Sunday, September 01, 2024

அதர்மக்கதைகள் (2024)- தமிழ் -சினிமா விமர்சனம் (( ஆந்தாலஜி ரிவெஞ்ச் த்ரில்லர் ))


ஆந்தாலஜி  என்பது தமிழ் ஆடியன்ஸுக்கு ஒத்து வராது . கலவை சாதம் சாப்பிடுவதை விட முழு சாப்பாடு சாப்பிட்டால் தான் தமிழனுக்கு திருப்தி . இதில் இயக்குனர்  நான்கு குறும்படங்களை  2 மணி  நேரத்தில் கொடுத்திருக்கிறார் . 


                       ஸ்பாய்லர்  அலெர்ட்


 1   பழி  வாங்குவது ஒரு கலை 


வில்லன் ஒரு மோசமான ரவுடி . ஓப்பனிங்க் ஷாட்லயே அவனை ஒரு கும்பல் கொலை பண்ண துரத்துது . படு காயங்களுடன் ஒரு  ஹாஸ்பிடலில்  அட்மிட் ஆகிறான் . அவனோட கெட்ட குணங்கள் அறிந்து மற்ற நர்ஸ்கள் எல்லாம்     சிகிச்சை  செய்ய தயங்கும்போது நாயகி   அதை ஒரு கடமையாக நினைத்து சாதாரணமாக அவனுக்குப்பணி விடை செய்கிறாள் ..


வில்லனைத்துரத்திய   கேங்க்  நாயகியின்  வீட்டுக்கு வந்து ஒரு  கோரிக்கை வைக்கிறார்கள் . வில்லன்  ஹாஸ்பிடலில் இருக்கும்போதே   நைசாக அவனை போட்டுத்தள்ள நாயகி உதவ வேண்டும் . அதற்கு பணம் தர தயார் . ஆனால் நாயகி அவர்களை துரத்தி விடுகிறாள் 


இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள்  மீதி  திரைக்கதை 


நாயகி ஆக அம்மு அபிராமி கச்சிதமாக நடித்திருக்கிறார் . 23 நிமிடக்குறும்படம் இது 


2  தன்னைத்தானே பழி வாங்குதல் தவறானது 


நாயகன், நாயகி  இருவரும் காதலித்துக்கல்யாணம்  செய்து கொண்டவர்கள் . ஒரு குழந்தை உண்டு . நாயகனுக்கு ஆன் லைன் ரம்மி விளையாடுவதில் ஆர்வம்  , ஏராளமான பணத்தை இழக்கிறான். பலரிடம் கடன் வாங்கி சிக்கலில் மாட்டுகிறான் . கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க  ஒரு பணக்கார வீட்டுக்குழந்தையை கடத்தி பிளாக்மெயில் செய்கிறான். ரூ 50 லட்சம்  பணம் வர இருக்கிறது . இந்த சந்தர்ப்பத்தில் நாயகிக்கு விஷயம் தெரிகிறது  


 நாயகி  நாயகனைக்கண்டிக்கிறாள் . இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட  நாயகி தலையில் அடிபட்டு  இறக்கிறாள் , ஆக்சிடெண்டல் டெத் . இதற்குப்பின்  நாயகன் எடுக்கும் முடிவு தான்  க்ளைமாக்ஸ் 


நாயகன் ஆக  வெற்றி நடித்திருக்கிறார் . வித்தியாசமான கதைகளில் நடித்து வரும்  வெற்றிக்கு  இது  அதிக ஸ்கோப்  இல்லாத  கதை தான் . வந்தவரை ஓகே  ரகம் . நாயகி ஆக சாக்ஷி அகர்வால் இளமைத்துடிப்புடன் , கிளாமருடன் வந்து போகிறார் . காதல் கொண்டாட்டத்தில்  கலக்குபவர் கோபமாக வசனம்  பேசும் காட்சியில் தடுமாறுகிறார் 

34 நிமிடக்கதை இது 


3  பழி  வாங்குவதை  மற்றவர்களுக்காகச்செய்வதும் ஒரு வகையான தர்மமே 


நாயகன் சுனாமியில் தன குடும்பத்தை இழந்த பெரியவர் . பீச்சில் பலூன்களை துப்பாக்கியால் சுடும் விளையாட்டுக்கடை நடத்தி வருகிறார் . அங்கே  3  ரவுடிகள்   பொது மக்களுக்குத்தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். போலீசில்  புகார் கொடுத்தால் பெரிய இடத்துப்பொல்லாப்பு நமக்கு எதுக்கு என போலீஸ் ஒதுங்கி விடுகிறது . அவர்கள் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லாமல் போனாலும் சமூக நலன் கருதி அவர்களை  போட்டுத்தள்ளுகிறார் நாயகன் . 


 நாயகனாக  பூ ராமு அமைதியாக நடித்திருக்கிறார் . ராஜ்கிரண் சாயல் நடிப்பில்  தெரிகிறது 



4   மன்னித்தலே மிகப்பெரிய பழி வாங்கல் 


நாயகி  ஒரு துணிக்கடையில் பணி புரியும்  ஏழை . அப்பாவுக்கு ஹாஸ்பிடல் செலவு இருக்கு . இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் அவளுக்கு ஒரு காதலும் இருக்கு . ஒரு நாள் அவள் வீடு தேடி ஒரு பணக்காரக்குடும்பத்தைச்சேர்ந்த  தம்பதி வருகிறார்கள் . 


