Saturday, October 05, 2024

ஹிட்லர் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )

   

விஜய் யேசுதாஸ்  நடித்த படை வீரன் (2018) , சரத் குமார் நடித்த வானம் கொட்டட்டும் (2020)  ஆகிய  இரண்டு டப்பாப்படங்களை இயக்கிய இயக்குனர் தனா  இயக்கிய மூன்றாவது டப்பாப்படம் தான் இது  .1993ல் ரிலீஸ் ஆன ஷங்கரின்  ஜெண்டில்மேன்  படத்தின் பட்டி டிங்கரிங்க்   அட்லீ வெர்சன் தான் இது என்று சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றப்பட்டாலும்   அந்த அளவு மோசமான படம் இல்லை .  நன்றாகத்தான் போகுது                     


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவும் 1 - வில்லன்  ஒரு அமைச்சர் . ஊழல் வழக்கில் குற்றம்   சாட்டப்பட்டு  பதவி பறி போகும்  நிலையில்  இருப்பவர் .அதனால் வரப்போகும் தேர்தலில் எப்படியாவது ஜெயித்தே  ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் . அதனால்  மக்களுக்குப்பணம் கொடுத்து   தேர்தலில்     வெற்றி  பெற நினைக்கிறார் 

தேர்தல் கமிஷன் கெடுபிடி காரணமாக  சாலை  வழியாக பணம் கொண்டு   வருவதில்   சிக்கல்கள் இருப்பதால்  ரயில் மூலம்  தனது ஆட்கள் உதவியுடன்  பணத்தைக்கொண்டு வரும்போது  யாரோ வில்லனின் ஆட்களைக்கொன்று  விட்டு  பணத்தை அபேஸ் செய்கின்றனர் 


சம்பவம் 2 -  இந்த கொள்ளைக்ககேஸை  விசாரிக்க  ஓர் போலீஸ்  ஆபீசர் நியமிக்கப்படுகிறார் ..வில்லனான   அமைச்சருக்குத் தன் பணம் கிடைத்தால் போதும், ஆனால்  போலீஸ்  ஆபீசர் கொலையாளியைப்பிடிக்க நினைக்கிறார் 


சம்பவம் 3 - நாயகன்  ஒரு பிரைவேட் பேங்க்கில் ஒர்க் பண்ணுகிறார் இவர்  பணி  முடிந்து வீடு திரும்ப ரயில்வே சுடேஷன் வரும்பொது  நாயகியால்  தடுக்கி  விழுகிறார் . அவர் வாழ்நாளில்  இதுவரை  யாருமே இப்படி  அவரைக்கீழே  விழ  செய்ததில்லை  .அதனால் கண்டதும் காதல் . நாயகியைத்துரத்தி துரத்தி  காதலிக்கிறார் . ஆனால்  நாயகி கண்டுகொள்ளவே இல்லை . ஒரு நாள்  நாயகன்  கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹாஸ்ப்பிடலில் உதவி செய்ததைப்பார்த்ததும் நாயகிக்கு காதல் பிறக்கிறது  

முதல்   இரண்டு சம்பவங்களுக்கும்   நாயகன் - நாயகி காதல் போர்சனுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்கக்கூடாது . முதல் பாதி முழுக்க கமர்ஷியலாக  ,ஜாலியாகப்போகிறது .

இடைவேளையின் போதுதான்  ஒரு பெரிய டிவிஸ்ட் . நாயகன் தான்  அந்தக்கொலைகாரன் என்பது தெரிய வருகிறது .இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான்  மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக விஜய் ஆண்டனி . வழக்கமாக  உம்மணாம்மூஞ்சியாக  வருபவர்  இதில் சிரித்த முகத்துடன் வருகிறார் . ஆனால் அவர் சிரிப்பில் உயிரோட்டம் இல்லை . அவரது விக் பொருந்தவில்லை . சண்டைக்காட்சிகளில்   ரிஸ்க் எடுத்திருக்கிறார் . இவர் படத்தை நாம் பார்க்க  முயல்வதைப்போல அவ்லோவ் ரிஸ்க் இல்லை 


நாயகி ஆக   ரியா  சுமன் .. ரியா  சுமார்  என  சொல்லலாம் .அழகு ,, நடிப்பு , உடல் மொழி  எல்லாம் சுமார் தான் . நாடகம் பார்ப்பது போல  இருக்கிறது 


 போலீஸ்  ஆபீசர் ஆக  கவுதம் வாசுதேவ மேனன்  நல்ல கம்பீரம் .படத்தில்  உருப்படியானது இவர் நடிப்புதான் .

வில்லன் ஆக ஜெண்டில்மேன் படத்தில்  போலீஸ் ஆபீசர் ஆக வந்த சரண்ராஜ் .31  வருடங்களுக்கு முன்  நான்  நடித்த அதே படக்கதையா?என்ற எள்ளல் படம்  முழுக்க  அவர் முகத்தில் தெரிகிறது 


காமெடிக்கு  ரெடின் கிங்க்ஸ்லீ . சிரிக்க வைக்க சிரமப்படுகிறார் . ஆனால் யோகிபாபு , புரோட்டா  சூரி , ஈரோடு மகேஷ் போல  மொக்கை போடவில்லை 


நவீன் குமாரின் ஒளிப்பதிவு  அட்டகாசம் . பழைய கதை என்றாலும் ரசிக்கமுடிவது ஒளிப்பதிவு தான் விவேக் - மேர்வின்  ஜோடியின் இசை சுமார்  ரகம் . எட்டுப்பாடல்கள் . பிஜிஎம் ஓகே ரகம் சங்கத்தமிழனின் எடிட்டிங்கில் படம் 130 நிமிடங்கள் ஓடுகிறது . போர்  அடிக்காமல் காட்சிகள்  நகர்கின்றன 

சபாஷ்  டைரக்டர்


1   ரயிலில் கொள்ளை அடிக்கும் காட்சிகளும் , அதை சிசிடிவியில் பார்த்து போலீஸ்  நாயகனை சந்தேகிக்கும் காட்சியும்  செம  பரபரப்பு 


2  நாயகன் - நாயகி  ரொமாண்டிக் போர்சன் , போலீசின்  விசாரணை  என மாறி மாறி காட் சிகள்  பரபரப்பாக நகரும் விதம் 



  ரசித்த  வசனங்கள் 


1   என்ன ஆபீசர் ? நைட் ரவுண்ட்ஸா? 


