தமிழ் சினிமாவில் எப்போதும் இரு துருவங்களின் ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும் . எம் ஜி ஆர் -சிவாஜி , ரஜினி-கமல் , விஜயகாந்த் -சத்யராஜ் , கார்த்திக்- பிரபு ,அஜித் -விஜய் , சிம்பு - தனுஷ் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும் . ஆனால் எய்ட்டீஸ் கிட்ஸ் க்குத்தெரிந்த இன்னொரு முக்கிய ஜோடியைப்பற்றித்தான் இந்தக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம் . அதுதான் டி ராஜேந்தர் - கே பாக்யராஜ் . இருவரும் கிட்டத்தட் ட ஒரே காலக்கட்டத்தில்தான் உதயமானார்கள் .ஆனால் இருவரது பட வசூல் ரஜினி - கமல் படங்களுக்கு இணையாக இருந்தன .சில படங்கள் ரஜினி பட வசூலை மீறின .,
அஷ்டாவதானி ,தன்மான சிங்கம் ,சகலகலா வல்லவர் என்ற பட்டங்களைப்பெற்ற டி ராஜேந்தர் கதை , திரைக்கதை , வசனம் , ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங்க் ,டைரக்சன் , தயாரிப்பு என எட்டு துறைகளைக்கையாண்டதால் அஷ்டாவதானி என்ற பட்டம் பெற்றார் . இவர் ஆஞ்சனேய பக்தர் . இவருக்கு ஒரு சென்ட்டிமென்ட் உண்டு . தனது பட டைட்டில்கள் 9 எழுத்துக்களில் வருமாறு அமைப்பார் .
தமிழ் சினிமாவில் தனி மனித ஒழுக்கம் கடைபிடிக்கும் , கடை பிடித்தவர்கள் மூன்றே பேர் தான் . 1 சிவக்குமார் 2 நம்பியார் 3 டி ராஜேந்தர். இந்த மூவர் பட்டியலில் மற்ற இருவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு டி ராஜேந்தர்க்கு உண்டு . தனது படங்களில் நாயகியைத்தொட்டுக்கூட நடிக்க மாட் டார். அது டூயட் சீனாக இருந்தாலும் சரி , கன்னத்தில் பளார் என அறையும் சீனாக இருந்தாலும் சரி நடிகையைத்தொட மாட்டார். இது போல நாயகியைத்தொடாமல் நடிக்கும் நடிகர் இந்திய அளவில் ஏன் ? உலக அளவில் வேறு யாரும் இல்லை.
இவரது படங்களில் பெரும்பாலும் அண்ணன் - தங்கை சென்ட்டிமென்ட் சீன் இருக்கும் . பாடல் காட் சிகளில் பிரம்மாண்டமான செட் போடுவார் . ஷங்கர் , ராஜமவுலிக்கெல்லாம் இந்த விஷயத்தில் இவர் முன்னோடி .இவர் எம் ஏ தமிழ் பட்டதாரி என்பதால் இவர் படங்களில் அடுக்கு மொழி வசனம் விளையாடும்.
காதல் தோல்வி ,காதலை சொல்லத்தயக்கம் இந்த இரண்டு உணர்வுகளும் இவரது படங்களில் அதிகமாகக்கையாளப்பட்டிருக்கும்
.
இவரது முதல் படம் இவருக்கு டைட்டிலில் அங்கீகாரத்தைத்தரவில்லை.தயாரிப் பாளர் இ எம் இப்ராஹிம் தனது பெயரை இயக்குநர் எனப்போட்டுக்கொண்டார்.அக்ரீமெண் ட் அப்படி.டி ஆர் க்கு வேறு வழி இல்லை.வாய்ப்புக்கிடைத்தால் போதும் என்று இருந்த கால கட்டம்.
திரைக்கதை,இயக்கம்,தயாரிப்பு. இப்ராஹிம் எனவும். கதை,வசனம்,பாடல்கள் டி ராஜேந்தர் எனவும் டைட்டிலில் வந்தாலும் அனைத்தும் டி ஆர் தான்.
1 ஒரு தலை ராகம் 1980- நாயகன் நாயகியை விரும்புகிறான்.நாயகிக்கு நாயகனைப்பிடித்திருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாத குடும்ப சூழல். க்ளைமாக்சில் நாயகி காதலிக்க முடிவெடுத்து நாயகனைப்பார்க்க வரும்போது நாயகன் இறந்திருப்பார்.சோகமான க்ளைமாக்ஸ் தான் என்றாலும் ரசிகர்களைக்கவர்ந்தது.
