மாநிற மா அழகி நந்திதாதாஸ் + ஷபானா ஆஸ்மி இணைந்து நடித்த மற்றும் தீபா மேத்தா இயக்கத்தில் வெளிவந்த பயர் (1996)என்னும் படத்தின் கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை . அது ஏ செண்டர் ரசிகர்களுக்கான எரோட்டிக் த்ரில்லர் . இது பி , சி செண்டர் ரசிகர்களுக்கான கில்மா க்ரைம் த்ரில்லர்
நாகர் கோயிலில் நடந்த உண்மை ம்பவத்தின் அடிப்படையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது . டாக்டர் டி காசியின் உண்மை சம்பவ வாழ்க்கை தான் படம் பெண்களுக்கான விழிப்புணர்வுப்படமாக எடுக்க வேண்டிய இந்தக்கதையைக்காசுக்கு ஆசைப்பட்டு பிட் பட ரேஞ்ச்சுக்கு இறங்கி எடுத்திருக்கிறார்கள்
அறிமுக இயக்குனர் ஜெ சதீஷ் குமார் என்னும் ஜேகேஎஸ் என்பவர் தான் நாயகன் ஆக போலீஸ் ஆபீசர் ஆக நடித்து இயக்கியும் இருக்கிறார்
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ..அவர் இரண்டு நாட் களாக காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் தருகின்றனர் .போலிஸ் விசாரணையில் ஆரம்பத்தில் அவரைப்பற்றி எல்லோரும் நல்ல விதமாகத்தான் கூறுகிறார்கள் .அவருக்கு எதிரிகள் யாரும் இருப்பதாகத்தெரியவில்லை.ஆளும் கட் சி அமைச்சர் போலீஸ் ஆபீசர் ஆன நாயகனுக்கு போன் பண்ணி இந்தக்கே ஸைப்பற்றிய எந்த அப்டேட் கிடைத்தாலும் தனக்கே முதலில் தகவல் தர வேண்டும் என்கிறார்
வில்லனின் கிளினிக்கில் ரிசப்ஷனிஸ்ட் ஆகப்பணி புரியும் ஏழைப்பெண் ஆன துர்காவை வில்லன் காதலிக்கிறான் .பிறகு துர்கா தற்கொலை செய்து கொள்கிறாள் .இட்லி மாவுக்கடை வைத்திருக்கும் ஒரு ஏழைப்பெண்ணை பல சிக்கல்களில் இருந்து காப்பாற்றி வில்லன் அவளைப்பாதுகாக்கிறான் . கணவனை இழந்த அனிதா என்ற பெண்ணை வில்லன் காதல் வசனம் பேசி மயக்குகிறான் . ஜிம்முக்கு வரும் ஒரு லேடி தன கணவன் பாரினில் இருப்பதால் தனிமையில் இருப்பதாக சொல்லி வில்லனிடம் மாட்டுகிறாள் .
முதல் கட்ட விசாரணையில் இந்த நான்கு பெண்களைப்பற்றித்தான் விபரங்கள் கிடைக்கிறது . இந்த நான்குபேரில் ஒருவர் அல்லது இந்த நான்கு பேரின் நெருங்கிய உறவினர் தான் கொலையாளி என நாயகன் யூகிக்கிறான்
இந்த சமயத்தில் இரண்டு திருப்பங்கள் நிகழ்கிறது . வில்லனைக்கொன்றது நான் தான் என ஒரு ஆள் போலீசில் சரண்டர் ஆகிறான் .காணாமல் போன தன மகன் போன் பண்ணி விட் டான் .மிஸிங்க் கேஸை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம் என வில்லன் -ன் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் வந்து சொல்கின்றனர் . இந்தக்குழப்பங்களுக்கு என்ன காரணம்? உண்மையில் நடந்தது என்ன? என்பதை நாயகன் எப்படிக்கண்டு பிடித்தார்? என்பது மீதித்திரைக்கதை
வில்லன் ஆக பாலாஜி முருக தாஸ் பிளே பாய் ரோலை சரியாகப்பண்ணி இருக்கிறார் .படத்தில் அவர் 8 பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போல காட் சிகள் .இதற்கு 80 லட்சம் ரூபாய் சம்பளம் வேற . வாழ்வு தான்
நாயகன் ஆக போலீஸ் ஆபீசர் ஆக நடித்து இருப்பவர் இயக்குனர் ஜெ சதீஷ் குமார்.போலீசுக்கான கம்பீரம் இல்லை .ஹேர் ஸ்டைல் மிடுக்கான உடல் மொழி எதுவும் இல்லை
பாதிக்கப்பட் ட பெண்களாக ரக்ஷிதா மகாலட்சுமி , சாந்தினி தமிழரசன் , சாக்ஷி அகர்வால் , காயத்ரி ஷான் நான்கு பேருக்கும் கிளாமர் ரோல் . அழகாக வந்து போகிறார்கள்