 எஸ்  சார் 


 எத்தனையாவது ரவுண்ட் ? (சரக்கு) 


2   என்னைப்பார்த்தா   அடியாள் மாதிரி   தெரியறேனா? 


இல்லை , அஜித் மாதிரி  தெரியறே 


3   மிஸ் , அடிக்கடி குடிப்பீங்களா?


 நோ நோ , நான் பேமிலி  கேர்ள் 


4  மிஸ் , நான் நல்லவன் , என்னை நம்புங்க 


 ஆனா   நீ  ஆம்பளை 


5    நீங்க   எல்லாரும் சரக்கு அடிச்சிருக்கீங்க , ஆனா   நான்  குடிக்கலை , அடிச்சா  மிஸ் ஆகாது 


6  என் உயிரைக்காப்பாத்துனதுக்கு நன்றி 


தெரியாம   காப்பாத்திட்டேன் 


 வாட் ?


 ஐ மீன் ,நீங்க   ஒரு போலீஸ்   ஆபீசர்னு   தெரியாம   காப்பாத்திட்டேன் 


7  இரண்டாவது   தடவையும்  அதே  மாதிரி   நடந்தா   அது  கோ  இன்சிடென்ட்  இல்லை 


8 ஆம்பளைங்களை   நான் நம்புவது இல்லை , நல்லா   யூஸ்   பண்ணிட்டு பொருள்   நல்லாலை ன்னு வேற ஆப்சனுக்குப்போவானுங்க 


9   சார் , ஒரு வேளை , நாம  தப்பான   ஆளை பாலோ பண்றோமோ ?


 இல்லை , பிரில்லியண்டான ஆளை    பாலோ பண்றோம் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஓப்பனிங்  சீன்  கிளிப்பிங்க்  படத்தின் சஸ்பென்ஸை  ஓப்பன் செய்து விடுவது பலவீனம் . விஜய் ஆண்டனியின்  சமீப காலப் படங்களில்   இதே  மைனஸ்  ரிப்பீட் ஆகுது 

2   நாயகன் - நாயகி   ரொமாண்டிக்  போர்சன் ஸ்கிரிப்ட் ஆக   சுவராஸ்யமாக இருந்தாலும் எக்சிக்யூட் செய்த விதம் சரி இல்லை .

3  ரயில்வே ஸ்டேசனில்   செக்கிங்கே   இருக்காதா?   அவ்ளோ   பெரிய   சூட்கேசில  பணம் கடத்தும்போது பிடிக்கமாட்டார்களா? 

4  வில்லன் மாங்கா  மடையனா? முதல்  தடவை பணம் பறிபோனதும்   ரூட்டை  மாற்ற மாட்டானா?  அதே  பாணியில் தொடர்ந்து  பணத்தை இழப்பானா? 


5   டைட்டிலுக்கும் ,படத்தின் கதைக்கும் என்ன சம்பந்தம் என கண்டு பிடித்தால் 1000 பொற்காசுகள் பரிசு ஒரு வேளை  படம் தான் ஹிட் ஆகலை , டைட்டிலிலாவது ஹிட் இருக்கட்டும்னு நினைத்திருக்கலாம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நெட்டிசன்கள்  கழுவி ஊற்றிய   அளவு  மொக்கை எல்லாம் இல்லை .மாமூல் கமர்ஷியல்   ஆக்சன் மசாலா தான் .பார்க்கலாம்  ரேட்டிங்க்  2.25 / 5 .விகடன் மார்க் - 41  .குமுதம் - சுமார் 


Hitler
Theatrical release poster
Directed byDhana
Written byDhana
Produced by
  • T. D. Rajha
  • D. R. Sanjay Kumar
Starring
CinematographyNaveen Kumar I
Edited bySangathamizhan E
Music byVivek–Mervin
Production
company
Chendur Film International
Release date
  • 27 September 2024
Running time
130 minutes[1]
CountryIndia
LanguageTamil

Friday, October 04, 2024

VISHESHAM (2024) - ( மலையாளம் ) - விசேஷம் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

                       


19/7/24  முதல்  திரை அரங்குகளில்  ரிலீஸ்  ஆகி  ரசிகர்களின்  வரவேற்பைப்பெற்ற  இப்படம்  இப்போது  அமேசான் பிரைம்   ஓ  டிடி  யில்  15/9/24  முதல்  காணக்கிடைக்கிறது . இப்படத்தில்  நாயகன்  ஆக  நடித்தவர்தான்  இப்படத்தின்  திரைக்கதை  ஆசிரியர் . முதல்  பாதி காமெடி டிராமாவாகவும்   பின்  பாதி எமோஷனல்  டிராமாவாகவும் இருக்கும். பெண்களுக்கு  மிகவும் பிடிக்கும் . பொறுமைசாலிகளாக இருந்தால் ஆண்களுக்கும் பிடிக்கும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனுக்கு  40+ வயசு ஆகி விட்டது . ஒரு  பெண்ணைத்திருமணம்  செய்கிறார். அவர்  தாலி கட்டும்போதே  பெண்  யாரையோ தேடிக்கொண்டு  இருக்கிறார். மணப்பெண்ணின்  காதலன்  வந்ததும்  அவனுடன்  போய்  விடுகிறார்  . இதனால்    நாயகனுக்கு பெரும்  மன  உளைச்சல் + அவமானம் . தாலி கட்டிய  பெண்  மணமேடையிலேயே  ஓடி விட்டார்  என  அவப்பெயர் 