நாயகன்,நாயகி ஆக சங்கர் -ரூபா நடிக்க நாயகியின் தோழி ஆக உஷா நடித்தார்.இவரைத்தான் டி ஆர் நிஜ வாழ்வில் காதலித்துத்திருமணம் செய்து கொண்டார். ( இந்தப்படத்தில் நடித்த ரவீந்ததன் தான் உஷாவை முதலில் காதலித்தார்.ஆனால் பின்னாளில் கை விட்டு விட்டார்)
இந்தப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக்காரணம் பாடல்கள்,இசை தான்.
அனைத்துப்பாடல்களும் மெகா ஹிட்.காலேஜ் மாணவர்களின் தேசிய கீதம் ஆனது.
இந்தப்படத்தில் பெண் குரலில் ஒலிக்கும் பாடல்களே இல்லை.அனைத்தும் ஆண் குரல் பாடல்களே.
டி எம் சவுந்தர் ராஜன் பாடிய இரு பாடல்கள் செண்ட்டிமெண்ட்டாக அவரது மார்க்கெட்டையே முடித்து விட்டதாக அவரே குறிப்பிட்டார்.அந்தப்பாடல்கள்
1 நான் ஒரு ராசி இல்லா ராஜா
2 என் கதை முடியும் நேரம் இது
இவை போக
3 கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்
4 இது குழந்தை பாடும் தாலாட்டு
5 மன்மதன் ரட்சிக்கனும்
6 கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
7 வாசமில்லா மலரிது வசந்தத்தைத்தேடுது
இந்தப்படம் ரிலீஸ் ஆன போது ஒரு வருடம் ஓடியது.சினிமா எக்ஸ்பிரஸ் விருது கிடைத்தது..தெலுங்கில் பஞ்சதார சிலகா (1999) என ரீ மேக் செய்யப்பட்டது
++++++++±++
ஈரோடு மாவட்டம் கோபி அருகே வெள்ளாங்கோவில் என்ற கிராமத்தில் பிறந்தவர் கே பாக்யராஜ்.இவரது அம்மா அரசு மருத்துவமனை நர்ஸ்.இவரது பள்ளித்தோழர் ஆர் சுந்தர் ராஜனின் உதவுயுடன் சென்னை வந்தவர் பாரதி ராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார்.
இந்திய அளவில் திரைக்கதை அமைப்பதில் மன்னர் என்று பெயர் பெற்றவர்.ஜனரஞ்சகப்பட இயக்குநர் என்ற பட்டம் பெற்றவர்.முந்தானை முடிச்சு படத்தின் அதிரி புதிரி வெற்றியால் எம் ஜி ஆரால். கலை வாரிசு என அறிவிக்கப்பட்டவர்.இவரது படங்களில் கணவன் ,மனைவி உறவு மிக சிறப்பாக சொல்லப்பட்டிருக்கும்.
இவர் படங்களில் காமெடி அதிகம் இருக்கும்.இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் பெண்களும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.பாரதிராஜாவுடன் 5 படங்கள் பணியாற்றிய பின் தனியே இயக்கிய முதல் படமே மெகா ஹிட்
1. சுவரில்லாத சித்திரங்கள் 1979
30/11/1979 அன்று வெளியானது.கங்கை அமரனின் இசையில் காதல் வைபோகமே காணும் நன்னாளிலே செம ஹிட் பாட்டு.
கவுண்டமணியின் காமெடி டிராக் உண்டு.சரோஜா குப்பை கொட்றியா கொட்டு கொட்டு என்ற வசனம் அப்போது மிகப்பிரபலம் ஆனது.
சாதாரண கிராமத்துக்காதல் கதை தான்.வறுமையில் இருக்கும் நாயகனின் எளிமையான காதல் கதை இது.
ஹீரோ என்றால் எல்லோரையும் அடித்து வீழ்த்துவார் என்னும் பிம்பத்தை உடைத்து அப்பாவித்தனமான முகத்துடன் காமெடி வசனங்களை வைத்து மக்கள் மனம் கவர முடியும் என்று நிரூபித்தார்.
சுதாகர் ,சுமதி,காந்திமதி,கல்லாப்பட்டி சிங்காரம் ,கவுண்டமணி மற்றும் பலர் நடித்த இந்தப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் 100 நாட்கள் ஓடின
இரு படங்களையும் ஒப்பிடும்போது ஒரு தலைராகம் பிரம்மாண்ட வெற்றி.சுவர் இல்லாத சித்திரஙகள் வெற்றிப்படம்
தொடரும்
.jpg)
.jpg)