Monday, September 16, 2024

BAD NEWSZ(2024) - - ஹிந்தி - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

       


     80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு  ரூ 115 கோடி கலெக்சன்    செய்த படம் இது .உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் . இரட்டைக்குழந்தை  என்பதே  அபூர்வம் , அதிலும்  இரு குழந்தை களுக்கும்  இரு   வேறு அப்பா  என்பது அரிதிலும் அரிது . கோடி யில் ஒருவருக்குத்தான் அப்படி அமையும் .அப்படி  நடந்த ஒரு சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைதான் இது .சிக்கலான இந்தக்கதைக்கருவை காமெடியாக சொல்லி இருக்கிறார்கள் 19/7/2024 அன்று  திரை அரங்குகளில்  வெளியான  படம் இப்போது 13/9/24 முதல் அமேசான் பிரைம் ஓ டி டி  யில் காணக்கிடைக்கிறது     

1990 ல் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த அவசரப்போலீஸ் 100  படத்தில்  இரு வேடங்களில் வருவார் . அவரது மகன் அடிக்கடி  எனக்கு ரெண்டு அப்பா என காமெடியாக  சொல்வான் . அந்த காட்சியை   வேறு யாராவது படமாக்கி இருந்தால் விரசமாக அமைந்திருக்கும் . ஆனால்  ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படி அந்தக்காட்சியை திரையில்  காண்பித்தார் . அதே போல்  இந்த  இயக்குனரும்  சீரியஸான , சிக்கலான கதையை  காமெடியாக  மேலோட்டமாக சொல்லி இருக்கிறார்        


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு சமையல்காரர் .பைவ் ஸ்டார் ஹோட்டலில்  செப்  ஆக பணியாற்றும் அவருக்கு மேரகி ஸ்டார் ஆக வேண்டும் என்பது லட்சியம் . சினிமாவில் ஆஸ்கார் போல ,இலக்கியத்தில் நோபல் பரிசு போல  சமையல் கலையில் மேரகி ஸ்டார்  என்பது உயர்ந்த  பட்டம் 


நாயகி நாயகனை  ஒரு பார்ட்டியில் சந்திக்கிறார் . இருவரும் மனதைப்பறிகொடுக்கிறார்கள் . பெற்றோர்  நிச்சயித்த திருமணமாக அது நடக்கிறது . ஆனால்   திருமணத்திற்குப்பின் நாயகனின் அன்புத்தொல்லை தாங்க முடியவில்லை . அடிக்கடி நாயகி பணியாற்றும் இடத்துக்கே  வந்து அன்புத்தொல்லை  தருகிறார் . ஐஸ்வர்யாராயை  சல்மான்கான்  டார்ச்சர் செய்தது போல  , நயன் தாராவை சிம்பு லவ் டார்ச்சர் செய்தது போல  நாயகன் நாயகியை  டார்ச்சர் செய்கிறார் .இதனால் நாயகிக்கு   ஹோட்டல்  செப் பதவி பறிபோய் விடுகிறது .இதனால்  கடுப்பான  நாயகி நாயகனுக்கு டைவர்ஸ்  நோட்டிஸ் கொடுத்து விட்டு   புதிய  இடத்துக்குச்செல்கிறார் 


 அங்கே  ஒருவருடன் பழக்கம் ஆகிறது நாயகிக்கு  ஒரு நண்பன்  வாட்சப்பில் ஒரு மெசேஜ் அனுப்புகிறான் .அதில்  நாயகியின் கணவன்  இன்னொரு பெண்ணுடன்  ஜோடியாக  சுற்றுவது போல  போட்டோ இருக்கிறது . இதைப்பார்த்து செம  கடுப்பான  நாயகி சரக்கு அடித்து விட்டு  ஒரு கோபத்தில் , போதையில்  புதிய நண்பர் உடன் உறவு வைத்துக்கொள்கிறார் . அடுத்த  நாளே  நாயகி இருக்கும் இடத்துக்கே  நாயகன் வந்து அவள்: மனதை  மாற்றி  உறவு வைத்துக்கொள்கிறார் 


 நாயகி  கர்ப்பமாக  இருக்கிறார் .இரட்டைக்கரு .இரட்டை அப்பாக்கள் . இந்தப்பிரச்சினையை  நாயகி , நாயகன் , புது நண்பர் . மூவரின் குடும்பங்கள் எப்படி சமாளிக்கிறது  என்பதே மீதி திரைக்கதை 


நாயகி ஆக திருப்தி ட்ரீமரி  நடித்திருக்கிறார் . ஒருவர் அணியும் உடையை வைத்துத்தான் சமூகம் அவரை மதிப்பிடும் . நதியா , ரேவதி , சுஹாசினியை இந்த சமூகம் பார்க்கும் பார்வைக்கும், த்ரிஷா , அனுஸ்கா , நயன் தாரா  இவர்களைப்பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு . நாயகி  ஏற்றிருக்கும் கேரக்ட்டருக்கு அவரது ஆடை அலங்காரங்கள்  பொருந்தவில்லை . கவுரமான பணியில்  இருப்பவர் , குடும்பப்பெண்  இப்படித்தான்  அரை  குறையாக ஆடை அணிவார்களா?  மற்றபடி  நடிப்பு குட் 


நாயகன் ஆக விக்கி கவுசல் கலக்கல் நடிப்பு , இவர் முக சாயலில் சாந்தனு போல்  இருக்கிறார் .காமெடி ,நடனம்  ,சென்ட்டிமென்ட் மூன்றும் நன்றாக   வருகிறது  இன்னொரு  நாயகனாக  நாயகியின் புதுக்காதலன் ஆக அமி விரக  நடித்தருக்கிறார் . ஐயோ பாவம்  எனும் முக பாவம் .கச்சிதமான நடிப்பு 


 நாயகனின் அம்மாவாக வரும்  ஷீபா சத்தா  பிரமாதமான நடிப்பு , மற்ற அனைவருமே சிறப்பாக  நடித்திருக்கிறார்கள் 


பாடல்களுக்கான  இசையை  எட்டு பேரும் , பின்னணி இசையை இருவரும்  கவனித்து இருக்கிறார்கள் . பல இடங்களில் காமெடி களை  கட்டஉதவுகிறது .ஒளிப்பகிவு  டோபோஜிக் ரே  .குட் ஒர்க் 


ஷான் ,முகமது  தான் எடிட்டிங்க் . 2 மணி   நேரம் 8 நிமிடங்கள்  படம்  ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்

1   நாயகி  ஒரு மன மாற்றத்துக்காக வந்த இடத்தில் இன்னொருவருடன் பழக்கம் ஆவதை யதார்த்தமாக சுவராஸ்யமாக காட்சிப்படுத்திய விதம் 


2   கர்ப்பமாக  இருக்கும்  டைவர்ஸ் ஆன  நாயகியைப்பெண் பார்க்க நிச்சயம் செய்ய நாயகியின் பெற்றோருடன்  ஒருவன்   வருகிறான் , நாயகி கர்ப்பமாக இருப்பது  நாயகியின் பெற்றோருக்குத்  தெரியாது . கணவனுடன்  ராசி ஆன விஷயமும்  தெரியாது . அந்த சிச்சுவேஷனில்  நாயகியின்    தற்காலக்காதலனும்  வர  அப்போது நடக்கும் சமாளிபிகேஷன்கள் காமெடிக்கலக்கல்ஸ் 


3   நாயகிக்கு  திருமணம் ஆன புதிதில்  நாயகனின் அம்மா  அடிக்கடி  அவர்களுக்கு அன்புத்தொல்லை தரும் காட்சிகள்   அதற்கு  நாயகன்   சென்ட்டிமென்ட்  சமாளிப்புகள்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  மேரேஜ் என்பது ஒரு ஐ டி ப்ரூப்  அல்ல , மனசுக்கு எப்போத்தோனுதோ அப்போ பண்ணிக்கலாம் 


2  சாரி மிஸ் , நீங்க அழகா  இருந்ததால நீங்க டான்ஸ் ஆடும் ஸ்டெப் சை எல்லாம் கவனிக்கலை  உங்க அழகை மட்டும் தான் ரசிச்சுட்டு இருந்தேன் 


3    என் ஆர்டினரி  வாழ்க்கை யை எக்ஸ்டரா ஆர்டினரி  வாழ்க்கையா மாற்ற அவன் வந்தான் 


4  என்னது ?உன் இடையில்  டாட்டூ குத்தி இருக்கே? 