இதற்குப்பின்  நாயகனுக்கு பல இடங்களில்  பெண்  பார்த்தாலும்  எதுவும் சரியாக  அமையவில்லை . அப்போதுதான் தரகர்  ஒரு  ஐடியா  சொல்கிறார் . உனக்கும்  வயசு  ஆகிடுச்சு . . ஆல்ரெடி  மேரேஜ்  ஆனவன் . அதனால் ஆல்ரெடி மேரேஜ்  ஆகி டைவர்ஸ்  ஆன  பெண்ணை  மணம்  புரிய  சம்மதம்  எனில்  சுலபமாக  பெண்    கிடைக்கும்  என்கிறார்


  வேறு  வழி  இல்லாமல்  நாயகன்  அதற்கு ஓக்கே  சொல்ல நாயகியை  சந்திக்கிறார். நாயகி  ஒரு போலீஸ்  கான்ஸ்டபிள் . கணவனால்  துன்புறுத்தப்பட்டு   டொமெஸ்டிக்  வயலன்ஸ்  கேஸ்  போட்டு  டைவர்ஸ்  பெற்றவர் 


 நாயகன் - நாயகி   பெண்  பார்க்கும் படலங்கள் , சந்திப்பு  ,அறிமுகம், காதல்  என  ஜாலியாக  காமெடியாக  முதல்  பாதி  கதை  நகர்கிறது 


இருவருக்கும்  திருமணம்  ஆன  பின் இரண்டு  வருடங்கள்  ஆகியும் குழந்தை  பாக்கியம்  இல்லை . எதிர்ப்படும் உறவினர்களின் முதல் கேள்வி .. வீட்ல  விசேஷம்  இல்லையா?   என்பதுதான் 


 பல  டாக்டர்களை சந்திக்கின்றனர் . நாயகன்  மீது  குறை இல்லை . நாயகிக்கு பிசிஓடி  பிரச்சனை இருக்கிறது . பல சிகிச்சிகளுக்குப்பின்  நாயகிக்குக்குழந்தை  பிறந்ததா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  ஆனந்த   மதுசூதனன் அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார். நீங்கள்  வழக்கமாகப்பார்க்கும்  நாயக  பிம்பம்  எதுவும் இல்லாத  40+ வயசான  வழுக்கைத்தலையர் . ஆனால்  படம்  போட்டு  20  நிமிடங்களிலேயே  ஆடியன்சின்  மனதைக்கவர்கிறார்


  நாயகி ஆக   சின்னு  சாந்தினி . இவர்  நம்ம  முந்தானை முடிச்சு  ஊர்வசியின்  அக்கா கல்பனாவின்  உடல் வாகு கொண்டவர். நடிப்பில்  பிரமாதபப்டுத்தி இருக்கிறார் 


படத்தில்  நடித்த  அனைவரும்  அவரவர்  கேரக்டரை  உள்வாங்கி  சிறப்பான  நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார்கள் 


வி என்  மாளவிகாவின்  எடிட்டிங்கில்  படம் இரண்டு  மணி  நேரம்  ஓடுகிறது . சாகர்  அய்யப்பனின்  ஒளிப்பதிவில்  உயிரோட்டமான  காட்சிகள்  கண் முன்  விரிகின்றன 


நாயகன்  ஆன  ஆனந்த  மதுசூதனன்  திரைக்கதை  எழுத  சூரஜ்  டாம்  இயக்கி இருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்


1  போலீஸ்  ஆன  நாயகி  மாப்பிள்ளையின்  ஃபோட்டோவை ஸ்டேஷனில்  இருக்கும்  அனைவருக்கும் காட்டி மகிழ  லாக்கப் கைதியும்  விரும்பிப்பார்க்கும்  காட்சி கல கல 


2    மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்  ஆன  நாயகனின்  தன்னம்பிக்கை  வகுப்பில் பாடம் படித்த  மாணவி  நாயகன் - நாயகி இருவரும் கவுன்சிலிங்கிற்காக வந்த  ஹாஸ்பிடலில் பணிபுரிவதும்  அவர்  நாயகனைக்கண்டு சிலாகிப்பதும்   காமெடிக்கலக்கல் 


3    நாயகனின்  மாமியார்  ஹாஸ்பிடலில்  செக்கப்க்கு  வந்த  நாயகனிடம்  சம்பவம்  கிட்டியோ எனக்கேட்கும் காட்சி நகைச்சுவை சரவெடி 


4  தன்னை  துன்புறுத்திய  முதல்  கணவன்  லாக்கப்பில்  தன்னிடம்  மாட்டும்போது நாயகி பிளந்து கட்டும் காட்சி  காமெடி 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  குழந்தை  பிறக்க  இருக்கும்  தருணம்  லாட்டரியில்  முதல்  பரிசு  அடிக்கும் காட்சி  எல்லாம்  நாடகத்தனம் 


2   நாயகி  கர்ப்பம்  ஆக இருக்கும் செய்தி தெரிய  வரும்போது அவருக்கு பிரமோஷன்  கிடைப்பதும்  அவர்  பதவியை ஏற்பாரா? கருவைக்கலைப்பாரா? என ட்விஸ்ட்  வைப்பதும் தேவை இல்லாதது 


3  முதல்  பாதி முழுக்கக்காமெடியாக  லைட்  டாக  செல்லும் படம் பின் பாதியில்  ஓவர்  சோகக்காட்சிகளுடன் நகர்வது  எதுக்கு ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -18+ காட்சிகள்  இல்லை , ஆனால்  மைனர்களூக்கு இப்படம் தேவை இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கே  பாக்யராஜ் தனமான  காமெடியான  முன் பாதி  + சேரன் படங்கள்  போல கனமான  பின்  பாதி  இரண்டும்  கலந்த கலவை . ரேட்டிங்  2.75 / 5 


