ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் முன்னாள் ரவுடி , இந்நாள் தொழில் அதிபர் . வில்லனின் அண்ணன் ஆளும் கட்சி அமைச்சர் என்பதால் , அரசியல் பலம் , அதிகார பலம் இவற்றால் எல்லோரையும் விலைக்கு வாங்கி விடுபவன் .போதைப்பொருள் கடத்தல் தொழில் உட்பட பல வில்லத்தனங்களை செய்து வருகிறான்
நாயகி ஒரு நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் . துணிச்சல் ஆகவும் ,கண்டிப்புடனும் லஞ்சம் வாங்காத அதிகாரி ஆக இருப்பதால் நாயகி அடிக்கடி பணி இட மாற்றம் செய்யப்படுகிறார் . இப்போது சென்னையில் வியாசர்பாடி ஏரியாவில் பணி புரிகிறார்
போலீஸ் கமிஷனர் ஒரு பெண் தான் , ஆனால் அவர் வில்லனின் கையாள் ஆக இருப்பதால் நாயகிக்கு அடிக்கடி இலாகா ரீதியான குடைச்சலைதருகிறார்
ஒரு போலியான விபத்தை செட் செய்து வில்லன் நாயகியை காயப்படுத்துகிறான் . ஹாஸ்ப்பிடலில் சிகிச்சை பெற்று சில மாதங்கள் கழித்து வெளியே வரும் நாயகி வில்லனின் போதைப்பொருளை கைப்பற்றுகிறாள் . கோடிக்கணக்கான மதிப்புள்ள சரக்கு பறி போனதால் ஆத்திரம் அடைந்த வில்லன் தன் அண்ணன் ஆகிய அமைச்சர் உதவியுடன் நாயகியை மயக்கப்படுத்தி பாலியல் வன் கொடுமை செய்து விடுகிறார்கள் இருவரும்.
நாயகி வில்லனை கோர்ட்டில் சந்திக்கிறாள் . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித் திரைக்கதை
நாயகி ஆக சாய் தன்ஷிகா கம்பீரமாக நடித்திருக்கிறார் . ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்கிறது . டூப் போடாமல் பல சண்டைக்காட் சிகளில் துணிச்சல் ஆக நடித்த அவருக்கு ஒரு சபாஷ்
வில்லன் ஆக கபீர் துகான் ஆஜானுபாகவமான தோற்றம் .அடிக்கடி நாயகியுடன் மோதும் சீன்கள் பரபரப்பு . அமைச்சர் ஆக சாயாஜி ஷிண்டே சிரித்த படி வில்லத்தனம் செய்கிறார் . இவருக்கு மெயின் வில்லன் போல் அதிக வாய்ப்பு இல்லை
இயக்குனர் அமரர் மனோபாலா போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வருகிறார் . மற்ற அனைவரும் அவரவருக்குத்தந்த வேடத்தை சரியாக செய்து இருக்கிறார்கள்
எஸ் கே பூபதியின் ஒளிப்பதிவு சிறப்பு , தீபக் தேவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான் , பின்னணி இசையும் சராசரி தரம் தான் . கணேஷ் குமாரின் சண்டைக்காட் சி வடிவமைப்பு அருமை . ஜி சசிகுமாரின் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது . கதை , திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் கவுதம் கிருஷ்ணா
சபாஷ் டைரக்டர்
1 வைஜெயந்தி ஐ பி எஸ் மாதிரி ஒரு படம் கொடுக்க வேண்டும் என்ற இயக்குனரின் முயற்சி இருக்கிறது . விஜயசாந்தி மாதிரி ஆக வேண்டும் என்ற சாய் தன்ஷிகாவின் உழைப்பு இருக்கிறது . ஆனால் திரைக்கதை கை கொடுக்கவில்லை
2 தேசியக்கொடி பெருமை பற்றிப்பேசும் நாயகி எங்கெல்லாம் , என்ன காரணங்களுக்காக எல்லாம் தேசியக்கொடி அரைக்கம்பத்த்தில் பறக்கவிடப்படும் ? என்ற விபரங்களைப்பட்டியல் இடும் சீன அமர்க்களம்
3 விஷால் கூட வியக்கும் வண்ணம் ஆக்சன் ஸீக்வன்ஸ் சாய் தன்ஷிகா சாகசம்
4 நாயகிக்கு ஒரு ஜோடி , டூயட் என்று கதையில் திசை மாறாமல் பயணித்தது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கெட்ட பய சார் இந்தக்காளி என்ற ரஜினியின் புகழ் பெற்ற பஞ்ச் டயலாக்கை உல்டா பண்ணி உபயோகித்தது
2 போலீஸ் இன்ஸ்பெக்ட்டரை பாலியல் வன் கொடுமை செய்யும் வில்லன் அவருக்கே போன் செய்து வாக்குமூலம் கொடுத்து மாட்டுகிறார் .நாயகி அதை செல் போனில் ரெக்கார்டு செய்து சாட்சி ஆக உபயோகிப்பார் என்பதை யூகிக்க முடியாதா?
3 வில்லனிடம் சவால் விடும்போது நாயகி தம் அடிப்பது ,அந்த கேரக்ட்டருக்கே பின்னடைவே
4 திரைக்கதை , சம்பவங்களில் புதுமை இல்லை . ஆல்ரெடி பல படங்களில் பார்த்தவை தான்
5 கோர்ட்டில் நாயகி டெ லிபோன் உரையாடலை ஒப்படைக்கும்போது ஒரு காப்பி எடுத்து வைத்துக்கொள்ள மாட்டாரா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சலித்துப்போன , புளித்ததுப்போன போலீஸ் வில்லன் மோதல் கதை . சாய் தன்ஷிகா நடிப்புக்காக பார்க்கலாம் . ரேட்டிங்க் 2 / 5