 அதனால என்ன? 

டாட்டூ  போட்டிருக்கும்   பெண்கள்  நல்ல மனைவியாக  இருக்க மாட்டார்கள்னு கேள்விப்பட்டிருக்கேனே ?  

 சும்மா  இந்த  வாட்ஸப் பார்வார்டுகளை எல்லாம் நம்பாதீங்க 


5  சார் ,நீங்க  வெர்ஜினா?

ஆமா சின்ன  வயசுல இருந்தே ...


6  எந்தப்பெரிய பிரச்சனை வந்தாலும் முதல்ல என் அப்பா கிட்டே   டிஸ்கஸ்  செய்வேன் 


7  டைவர்ஸ் பேப்பர்ல  நான் சைன் பண்ணிட்டேன் , அதனால லாஜிக்கலி டெக்ணிக்கலி  ஐ ஆம் சிங்கிள் 


8 THIS IS THE CASE OF  HETEROPATERNALSUPERFECUNDATION


9   உங்க  வாழ்க்கைல நடந்தது காமடியா?   டிராஜெடியா? 

நம்ம வாழ்க்கைல  நடந்தா அது டிராஜெடி , அடுத்தவங்க வாழ்க்கைல நடந்தா அது காமெடி 

10 டைவர்ஸுக்குப்பின்  தம்பதிகள் நண்பர்களாக  இருக்கக்கூடாதா?


11       ஒவ்வொரு அம்மாவுக்கும் அவளோட குழந்தை  கிரேட்டஸ்ட்   ஆப்  ஆல்  டைம் தான் 


12  நாம் பசிக்காக மட்டும்  சாப்பிடுவதில்லை , இந்த வாழ்க்கையைக்கொண்டாடவும்  சாப்பிடுகிறோம் 


13  சண்டைல . ஜெயிக்க உன் முட்டியை பயன்படுத்து , ஆனா இதயங்களை  ஜெயிக்க  உன் மூளையை பயன்படுத்து


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகிக்கு  கணவன் , புதுக்காதலன்   என்ற  இரு உறவுகள்  இருக்க  இந்த உண்மையை உணர்ந்தும்  மூன்றாவதாக  ஒரு ஆள்  அவளை மணக்க முன் வருவது  ஜீரணிக்கும்படி   இல்லை  

2   நாயகியைக்கவர   கணவனும் , காதலனும் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் அடடகாசங்கள்  கடுப்பு .மானம் கேட்ட குடும்பத்தில் பிறந்தவர்களா  என  எண்ண  வைக்கிறது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  2கே  கிட்ஸ்  தான் இதை ரசிக்க முடியும் . அந்தக்கால ஆசாமிகள்  ஒன்  ஸ்டெ ப்  பேக் . ரேட்டிங்  3 / 5 


மோசமான நியூஸ்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்ஆனந்த் திவாரி
எழுதியவர்இஷிதா மொய்த்ரா
தருண் துடேஜா
தயாரித்ததுகரண் ஜோஹர்
ஹிரூ யாஷ் ஜோஹர்
அபூர்வா மேத்தா
அம்ரித்பால் சிங் பிந்த்ரா
ஆனந்த் திவாரி
நடிக்கிறார்கள்விக்கி கௌஷல்
ட்ரிப்டி டிமிரி
அம்மி விர்க்
ஒளிப்பதிவுடெபோஜீத் ரே
திருத்தியதுஷான் முகமது
இசைபாடல்கள்:
ரோசக் கோஹ்லி
விஷால் மிஸ்ரா
டிஜே சேடாஸ்-லிஜோ ஜார்ஜ்
பிரேம்-ஹர்தீப்
கரன் அவுஜ்லா
அபிஜீத் ஸ்ரீவஸ்தவா
ஸ்கோர்:
அமர் மொஹிலே
உற்பத்தி
நிறுவனங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஏஏ பிலிம்ஸ்
வெளியீட்டு தேதி
  • 19 ஜூலை 2024
இயங்கும் நேரம்
140 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிஹிந்தி
பட்ஜெட்மதிப்பிடப்பட்ட ₹80 கோடி [ 2 [ 3 ]
பாக்ஸ் ஆபிஸ்மதிப்பிடப்பட்ட ₹115.74 கோடி [ 4 ]

Sunday, September 15, 2024

AJAYANTE RANDAM MOSHANAM (2024) மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் அட்வென்ச்சர் )

   

அஜயண்ட்டே  ரெண்டாம் மோசனம்  என்ற டைட்டிலுக்கு  அஜயனின்  இரண்டாம் திருட்டு  என்று பொருள் . இதை சுருக்கமாக   ஏ ஆர் எம்  என டைட்டில் வைத்துள்ளார்கள்     .ஓணம் பண்டிகை வெளியீடாக 12/9/24 முதல்  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆகி உள்ள பட,ம் இது . 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாள் வசூலாக 6 கோடி  கலெக்சன் செய்துள்ளது                


ஸ்பாய்லர்  அலெர்ட்

சம்பவம் 1  - ஒரு நாட்டு மன்னனிடம் விலை மதிப்பில்லாத    விளக்கு ஒன்று உள்ளது , பூமியில் வந்து விழும் அபூர்வமான விண்கல்லிலிருந்து உருவாக்கப்பட்டது . ஒரு சமயம் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்ட அரச குல நபரை நாயகனின் கொள்ளுத்தாத்தா காப்பாற்றுகிறார் .பரிசாக எதை வேண்டுமானாலும்  கேள்  என்றதும் அந்த அபூர்வ விளக்கைக்கேட்கிறார் . மன்னரும்  கொடுத்த வாக்கைக்காப்பாற்ற  அதைத்தந்து விடுகிறார் ( ஆனால் அது போலி விளக்கு என்பது பிறகு தெரிகிறது )


சம்பவம் 2 - நாயகனின் தாத்தா  ஒரு திருடர் . அவரது மனைவி  அதாவது நாயகனின் பாட்டி  கோயிலில்; இருக்கும் அபூர்வ விளக்கைப்பார்க்க ஆசைப்படுகிறார் . ஆனால் அவர் பிற்படுத்தப்பட்ட  இனத்தைச்சேர்ந்தவர்  என்பதனால்  கோயிலுக்கு உள்ளே வர அனுமதி இல்லை . இதனால்; நாயகனின் தாத்தா  அந்த அபூர்வ விளக்கை  சாமார்த்தியமாக திருடி மனைவியிடம் கொடுக்கிறார் . ஒரிஜினல் விளக்கு இருந்த இடத்தில் டூப்ளிகேட்  விளக்கை வைக்க செல்கையில் மாட்டிக்கொள்கிறார் . அப்போது அவர் கையில் இருந்த விளக்கை  மீட்டு விட்டதாக நினைத்து அதைக்கோயிலில் வைக்கின்றனர் . ஆனால் கோயிலில்; இருக்கும் விளக்கு ஒரிஜினல் இல்லை என்ற உண்மை  நாயகனின் தாத்தா , பாட்டி  இருவருக்கு மட்டுமே தெரியும் 


சம்பவம் 3 - நாயகன்  ஒரு எலக்ட்ரீசியன் . உள்ளூரில்  பெரிய மனிதர் மகளைக்காதலிக்கிறார் நாயகி உயர் குடி  ,இவர் பிற்படுத்தப்பட்ட  இனத்தைச்சேர்ந்தவர்  . ஆனாலும் நேர்மையாக  வாழ்பவர் . ஆனால் இவரது தாத்தா  திருடர் என்பதால்  இவரும்  திருடராகத்தான்  இருக்க வேண்டும் என  ஊர் நினைக்கிறது .வில்லன் அந்த ஊர் கோயிலில் இருக்கும்  அபூர்வ விளக்கு  ஒரிஜினல் இல்லை என்ற உண்மை  தெரிய  வர  ஒரிஜினலை க்கண்டு பிடிக்க   நாயகனால் தான் முடியும் என நினைத்து அவனை மிரட்டுகிறான் . வில்லன் சொன்னபடி செய்தால்  நாயகனின் காதல் நிறைவேறும்  என வாக்கு தருகிறான் .