Vishesham
Directed bySooraj Tom
Written byAnand Madhusoodanan
Produced byAni Sooraj
StarringAnand Madhusoodanan
Chinnu Chandni
Baiju Johnson
Althaf Salim
CinematographySagar Ayyappan
Edited byMalavika VN
Production
company
Step2Films
Distributed byStep2Films Through Sree Priya Combines
Release date
  • 19 July 2024
CountryIndia
LanguageMalayalam

Thursday, October 03, 2024

VAZHA (2024) - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி +எமோஷனல் டிராமா) @டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்

   

                    

15/8/2024  அன்று   திரை அரங்குகளில்  வெளியான இப்படம் இப்பொது ஓடிடி யில் ரிலீஸ்  ஆகி இருக்கிறது .தோல்வி அடைந்த  மனிதர்களின்  வாழ்க்கையை கவிதையாக  படமாக்கும்  அங்காடித்தெரு , வெயில்  படப்புகழ்  வசந்தபாலன் பாணீயில்  இயக்கப்பட்ட ஒரு காமெடி டிராமா  இது . முதல் பாதி காமெடியாகவும் பின் பாதி  எமோஷனல் கனெக்ட் உடனும் இருக்கும் . தமிழில்  வெளியான   வாழை  படத்துக்கும் , இந்த வாழா  படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை 


 மலையாளத்தில்   வாழா  என்றால்  வாழை  மரம் என்று  பொருள் . இவனைப்பெற்றதுக்கு ஒரு வாழை  மரத்தை நட்டிருந்தாலாவது எதாவது பிரயோஜனமாக இருந்திருக்கும் என்று ஒரு கேரளப்பழமொழி உண்டு 


ஜெயஜெயஜெயஹே , குருவாயூர்  அம்பல நடையில்  ஆகிய  சூப்பர்  ஹிட்  படங்களை  இயக்கிய விபின்  தாஸ்  தான் இந்தப்படத்தின்  திரைக்கதை  ஆசிரியர் . கவுதமிண்டே  ரதம்  படத்தை  இயக்கிய ஆனந்த  மேனன்  தான்  இப்படத்தின்  இயக்குனர் 


  வெறும்  4  கோடி லோ பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  இதுவரை   40   கோடி  ரூபாய்  வசூல்  செய்து இருக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஐந்து  சிறுவர்கள்  சின்ன வயசிலிருந்தே ஸ்கூலில் படிக்கும்போதிருந்தே   லாஸ்ட் பெஞ்ச்  லாரன்ஸ்களாக , உருப்படாத  பயல்களாக  இருந்து வருகிறார்கள் . அவர்களது பள்ளி  வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை  , குடும்ப வாழ்க்கை  ஆகியவற்றைக்காமெடியாகசொல்லும் கதை தான் இது . டைட்டிலிலேயே  இது பயோ பிக்சர் ஆப் எ பில்லியன் பாய்ஸ்  என சொல்லி விடுவதால்  வழக்கமான மசாலாப்பட டெம்ப்ளேட் இதில் இருக்காது 


ஸ்கூலில்  படிக்கும்போது   டீச்சர்களிடம்  திட்டு வாங்கி   பின்  அவரவர்  பெற்றோருடன்  வரவும்  என  அறிவுறுத்தப்பட்டு   அவர்கள்  வந்த பின்  அனைவரையும் லெஃப்ட்  அன்ட்  ரைட்  வாங்குவதுதான்  முதல்  பாதி  திரைக்கதையை  ஆக்ரமிக்கும்  விஷயங்கள் . ஜாலியாகப்போகிறது 


அதற்குப்பின்  வாழ்க்கையில்  ஒவ்வொரு  கட்டத்திலும்  அவர்கள்  தோல்வி  அடைவது , அவற்றை   அவர்கள்  கடந்து வருவதுதான்  திரைக்கதை 


 ஐந்து  மாணவர்களாக   நடித்திருக்கும்  அனைவரும்  நமக்கு  புதுமுகங்கள்  என்றாலும்  படம்  ஓட ஓட  அவர்கள்  முகம்  நம்  மனதில்  தங்கி    விடுகிறது பஷீல்  ஜோசப்  ஒரு  கெஸ்ட்  ரோலில்  வருகிறார் 

 6  பாடல்கள்  உள்ள  இப்படத்தை  5    பேர்  குழு  இசை  அமைத்திருக்கிறது . பின்னணி  இசை  கலாட்டா தான் . கண்ணன்  மோகன்  எடிட்டிங்கில்  படம்  2  மணி  நேரம்  6  நிமிடங்கள்  ஓடுகிறது புதுசேரி  அர்விந்த்  ஒளிப்பதிவு கண்ணுக்கு இதம் 



சபாஷ்  டைரக்டர்


1  ஸ்கூலில்  டீச்சர்   எம்  என்ற  ஆங்கில  எழுத்தை  போர்டில்  எழுதி   அதில்  இருந்து மரம் வரைவது எப்படி? எனக்கற்றுக்கொடுக்கும்  ஓப்பனிங்  சீன்  செம 


2  ஐந்து   பசங்களூம்   ஏதோ  ஒரு  குறும்பு  பண்ணி  மாட்டிக்குவதும் , பெற்றோர்  வர  வைக்கப்பட்டு   திட்டு  வாங்குவதும்  தான் முதல்  பாதி  திரைக்கதையே . நாஸ்டாலஜி மொமெண்ட்ஸ் 


3  ஐந்து  பசங்களில்  ஒருவன்  மட்டும்  ஒரு  பெண்ணிடம்  காதல்வசப்படுவது, அந்தப்பெண்ணுடன்  சுற்றுவது   ரகளையான  காட்சிகள் 


4  பின் பாதிப்படத்தில்  ஐந்து  மாணவர்களின் பெற்றோரும்  அவர்களுக்கு  சப்போர்ட்டுக்கு வருவது ஆதரித்துப்பேசுவது எல்லாம்  கை தட்டல் பெற்ற  அட்டகாசமான  காட்சிகள்  


