Lenin (2026)- தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)@ ZEE5
இதயத்தைத்திருடாதே,உதயம் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களைக்கவர்ந்த நாகார்ஜூனாவின் சொந்தப்படம் இது.அவரது மகன் அகில் அக்கினேனி தான் நாயகன்.10/7/2026 முதல் ஆந்திரத்திரை அரங்கு களில் ரிலீஸ் ஆன இந்தப்படம் 17/7/2026 முதல் தமிழ் டப்பிங் கில் வெளி வர இருக்கிறது.
மகாபாரதக்கதையை பட்டி டிங்கரிங் பண்ணி மணிரத்னம் தளபதி படத்தை ரஜினி,மம்முட்டியை வைத்து எடுத்தது மாதிரி இதிலும் மகாபாரதக்கதையைத்தழுவி ஒரு கதை ரெடி பண்ணி இருக்கிறார்கள்.
ஸ்பாய்லர் அலெர்ட்
கதை நடக்கும் கால கட்டம் 1990.இடம் ஆந்திரப்பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்.
அந்த ஊரின் முக்கியப்புள்ளி பெத்தம்மா தன் கணவரின் இறப்புக்குப்பின் அவர் தான் அந்தக்குடும்பத்துக்கும் தலைவி.ஊருக்கும் தலைவி.இது அவளது கணவரின் தம்பி எத்திராஜூக்குப்பிடிக்கவில்லை. எப்போதும் முறைத்துக்கொண்டே இருப்பான்.பெத்தம்மாவுக்கும் ஒரு மகன்.பெயர் வசந்த்
நாயகன் ஒரு அனாதை. பெயர் லெனின் .சிறுவனாக இருக்கும்போது கோவில் திருவிழாவில் அன்னதானம் போடுகிறார்கள் எனக்கேள்விப்பட்டு அந்த ஊருக்கு வந்து பெத்தம்மாவின் பார்வையில் படுகிறான்.அவனை மிகவும் பிடித்துப்போகவே பெத்தம்மா நாயகனை வளர்ப்பு மகனாக தத்து எடுத்துக்கொள்கிறாள்.
சில வருடங்கள் கழித்து நாயகன் பெரியவன் ஆகிறான்.தன் உடன் பிறவா சகோதரன் வசந்த் உடன் அன்னியோன் யமாய்ப்பழகுகிறான்.
பெத்தம்மாவுக்கு அண்ணன் மகள்கள் இருவர்.முதல் மகள் ஒருத்தி.இரண்டாம் மகள் தான் நாயகி.
நாயகன் ,நாயகியைப்பார்த்த முதல் பார்வையிலேயே அவளைக்காதலிக்கிறார் .நாயகியும் தான்
பெத்தம்மாவுக்கு விஷயம் தெரிகிறது. தனது அண்ணனின் முதல் மகளைத்தன் மகன் வசந்த்துக்கும் ,இரண்டாவது மகளைத்தன் வளர்ப்பு மகனான நாயகனுக்கும் கட்டி வைக்கலாம் என முடிவு செய்கிறாள்.
திடீரென்று ஒரு நாள் நாயகியின் அக்கா காணாமல் போகிறாள்.யாருடனோ ஓடி விட்டாள் என கதை பரப்பப்படுகிறது.இதனால் நாயகியை. வசந்த்துக்குத்திருமணம் செய்து வைக்க முடிவு எடுக்கப்படுகிறது.
நாயகனும் வேறு வழி இல்லாமல் தியாகி ஆகத்தயார் ஆகிறான். ஆனால் வசந்த் நாயகனையும் ,நாயகியையும் சேர்த்து வைத்துத்திருமணம் செய்து வைக்கிறான்.
நாயகன் ஒரு கட்டத்தில் தன் மனைவியான நாயகியையே குத்திக்கொலை செய்து ஜெயிலுக்குப்போகிறான்.தண்டனைக் காலம் முடிந்து ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகும் நாயகன் தனக்கு ஒரு முக்கியமான கடமை இருப்பதாகவும் ,அதை முடித்து விட்டுத்தான் மறு வேலை எனவும் சபதம் எடுக்கிறான்.
உயிருக்கு உயிராகக்காதலித்த நாயகியை நாயகன் ஏன் கொலை செய்தான்?ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகி யாரைப்பழி வாங்குகிறான்?என்பது தான் படத்தின் மொத்தத்திரைக்கதையும்.