 இதற்குப்பின் நிகழும்  சம்பவங்கள்  தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக டொவிநோதாமஸ்  3 வேடங்களில்  நடித்திருக்கிறார் . திருடர் ஆக தாத்தா ரோலில் தான்  நடிக்க அதிக வாய்ப்பு . அவருக்குத்தான் காட்சிகள் அதிகம் .மாறுபட்ட நடிப்பு . கமல் , விக்ரம்  படங்களைப்பார்த்த பிறகு ;இந்த நடிகர்களுக்கும் கெட்டப் சேஞ்ச் மேனியா  தொற்றிக்கொண்டிருப்பது கண்கூடு 


நாயகிகள் ஆக கீர்த்தி ஷெட்டி சுரபி லட்சிமி  மூவரும் நடித்திருக்கிறார்கள்: . அதிக வேலை இல்லை . கீர்த்தி ஷெட்டி கண்ணுக்கு அழகு . ரோகிணி ரகுவரன் நாயகனின் அம்மாவாக கவனம் ஈர்க்கிறார் நாயகனின் நண்பனாக பஸீல் ஜோசப் , பாட்டியாக  மாலா பார்வதி  இருவரும் வீணடிக்கப்பட்ட நல்ல கலைஞர்கள் 

நினு நிபன் தாமஸ்  தான் இசை ஒரே ஒரு பாட்டு . திருப்பதி லட்டு .பின்னணி இசை ஓகே ரகம் , ஆனால் காது வலிக்கும் அளவு சத்தம் . ஜெமோன்  டி ஜானின் ஒளிப்பதிவு  3 வெவ் வேறு  கால கட்டங்களை கண் முன் நிறுத்துகின்றது  ஆர்ட் டைரக்ஸன்  குட் . சி ஜி ஒர்க்கும் ஓகே ரகம் 

சபாஷ்  டைரக்டர்


1  கரையெல்லாம் செண்பகப்பூ (1981) , அரவாண் (2012) , ஆயிரத்தில் ஒருவன் (2010) ஆகிய மூன்று படங்களை பட்டி டிங்கரிங்   மன்னன் அட்லீயிடம் தந்து ஒரு படம் உருவாக்கச்சொன்னால் எப்படி  இருக்குமோ அது போல  ஒரு உட்டாலக்கடிக்கதை  ரெடி செய்தது 


2  கமல் , விக்ரம் , சூர்யா ரேஞ்ச்சுக்கு மூன்று  மாறுபட்ட  கெட்டப் என ஆசை காட்டி  டொவிநோதாமஸ் கால்ஷீட்  வாங்கியது 


3  மெயின் கதை  40 நிமிட கண்டடென்ட் தான் என்பதால் பிளாஷ்பேக்  கதையை ஜவ்வாக இழுத்த விதம் 

4    க்ளைமாக்ஸுக்கு முன்பு வரும்  அந்த களறி  சண்டை   ஸ்டன்ட்  ,மாஸ்டரின் பெயர் சொல்லும் காட்சி 


  


ரசித்த  வசனங்கள் 


1      மோட்டாரை நீ திருடுனதா அவங்க சந்தேகப்படறாங்க 


 ஆனா நான்  கஷ்டப்பட்டு உழைச்சு வாழ்றவன் 


 திருடுவது கூட கஷ்டமான வேலை தான் 


2  சண்டை நடந்தா அதை வேடிக்கைபா ர்ப்பது ஊர் மக்களோட குணாதிசய,ம் 


3 இந்த உலகத்துல முதல்ல  திருடன்  வந்தானா? போலீஸ் வந்ததா? தெரியுமா?  முதல்ல திருடன் தான்  வந்தான் . அதுக்குப்பின்  தான் அவனைப்பிடிக்க போலீஸ் வந்தது 


4  என்னோட   ஆகாயமும்  நீ தான்  ,என் பூமியும் நீ தான் 


5   ஒரு திருடனுக்கு அதிர்ஷடம்  எப்போதும்  எதிராபாராத இடத்தில் இருந்து தான் வரும் 


6   ஆட்சில  இருக்கும் ராஜா திருட்டுத்தனம் செஞ்சா அதுக்குப்பேரு ராஜதந்திரம் 


7 நான் ஆடும்  இந்த ஆட்டத்தில்; ; நீ  வெறும் ;சிப்பாய் மட்டும்தான் 


8 நீ பாரம்பரியமான  திருட்டுக்கூ;ட்டத்தின் பரம்பரையிலிருந்து வந்தவன் ,; எங்களு க்கு உன் பாரம்பரிய திருட்டுத்தனம் தான் தேவை 


9  இரு நாடுகளுக்கு இடையே போ;ர் வந்தா மக்களுக்கு பயம்  உண்டாகும்,;ஆனா இரு ஊர்களுக்கு இடையே சண்டை; வந்தா  மக்களுக்கு யார் ஜெயிப்பாங்கணு ஆர்வம் வரும்; 

10  அடேங்கப்பா , ரிசர்வ் பேங்க்கையே  கொள்ளை அடிக்கும்   அளவு   சாதனங்கள் இங்கே இருக்கு போலயே? ; 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வயசுப்பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு அடிக்கடி  எலக்ட்ரீஷியனை  வீட்டுக்கு வரவைத்து அவர்கள் காதலிக்க வழி வகை செய்வது  நம்பும்படி இல்லை 


2  நாயகன் சம்பந்தப்பட்ட  ஒரு வீடியோ காட்சியை வைத்து வில்லன் மிரட்டுவது காதில் பூ 


3 கோயிலில்  இருக்கும் சிலையை  நாயகனின் காத்தா நேரில் பார்த்தது கூட இல்லை ,அவரால் டூப்ளி க்கெட் சிலையை எப்படி  உருவாக்க முடிந்தது ? டீடடெய்லிங்க் இல்லை 


4  ஆக்சன் அட்வென்ச்சர்   என்று சொல்லி விட்டு வெறும் 20 நிமிடங்கள் தான்  அப்படிப்பட்ட காட்சி கள் வருகின்றன . தூக்கம் வருது  

5  வில்லனின் கேரக்டர் டிசைன் வலிமையாகஇல்லை . டம்மி  வில்லன் என்னும்போது நாயகன் எப்படி ஜெயிப்பான்? என்ற ஆர்வம் வராது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கேரளாவில் இது ஹிட் ஆகலாம் . ஆனா நம்ம ஊர் ஆடியன்ஸுக்கு பிடிக்காது . இது மாதிரி பல படங்கள் பார்த்துட்டோம் .சராசரிக்கும்   கீழே தான் . ரேட்டிங்  2.25 / 5  மலையாளப்படங்கள்  என்றாலே பிரமாதம் தான்  என ஒரு கூட்டம்   சுத்திட்டு  இருக்கு . நம்பி  ஏமாற வேண்டாம் 


