு மெலோ  டிராமா தான் . பயமுறுத்தும்   திகில்  காட் சிகள்  . எதுவும்  இல்லை . க்ரைம்  டிராமா   என சொல்லலாம் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்

ஒரு கிராமத்தில்  ஊர்த்தலைவரின் மகள் ஆக நாயகி இருக்கிறாள் . அவளுக்கு ஒரு தறுதலை அண்ணன் இருக்கிறான் கோயில்  சாமியின் கிரீடத்தை  திருடி  விட்டு  பின் மீண்டும்  அதை கோயிலிலே  வைக்க   இருக்கிறான் . நாயகிக்கு   ஒரு காதலன்   உண்டு . இன்னொரு  ஒரு தலை  (யாக நாயகியைக்காதலிக்கும் ) தறுதலை  இருக்கிறான் . நாயகியை அடிக்கடி தொந்தரவ செய்கிறான் . இப்படி   இருக்கும் சூழலில்  நாயகி  மர்மமான   முறையில்   தூக்கில்  தொங்கி  இறந்து   விடுகிறாள் . 


 போலீசுக்கு சொன்னால்  பிரச்சனை என  குடும்பம்  மறைத்து   விடுகிறது . ஆனால்  பிணத்தை  எடுக்க முடியவில்லை . ஓவர் வெயிட் ஆக   இருக்கிறது . நிறைவேறாத ஆசை   இருந்தால்  இந்த  மாதிரி  பிணத்தை  வெளியே  எடுக்க முடியாது என  ஒரு நம்பிக்கை   உண்டு 


 இதற்குப்பின் என்ன ஆனது ? நாயகியின்  மரணத்துக்கு   யார் காரணம் ? என்பதே  மீதி  திரைக்கதை


நாயகி ஆக   ரூபா  கொடுவையுர்    பிரமாதமாக  நடித்திருக்கிறார் .மகளிர்  மட்டும் நாகேஷ் , மதகஜ ராஜா  மனோபாலா  வரிசையில்  இவரும்  பிணமாக   நடித்து  ரசிகர்களிடம் அப்ளாஷ் பெறுகிறார் . நாயகியின் அம்மா  ஆக  கீதா  கைலாசம் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார்  . நாயகியின் காதலன் ஆக  நரேந்திர பிரசாத்  நடித்திருக்கிறார். நாயகி  பிரமாதமாக  ஸ்கோர்   செய்யும்போது  இவர் கொஞ்ச்ம   தடுமாறுகிறார் 


சுஜித்   சாரங்கின் அட் டகாசமான  ஒளிப்பதிவு  படத்துக்குப்பெரும்   பலம் .நாயகி   உயிரோடு வரும் காட் சிகள்  ஒரு   கலர்   டோன் , பிணமாக வரும் காட் சிகள்  ஒரு   கலர்   டோன்  என   பிரமாதமாகப்பிரித்து  ஒர்க்  செய்திருக்கிறார் , ஜீஸின்   ஜார்ஜின் இசையில்  ஒரு ஒப்பாரிப்பாடல் உருக்குகிறது . பின்னணி  இசை  இன் னமும்  நன்றாக செய்திருக்கலாம் ,ஸ்ரீ ஜித்   சாரங்கின்  எடிட்டிங்கில்  படம் 107 நிமிடங்கள்   ஓடுகிறது . முதல் பாதி நல்ல வேகம் , பின் பாதி கொஞ்ச்ம ஸ்லோ . வசனம் எஸ் ராஜேந்திரன் . சென்ட்டிமென்ட்   ஆக  எழுதி இருக்கிறார். திரைக்கதை  எழுதி   இயக்கி இருப்பவர்  பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் 

சபாஷ்  டைரக்டர்


1   நான்  லீனியர்  கட்டில்    நாயகியின்  காதல்  கதை ,  நாயகியின்   அண்ணனின்  திருட்டுக்கதை   , நாயகியின் குடுமப  சூழல்   என குழப் பம இல்லாமல்  மாறி  மாரி கதை சொன்ன விதம் அருமை 


