ஸ்பாய்லர் அலெர்ட்
முதல் பாகத்தில் மெயின் வில்லன் ஆக வருபவரிடம் நாயகன் வலது கை ஆக இருப்பான் ,அந்த வில்லனுக்கு ஒரு தம்பி இருப்பான் .முதல் பாகத்தில் மெயின் வில்லனை நாயகன் தீர்த்துக்கட்டி விட்டாலும் நெம்பர் 2 பொசிசனில் தான் நாயகன் அங்கே இருப்பான் . வில்லனின் தம்பியைத்தந்திரமாக ஜெயிலுக்கு அனுப்பி விட்டு நாயகன் எப்படித்தந்திரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுகிறான் என்போதுதான் இந்த பாகத்தின் கதை ,
முதல் பாகத்தில் நாயகன் சீக்ரெட் ஏஜென்ட் ஆக எப்படி ஊடுருவுகிறான் என்பது கதை ஆக இருந்தது . இதில் நாயகன் சீக்ரெட் ஏஜென்ட் ஆக உருவானது எப்படி என்பதைக்காட்டுகிறார்கள்
நாயகன் ஆக ரன்வீர் சிங்க் அதகளம் செய்திருக்கிறார்.ஆக்சன் சீக்வன்சில் அவரது பங்களிப்பு ,வேகம் அருமை.
நாயகி ஆக வரும் சாரா அர்ஜூன் பரவாயில்லை.
முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் மாதவனின் கேரக்டர் டிசைன் அருமை.அவருக்கான ஸ்க்ரீன் ஸ்பேசும் அதிகம்
நாயகி சாரா அர்ஜூன் முதல் பாகம் அளவு இதில் மனதில் நிற்கவில்லை.
அர்ஜூன் ராம் பால்,சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பு படத்துக்குக்கூடுதல் பலம்
மற்ற அனைத்து கேரக்டர்களின் நடிப்பும் கச்சிதம்.
சஸ்வத் சச்தேவின் இசை ரகளை.பி ஜி எம் தெறிக்கிறது.
சிவக்குமார் வி பணிக்கரின் எடிட்டிஙகில் படம் 230 நிமிடங்கள்.
விகாஷ் நவ்லகா வின் ஒளிப்பதிவில் காட்சிகள் படு பிரம்மாண்டம்.
எடிட்டர் ஆன சிவக்குமார் வி பணிக்கர் திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் ஆதித்யா தார்
சபாஷ் டைரக்டர்
1 ஆக்சன் சீக்வன்ஸ் அதகளம் . முதல் 10 நிமிடங்களில் , க்ளைமாக்ஸ் 10 நிமிடங்களில் கலக்கிவிட்டார்கள். பின்னணி இசை , ஒளிப்பதிவு , சவுண்ட் எபக்ட் அனைத்தும் கலந்து கட்டி வேறு ஒரு கட்டத்துக்கு படத்தை எடுத்து செல்கிறது
2 கிட்டத் தட்ட 4 மணி நேரம் ( 3 மணி நேரம் 50 நிமிடங்கள் ரன்னிங்க் டைம் ) ஓடும் படத்தை போர் அடிக்காமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தருவது சாதாரண விஷயம் இல்லை . முதல் 10 நிமிடங்கள் , இண்ட்டர்வெல் பிளாக் சீன் , க்ளைமாக்ஸ் என அரங்கம் அதிரும் சீன்கள் கலக்கல் ரகம்
3 பணமதிப்பிழப்பு (டிமாண்ட்டிசைசேசன் ) இந்தியாவில் வந்த போது அதை விமர்சித்தவர்கள் அதிகம் . ஆனால் அது எதனால் கொண்டு வரப்பட்ட்து என இவர்களாகவே ஒரு கற்பனைக்கதையை எடுத்து விடுகிறார்கள் . அபாரமான கற்பனை .ஆனால் நம்ப முடியாத காமெடி.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 முதல் பாகத்திலும் சரி , இரண்டாம் பாகத்திலும் சரி இடைவேளைக்கு முன் வரும் அரை மணி நேரம் கொஞ்சம் டல் தான் . திரைகக்தை ரொம்பவே தொய்வு
2 மிகப்பெரிய பயங்கரவாதிகள் , தீவிரவாத தலைவர்கள் எல்லோரும் ஒத்தையிலா வந்து மாட்டிக்கொள்வார்கள் ? அவர்களுக்கு என செக்யூரிட்டி , அல்லக்கைகள் , பாதுகாப்பு என எதுவும் இருக்காதா?
3 நாயகன் + நாயகி இருவருக்கும் இடையிலான எமோஷனல் கனெக்ட் முதல் பாகம் போல் இதில் இல்லை , இருவரும் இணைந்தால் தேவலை என்ற எண்ணம் நமக்கு வரவே இல்லை
4 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆகாது என்பது சரி , முறைப்படி திரைக்கதையில் இந்தியாவை உயர்த்தி ,, பாகிஸ்தானை மட் டம் தட்டி சீன்கள் வைத்திருக்க வேண்டும் , ஆனால் இந்துக்களை உயர்த்தியும் ,முஸ்லீம்களை தாக்கியும் சீன்கள் அமைக்கப்பட்டிருக்கிறது
5 இந்துக்கள் கோழைகள் என்று பொருள் வருவது போல சில இடங்களில் வசனம் வருகிறது , சென்சாரில் எப்படி விட்டார்களோ ? தவிர்த்திருக்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -18+ ஓவர் வன்முறை,ரத்தக்களறி
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆக்சன் திரில்லர் ரசிகர்களுக்கு ஏற்ற படம்.முதல் பாகத்தை விடவே எங்கேஜிஙக் ஆக இருக்கிறது.ரேட்டிங்க் 3/5
| Dhurandhar: The Revenge | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Aditya Dhar |
| Written by | Aditya Dhar |
| Additional screenplay | Ojas Gautam Shivkumar V. Panicker |
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Vikash Nowlakha |
| Edited by | Shivkumar V. Panicker |
| Music by | Shashwat Sachdev |
Production companies | |
| Distributed by | Jio Studios |
Release date |
|
Running time | 229 minutes[1] |
| Country | India |
| Language | Hindi |
| Budget | ₹250–475 crore (combined with part 1)[2] |
| Box office | est. ₹56.66 crore[3] |
.jpg)