ARM
Theatrical release poster
Directed byJithin Laal
Written bySujith Nambiar
Additional screenplayDeepu Pradeep
Produced byListin Stephen
Zachariah Thomas
Starring
Narrated byMohanlal
CinematographyJomon T. John
Edited byShameer Muhammed
Music byDhibu Ninan Thomas
Production
companies
Magic Frames
UGM Entertainment
Distributed byMagic Frames
Release date
  • 12 September 2024
Running time
142 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹30 crore[2]
Box officeest. ₹13.50 crore[3]

Friday, September 13, 2024

உழைப்பாளர் தினம் (2024) -தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா)

                 

   இது அனைத்து தரப்பினருக்குமான பொதுவான படமோ , ஜனரஞ்சகப்படமோ அல்ல . பிரிந்து வாழும் தம்பதியினர் , குடும்பத்தை விட்டுப்பிரிந்து  வெளிநாடுகளில்  வேலை செய்ப்பவர்களுக்கு மட்டுமே  கனெக்ட் ஆகக்கூடிய ஒரு படம்  டூ லெட்  (2018)  , காதலிசம் (2023) , வட்டார வழக்கு  (2023) ஆகிய படங்களில்  நடித்த சந்தோஷ் நம்பிராஜன்  நாயகன் ஆக நடித்து  இயக்கி  தயாரித்திருக்கும் படம் இது     


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  சிங்கப்பூரில்  பணி    புரிகிறான் . இந்தியாவில்  அம்மா, அப்பா , அண்ணன் , அண்ணி  என குடும்பம் உண்டு . சொந்த ஊரில் ஒரு கடை நடத்தவேண்டும் என்பதுதான் நாயகனின் லட்சியம்  . அதற்காக பொருள் ஈட்டும்  வேலையில் இருக்கிறான் . இந்த சூழலில்  அவனுக்குப்பெண் பார்க்கிறார்கள் . பெண் பார்க்கும் படலம் , கல்யாணம்,  சந்தோசம் என முதல்  பாதி  போழுது போக்காக நகர்கிறது 

பின் நாயகன்  மீண்டும்  சிங்கப்பூர்  வந்ததும் பிரிவுத்துயர் வாட்டுகிறது . சொந்தஊரிலேயே  இருக்குமாறு மனைவியும்  வற்புறுத்துகிறார் . நாயகன் சிரமப்பட்டு கட்டிய  கடையை  மேம்பாலம்  வர இருக்கிறது , ஹை வே போடப்போறோம்  என எதோ காரணம்  சொல்லி இடிக்க இருக்கிறார்கள் . நாயகன்  இடிந்து விழுகிறான் . இதற்குப்பின்  அவனது முடிவு என்ன? மீண்டும்  சிங்கப்பூருக்கே  சென்றானா?  இங்கேயே தங்கினானா? என்பது க்ளைமாக்ஸ் 

  நாயகன் ஆக  சந்தோஷ் நம்பிராஜன்   இயல்பான நடிப்பு .இயக்குனர் சேரன் நினைவுக்கு வருகிறார் . சோக நடிப்பிலும் , கருத்தாழம் மிக்க வசனம் பேசுவதிலும்  குட் . அறிமுக நாயகி ஆக  குஷி  நடித்திருக்கிறார் . முதல் நான்கு காட்சிகளில்  தடுமாற்றம் , பின் சமாளிப்பு   என  அவர் பங்களிப்பு ஓகே ரகம் . மீதி எல்லாப்பாத்திரங்களுமே  கொடுத்த  வேலையை சரியாகசெய்து  இருக்கிறார்கள்  

 மசூத் சம்சாநின் இசையில்  இரண்டு பாடல்கள்  அருமை . பின்னணி இசை சுமார் ரகம் தான் ஒளிப்பதிவு சதீஷ் துரைக்கண்ணு . பரவாயில்லை ரகம்  தான் .  எடிட்டிங்க் கோட்டீஸ்வரன் . 2 மணி நேரம் படம் ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1   ராங்க்  நெம்பர் கான்செப்ட்டில் நாயகன்  - நாயகி போனில்  சண்டை போட்டுக்கொள்வது , பெண் பார்க்கும் படலத்தில் ராசி ஆவது  எல்லாம்   கே பாக்யராஜ்  தூறல் நி ன்னுபோச்சு டச் 


2  முதல் இரவில்  பாலுக்குப்பதிலாக  பிளாஸ்க்கில் காபி கொண்டு வருவதும் அதற்கு நாயகி கூறும் காரணமும்  எஸ் ஜெ  சூர்யா  டச் 


3  பின் பாதி  ரொம்ப டிரை ஆன  சப்ஜெக்ட் என்பதால் முதல் பாதியில்  கிளுகிளுப்பு  சேர்த்திருக்கிறார்கள் . கொஞ்சம்  ஓவர் டோஸ் தான் 


4  கருத்தாழம் மிக்க  வசனங்கள் 

5     மகளின்   ஆபரேஷன் செலவுக்காக பண உதவி கேட்கும்போது நாயகனின் நண்பன்  முகத்தை மறைத்துக்கொண்டு  உதவி கேட்பதும் , நன்றி  தெரிவிக்கும்போது  முகத்தை மறைக்காமல்  நன்றி சொல்வதும் நெகிழ்ச்சியான   காட்சி 

6   தீராக்காதலே ,தினம் நீ தான் தேடலே  பாடல்  வரிகள்  அருமை 




ரசித்த  வசனங்கள் 

1   இலவசமா  யாருக்கும், எதுவும் செய்யாதீங்க 


2 சேர்ந்து வாழத்தான் கல்யாணம் , எதுக்கு பிரிஞ்சு வாழனும் ? 


3  நீங்க  இங்கேயும் , மனைவி   அங்கேயும்  இருந்தா  குடும்பம் எப்படி  விளங்கும் ? 


4  பிள்ளைகளை  நேர்ல பார்த்ததை  விட போட்டோவில்  பார்த்ததுதான் அதிகம் 


5   இப்போ  சேர்ந்து வாழணும்னு  தோணுது , ஆனா வெள்ளம் வடிஞ்ச்பின்   தலையில் எண்ணெய் வெச்சு என்ன பிரயோஜனம் ? 


6  பணம்  முக்கியம்  தான் , ஆனால் வாழ்க்கை அதை விட  முக்கியம் 


7   கஸ்ட்மஸ்   க்கும் சேர்த்துத்தான்  நாம சம்பாதிக்க வேண்டி இருக்கு 


8  வெளியூர் போனாதான்  நம்ம ஊரு அருமை தெரியும் , வெளி  நாடு  போனாதான்  நம்ம நாடு அருமை தெரியும் 


9  பில்டி ங்க்  வேலை எல்லாம் தொடங்குன உடனே முடிச்சுடனும் 


10  வீட்டு சாப்பாடு ஆறி இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும் 



11  சொந்த ஊருல அகதியா வாழ் வது எவ்ளோ பெரிய வலி தெரியுமா? 