5  ஒரு  காமெடிப்படம்  திடீர்  என  செண்ட்டிமெண்ட்  காட்சிகளுடன் யு டர்ன்  அடிக்கும்போது பெரும்பாலும்  அது ஒர்க்  அவுட்  ஆகாது , ஆனால்  அந்த  மேஜிக்  இப்படத்தில்  நடக்கிறது 


  ரசித்த  வசனங்கள் 


1  உங்களைத்திட்டிட்டு இருக்கும் உங்க அப்பா உங்களை அங்கீகரிக்கும்போதுதான் நீங்க ஹீரோ ஆகறீங்க 


2   யார்  என்ன சொன்னாலும்  நம்ம இஷ்டப்படி நாம வாழ்ந்தா போதும் 


3   எங்க   அப்பா சர்வீஸ்ல இருந்தப்போ  இறந்ததால எனக்கு  அவரோட  அரசுப்பணி  கிடைச்சுது . நானா  எதுவும்  முயற்சி எடுக்கலை . அதே  மாதிரி கவர்மெண்ட்   வேலைல   இருக்கும்போதே  நான்  செத்துட்டா  உனக்கும் கவர்மெண்ட்  ஜாப் கிடைக்கும் 


4  நமக்கு  ஒரு தேவை  வரும்போது அடுத்தவங்க காலைப்பிடிக்க வேண்டிய அவசியம் வரக்கூடாது 


5   இவனுங்களை  எல்லாம் ஜெயிலுக்கு அனுப்பினாத்தான் திருந்துவானுங்க 


 அப்படின்னா ஜெயிலுக்குப்போன பின் திருந்திய ஒரு நாலு பேரைக்காட்டு 


6   உலகில்   மூன்று   வகையான  குழந்தைகள்  இருக்காங்க 

  1  தனக்குப்பிடிச்ச படிப்பைப்படிச்சு வாழ்பவர்கள்

  2  பெற்றோர் விருப்பப்படி படிப்பவர்கள்  

3  தனக்கும் பிடிக்காம , அம்மா, அப்பா விருப்பத்துக்கும் இல்லாம என்ன படிக்கறோம், என்ன பண்றோம்னே தெரியாம வாழ்பவர்கள் 


7  ஹெச்  எம்  என்னை அடிக்க குச்சி எடுத்துத்தருவாளே  அவ  என்னைப்பார்த்து  சிரிச்சா 


 டேய் , என்னைப்பார்த்தும்தாண்டா  அவ  சிரிச்சா 


8     நீ  படிப்பதற்கான  அருகதை உனக்கு இல்லை 

ஏன்மா ?


 உங்க  அப்பாவோட மூளை தானே உனக்கும் ? 


9    டேய் , யாரும்  பார்க்காதீங்க , அவ  என்  அத்தை  பொண்ணு


10    நம்ம   ரெண்டு பேரைத்தவிர   மூன்றாவதா  ஒரு ஆள்  அவளைப்பார்த்துடக்கூடாது 


11   நீ  ஏன்  ஆம்பளை  மாதிரி  ஹேர்கட்  பண்ணிட்டு  சுத்திட்டு இருக்கே? 


 எனக்குப்பிடிச்சிருக்கு 


12  உன்  பேரென்ன? 


 ஃபிரெட்டி


 என்னது ? ஜட்டியா? 


13  நல்லாப்படிக்கனும்னா  அதே  மாதிரி  நல்லாப்படிக்கும் ஒரு  நண்பன்  கூட இருக்கனும், அல்லது  நம்ம வைராக்கியத்தைத்தூண்டி விடும் எதிரி அருகில் இருக்கனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஒரு  வாழை  மரம்  குலை தள்ளி இருக்கு . வாழைப்பழங்கள்  உள்ள  அந்த  சீப்பை  மட்டும்  வெட்டாமல்  எதுக்கு  மரத்தையே  வெட்டனும் ? 


2   கில்மாப்பட  சி டி யை  யாராவது  ஸ்கூலில்  உள்ள  சிஸ்டத்தில்  போட்டுப்பார்த்து  மாட்டுவார்களா? 


3  அப்படியே  ஸ்கூலுக்கு  சி டி  கொண்டு  வந்தாலும்  அந்த  சி டி  கவரை  தன்  புத்தகப்பையில்  நோட்   புக்கில்  ஒளித்து  வைத்து  மாட்டுவார்களா? 


4  தற்கொலை  முயற்சிக்காட்சி  தவிர்த்திருக்கலாம்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஜாலியாப்பொழுது  போகும்  படம் . பின்  பாதி  சோகம்  உண்டு. ஆனால்  க்ளைமாக்ஸ்  சுகம்  சுபம் . ரேட்டிங்  3 / 5 

Wednesday, October 02, 2024

சட்டம் என் கையில் ( 2024) தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)

         

             மொக்கைக்காமெடி  செய்பவர்  சீரியஸ்  கேரக்டரில்  நடித்தால்;  ஜனங்க  ஏத்துக்குவாங்க  என்பதை  நிரூபித்தவர் ””விடுதலை”   புரோட்டா  சூரி .. அவரைத்தொடர்ந்து  இப்போது  சதீஷ். சிக்சர்  படத்தை இயக்கிய   சாச்சி இயக்கத்தில்  உருவாகி  இருக்கும் இந்தப்படத்துக்கும்    இதே   டைட்டிலில்  1978ல்  கமல்  நடிப்பில் வெளியான பழைய  படத்தின்  கதைக்கும்  சம்பந்தம்  இல்லை 