2   படம்   முழுக்க   நாயகியின்  பிண  முகம்  ஒரே   மாதிரி   வைத்திருக்கும்  அசாதாரணமான  நடிப்பு   அருமை . நாயகி  நிஜத்தில்  ஒரு டாக்டராம் .யோகா , பிராணாயாமம்  கற்றவராம் . அதனால்  மூச்சை  அடக்கி  நடித்திருக்கிறார் . அவருக்கு ஒரு சபாஷ் 


3   நாயகியின்  பிணம்  திடீர் என  எழுவது , முகத்தில்  மஞ்சள்  கலர்   லைட்டிங்க்  செட் செய்து  திகில்   கிளப்புவது   என கேமராமேனின் பணி அருமை 

  ரசித்த  வசனங்கள் 


1  மனசு  பலமா  இருந்தா உடம்பு  எதை  வேணா ஏத்துக்கும் 


2 வெளில  போனப்ப  யார் மேலயோ இருக்கும் கோபத்தை வீட்டுக்கு வந்து வீட்ல இருக்கறவங்க கிடட காட் றதே இந்த ஆம்பளைங்களுக்கு வேலையாப்போச்சு 


3  எல்லாத்துக்கும் தீர்வு  சாமியார்னா இங்கே யார் முட் டாள் ?


4  மனசு  தடுமாறி இருக்கும் நேரத்துல வார்த்தையால  கஷ்டப்படுத்தக்கூடாது 


5 வயசு  ஏறுனா புத்தி மாறும்னு சொல்லுவாங்க , ஆனா  உனக்கு புத்தி கெட்டுப்போய்க்கிடக்கே ?


6   எனக்கு ஏதாவது ஆனா நீ எவ்ளோ பதர்றே ?  என்னை  நல்லாப்பார்த்துக்கறே 


7  தைரியமா இருப்பது வேற அறிவா  இருப்பது வேற 


8   என் அப்பா   என்னைப்பேசிக்கொல்றாரு  காதலன்  நீ  என் கிட்டப்பேசாம  கொல்றே 


9  வாழும்  இடமும் , சேரும்  இடமும்   ஒண்ணா  இருக்கணும்   (  நம்ம   ஜாதிலயே  கல்யாணம்  பண்ணனும் ) \


10    உ ன்னைப்பார்த்துக்கிட் ட  எனக்கு  உன் மனசைப்புரிஞ்சுக்க முடியாம  போச்சே ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   காதல்  வசனக்காட் சிகளில்  நாயகியின்  கண்கள்  காதல்  பொங்குகிறது . ஆனால்   காதலன் சோத்துக்கு செத்தவன் போல இருப்பது கடுப்பு 


2  நாயகியின் வீட்டில்   ஒரு அறை  திறக்கப்படாமல்  இருப்பது , அதைத்திறந்தால் ஆபத்து  என்பது  மெயின் கதையுடன் ஒட்டவில்லை 


3   நாயகிக்கு  தெரிந்த அந்த   ரகசியத்தை   நாயகி தன அம்மாவிடம் எதனால் சொல்லவில்லை ?   என்பதற்குப்பதில் இல்லை 


4  ஐந்து   வருடங்களுக்கு   முன்பு நடந்த   ஒரு விஷயத்தை  அப்போதே  ஓப்பன் பண்ணாம நாயகி எதனால் காத்திருந்தார் ? 


5  ஜாதிய அடக்குமுறை ,  குலத்தொழில்  போன்ற   விஷயங்களை   இன்னமும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மெதுவாக   நகரும்  க்ரைம்  டிராமா   பார்த்துப்பழக்கம் உள்ளவர்கள் , பெண்கள்   பார்க்கலாம் .  விகடன் மார்க்  42 , ரேட்டிங்க்  2.75 / 5 


Yamakaathaghi
Theatrical release poster
Directed byPeppin George Jayaseelan
Written byPeppin George Jayaseelan
S. Rajendran (Dialogues)
Produced by
  • Srinivasarao Jalakam
  • Ganapathi Reddy
Starring
CinematographySujith Sarang
Edited bySreejith Sarang
Music byJecin George
Production
companies
  • Naisat Media Works
  • Arunasree Entertainments
Release date
  • 7 March 2025
CountryIndia
LanguageTamil