12 நம்ம கஷ்டத்துல யாரு நமக்கு உதவி பண்றாங்களோ அவங்க தான்  நம்ம சொந்தக்காரங்க 


13  உலகத்துலயே பெரிய பெஸ்ட்  சைடு டிஸ்   எது   தெரியுமா? - கூட இருக்கறவனை கலாய்த்தல் 


14    சிரிக்கற  மாதிரி வாழ்க்கை அமைந்தால் ஓகே 

       அழற  மாதிரி வாழ்க்கை அமைந்தால் ஓகே 


     ஆனா  சிரிச்சுக்கிட்டே  அழற  மாதிரி வாழ்க்கை   அமைந்தால் நரகம் 


15   கஷ் டப்பட்டு  கால் அங்குலம் மேலே  ஏறுனா  40 அங்குலம்  கீழே  இறக்கி விட்டுடுது  விதி 


16 கம்யூனிஸ்ட்  நீங்களே   வலது , இடதுனு பிரிஞ்சு இருக்கீங்க , முதல்ல நீங்க ஒன்னு சேருங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   ஒரிஜினல் பத்திரம் , ஜெராக்ஸ் காபி  டாக்குமெண்ட்  இரண்டுக்கும்  வித்தியாசம்   தெரியாதா? 


2   அண்ணன் , தம்பி  என  இரு  வாரிசுகள்  இருக்கும்போது     தம்பியின்    கையெழூத்தோ , சம்மதமோ  இல்லாமல்  வீட்டை  அண்ணன்   பெயரில்   எழுதி  வைக்க முடியாதே? 


3  நாயகனின் அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்றதும் முதலில் ஜிஹெச் போய்   பார்த்து  விட்டு   அங்கே  சரி ஆகவில்லை எனில் தனியார் ஹாஸ்பிடல் போகலாம் என்பதுதானே சரியன முடிவு ? சிக்கனம்? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - u



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பொறுமை  தேவை . சில காட்சிகள்  நாடகம் பார்பபது போலிருக்கும் . ரேட்டிங்க்  2.5/ 5 

Wednesday, September 11, 2024

ADIOS AMIGO (2024) -மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ நெட்பிளிக்ஸ்

         

 டைட்டிலுக்கு  அர்த்தம்  Farewell, friend  என  விக்கி பீடியா சொல்லுது .நான் கூட இரு நண்பர்களின் பெயர் என்று போஸ்ட்டர் டிசைன் பார்க்கும்போது நினைத்தேன்      காமெடி டிராமா  என  பிரமோட் செய்யப்பட்டாலும் இது அன்பே சிவம் மாதிரி  ஒரு பீல் குட் மூவி , எல்லோருக்கும் பிடிக்காது .பொறுமை முக்கியம்,பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்         


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனோட அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லை ,ஹாஸ்ப்பிடலில் சேர்த்திருக்காங்க . உடனடியா ரூ 50,000  பணம்  தேவை என தங்கை நாயகனுக்கு போன் பண்ணி சொல்றா .நாயகன் பணம்  ரெடி பண்ண  முயற்சி செய்கிறான் .பல நண்பர்கள் கை  விரித்து விட  ஒருவன் மட்டும்  காசோலை  கொண்டு வந்து கொடுத்துட்டுப்பணம் வாங்கிக்கோ என்கிறான் . அவன் சொன்னபடி  பஸ் ஸ்டேண்ட்  போகிறான் .அங்கே  ஒரு நபரைப்பார்க்கிறான் .அவன் பெரிய கோடீஸ்வரன் போல . பணத்தை  அசால்ட் ஆக செலவு செய்கிறான் . டீக்கடையில்  50 ரூ பாய்க்குபதிலாக  500 ரூபாய் தருகிறான் . லாட்டரி விற்கும் பெண்ணிடம்  மொத்த லாட்டரி டிக்கெட்டையும் வாங்கி மகிழ்விக்கிறான்  



அந்த நபர்   நாயகனை டீ சாப்பிட அழைக்கிறான் . நாயகனும் போகிறான் . பெரிய தொழில் அதிபரின் மகன் போல . ஆனால் சரியான சரக்கு பார்ட்டி . முழு போதையில் இருக்கிறான் . இவன் மனது வைத்தால் தன பிரச்சனை தீரும் என நாயகன் நினைக்கிறான் . அந்த நபர்  நாயகனை  திருவனந்தபுரம் போகலாம்  என அழை க்கிறான் . நாயகனும் அவன் உடன் செல்கிறான் 



அந்த நபரின்   முன்னாள்  காதலி கொல்லத்தில் ஒரு ஜவுளிக்கடையில்  கேஷியர் போல . அவளைக்கான  திருவனந்தபுரம் பஸ்ஸில்  இருந்து இறங்கி  திடீர் என கொல்லம்  ஸ்டாப்பில்  இறங்குகிறார்கள் . இதற்குப் பின் நாயகனுக்கு நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக சுராஜ் வெஞ்சாரமூடு அட்டகாசமாக  நடித்திருக்கிறார் .படம் முழுக்க அவர்  முகத்தில் ஒரு பதட்டம்  தெரிவது அருமை . கோடீஷ்வரனாக  ஆசிப் அலி  சரக்கு சங்கரலிங்கமாகவே மாறி விட்டார் .பிரமாதமான  நடிப்பு 


கோடீஸ்வரனின் முன்னாள் காதலி ஆக அனகா  ஹோம்லி லுக் , பாந்தமான நடிப்பு .நாயகனின் நண்பர்களாக அல்தப்   சலீம் ,சைன் டாம் சாக்கோ  இருவரும் கெஸ்ட் ரோலில் வந்திருக்கிறார்கள் 


பாடல்களுக்கான இசை - கோபி சுந்தர் + ஜேக்ஸ் பிஜோய்  , பின்னணி  இசை ஜேக்ஸ் பிஜோய்  .கச்சிதம் 


ஒளிப்பதிவு  ஜிம்சய் காலித் . நுணுக்கமான முக உணர்வுகளை பிரமாதமாகப்படம் பிடித்து இருக்கிறார் . 

எடிட்டிங்க்  நிஷாத்  யூஸுப் . இரண்டேகால் மணி நேரம் படம் ஓடுகிறது 


வித்தியாசமான  கதைக்கருவை எழுதி  இருப்பவர்  தங்கம் .இயக்கி இருப்பவர்  நகாசு நாசர் 

சபாஷ்  டைரக்டர்

1   படத்தில்  டூயட் இல்லை ,சண்டைக்காட்சிகள் இல்லை , வன்முறை இல்லை ,மொக்கைக்காமெடி டிராக் இல்லை . ஆனால்  ஒரு சிறுகதையை வாசிப்பது போல  கதையுடன் ஒன்றி விடுகிறோம் 


2  பஸ்ஸில்  தகராறு செய்த ஆளை  பயமுறுத்த  ஆசிப் அலி  செய்யும்  டெக்னிக் செம  மாஸ்  மசாலா ஆக்சன்  படம் போல  ஒரு காட்சி , ஆனால்  அதைக்காமெடியாக்கிய விதம் குட் 


3   ஆசிப் அலி  , கொல்லத்தில்    தன  முன்னாள்    காதலியை  சந்திக்க விழையும் காட்சி கவிதை 


4   வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் கணவர் முகம் கடைசி வரை  காட்டி இருக்க மாட்டார் ஆர் சுந்தர்ராஜன் . அதே போல  படம் முழுக்க நாயகனின்  அம்மா ,   தங்கை , ஆசிப் அலியின் மனைவி  , அம்மா  ஆகிய  நான்கு முக்கியக்கதாபாத்திரங்களின்     முகமும்  காட்டப்படாது . ஆனால் அவர்களைப்பார்த்த உணர்வு வரும், அருமையான இயக்கம் 


5    டாக்சிக்கு  பணம் கொடுக்க முடியாமல்  தடுமாறும் காட்சிகள்   ஒரு பதட்டத்தை ஏற்படுத்துகிறது 


6    ஜீவன்  உள்ள க்ளைமாக்ஸ் 



  ரசித்த  வசனங்கள் 


1    டீன் ஏஜ் பசங்க லவ் பண்றதுக்கான சிச்சுவேஷனை பேரன்ட்ஸ் சே  உருவாக்கித்தரனும் 


2 பிரச்சனைகள்   வர்றதுக்கும் ,அது முடியறதுக்கும் ஒரு நிமிஷம் போதும் 


3  ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவம் .புதுப்புது  நட்புகள் கிடைக்கும் 


4  முன்னே பின்னே  தெரியாதவங்க கூட  நமக்கு உதவி பண்ணத்தயாரா இருக்காங்க. கடவுள் அவங்களை நம்ம கண்ணுக்குக்  காட்டனும் 


5 முதல்ல   என்  தலைல இருக்கும் நெருப்பை அணைச்சுக்கறேன், அதுக்கு அப்புறமா  மலைல இருக்கும் நெருப்பை அணைக்கறேன்,


6  ஒரு 100 ரூபா கிடைக்காம எத்தனை  பேரு கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க தெரியமா?உனக்கு பணத்தோட  அருமை தெரியுமா? 