 ஒரே  இரவில்  பெரும்பான்மையான  கதை  ஒரே  லொக்கேஷனில்  அதாவது  போலீஸ்  ஸ்டேஷனில் 80% கதை  நிகழும்   என்பது  தமிழுக்குப்புதுசான  வரவேற்க வேண்டிய  திரை  மாற்றம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 சம்பவம்  1 -   வாடகைக்கார்  ஓட்டும்  டிரைவரான  நாயகன் ஒரு  நாள்  இரவில்  ஏதோ ஒரு  டென்ஷனுடன்  கார்  ஓட்டிக்கொண்டு  இருக்கிறார் . அப்போது  எதிரே  பைக்கில்  ஒரு  ஆள்  வேகமாக  வந்து  மோதி    ஆள்  ஸ்பாட் அவுட். அந்த  டெட்  பாடியை  தன்  காரின் டிக்கியில்  போட்டு   பயணத்தைத்தொடர்கிறார்  நாயகன் . போலீஸ்  செக்கிங்கில்  மாட்டுகிறார். ஸ்டேஷனில்  நாயகன்  இப்போது  இருக்கிறார் 


  சம்பவம்  2  -  அதே  நாளில்  ஒரு  பெண் தங்கச்சங்கிலிக்காக  கொலை  செய்யப்படுகிறார் . முகத்தில்  ஏகப்பட்ட  காயங்கள் . போஸ்ட்  மார்ட்டத்துக்கு  பாடியை  அனுப்பி  விட்டு  ரிப்போர்ட்டுக்காக  காத்திருக்கிறது 


 சம்பவம்  3  . நாயகன்  இப்போது  இருக்கும்  போலீஸ்  ஸ்டேஷனில்  ஒரு  சப் இன்ஸ்பெக்டர் , அவருக்குக்கீழ்  பணீயாற்றும்  ஒரு  உதவி சப் இன்ஸ்பெக்டர்   இருவருக்கும்  ஒரு  ஈகோ  கிளாஸ்  உருவாகிறது 


 சம்பவம்  4   அதே  ஸ்டேஷனில்  ஒரு  மிஸ்சிங்க்  கேஸ்  ஃபைல்  ஆகிறது 


  மேலே  சொன்ன  நான்கு  சம்பவங்களுக்கும்  என்ன  தொடர்பு ?  நாயகன்  போலீசிடம்  சிக்கினாரா? அவருக்கு  என்ன  ஆனது ? என்பதை  எல்லாம்  மீதி திரையில்  காண்க


 நாயகன்  ஆக  சதீஷ்  அண்டர் ப்ளே  ஆக்டிங்  செய்து  இருக்கிறார். இதற்கு  முன்  இவர்  காமெடியன்  ஆக  நடித்த  பல  படங்களில்  சிரிப்பே  வராத  தினத்தந்தி  குடும்ப  மலர்  ரேஞ்சுக்கு  மொக்கைக்காமெடி   செய்து   நம்மைக்கடுப்பில்  ஏற்றியவர்  இதில்  மனம்  கவரும்படி  கச்சிதமாக  நடித்திருக்கிறார் 


சப் இன்ஸ்பெக்டர்  ஆக  ஆஜய்  ராஜ் ,  உதவி  சப் இன்ஸ்பெக்டர்  ஆக  பாவல்  நவநீதன்  இருவரும்  கலக்கலான  நடிப்பு . இருவரும்  மோதிக்கொள்ளூம்  காட்சிகள்  தீப்பொறி 


 போலீஸ்  கான்ஸ்டபிள்ஸ் ஆக  வரும்  பவா  செல்லத்துரை , , ரித்திகா , ஈவி ஐ  ராமதாஸ் , கெபிஒய்  சதீஷ்   ஆகியோர்  குறைவான  நேரம்  வந்தாலும் நிறைவான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்கள் 


ஜோன்ஸ்  ரூப்பர்ட்டின்  பின்னணி  இசை  ஒரு  த்ரில்லர்  படத்துக்குத்தேவையான  இசையை  தந்திருக்கிறது . பிஜி முத்தையாதான்  ஒளிப்பதிவு . போலீஸ்  ஸ்டேஷனிலேயே  பெரும்பான்மையான  காட்சிகள்  அதுவும்  முழுக்கதையும்  ஒரே  இரவில் நடப்பதால் சவாலான  பணி  தான் . கச்சிதமாக  செய்து இருக்கிறார் 





சபாஷ்  டைரக்டர்


1   இரண்டு  மணி  நேரப்படத்தில்  முதல்  ஒன்றே  கால்  மணி  நேரம்  ஒரு  போலீஸ் ஸ்டேஷனிலேயே  கதை  சம்பவங்கள்  நடந்தாலும்   போர்  அடிக்காத  காட்சி  அமைப்புகள்  பலம் 


2   சதீஷின்  கேரக்டர்  டிசைன்  , அவரது  கேரக்டரில்  க்ளைமாஸில்  வெளீயிடும்  ஒரு  மர்ம  முடிச்சு 

3   நாயகியே  இல்லாத  நாயகி  தேவைப்படாத  திரைக்கதை 


4   முதல்  பாதி  திரைக்கதை  முழுக்க  டெம்ப்போ  ஏற்றும்  சஸ்பென்ஸ் 


5    கொலைக்கான  தடயங்களை  மறைக்க   போலீஸ்  ஸ்டேஷனிலேயே  நாயகன்  நடந்து  கொள்ளும்  விதம் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பிரமாதமாக  செல்லும்  திரைக்கதையில்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டுக்காக  வலுக்கட்டாயமாக  ஒரு  கதையை  கொண்டு  வந்து   சேர்த்த  விதம் 


2    மீடியாக்கள்  முன்  போலீஸ்  ஸ்டேஷனில்  நாயகன்  போடும் டிராமா  எரிச்சல் 


3    மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாவிட்டாலும்  இரு  போலீஸ்  ஆபீசர்களும்  அடித்துக்கொள்ளூம்  விதம் 


4 க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  எடுபடவில்லை .  அதுவரை  என்ன  கதை  சொல்லப்பட்டதோ  அதையே  தொடர்ந்திருக்கலாம் 


5 பொதுவாக  ஒரு  க்ரைம்  த்ரில்லர்  கதையில்  கொலை  என சந்தேகிக்கப்பட்ட   ஒரு  சம்பவம்  ஆக்சிடெண்ட்டல்  டெத்  , அல்லது  தற்கொலை  என  முடிந்தால்  சுவராஸ்யம்  குறைவாக  இருக்கும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யு / ஏ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்களுக்கு   மிகவும்  பிடித்த  படம் .  விகடன்  மார்க்  4 3  ,  குமுதம்  ரேங்க்கிங்க்  குட் .  மை  ரேட்டிங்க்   3/ 5 