நாயகனாக அகில் அக்கினேனி நன்றாக நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் துவம்சம் செய்கிறார்
நாயகியாக பாக்ய ஸ்ரீ போர்ஸ் குடும்பப்பாங்கான கண்ணிய அழகியாக வருகிறார்.இவருக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸ் குறைவு. வந்தவரை ஓக்கே.
நாயகியின் அப்பாவாக ராம்கி நல்ல குணச்சித்திர நடிப்பு .
நாயகனின் வளர்ப்பு அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்திருக்கிறார்.
போலீஸ் ஆபீசராக சுனில் நடித்திருக்கிறார்.
மற்ற அனைத்துக்கேரக்டர்களும் அவரவருக்குக்கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள்.
எஸ் தமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.பின்னணி இசை. சுமார்.ஒளிப்பதிவு லியோன் பிரிடோ.கிராமத்து விழாவைப்படமாக்கியதில் தொழில் நேர்த்தி தெரிகிறது..நவீன் நூலியின் எடிட்டிங்கில் முதல் பாதி மிக மெதுவாக நகர்கிறது.பின் பாதி வேகம்.
எலீனா யட்சுராவுடன் இணைந்து திரைக்கதை எழுதித்தனியாக இயக்கி இருக்கிறார் முரளி கிஷோர் அப்புரு.
சபாஷ். டைரக்டர்
1 ஓப்பனிங்க் சீனிலேயே ஜெயிலிலிருந்து வெளியாகும் நாயகனைக்கண்டு போலீஸ் உயர் அதிகாரியும் ,இன்னமும் பலரும் பயப்படுவது போல் பில்டப் கொடுத்திருப்பது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
2 நாயகியின் அக்கா காணாமல் போகவில்லை.கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்ற ட்விஸ்ட்டும் கொலைகாரன் வசந்த் தான் என்ற ட்விஸ்ட்டும் எதிர்பாராதது.
3. நாயகியை நாயகனுக்கு முன்பே ஒருதலையாகக்காதலித்த தறுதலை தான் வில்லன் வசந்த் என்ற சஸ்பென்ஸ் முடிச்சும் குட்.
4. நாயகனின் வளர்ப்பு அம்மா வில்லியாக மாறுவது எதிர்பாராதது.
5 நாயகியை நாயகன் ஏன் கொலை செய்கிறார்?என்ற ட்விஸ்ட் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றான்?என்ற ட்விஸ்ட்டுக்கு இணையானது.
6 ஜெயிலிலிருந்து. ரிலீஸ் ஆகும் நாயகனுக்குக்கண் பார்வை கிடையாது.தன் நாயின் மணி சத்தத்தை வைத்து குத்து மதிப்பாகத்தான் அனைத்தையும் உணர்கிறான் என்ற ட்விஸ்ட்டும்,கண் பார்வை எப்படிப்பறி போனது ? என்பதும் யூகிக்க முடியாத ட்விஸ்ட்ஸ்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 வில்லன் செக்வந்தன்.நாயகன் அனாதை.வில்லன் நாயகியை விரும்பினால் நேரடியாக நாயகியை அடையாமல் சுற்றி வளைத்து மூக்கைத்தொடுவது ஏனோ?
2 வில்லன் தான் விரும்பும் நாயகியை நாயகனுடன் சேர்த்து வைப்பது எல்லாம் ஓவர்.மாங்கா மடையனா இருப்பானோ ?எனக்கேட்க வைக்கிறான் வில்லன்.
3. நாயகியின் அப்பா அனாதையான நாயகனை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வதிலும் நம்பகத்தன்மை இல்லை.
4 விக்ரம் நடித்த பீமா பட க்ளைமாக்ஸ் போல இந்தப்படத்திலும் நாயகி,நாயகியின் அக்கா ,வில்லன் , என பெரும்பாலானோர் சாவது அல்லது சாகடிக்கப்படுவது ஏனோ ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+
CPS கமெண்ட் - தெலுங்கில் இந்தப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்.தமிழ் ஆடியன்சுக்குப்புதிய கதை அல்ல இது.சுமார் ரகம் தான்.ஆக்சன் மசாலா ரசிகர்கள் பார்க்கலாம்.ரேட்டிங் 2.5 /5