ஊருலிருக்கற  எல்லார் கஷ்டத்தையும் என்னால எப்படித் தீர்க்க  முடியும்? நான் பார்க்கறவங்க   கஷ்டத்தை மட்டும் தான் என்னால தீர்க்க  முடியும்

7 ஆசைப்பட்ட பெண்ணைக்கல்யாணம் பண்ண முடியாமபோனா   கஷ்டம் என்ன? என எனக்கும் தெரியும் 

8  என்னோட ஆசையே - யாரோட உதவியும் இல்லாம   நான் வாழனும்கறதுதான் 

9  நம்மைக்கெடுக்கும்  விஷயங்கள்   எவ்ளோ  நல்லாதா  இருந்தாலும்  அதை  நாம ஏத்துக்கக்கூடாது 

10 சந்தோசம் வரும்போது  சந்தோசப்படவேணாமா?அதுதானே அதுக்கு மரியாதை ?

11    நீ எனக்கு உதவி பண்ணலைன்னாலும்  எனக்கு உதவி பண்ணனும்னு   நினைத்தாய் பாரு அது எனக்குப்பிடிச்கிருக்கு 

12     சிலரை  எல்லாம் முதல் டைம் பார்க்கும் போதே  நமக்குப்பிடிச்சிடும் 

13  யாருக்கும் உதவாத  காசு வெறும் பேப்பர் தான் 

14  இருக்கறவங்க எங்கே சுத்துனாலும் கடைசில வர வேண்டியஇடத்துக்கு வந்துடுவாங்க, இல்லாதவங்க ? 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 



1 கோடீஸ்வரனுக்கு , தொழில் அதிபருக்கு டவுன் பஸ்  ஸ்டேண்டில் என்ன  வேலை ? அதை தெளிவாக சொல்லவில்லை 

2  இந்த  பஸ்   வைக்கம் போகுதா? என மலையாள வெர்சனில் டயலாக் .அதை தமிழ் டப்பிங்கில் துபாய் போகுதா? என   மாற்றி இருக்காங்க.எதனால்? 

3   ஆலப்புழா டு  எர்ணாகுளம் செல்ல நாயகனுக்கு கைல காசில்லை . . 100 ரூபா ஒருத்தர்ட்டகேட்கறாரு   ரயில்ல போய் இருக்கலாமே? பெரிய பெரிய  தலைவர்கள் எல்லாம் வித் அவுட்ல ரயில்ல போய் இருக்காங்களே? 

4  தன காதலிக்கு பண உதவி செய்ய ஆசிப் அலி நினைக்கிறார் . அடிக்கடி போன் பண்ணி உன்  பேங்க் அக்கவுண்ட் நெம்பர்  கொடு என கிடக்கிறார் .காதலி தரவில்லை . கூகுள்   பே  பண்ணி  இருக்கலாமே? அதான் போன் நெம்பர் இருக்கே? 


5  அவ்ளோ பெரிய கோடீஸ்வரருக்கு   டெபிட் கார்டு , க்ரெடிட்  கார்டு இல்லையா? 


6  ஹோட்டலில்   பக்கத்து அறை  தம்பதியிடம்  தகராறு செய்யும்   ஆசிப் அலி  பின் தப்பிக்க மீண்டும் தன அறைக்கே  வருகிறார் .அதை  விட பாதுகாப்பு அப்டியே வெளியே போய் எஸ் ஆவதுதான் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எஸ் ராமகிருஷ்ணனின்  தேசாந்திரி  படித்த  வாசகர்கள் , அன்பே சிவம் , குணா மாதிரி  கல்ட்  கிளாசிக்  படங்களை  ரசித்தவர்கள் , பொறுமைசாலிகள் , பெண்கள்   அவசியம் பார்க்க  வேண்டிய படம் . ரேட்டிங்க்  3.25 / 5 


Adios Amigo
Theatrical release poster
Directed byNahas Nazar
Written byThankam
Produced byAshiq Usman
StarringAsif Ali
Suraj Venjaramoodu
CinematographyJimshi Khalid
Edited byNishadh Yusuf
Music by
Production
company
Distributed byCentral Pictures
Release date
  • 9 August 2024
CountryIndia
LanguageMalayalam

Tuesday, September 10, 2024

PECHI (2024) - பேச்சி -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர்)

           

      டி வி சீரியல்கள் , திகில் படங்கள் ,பேய்ப்படங்கள் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை , ஆனாலும் சில பாசிட்டிவ் விமர்சனங்கள் இப்படம் ஒரு நல்ல படம் என்பதை வலியுறுத்தியதால் பார்த்தேன் . 2/8/2024  முதல் திரை  அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம்  16/9/24 முதல் ஒ டி டி  யில் வர இருக்கிறது       


ஸ்பாய்லர்  அலெர்ட்

ஒரு முன் கதை - பலவருடங்களுக்கு முன்பு ஒரு சூனியக்காரி  சாகா வரம் வேண்டி சாத்தானை நோக்கி தவம் இருக்கிறாள் . அவள் அந்த வரத்தைப்பெற்று விட்டால் உலகம் நாசம் ஆகி விடும் என்பதால் அந்த  ஊர்  மக்கள் திட்டம் போட்டு  ஒரு பூசாரி உதவியடன் சூனியக்காரி யை  கொலை செய்து விடுகிறார்கள் .அவள் உருவம் போல ஒரு பொம்மை செய்து ஒரு மரத்தில்  ஆணி அடித்து மாட்டி விடுகிறார்கள் .யாராவது அந்த ஆணியை அகற்றினால் சூனியக்கரி உயிர் ;பெறுவாள் . அங்கே  யாரும்  வரக்கூடாது என்பதற்காக  இது தடை செய்யப்பட்ட பகுதி  என போர்டு வைத்து எச்சரிக்கை செய்கிறார்கள் /.உள்ளூர்  மக்கள் யாரும் அங்கே  வருவதில்லை . 


சூனியக்காரி யை  கொலை செய்ய உதவிய  பூசாரியின்  வம்சத்துக்கு  எதிர்காலத்தில்  சாத்தானால் ஆபத்து வந்து விடக்கூடாது என ஒரு மந்திர  தாயத்தை   ரெடி செய்து பூசாரி  தன வாரிசுகளுக்கு தந்து விட்டு இறக்கிறார் .. பல தலைமுறைகளுக்குப்பின்  இப்போது  அந்த தாயத்து கதையின் நாயகன் ஆன கானக  கைடு  இடம் உள்ளது . அவனுக்கு ஒரு மனைவி , ஒரு குழந்தை உண்டு 



5 பேர் கொண்ட  ஒரு குழு ட்ரெக்கிங்க்  மாதிரி  அந்த  ஏரியாவுக்கு வருகிறார்கள் .மூன்று  ஆண்கள் , இரு பெண்கள்  . இதில்  இரு காதல் ஜோடிகள்  அடக்கம் . இவர்கள் மெத்தப் படித்தவர்கள்  என்பதாலும் , பகுத்தறிவுக்கிடங்காகவும் இருப்பதால்  இந்த சூனியக்காரி   கதையை எல்லாம் நம்பவில்லை . நாயகன் ஆன கைடையும் நம்பவில்லை . அவர்கள்  என்ன ஆனார்கள் என்பது  மீதி திரைக்கதை . க்ளைமாக்சில்  யாரும் எதிர்பாராத ஒரு டிவிஸ்ட்டும் உண்டு 

 நாயகன் ஆக  பால சரவணன்  கச்சிதமாக நடித்துள்ளார் .மற்ற ஐவரும் ஆபத்தில் சிக்கும்போது இவர் அடையும் பதட்டம் அபாரம் . சொந்தக்காரங்க கூட அவ்ளோ அக்கறை எடுத்துக்க மாட்டாங்க . இயல்பான, உயிரோட்டமான நடிப்பு .