Tuesday, October 01, 2024

மெய்யழகன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( எ ஃபீல் குட் மூவி )

               


        விஜய் சேதுபதி - த்ரிஷா  நடிப்பில் 2018ஆம்  ஆண்டு தனிப்பெரும் காதல் கதையாக உருவான  96 படத்தின் இயக்குனர்  சி பிரேம்குமாரின் இரண்டாவது  படமாக உருவாகி இருக்கும் இது முதல் படமான 96 படத்தை விட தரமான படம் என்றாலும்  96 அளவு ஜனரஞ்சகமான படம் இல்லை . இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா - ஜோதிகா என்பது ஒரு கூடுதல் தகவல் 


அன்பே சிவம் (2003) ADIYOS AMIGO ந் மலையாளம்  (2024)   ஆகிய படங்களை ரசித்துப்பார்த்தவர்களால் மட்டுமே   இப்படத்தை ரசிக்க முடியும் . காரனம்  இதிலும்  இரு  கதாபாத்திரங்கள்  மட்டுமே  பேசிக்கொண்டிருக்கும்  காட்சிகள்  அதிகம் 


35  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  ரிலீஸ்  ஆன  முதல்  இரு  நாட்களிலேயே  20  கோடி  ரூபாய்  வசூல்  செய்துள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகன்  சிறுவன்  ஆக  இருக்கும்போதே  ஒருசொத்துத்தகறாரு  காரணமாக  தன்  வீட்டை  இழந்த  நாயகனின்  அப்பா  குடும்பத்துடன்  சொந்த  ஊரை  விட்டு  பட்டணம்  வருகிறார் . 20  வருடங்களாக  சொந்த  ஊர்  போகாத  நாயகன்  தன் தங்கையின்  திருமண நிகழ்விற்காக  ஒரே  ஒரு  நாள்  அங்கே  போக  முடிவு  ஏடுக்கிறார் 


   சொந்த  ஊருக்கு  வந்த  அவரை  அவருக்கு  அறீமுகம்  இல்லாத  ஆனால்  அவரை  நன்கு  அறிந்த  ஒருவன் மிக  அன்பாக  அத்தான்  என  அழைத்து   அன்பைக்  கொட்டுகிறான் . நாயகனுக்கும்  அவனுக்கும் இடையே   நிக்ழும்  உரையாடல்கள் தான்  மீதி திரைக்கதை . ஒரே    இரவில்  நடக்கும்  கதை 


நாயகன்  ஆக  அர்விந்த் சாமி . தனி  ஒருவன்  படத்தில்  தனது  செகண்ட்  இன்னிங்க்சை   வில்லன்  அவதாரம்  கொண்டு  பிரமாதமாக  ஆரம்பித்த  இவர்  இப்போது  தனது  மூன்றாம்  இன்னிங்க்சை  ஆரம்பித்து  இருக்கிறார். பிரமாதமான  நுணுக்கமான  நடிப்பு 


 நாயகன்  மீது  அன்பு  செலுத்தும்,  நபராக   கார்த்தி    கலக்கி  இருக்கிறார் . பருத்தி  வீரன், பையா  படங்களூக்குப்பின்  இவருக்குப்பெயர்  சொல்ல  ஒரு  படம் 


 கார்த்தியின்  மனைவியாக  ஸ்ரீ  திவ்யா  சில காட்சிகளே  வந்தாலும் இதமான  நடிப்பு 


 ராஜ்கிரண்  , தேவதர்ஷினி , கருணாகரன் , ஜெயப்பிரகாஷ் , இளவரசு  என   பல வித  கதாபாத்திரங்களில்  அருமையான  நடிப்பை   அனைவரும்  வெளிப்படுத்தி இருக்கிறார்கள் 


கோவிந்த்  வசந்தாவின்  இசையில்   6  பாடல்கள்  இருந்தாலும்  கமல் பாடிய  யாரோ இவர்  யாரோ  செம  ஹிட்  பாட்டு . பின்னணி  இசையும்  கச்சிதம் , மகேந்திரன் , ஜெயராஜூ   ஆகியோர்  ஒளிப்பதிவில்  படத்தின்   75%  காட்சிகள்  ஒரே  இரவில்  நடப்பதால்  சவாலான  வேலை தன்  .. ஆர்  கோவிந்த ராஜின்  எடிட்டிங்கில் படம்   3  மணி  நேரம்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1   கல்யணத்துக்கு கிஃப்ட்  வாங்கி வந்த நாயகன்  கல்யாணப்பெண்ணான தன்  தங்கைக்கு மேடையிலேயே  அவற்றை அணிவித்து விடும் செண்ட்டிமெண்ட்  காட்சி 


2   தேவதர்சினியிடம்  கார்த்தி  ஃபோனில்  பேசும்  காட்சியும் பேசி முடித்த பின்  அவர்  நாயகனிடம்  யார் அவன் ? என  வியக்கும்  காட்சியும் 


3  நாயகனுடன்  சேர்ந்து  கொண்டு  தண்ணி அடிக்கும்  தன்  கணவன் பாட்டுப்பாடும்  விதத்தை ரசிக்கும் ஸ்ரீதிவ்யாவின்  நடிப்பு 

4  நாயகனின்  முன்னாள்  காதலியை  நலம்  விசாரிக்கும்  காட்சியும் , நாயகனை  ரசிக்கும்  காதலியும் 


5   யாரோ  இவன்  யாரோ  பாடலை  உருக்கமான  குரலில் பாடி இருப்பவர்  கமல் . நாயகன் படத்தில்  தென்பாண்டிச்சீமையிலே பாடலைப்போல  காலம்  கடந்தும்  பேசப்படும்  பாடலாக  இது நின்று பேசும், 


6   அவன்  உயரத்தில்  எங்கேயோ  இருக்கான், நான்  இங்கே  இருக்கேன், ஃபோன்  பண்ணி சாரி  கேட்கனும்   என  நாயகன்  ஃபீல்  பண்ணும்  காட்சி



செம  ஹிட்  சாங்க்ஸ்


1  யாரோ  இவர்  யாரோ  சொந்தம் யார் தான்  இவரோ ?


