தமிழில் மட்டும் அல்ல அனைத்து மொழிகளிலும் சுடுதல் பிராசஸ் அப்பப்ப ஆங்காங்கே நடந்துட்டுதான் இருக்கு.குங்குமம் இதழில் அய்யம்பேட்டை வி விஜயலட்சுமி என்பவர் ( பெண் பெயரில் ஒரு ஃபேக் ஐ டி ) ஆனந்த விகடன் இதழில் வந்த கவிதையை அப்படியே மகேஷ்-விஜய் செய்து ஐ மீன் ஜெராக்ஸ் செய்து மாட்டினார்.புகழ் பெற்ற இதழில் வந்த பிரபலமான படைப்பை திருடும்போது அவங்க என்ன தான் நினைப்பாங்கன்னு தெரியல . யாரும் கவனிக்க மாட்டாங்கன்னா? அல்லது மறந்துருவாங்கன்னா?
ஏதாவது பிற மொழிப்படைப்பை மொழி பெயர்த்து பட்டி டிங்கரிங்க் பண்ணி அண்ணன் மிஷ்கின் மாதிரியோ, ஜெயம் ராஜா மாதிரியோ ஹோம் ஒர்க் பண்ணி இருந்திருக்கலாம்.
அடுத்து தமிழ் நாடெங்கும் பிரபலமான திருச்சி அரவக்குறிச்சிப்பட்டி எம் அசோக் ராஜா 1980 களில் வந்த ஜோக்ஸ்களை 1995 டூ 2000 வரை ஜெராக்ஸ் எடுத்து பல பத்திரிக்கைகளில் மாட்டினார் . ஆனந்த விகடன் இதழில் இருந்து அவருக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டதாகத்தகவல்.
இப்போது மாட்டி இருப்பவர் போளூர் சி ரகுபதி . இவர் குமுதம் , குங்குமம் இதழ்களில் பல ஒரு பக்க சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பல வருடங்களாகவே இவர் பெயரை அடிக்கடி புக்ஸில் பார்த்திருக்கிறேன்.
பாண்டிச்சேரியில் கல்லூரி லெக்சரராகப்பணி ஆற்றும் புதுவை சந்திரகிரி என்பவரின் சிறுகதை தினமணிக்கதிர் இதழில் வெளீயானதை ஒரு வருடம் கழித்து குமுதம் இதழில் ரகுபதி பிரசுரமாக்கி இருக்கிறார்.
ட்விட்டர் நண்பர் டாக்டர் KidsDr MD
@DrTRM இதை வெளிப்படுத்தினார். நன்றி.


419 days ago


419 days ago
1 comments:
அடங்கொப்புரானே! இப்படிப்பட்டவங்களுக்குதான் குமுதம் வாய்ப்பு வழங்கிகிட்டே இருக்குது!
Post a Comment