 முக்கியமான  ரோலில்  நடுவுல கொஞ்ச்ம பக்கத்தைக்காணோம் காயத்ரி . பாராட்ட வைக்கும் நடிப்பு . இவர்கள் போக  ப்ரீத்தி நெடுமாறன் , தேவ் ராம்நாத் , ஜனா , மகேஷ்வரன்  அனைவரும்  கொடுத்த ரோலை சரியாக செய்து இருக்கிறார்கள் . நாயகனின் மனைவியாக ஆதிரை , சூனியக்காரி ஆக  சீனியம்மாள்  இருவரும் கச்சிதம் 


ராஜேஷ் முருகேஷ் இசை ஓகே ரகம் .பின்னணி இசையில் இன்னும் மிரட்டி  இருக்கலாம் .எட்டடிங் அஸ்வின் . 107 நிமிடங்கள்  படம் ஓடுகிறது . ஒளிப்பதிவு பார்த்திபன் .கானகத்தின் அழகைப்படம் பிடிக்கிறது 


வாஸ் என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  பி ராமச்சந்திரன் 


சபாஷ்  டைரக்டர்

1   முப்பது நிமிடங்களில் முடிக்க வேண்டிய ஒரு குறும்படத்தை  107 நிமிடங்கள் இழுத்த விதம் 


2  சுமாரான  ஒரு படத்தை க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் மூலம் சுவராஸ்யமான படமாக ஆக்கியது 


  ரசித்த  வசனங்கள் 


1   ஹேங்க் ஓவர் என்பது அடிக்கற சரக்குல இல்லை , அடிக்கிற அளவுல  இருக்கு 


2  இந்த  கானகத்துல கூட யாரோ வந்து சரக்கு அடிச்சுட்டு   போய் இருக்காங்க , பாரேன் 


 நம்ம ஆளுங்க நிலவுக்குப்போனாக்கூட அங்கேயும் சரக்கு அடிப்பாங்க 


3 சாதா மனுஷங்களுக்குத்தான் அது சாத்தான், ஆனா சூன்யக்கரிக்கு அதுதான் கடவுள் 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  டைட்டில் சரி இல்லை .பேச்சி பேச்சீ  நீ பெருமை உள்ள பேச்சி என ராமராஜன் பாடியது தான் நினைவு வருகிறது .கொல்லிமலை அல்லது அரண்மனைக்காடு , அல்லது சூனியக்காரி  என வைத்திருக்கலாம் 


2  சூனியக்காரி கொடுமைக்காரி என்பதை காட்சியாக விளக்கவில்லை . வசனமாக மட்டுமே  வருகிறது . அதனால் அவரைக்கொல்லும்போது நமக்கு பரிதாபம் தான் வருகிறது 


3  நாயகன் கழுத்தில்  போட்டிருக்கும்  தாயத்து  கை  கலப்பில் இன்னொருவர் கழுத்துக்குப்போவது நம்பும்படி இல்லை 

4  அந்த  ஐந்து கேரக்டர்களும்  ஓவர் தெனாவெட்டாகப்பேசிக்கொண்டிருப்பதால் அவர்கள்  மீது ஆடியன்ஸுக்கு  பரிதாபம் வரவில்லை . அதனால் அவர்களுக்கு என்ன ஆகுமோ  என்ற பதைபதைப்பு வரவில்லை . இது பெரிய மைனஸ் 

5  ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை ஒருவர் அசால்ட்டாக  மரத்தின் அருகே  மறந்து வைத்து விட்டு வருவதும் நம்பும்படி இல்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - u/a



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மோசமும் இல்லை , பிரமாதமும் இல்லை . பொழுது போகவில்லை எனில் டி வி லபோட்டா பார்க்கலாம் ரகம் . ரேட்டிங்க்  2 / 5 


பேச்சி
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்ராமச்சந்திரன் பி
எழுதியவர்ராமச்சந்திரன் பி/வாஸ்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுபார்த்திபன் டிஎஃப்டெக்
திருத்தியதுபற்றவைத்த அஸ்வின்
இசைராஜேஷ் முருகேசன்
உற்பத்தி
நிறுவனங்கள்
வெயிலான் எண்டர்டெயின்மென்ட்
வெரஸ் புரொடக்ஷன்ஸ்
வெளியீட்டு தேதி
  • 2 ஆகஸ்ட் 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Sunday, September 08, 2024

ORU YATHRAMOZHI ( 1997) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா ) @ யூ ட்யூப்

         

              மோகன் லால் நடித்த படங்களில் அண்டர் ரேட்டட் மூவி என  இதை சொல்லலாம் . சிவாஜி கணேசன் , திலகன்  காம்ப்போ வில் வந்த   படம் தமிழில் 2017 ல்  பயணத்தின் மொழி   என்ற  டைட்டிலில்  டப்   செய்யப்பட்டது . தமிழ் வெர்சன் யு டியூபில் கிடைக்கவில்லை இயக்குனர் பிரதாப் போத்தன் + இளையராஜா  காம்பினேஷனில்  இப்படி ஒரு படம் வந்தது  பலருக்கும்  தெரியாது .  .கதை  - பிரியதர்சன . திரைக்கதை , வசனம்  ஜான் பால் 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன்   தன அம்மாவுடன்  வசித்து வருபவன் . அப்பா எங்கேயோ ஓடிப்போய் விட்டார் . சின்ன வயதில் இருந்தே  அப்பா  இல்லாதவன் அப்பா பெயர்  தெரியாதவன் என எல்லாரும் கிண்டல் செய்ததால் அப்பா மீது செமக்கடுப்பாக இருக்கிறான் . அப்பாவைத் தேடிக்கண்டுபிடித்து கொலை செய்வதே அவனது லட்சியமாக இருக்கிறது 


அப்போது அந்த ஊருக்கு ஒரு கவர்மெண்ட் காண்ட்ராக்டர்  வருகிறார் . அவருடன் நாயகனுக்கு ஒரு நெருக்கமான நட்பு உருவாகிறது .ஒரு கட்டத்தில்  அவர் தான் நாயகனின் அப்பா என்பது நமக்குத்தெரிய வருகிறது , ஆனால் நாயகனுக்கு  அது தெரியாது . நாயகனின் அம்மா  நீண்ட வருட இடைவெளிக்குப்பின்  தன கணவனைப்பார்க்கிறாள் . பார்த்த சந்தோஷத்தை விட  இவர் தான் அப்பா என்பது  தன மகனுக்குத்தெரிய  வந்தால்  கொலை நடக்கும் , மகன் ஜெயிலுக்குப்போவான்.இந்தக்கவலையாலேயே  அம்மா  உயிர் இழக்கிறாள் 


க்ளைமாக்சில்  நாயகனுக்கு உண்மை  தெரிய  வரும்போது  என்ன முடிவு எடுத்தான் என்பதே மீதிக்கதை  


நாயகன் ஆக மோகன் லால் . வழக்கம் போல அமைதியான நடிப்பு .அவருக்கு ஜோடியாக ரஞ்சிதா . ஆச்சரியம் ஊட்டும்  விதமாக கிளாமர் இல்லாத கண்ணிய ரஞ்சிதா . அப்பாவாக சிவாஜி. பூப்பறிக்க வருகிறோம்  கெட்டப்பில்  வருகிறார் . ஓவர் ஆக்டிங்க் இல்லாமல் கச்சிதமான நடிப்பு நாயகனின் அம்மாவின் காதலன் ஆக  நெடுமுடி வேணு  அருமையான நடிப்பு .