  ரசித்த  வசனங்கள் 


1  சொந்த ஊர்லயே  லாட்ஜ்ல  ரூம்  போட்ட  முத ஆள்  நாமாத்தான்  இருப்போம் 


2  நம்ம ஊர்ல மட்டும் தான்  நல்லவனை  இளிச்சவாயன் என சொல்லி ஏமாத்துவோம், கெட்டவனை சாமார்த்தியசாலி என தலைல தூக்கி வெச்சு ஆடுவோம் 


3   செல் ஃபோனுக்கு சார்ஜ் போடனும், பத்திரம் 


 பக்கத்துலதான்  போலீஸ்  ஸ்டேஷன்  இருக்கு . அங்கே  போய் போட்டுட்டு  வரவா? 


4  குடிச்சுட்டு யாராவது  பொய்  சொல்வாங்களா? 


5  எல்லாரும்  நல்லவங்க தான் , யாரையும்  குத்தம்  சொல்ல  முடியாது , எல்லாம்  அந்தப்பணம்  பண்ணும்  வேலை 


6   தங்கராசு ... 


 ம் 


 தூங்கிட்டியா? 


ஆமா \


 சரி  முழிச்சுக்கோ , போர்க்கால அடிப்படைல உடனே  2  பீர்  வேணும்


7   பிறக்கப்போற  குழந்தை  ஆணோ பெண்ணோ ஒரே பேர்தான் ...கெஸ்? 


தங்கம்?


 நோ 


 மது ?


 ம்ஹூம்.. நீயே  சொல்லிடு 


 அருள் மொழி 


8  வடக்கிருந்து   உயிர்  துறத்தல்  என்பது   புற  முதுகில்  காயம்  பட்ட  மன்னன்  வடக்கு  நோக்கி  தவம்  இருந்து  அன்னம்  , தண்ணீர்  இல்லாமல்  உயிர்  நீப்பது 


9  அது  எப்படி  உங்க  ஃபோன்  நெம்பரை  நீங்களே  மாத்தி  சொல்வீங்க?  நான்  தான்  மப்புல  மாத்தி  எழுதி  இருப்பேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கேரளாவில் இருப்பது போல  தமிழ் நாட்டில் பஸ் கண்டக்டர்களுக்கு என தனி சீட்  பஸ்சில் கிடையாது . ஆனால் ஒரு அரசாங்க டவுன் பஸ்சில் கண்டக்டர் சீட்  என தனியாக இருப்பது போல காட்சி இருக்கு ( சென்னை  போன்ற நகரங்களில் ஓடும் பஸ்களில்  அப்படி உண்டு , ஆனா நீடா மங்கலம் மாதிரி கிராமங்களில் ஓடும் டவுன் பஸ்களில் அப்படி இல்லை )


2  கண்டக்டர் சீட்  என்பது தெரியாது  என  நாயகன்  சொல்றார். பஸ்சில் எல்லா சீட்டுகளூம் சோபா போல இருக்கு . கண்டக்டர் சீட்  மட்டும்  வெறும் ஒயர் கூடை போல பின்னப்பட்ட சீட். வித்தியாசம்  தெரியாதா? 


3  ஆண்ட்ராய்டு ஃபோன் சார்ஜ்  ஏற  ஒன்றரை மணி நேரம்  ஆகும், ஆனால் நாயகன்  சாப்பிடும் 10 நிமிட   நேரத்தில் ஃபுல் சார்ஜ் ஏறி விடுகிறது 


3  கைவசம்  சரக்கு இல்லாத  டப்பாப்பட  டைரக்டர்கள்  தான்  கற்பனை  வறட்சி காரணமாக  நாயகன்  சரக்கு அடிப்பது  போல  காட்சிகள்  அதிகம்  வைத்து படத்தை இழுப்பார்கள் ..  இவருமா? 


4   படம்   போட்டு  2  மணி நேரம்  ஆனதும்  ஒரு சலிப்பு வந்து விடுகிறது . ஒரே  நபர்  பேசிக்கொண்டே  இருப்பது   போர்.  அதற்குப்பதிலாக  நாயகன் , தோழன்  இருவரது  ஃபிளாஸ்பேக்  லவ்  ஸ்டோரிகளைக்கொஞ்சம்  காட்டி  இருக்கலாம்


5  நாயகன்  வீடு  வாங்க  தன்  சேமிப்புப்பணம் +  நகையை  அடமானம்  வைத்த  பணம்  என  25  லட்சம் ரூபா  கொடுக்க  முன்  வருவது  எல்லாம்  ஓவர்  


6  கார்த்தி  யார்  என்பதை  அறீயாமல்  தடுமாறும்  நாயகன்  கார்த்தி மப்பில்  மட்டை  ஆகிக்கிடக்கும்போது  அவர்  மனைவி ஸ்ரீ திவ்யாவிடமே  விசாரித்து  இருக்கலாமே? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சொந்த  ஊரை  விட்டு  வெளியூரில்  நீண்ட  நாட்களாக  வாழ்பவர்களூக்கு ஒரு  நாஸ்டாலஜி  அனுபவம்  தரும் . தெலுங்கு  டப்பிங்க்   டப்பா  மசாலாப்படங்கள்  மட்டுமே  ரசிப்பவர்களுக்குப்படம்  பிடிக்காது .  விகடன்  மார்க்   50   குமுதம்  ரேங்க்கிங்க்  நன்று  , மை  ரேட்டிங்  3/5


நன்றி  - அனிச்சம் மின்னிதழ்  1/10/2024