ஆளும் கட் சி அமைச்சர் ஆக ஸ் சிங்கம்புலி பரவாயில்லை ராக் நடிப்பு . சப் இ ன்ஸ்பெக்ட்டர் ஆக சுரேஷ் சக்ரவர்த்திக்கு அதிக வேலையில்லை
சதீஷ் ஜி யின் ஒளிப்பதிவு அருமை . அவருக்குக்கொடுக்கப்பட் ட வேலை படத்தில் வரும் எட்டு பெண்களை கிளாமராகக்காட்டுவது . டி கே யின் இசையில் பாடல் கள் சுமார் ரகம் .பின்னணி இசை அதை விட சுமார் ரகம்
127 நிமிடங்கள் படம் ஓடுகிறது . முதல் பாதி க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், பின் பாதி கில்மா க்ரைம் த்ரில்லர்
சபாஷ் டைரக்டர்
1 பட ரிலீஸ் க்கு ஒரு நாள் முன்பே சமுக வலைத்தளங்களில் ஆஹா , ஓஹோ ,அபாரம் பரிமளா ரேஞ்ச்சுக்கு விமர்சனங்கள் வர வைத்த லாவகம்
2 நான் அவன் இல்லை பாணிக்கதை தான் .அதை உண்மை சம்பவத்துடன் மேட்ச் செய்தது
ரசித்த வசனங்கள்
1 பொருளோட மதிப்பை நான் பார்ப்பதில்லை .அதைப்பெறுபவர்களின் தகுதி இருந்தாப்போதும்
2 பாஸ்போர்ட் விசாரனைக்காக வரலை , உங்க பாஸ்ட் லைப் பற்றி விசாரிக்க வந்திருக்கோம்
3 எங்கே யாவது , எப்பவாவது பிரியா இருந்தா கால் பண்ணுங்க
4 ஆபீசை உன் வீடு மாதிரி பார்த்துக்கோ .நான் உன்னைப்பார்த்துக்கறேன்
5 நான் உன்னை லவ் பன்றதா சொல்லவே இல்லையே? நீயா அப்படி நினைச்சுக்கிட் டா அதுக்கு நானா பொறு[ப்பு ?
6 பிடிச்சது ஒரே கேசு , அதையும் விடச்சொல்றாரு
7 பாதிக்கப்பட் ட நீங்க எதனால போலீசில் புகார் தர்லை ?
கப்பல் கவிழும்போது தான் தப்பித்தால் போதும் என நினைப்பாங்களா? கப்பலை க்காப்பாற்றுவது எப்படி?என யோசிப்பார்களா?
8 நான் சொல்றபடி செஞ்சா உன் வாழ்க்கைல பிரச்சனையே இல்லை . அப்படி இல்லைன்னா உன் வாழ்க்கையே பிரச்சனை தான்
9 எனக்கு அமைந்த வாழ்க்கையும் சரி இல்லை .நானா தேடிக்கிட் ட வாழ்க்கையும் சரி இல்லை .
10 தெரிஞ்சே தப்புப்பண்ணும் ஆண்களை விட்டுடுறீ ங்க , தெரியாம தப்புப்பண்ணும் பெண்களை பிடிச்சுக்கறீங்க
11 பெண் பிள்ளைகளை செல்லமா வளர்த்தாப்போதாது .பாதுகாப்பா வளர்க்கணும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் ஆக வரும் போலீஸ் ஆபீசர் யூயூனிபார்ம் சர்ட் மேல் பட்டன் எப்பவும் ஓப்பனாவே இருக்கு .ஹேர் ஸ்டைலில் போலீஸ் கட்டிங்க் இல்லை . விசாரணை செய்யும்போது எந்த ஆபீசர் கை கட்டி அடக்கமாக இருக்கிறார் ?
2 போலீஸ் கிட்டே அந்தப்பெண் என் இடுப்பில் அடிபட்டுடுச்சு என டாக்டர் கிளினிக் போனேன் என வாக்கு மூலத்தில் சொல்லுது . கட் பண்ணி பிளாஷ்பேக் ஓப்பன் ஆகும்போது டாக்டர் இடம் எனக்கு சோல்டர்ல வலி என சொல்லுது
3 துர்கா தூக்கு மாட்டிக்கொள்ள முயற்சிக்கும் சீனில் ஒரு அடி கூட உயரம் இல்லாத ஸ்டூலில் நிக்குது
4 வில்லன் எல்லா எவிடென்ஸையும் ஆபீசில் வைத்து விட்டு துர்கா கண்ணில் படும்படி நடந்து கொள்ளும் அளவுக்கு இளிச்சவாயனா?
5 பிசியோதெரபிஸ்ட் ஆக எத்தனையோ பெண்கள் இருக்கும்போ து குடும்பப்பெண்கள் எதனால் ஆண் பிசியோதெரபிஸ்ட் இடம் போகிறார்கள் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்கள் பார்க்க வேண்டிய விழிப்புணர்வுப்படம் தான் . ஆனால் எடுத்த விதத்தில் , பிரசண்ட் செய்த தன்மையில் ஆண்களுக்கான படமாக வந்திருக்கு . விகடன் மார்க் 40 . ரேட்டிங் 2/5
0 comments:
Post a Comment