நாயகனின் அம்மா   ஆக  பாரதி விஷ்ணுவர்தன் சரோஜா தேவி சாயலில்  இருக்கிறார் . உருக்கமான நடிப்பு . வில்லன் வேண்டுமே  என்பதற்காக பிரகாஷ் ராஜ் . ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் அப்லாஸ்  வாங்கும் நடிப்பு திலகன் உடையது 

இசை இளையராஜா  6  பாடல்களில்  3  ஹிட்டு . பின்னணி இசை வழக்கம் போல அருமை முத்துக்குமாரின் ஒளிப்பதிவில்  காட்சிகள் கண்ணுக்குக்குளுமை  எடிட்டிங்க் பி லெனின் , வி டி  விஜயன் .இரண்டேகால் மணி நேரம் படம் ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்


1இளையராஜாவின் பின்னணி இசை பல இடங்களில் கதைக்கு ஜீவன் சேர்க்கிறது . குறிப்பாக நெடுமுடி வேணு - சிவாஜி சந்திப்பின்போது  போட்ட பிஜிஎம் அடிபொலி 


2  மோகன் லால் , ரஞ்சிதா , சிவாஜி , நெடுமுடி வேணு  நால்வரின் நடிப்பும் பிரமாதம் 

3  க்ளைமாக்ஸ்   காட்சியில் திலகன் - சிவாஜி சந்திப்புக்காட்சியும் , அதில் வரும் டிவிஸ்ட்டும் .. அந்தக்காட்சில் திலகனின் நடிப்பு அட்டகாசம் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1 மஞ்சோழும்  ராத்திரி  மாஞ்ச்சு  ( டைட்டில்சாங்க் )


2    தை  மாவின்  தணலில்  ( டூயட் சாங்க் ) 

3  காக்காலக்கண்ணம்மா கண் விழிச்சுப்பாரம்மா  கன்னி மனம் (சிவாஜி + மோகன் லால் காம்போ சாங்க் )


  ரசித்த  வசனங்கள் 


1  நான்  அந்த வழியாத்தான் வண்டில போறேன் , நீ  வந்தா  உன்னை அங்கே இறக்கி விட்டுடறேன் 


 இறக்கி   விட  நான் என்ன சரக்கா? 


2   சிவாஜி பஞ்ச் -  இந்த உலக மேப்பில்  எத்தனை இடம் உண்டோ அங்கே எல்லாம்  தடம் பதிச்சவன் நான் , என் கிட்டே  உன் வேலையை வெச்சுக்காத 


3   எனக்கு எதிரிகள்  மட்டும் தான் இருக்காங்க, அதனால என்னைப்பற்றிக்கவலைபபடாதீங்க. நீங்க தான் அசலூர்க்காரர். நீங்க தான் ஜாக்கிரதையாயிருக்கணும் 


 நான் உனக்குக்கவசம் மாட்டலாம்னு பார்த்தா  அதே  கவசத்தை எனக்கு மாட்ட நினைக்கறே? சபாஷ் 


4  வித்தை இல்லாத மனுஷன் செத்த பொணத்துக்கு சமம் 

5  பெற்ற அப்பாவை கொன்ற மகனை பிரசவித்த  மகாபாவி என்ற பெயர் எனக்குக்கிடைக்கணுமா? 


6  நான்  செஞ்ச  பாவம் சிறுகதையா முடிஞ்சுடும்  என நினைச்சேன் , ஆனா தொடர்கதையா தொடரும்னு நினைக்கலை 

7  உண்மை தெரியும்போது அதை தைரியமா நேரில் சந்திக்க துணிவு வேண்டும் 

8காரியத்தை நாம செய்யறோ ம் , காரணத்தை ஆண்டவன்   தீர்மானிக்கிறான் , சில காரியங்கள் நன்மையில் முடியும் , சில காரியங்கள் தீமையில் முடியும் 3

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   வில்லன் பிரகாஷ் ராஜ் ஒரு பெண்ணை  ரேப் செய்ய அவள் தனிமையில் இருக்கும்போது அவள் வீட்டுக்குள் நுழைகிறான் . அருகில் அபயக்குரல் கேட்டு நாயகன் அங்கே  வந்து பெண்ணைக்காப்பாற்ற  முயலாமல்  உள்  பக்கம் தாழ் போட்ட ரூம் கதவின் வெளிப்பக்க தாழ்  போடுகிறான் . இது எதுக்கு ?  ஊர் மக்களை வர வைத்து வில்லனை மாட்ட வைக்கவா? அதுக்குள்ளே  அவன்  ரேப் பண்ணிடமாட்டானா? ஆனா  வில்லன் அப்படி செய்யல . அவ கிட்டே  மன்னிப்பு கேட்டுட்டு கிளம்பறான் . என்ன விதமான காட்சி இது ? 

2   நாயகனின் அம்மா    தன கணவனின் போட்டோ வைத் தன் மகனிடம் காட்டி  இவர் தான் உன் அப்பா என அடையாளம் காட்ட மாட்டாரா?  அல்லது நாயகன் தான்  தன அப்பா  போட்டோ  காட்டு என அம்மாவிடம் கேட்க மாட்டாரா? இந்த இரண்டில் ஒன்று நிகழ்ந்திருந்தால்  இரண்டு மணி  நேரம் மிச்சம் ஆகி இருக்கும் 


3   இன்னொருவரின் மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத போது  நாயகன் அங்கே வந்து அவருக்கு கசாயம் வைத்துத்தருவது ஓகே , அதற்கு கதவை எதுக்கு சாத்தி வைக்கணும் ? அந்தப்பெண்ணின் கணவன்  போலீஸ் கூட்டத்துடன் வந்து நாயகன் மீது  பழி சுமத்துகிறார் , அந்தக்காட்சி  டிராமா சீன போல இருக்கு 

4  நாயகனின் அம்மா  தன கணவன் கூட ஜோடியாக இருக்கும் போட்டோவை  தன வீட்டில் பெட்டியில் தான் வைத்திருக்கிறார் . அதைக்கூடநாயகனால் கண்டுபிடிக்க முடியவில்லை? 

5  வாய்ப்பிருந்தும் சிவாஜி  தன்  மனைவியை சந்திக்க , பாவ மன்னிப்புக்கேட்க வீட்டுக்குப்போகாதது எதனால் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 30 நிமிடம்தான் மொத்தக்கதையின் சாராம்சம் . ஆனால்  இரண்டேகால் மணி நேரம் பொறுமை தேவை . பெண்களுக்குப்பிடிக்கும், ரேட்டிங் 2.75 / 5 


Oru Yathramozhi
Poster
Directed byPrathap Pothan
Screenplay byJohn Paul
Story byPriyadarshan
Produced byV. B. K. Menon
StarringMohanlal
Sivaji Ganeshan
CinematographyMuthukumar
Edited byB. Lenin
V. T. Vijayan
Music byIlaiyaraaja
Production
company
Anugraha Cine Arts
Distributed byAnugraha Release
Release date
  • 13 September 1997
CountryIndia
LanguageMalayalam