அந்த தம்பதியில் கணவன் நகைக்கடை அதிபர் . மனைவி  கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர் . இதனால் நாயகியை வாடகைத்தாயாக இருந்து அவர்கள் குழந்தையை பெற்றுத்தர சொல்கிறார்கள் . கணவனின் உயிர் அணு + மனைவியின்   கரு முட்டை  இரண்டும்  நாயகியின்  வயிற்றில்  கர்ப்பப்பையில்  பொருத்தப்படும் . குழந்தை பெற்றுத்தர  ரூ 10 லட்சம்  சன்மானம் .


 ஆரம்பத்தில் மறுக்கும்  நாயகி  தன வறுமை நிலையை எண்ணி பின் சம்மதிக்கிறாள் .  அட்வான்ஸாக  ரூ 2 லட்சமும் மாதா மாதம்  ரூ 25,000  தந்து பேலன்ஸ் குழந்தை பிறந்த பின் செட்டில்மென்ட் என பேச்சு 



நிறை மாத கர்ப்பிணி ஆக நாயகி இருக்கும்போது  நாயகிக்கு ஒரு பிரச்சனை , அந்த தம்பதி பிரிந்து விடுகிறார்கள் . பேசிய பணத்தை  தர மறுக்கிறார்கள் 


 நாயகி போலீசில் புகார்  தருகிறார் , மீடியாவில் பரபரப்பாக  இந்த செய்தி பரவுகிறது  வில்லனின் பெயர் கெடுகிறது . இதனால் வில்லன் நாயகியைத்தீர்த்துக்கட்ட முடிவு எடுக்கிறான் . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


நாயகி ஆக திவ்யா துரைசாமி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . அவரது அம்மா கேரக்டர்  கூட சிறப்பு 


ஏ ஆர்   ரெஹானா எஸ் என் அருணகிரி ,ஹரிஷ்   அர்ஜூன் ,சரண்குமார்  ஆகிய   நால்வரும்  இசை . பாடல்கள்  ஓகே ரகம் . பின்னணி இசை சுமார் ரகமே   பரணி ,  ராஜீவ  ராஜேந்தர் , ஜெபின் ரெஜினால்டுக்கு  ஒளிப்பதிவாளர்கள் . கச்சிதம் . கதை ,  திரைக்கதை   எழுதி இயக்கி இருப்பவர் காமராஜ் வேல் 


 எடிட்டிங்க் கச்சிதம் . 2 மணி நேரம்  5 நிமிடம் படம் ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்


1    மூன்று சுமாரான  கதைகள் , ஒரு நல்ல கதை என்ற பார்முலாவில் களம்  இறங்கி இருக்கிறார் இயக்குனர் .


2   லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக நடிகையரிடம் நடிப்பை வாங்கிய விதம் குட் 



  ரசித்த  வசனங்கள் 


 பொண்டாட்டியைக்கட்டிப்பிடிக்கணும்னா அடிக்கடி அவளுக்கு ஏதாவது வாங்கிக்கொடுத்துட்டே இருக்கணும் போலயே? 


2   பணக்காரங்க புத்தி அப்படித்தான் , காரியம் ஆகும் வரை காலைப்பிடிப்பாங்க  , காரியம் முடிஞ்சதும்  கழுத்தைப்பிடிப்பாங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  வில்லனின் அடியாட்கள்  தண்டமாய்  ஹாஸ்பிடல்  வெளியே நிற்கிறார்கள் . பாதுகாப்புக்கு உள்ளே  இருவராவது வேண்டாமா? மீண்டும் கொலை முயற்சி நடக்கும் என்பது தெரியாதா? 


2 ஒருவருக்கு உடல் நலம் சரி இல்லாத பொது காம எண்ணங்கள்  எழாது என்பது மருத்துவ உண்மை . வில்லன்  சீரியஸ் கண்டிஷனில் உயிருக்கு  போராடுகிறான் . அப்போது அவனுக்கு எப்படி காமம் வரும் ? 


3  வில்லனை  கொலை செய்ய முடிவு எடுத்த நாயகி அந்த கோஷ்டி  கொடுத்த  ஆபரை  ஏற்றிருக்கலாமே? ஒரே கல்லில் 2 மாங்கா 

--------------------------------

4  சாலையில் அனைவரும் ஹெல்மெட்டுடன் பயணிக்கும்போது நாயகன், நாயகி மட்டும் ஹெல்மெட் போடாம டூ வீலரில் சுற்றுவது எதனால் ? 


===============

5 பொது வெளியில் , பீ ச்சில் ரவுடிகள்  அட்டகாசம் செய்யும்போது போலீசும் , பொதுமக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டா இருப்பார்கள் , மீடியாக்கள் என்ன செய்யு து ?


============

6  வாடகைத்தாய் அமர்த்த  சட்டப்படியே அணுகி இருக்கலாம் . திருமணம் ஆன ஆல்ரெடி  ஒரு குழந்தை பெற்ற எத்தனையோ ஏழைப்பெண்கள் தயாராக இருக்கிறார்கள் 


7  வாடகைத்தாய் ஆக தான்  ஆகப்போவதை நாயகி தன காதலனிடம் எதனால் சொல்லவில்லை ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தியேட்டரில் போய் பார்க்கும் அளவு ஒர்த் இல்லை , டி வி யில் போட்டால் நான்காம் கதையை மட்டும் பார்க்கலாம், ரேட்டிங்க்  2 / 5 

0 comments: